tag:blogger.com,1999:blog-67147781178948673872024-02-05T15:58:22.028+05:30Cheers with Janaஇது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்...Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger310125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-70069998268213378732013-11-04T16:35:00.000+05:302013-11-04T16:35:17.189+05:30மணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiGQ_M-7rQG9WYfAGE_hGZY5o3qKEX8aUKFWvjSAWwG4gS-h86s9463q8Y6Ti7U7oHtBvXOwTY260TkbtDzmnBdrxW9UG7fx4Wp0-1KmOGdaP7tJnyI7oT4YuleDSLsCtyLgfvrjoko3m8/s1600/tron_legacy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="378" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiGQ_M-7rQG9WYfAGE_hGZY5o3qKEX8aUKFWvjSAWwG4gS-h86s9463q8Y6Ti7U7oHtBvXOwTY260TkbtDzmnBdrxW9UG7fx4Wp0-1KmOGdaP7tJnyI7oT4YuleDSLsCtyLgfvrjoko3m8/s640/tron_legacy.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத விஞ்ஞான பூர்வ திரைக்கதையாகவும் மணிரட்னத்தினால் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்த திரைப்படம். 3014 ஆம் ஆண்டு நடப்பதாக சித்தரிக்கப்படும் இந்த திரைப்படம் வெளிவந்தால் சரியாக ஆயிரம் ஆண்டுகளின் பின்னரான உலகம், விஞ்ஞானம் என்பன பற்றிய மணிரத்னத்தின் சாத்தியமான அசாத்திய கற்பனையை எண்ணி அனைவரும் பேராச்சரியப்படுவர், அதேவேளை தமிழிலும் ஒரே வேளையில் இந்த படம் எடுக்கப்படுவதால் தமிழ் எழுத்துத்துறையில் விஞ்ஞான பூர்வக்கதைகளின் முன்னோடி அமரர் சுஜாதா என்பதுபோல, திரையிலே மணிரட்னம் மிளிர்வார் என திருமதி சுஹாசினி மணிரட்னம் தெரிவித்துள்ளார்.</div>
<div style="text-align: justify;">
அரசல் புரசலாக உலாவரும் கதை இதுதானாம்.........</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
3014ஆம் ஆண்டு உலகம் விஞ்ஞானத்தின் உச்சக்கட்டத்தில் நிற்கின்றது, தமது எண்ணப்படி நட்சத்திர தொகுதியின் வடிவமைப்பினை, பாதையினை மாற்றிப்போடும் வல்லமையினையே முக்கிய விஞ்ஞானிகள் பெற்றிருக்கின்றார்களாம்.</div>
<div style="text-align: justify;">
அதிலும் குறிப்பாக இந்தியாவே அன்றைய நாளில் விஞ்ஞானம் மற்றும் சக்தி மிக்க நாடாக விளங்குகின்றது!</div>
<div style="text-align: justify;">
உலகிலேயே மிக அதி உச்ச விஞ்ஞானியாக 'சிவ் சங்கர்' என்ற பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிவ்சங்கர் விஞ்ஞானத்தின் உச்சத்தையே கடந்தவராக உருவகிக்கப்படுகின்றாராம். புதிய பிளனட்களை உருவாக்கவும், பாதுகாக்கவும், அவற்றுக்குத்தேவையான வாயுக்களை கொண்டு சென்று உயிரியல் பரினாமத்துக்கு உதவவும், அதை அழிக்கவும், பின்னர் பிரபஞ்சத்தில் இருந்தே அதை மறைத்துவிடவும் அவரால் முடியுமாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீண்டகாலமாக அவரது உதவியாளராக அவருடன் இருந்து அறிவியல் கற்றவராக இந்த திரைப்படத்தின் வில்லன் 'பத்மசூர்' என்ற பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம். </div>
<div style="text-align: justify;">
ஒரு கட்டத்தில் விஞ்ஞானி சிவ்சங்கரிடமிருந்து பிரிந்து, அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விஞ்ஞானத்தை வைத்தே அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றராம் வில்லன்.</div>
