Friday, June 26, 2009

இந்த யுகக் கலைஞனை லொஸ் ஏஞ்ஸல்ஸில் தொலைத்துவிட்டது உலகம்.


1982 களில் “திரில்லர்” என்ற இசைத்தொகுப்பு (அல்பம்) வெளியாகியபோது பூமிப்பந்தே அந்த இசைக்கும், நடனத்திற்கும் ஏற்றால்ப்போல் துள்ளியது என்ற அளவுக்கு சக்கை போடு போட்டு உலகின் அதிகளவிலான விற்பனைகள் இடம்பெற்று வசூல் குவித்த இசைத்தொகுப்புகளின் பட்டியல்களில் முதன்மையான ஒன்றாக உள்ளது.

அந்த அளவுக்கு உலகத்தையே எழுந்து நின்று ஆடவைத்தவர் இந்த யுகக்கலைஞர் மைக்கல் ஜக்ஸனே. 1980 களில் இருந்து இவரது அல்பங்களையும், பிரேக் என்னும் அதிவிரைவான நடனஅமைப்பின் ஸ்ரெப்ஸ்களையும் அன்றைய உலகம் வாயை பிளந்தவண்ணம் பார்த்துக்கொண்டே இருந்தது. இன்றுவரை பாடல்களில் மட்டும் இன்றி நடனத்தில்க்கூட அவருக்கு நிகர் அவரே.
இதே 80 களில் இவரது அல்பங்களின் ஒளிக்காட்சிகளை ஒளிபரப்பியதன் மூலமே பேரபிமானம் பெற்று பிரபலமானது எம்.ரி.வி. என்று சொன்னாலும் அது மிகையானதல்ல.

ஒரு பாடகராக, இசை பற்றிய எழுத்தாளராக, இசை அமைப்பாளராக, இசைத்தொகுப்புகளின் தயாரிப்பாளராக, நடனக்கலைஞராக, நடன அமைப்பாளராக, நடிகராக, இவர் எடுத்துக்கொண்ட பரினாமங்கள் பல.
ஆனால் அன்று அத்தனையிலும் படு கச்சிதமாகவே இவர் செயற்பட்டிருக்கின்றார்.
1980 களில் எம்.ரி.வி. நிறுவனத்தின் தயாரிப்பளராக இவருடன் நெருக்கமாக இருந்த ஸ்ரீபன் றிவ், மைக்கல் ஜக்ஸன் பற்றி கூறுகையில், எப்போது குறுகுறு என்று பார்த்து, எப்போதும் சுறுசுறுப்பாக தனது வேலைகளை முடிப்பவர் மைக்கல்,
தொழில் விடயங்களில் அவரது பக்தி, எல்லாவற்றுக்கும் மேலாக கொடுத்;த வாக்குகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற தன்மை அவரிடம் உண்டு. யாரையும் மனம் நோக வைக்கக்கூடாது என்பதில் எப்போதும் கவனம் எடுத்துக்கொள்வார். என்னைப்பொறுத்தவரையில் எல்லோருக்கும் தான் நல்லவனாக இருக்கவேண்டும் என அவர் நான் அறிந்ததிலிருந்து இறுதிவரை இருந்ததே அவரது பலவீனமாக இருந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.


பெரும்பாலான உலகின் இசை இரசிகர்களுக்கும், நடனப்பிரியர்களுக்கும் 26 ஆம் நாள், ஜூன் மாதம் 2009 இன்று ஒரு துக்கரமான நாளாகவே விடிந்திருக்கும். உலகின் ஒவ்வொவருக்கும் மைக்கேல் ஜக்ஸனைப்பற்றித் தெரிந்திருக்கும்.
1958 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் நாள் பிறந்த மைக்கேல் ஜோசப் ஜக்ஸன் என்;ற இந்த யுகக்கலைஞன் தனது 11ஆவது வயதில் இசை உலகத்திலும் நடனத்திலும் புதிய முத்திரை பதிக்க இறங்கிய இந்த கலைஞன், 25 ஆம் நாள் ஜூன் மாதம் 2009ஆம் ஆண்டு இசை உலகத்தில் இருந்து மட்டுமல்லாது இன்று இந்த உலகத்தில் இருந்தே நிரந்தரமாக விடை பெற்றுச் சென்றுவிட்டாhர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹோல்ம்பி ஹில்ஸ் இல்லத்தில் திடீரென ஏற்பட்ட இருதய கோளாறினால் மைக்கல் ஜெக்சன் உயிர் பிரிந்தததாக அவரது சகோதரர் ரென்டி ஜெக்சன் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற மற்றுமொரு பாடகர் எல்விஸ் பிரிஸ்லியன் புதல்வியை 1994ம் ஆண்டு மைக்கல் ஜெக்சன் கரம்பிடித்தார்.
எனினும், அந்த திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. பின்னர் மற்றுமொரு நடிகையை ஜெக்சன் திருமணம் முடித்தார். எனினும் அந்த திருமண பந்தமும் நீண்டகாலம் நீடிக்கவில்லை.

மைக்கல் ஜக்ஸன், பிரின்ஸ் மைக்கல் 1, பிரின்ஸ் மைக்கல் 2 மற்றும் பரிஸ் என மூன்று குழந்தைச் செல்வங்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நூற்றாண்டின் மிகப் பிரபலமான இசைக் கலைஞராக மைக்கல் ஜக்ஸன் கருதப்படுகின்றார்
எதிர்வரும் மாதம் லண்டனில் நடைபெறவிருந்த இசை நிகழ்வுகளுக்கான டிக்கட்டுகள் நான்கே மணித்தியாலங்களில் விற்றுத் தீர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் சுமார் 75000 டிக்கட்டுகள் நான்கு மணித்தியாலங்களில் விற்று தீர்க்கப்பட்டன.நிற, மொழி, சமய பேதங்களை களைந்து, சமகால உலக இசை வரலாற்றில் தனக்கென ஓர் தனியான இடத்தை பதிவு செய்துகொண்டுள்ள மைக்கல் ஜக்ஸனின் மரணம் அத்துனை இசைப் பிரியர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


ஒரு கலைஞன் மீது விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படுவது இயல்பு என்ற ரீதியில் மைக்கல் மீதும் பல குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் எழாமல் இல்லை. இருப்பினும் “கலைஞன் ஒருவனின் கலை” என்ற ரீதியல் மைக்கேலின் கலை போற்றுதலுக்குரியதாகும். இந்த யுகத்தின் சிறந்த கலைஞன் மைக்கல் ஜக்ஸனே என்பதையும் எவரும் மறுத்துவிடமுடியாது.

1 comment:

KAIPILLAI said...

GOOD WRITTING .
I LIKE IT ...
ANY WAY MY HEARTLY SYMPATHIES TO M JACKSON( THE POP KING)

LinkWithin

Related Posts with Thumbnails