<div style="text-align: justify;">
பல இயற்கை தத்துவங்களையே மீறி பிரபஞ்ச அமைப்புக்கே பேராபத்தை உண்டாக்க தனது செயற்பாடுகளில் இறங்குவாராம் வில்லன் பத்மசூர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தவேளை இயற்கை தத்துவத்தை காப்பாற்ற பல வழிகளில் முயற்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞானி சிவ்சங்கர் இறுதியில் வில்லன் பத்மசூரை அழிப்பதாக பிரமானம் எடுக்கின்றார்.</div>
<div style="text-align: justify;">
பால்வீதிக்கு அப்பால் உள்ள சூனியப்பிரதேசமொன்றில் உள்ள தனது இரகசிய ஆய்வுகூடம் ஒன்றில் தனது நம்பிக்கையான விஞ்ஞானத்திற்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்த ஆறு பெண்களுடன் ஆராட்சியில் ஈடுபடுகின்றார்.</div>
<div style="text-align: justify;">
இறுதியில் வில்லனை அழிக்கவல்ல சக்திவாய்ந்த ஒருவனை உருவாக்க முடிவு செய்கின்றார் குளோனிங் முறையில்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனது புருவ மேட்டில் இருந்து ஆறு சக்திவாய்ந்த செல்களை கண்டறிந்து அவற்றை அக்கினி சக்தியுடன் ஒரு சக்தி பீடத்திற்கு கடத்துகின்றார், பின்னர் பிரபஞ்வெளிக்கு கொண்டு செல்கின்றார், அதன் பின்னர் சக்தி மிக்க பிரபஞ்ச காற்றுக்களால் அதை மேலும் வலுவூட்டி இறுதியாக நீரிலே அந்த சக்திகளை மிதக்கவிட்டு ஒன்றாக்கின்றார். </div>
<div style="text-align: justify;">
ஓளிபடைத்த நாயன் ஒளிர்கின்றான்......... அவனுக்கு இந்த ஆறு விஞ்ஞானிப் பெண்களும் அனைத்தையும் கற்றுக்கொடுக்கின்றனர்.....</div>
<div style="text-align: justify;">
இயற்கையை இயல்பாக்க அவன் தயாராகின்றான் பெரும் பிரபஞ்சவெளிப்போருக்கு.... அவனுக்காக பிரத்தியேகமாக வடிவமைத்திருந்த பீக்கொக் என்ற பிரபஞ்ச 'வோர் ஸ்பேஸ் ஸிப்பை' அவனுக்கு கொடுக்கின்றார் விஞ்ஞானி சிவ்சங்கர். அப்புறம் என்ன நாயகன் வில்லனுக்கடையிலான பிரபஞ்ச சமர்தான் கிளைமாக்ஸ்.....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அட இன்னும் இது கடவுள் முருகனுடைய கதை என்பது புரியாவிட்டால் நான் என்ன செய்ய........ சும்மா கந்தர் சஸ்டி காலத்திலை வித்தியாசமாக சிந்தித்தால் இப்படி ஒரு பதிவு. எல்லாம் ஒரு தமாசுக்குத்தான். மணி சார் உட்பட அனைவரும் மன்னிச்சுடுங்கடா சாமி...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-7070320675757349522013-09-15T18:22:00.002+05:302013-09-15T18:22:21.172+05:30வடமாகாணசபை தேர்தலும் நாம் சிந்திக்கவேண்டியவையும்! -02<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5mNpKO1ylAODphzE1kQiEw3aT35IJ610zZR54iNAEVYLh89s5aBIHw9twT5IsRfDzw4TI4x8Wc6MHmeQjeMc243RCBBs-vZZqNSUCDusLroj8T8JiPPHTUht45hmX-uJ2Sym7xGYqa_xV/s1600/northern_map.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="454" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5mNpKO1ylAODphzE1kQiEw3aT35IJ610zZR54iNAEVYLh89s5aBIHw9twT5IsRfDzw4TI4x8Wc6MHmeQjeMc243RCBBs-vZZqNSUCDusLroj8T8JiPPHTUht45hmX-uJ2Sym7xGYqa_xV/s640/northern_map.png" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யுத்தமொன்று திணிக்கப்பட்டு வெற்றி கொள்ளப்பட்ட மண்ணின் வளங்கள் முழுமையாக சுரண்டப்பட்டு கொண்டு செல்லப்படும் என்பது உலகம் பல யுத்தங்களில் கண்ட உண்மைதான். ஆனால் இங்கு நடைபெற்றது உள்நாட்டு யுத்தம் என்று சொல்லிக்கொள்ளப்பட்டாலும் இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தமாகவே நடைபெற்றது. அதேபோல யுத்தமுடிவும் வெற்றி பெற்றவர்களால் செயற்படுத்தப்பட்டும், கொண்டாடப்பட்டும் இருந்தது.</div>
<div style="text-align: justify;">
யுத்தத்தை தொடர்ந்து வடபகுதி மக்கள் எதிர்பாராத நேரம் அவர்களை நோக்கி அதே சூட்டோடு பிரகடனப்படுத்தபட்டதே பொருளாதார யுத்தம்.</div>
<div style="text-align: justify;">
இன்றைய நிலையில் இந்த பொருளாதார யுத்தத்தின் முற்றுகைக்குள் அகப்பட்டு செய்வதறியாது திண்டாடுகின்றது வடபுல பொருளாதாரம். இதுவே யதார்த்தம். இதை புரிந்துகொள்ளாது இன்னும் தூங்குபவர்களும், தூங்குபவர்கள் போல நடிப்பவர்களும் இனி எழுந்திருக்கவே முடியாத நிலைக்கே போய்விடுவர்.</div>
<div style="text-align: justify;">
<b><u><br /></u></b></div>
<div style="text-align: justify;">
<b><u>இளைய தலைமுறையின் தவறானபாதை!</u></b></div>
<div style="text-align: justify;">
அனைவரும் சொல்லிக்கொள்வதுபோல கட்டுக்கோப்புடன் இருந்த ஒரு தலைமுறை கட்டுக்கோப்பு அறுபடும்போது சிதறி ஓடுவதுபோல இன்றைய இளைய சமுதாயம் வடபுலத்தே போய்க்கொண்டுள்ளது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை.</div>
<div style="text-align: justify;">
காவாலித்தனங்கள், குழுச்சண்டைகள், காதுகூசும் வார்த்தைப்பிரயோகங்கள், அடிதடி வாள் வெட்டுக்கள் என்று இன்று இளைய தலைமுறைகள் சில தறுதலைச் சமுதாயமாக போய்க்கொண்டிருப்பதை கண்ணூடாகவே காணக்கூடியதாக உள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேற்றோர்கள், ஆசிரியர்கள், சமுக நலன்விரும்பிகள், மதப்பெரியவர்கள், அரியல்வாதிகள் என்போர் முன் எப்போதும் இல்லாதவாறு இன்றைய நாட்களில், வளமான சமுதாயம் ஒன்றை உருவாக்க பெருமுயற்சி கண்டிப்பாக எடுக்கவேண்டிய நாட்கள் இன்நாட்களே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><u>கல்வியும் வேலைவாய்ப்பும்</u></b></div>
<div style="text-align: justify;">
யுத்தகாலத்தைவிட தற்போது வடபுல கல்வி வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏன் எனில் முன்னர்போல பெறுபேறுகள் பெரிய அளவில் இல்லாது விடினும் உயர் கல்வி என்பது பல்கலைக்கழகம் என் மட்டுப்படாமல் பல்வேறு கற்கை நெறிகளை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு தற்போது உள்ளதனால் முன்னரை விட உயர் கல்வி கற்பவர்களின் அளவு கணிமான அளவு உயர்ந்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொழில் விடயத்தில் முன்னைய நிலையை விட பல நிறுவனங்கள் தாராளமான வேலை வாய்ப்புக்களை கொடுத்துவருகின்றபோதிலும் இன்னும் அரசாங்க வேலை, வெளிநாடு என்ற கனவுகளுடன் பெரும்பாலான இளைஞர்கள் வேலைவாய்ப்பு என்று அரசியல் வாதிகளிடம் போவது ஆளுமையை விடுத்து அடிமையாவதைத்தான் சுட்டிக்காட்டுகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரி.... இந்த இடத்தில் வடபுல சமுதாயத்தின் நிலையினை நிறுத்திக்கொண்டு வடபுல தேர்தல் நிலைக்குச்செல்வோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முன்னரே குறிப்பிட்டதுபோல தமிழ்த் தேசியக் கூடடமைப்பு, சுதந்திரக்கட்சி ஈ.பி.டி.பி. கூட்டணி, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இவையே வடபுலத்தில் பிரதானமாக மோதவுள்ள கட்சிகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><u>ஐக்கிய தேசியக் கட்சி.</u></b></div>
<div style="text-align: justify;">
நாட்டின் பிரதானமான எதிர்கட்சி! என்ற பெயரை மட்டும்தான் இன்றைய நிலையில் தன்னகத்தே வைத்துள்ள ஒரு கட்சி. </div>
<div style="text-align: justify;">
வடபுலத்தே மகேஸ்வரனை மையப்படுத்தி வெற்றிகண்டதும், மகேஸ்வரனின் செல்வாக்கில் பல வருடங்களின் பின்னால் யாழ்ப்பாணத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வெற்றி கொண்டதும் உண்மைதான்.</div>
<div style="text-align: justify;">
அதை தொடர்ந்து மகேஸ்வரன் குடும்பம், காரைநகர் என்ற வட்டங்களிலேயே இந்தக்கட்சி தனது செயற்திட்டங்களை எடுத்துவருவது அதன் கையாலாகாத தனம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தத்தேர்தலில் ஒன்றில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, அல்லது அதற்கு எதிரான ஆளும்தரப்பு இரண்டில் ஒன்றுக்கு வாக்குப்போட்டாலும் அதில் நிஜாயம், நாட்டிலேயே செல்லாக்காசாக இன்று மாறி இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து என்ன பிரயோனம் என்ற யதார்த்தமான கேள்வியை மக்கள் கேட்டுக்கொண்டால் நிலமை என்ன என்பதே இப்போதைய கேள்வி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இருந்தபோதிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு குறைந்தது ஒரு ஆசனமாவது வடமாகாணசபைத்தேர்தலில் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<u><b>ஈழமக்கள் ஜனநாயக் கட்சி.</b></u></div>
<div style="text-align: justify;">
அரசாங்கம், மக்கள், முழு இலங்கை, ஏன்! தமது கட்சியினருக்கே இந்தத்தேர்தலில் எப்படியும் பெரும்பாலான ஆசனங்களைப் பெற்று தமது இருப்பை நிறுவிக்கொள்ளவேண்டிய தேவை எல்லோரையும் விட ஈ.பி.டி.பிக்கு இருக்கின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இணைந்த வடக்கு கிழக்கு! மத்தியில் கூட்டாட்சி!! மாநிலத்தில் சுயாட்சி!!! இவையோடு இணைந்து செயற்படும் இணக்க அரசியல் என்ற அவர்களது கொள்கையை அவர்கள் இப்போதும் வைத்திருக்கின்றனர் என்பதும், ஏனைய கட்சிகள் ஏளனம் செய்வதுபோல சொந்த சின்னத்திலேயே கேட்க முடியவில்லையே என்ற அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர்களை அவர்களே நோகவேண்டிய விடயங்கள் என பல இறுக்கங்களும், மறைமுக அளுத்தங்களுக்கும் மத்தியில் இந்தத்தேர்தலில் அவர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் வடக்கில் தேர்தலில் குத்தித்துள்ள கட்சியில் வடக்கில் அமைச்சர் ஒருவரை கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி அவர்கள் மட்டும்தான் என்பது அவர்களின் மிகப்பெரிய பலம்.</div>
<div style="text-align: justify;">
அது தவிர ஏனையவர்களை விட மக்களின் வாழ்வாதாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட்டமையையும், மக்களுக்கான ஏதோ ஒரு வழி உதவிகள், வேலைவாய்ப்புக்கள் என்பவற்றை அரசிடம் இருந்து பெற்றுக்கொடுத்தவர்கள் என்பதையும் மறுக்கமுடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதேவேளை சொந்த இனம் அல்லலுற்று நின்ற சில வேளைகளில் கைகட்டி, வாய்பொத்தி நின்றமையும், அரசாங்கத்தால் சொல்லப்பட்டதை அறிக்கையாக கூறியதும் பெரிய பலயீனமே.</div>
<div style="text-align: justify;">
அது தவிர வெற்றிபெற்ற சபைகளில் உலகறிய நடக்கும் ஊழல்கள், மேசைக்கு கீழே வாங்கும் பெட்டிகள் என்பனவும் பெரும் பலவீனமே.</div>
<div style="text-align: justify;">
எனினும் ஈழமக்கள்! ஜனநாயக்கட்சி இந்த மாகாணசபைத்தேர்தலில் ஆகக்குறைந்தது 05 ஆனங்களையாவது கைப்பற்றும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><u>ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி.</u></b></div>
<div style="text-align: justify;">
ஆளும் தரப்பு என்பதும், தொடர்சியான தேர்தல் வெற்றிகள் என்பனவும் எவருக்கும் இல்லாத மிகப்பெரிய பலம் இவர்களது. </div>
<div style="text-align: justify;">
ஆனால் மறு புறம் வடபுலத்தில் எதிரி மனோநிலை குறிவைத்துள்ளதும் இவர்கள்மேலே என்பது வடமாணசபை தேர்தல் என்ற வகையில் இவர்களின் மிகப்பெரிய பலவீனமும் அதுவே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேரினவாதத்தின் கரம், எமக்கு வலி தந்தவர்கள், வமது எதிரிகள் என்ற எண்ணங்களும் அதை தூண்டிவிடும் கோசங்களும் இந்த தேர்தல் காலத்தில் காட்டுத்தீபோல கனன்று கொண்டே இருப்பது இன்னொரு பலவீனம்.</div>
<div style="text-align: justify;">
கட்சி வேட்பாளர்களிடையே ஒருங்கிணைவு, ஒற்றுமை இல்லாமை மிகப் பெரும் பலவீனம். </div>
<div style="text-align: justify;">
ஒரு சம்பவம் இடம்பெற்ற உடனேயே இந்த கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் இப்படி நடந்தால் நாங்கள் தமிழ்த் தேசிக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவோம் என அறிககை விட்டது நகைப்புக்குரியதே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தனை இருந்தாலும்கூட நமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும், இன்றைய காலங்களை ஓரளவு சிரமமின்றி கொண்டு செல்வதற்கும், நாட்டில் வாழும் ஏனைய சிறுபான்மை இனங்களில் கட்சியின் நேரடி வேட்பாளராக இருந்து அமைச்சர்கள் வருவதுபோல வடபுலத்திலும் ஆளும் தரப்பில் நேரடியான ஒரு அமைச்சர் இருப்பது மற்றவர்கள் மறுத்தாலும் உண்மையில் தேவையே. யதார்த்தநோக்கத்தோடு இதை நோக்கினால் உண்மையாக இந்த மண்ணின் மக்களுக்கு தன்னாலான உதவிகளை நேரடியாக பெற்றுத்தரக்கூடிய ஒரு நபரை உருவாக்குவதும் தேவையே. இது ஒருவகையில் மக்களின் சாணக்கியமே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எது எவ்வாறு இருப்பினும் ஸரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பில் கூடியது 03 பேருக்கு ஆசனங்கள் அமையலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<u><b>தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு </b></u></div>
<div style="text-align: justify;">
தமிழ் கட்சி, தமிழ்த்தேசியம், தமிழர் தாயகம், தமிழ் என்பனவே இவர்களின் பலங்கள். மக்களுக்கு நியாயமான வேறு தெரிவுகள் இல்லாமை இவர்களுக்கு பலத்திலும் பெரிய பலம். 'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூதானே சக்கரை' என்ற வடபுல பெரும்பாலான மக்களின் எண்ணமும், வேறு வழி இன்மையும்தான் இவர்கள் அடைந்த அடையப்போகும் வெற்றிகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சந்தேகத்துக்குரிய தலைமை, உள்குத்துக்களும், களுத்தறுப்புக்களும், மனக்கசப்புக்களும் கொண்ட பல கூட்டங்கள். இப்படி பல விடயங்கள் இவர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.</div>
<div style="text-align: justify;">
எது எப்படி இருந்தாலும் தமிழ் மக்களின் எண்ணங்களையும், தமிழ் மக்களின் அபிலாசைகளையும் இவர்களைவைத்தே தெரிவிக்கவேண்டும் என்ற தமிழர்களின் நிலையே இவர்களின் பலத்தில் பெரிய பலம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற சொந்த கட்சி பதிவு செய்யப்படாமல் இலங்கை தமிழரசுக்கட்சி பெயரிலேயே தொடர்ந்தும் சொந்த சில்லில் ஓடாமல் இரவல் சில்லில் ஓடுவதை இவர்களே அறிந்தாலும் அசட்டையீனமாக தொடர்ந்து இருந்து வந்தவர்கள் ஐயன்மார்களே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரி... விடயத்திற்கு வருவோம் இவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் எப்படி இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே அது குறித்து அரசாங்கத்தைத் தவிர யாரும் ஏன்! இவர்களே பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.</div>
<div style="text-align: justify;">
எனினும் பேரினவாதம், தமிழர்களுக்கு ஏன் உரிமை! என்ற விடாப்பிடியை பிடித்துவைத்திருக்கும் பேரினவாத அரசுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் மாறவேண்டும் என்று கொக்கரிப்பது பேடித்தனமானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மறுபுறம் அரச சார்பான கட்சிகள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களித்து என்னத்தை பெறப்போறீர்கள், அபிவிருத்தியை நாம்தான் செய்வோம், வேலைவாய்ப்பினை நாம் தான் தருவோம், யுத்தம் முடிந்த பின்னர் எத்தனை அபிவிருத்தி பாருங்கள் என்பன எல்லாம் வேடிக்கைப்பேச்சே.</div>
<div style="text-align: justify;">
வெறும் வேலைவாய்ப்புக்கும், அபிவிருத்திக்குமாகத்தான் இத்தனை இலட்சம் பேர் முப்பது வருடமாக மடிந்தார்களா என்ன? பேரினவாதமும், பெரும்பான்மை சமுகமும் அடாவடியாக மாறாமல் இருக்கும்போது நிஜாயத்திற்காக மாறாமல் இருப்பதில் தமிழர்களது குற்றம் ஏதுமில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாறாக பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மக்களை மீட்டோம் என்று கொக்கரித்தவர்களே மீட்கபட்ட மக்களுக்கான அபிவிருத்திக்கு முழுப்பொறுப்பானவர்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்தது தமிழ்நாட்டு மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் உள்ள உறவை முழுமையாக கூட்டமைப்பின் முதன்மைவேட்பாளர் புரிந்துகொண்டு பேசவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
இறுதி யுத்தத்தில் அங்கே மக்கள் மடியும்போது நீங்கள் வாய்பொத்தி இருந்தபோதும், மனைவி மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு நீங்களும் போய்வந்தபோதும் தீக்குளித்தும், போராட்டம் நடத்தியும் உறவுகளுக்காக கண்ணீரும் செந்னீரும் விட்ட உறவுகள் அவர்கள். </div>
<div style="text-align: justify;">
ஈழத்தமிழரின் போராட்டங்களின் ஒவ்வொரு கட்ட ஆணிவேர்களும் அங்கிருந்து கிடைத்தவையே என்பதை மறந்துவிடாதீர்கள். நாக்கில் நன்றி கெட்டத்தனமாக பேசாதீர்கள்.</div>
<div style="text-align: justify;">
இந்த விடயம் கிள்ளுக்கீரை விடயம் அல்ல... வாய்க்கு வந்தபடி எல்லாம்பேசிக்கொள்ள. உயிரோட்டமான உடன்பிறப்புகளின் விடயம். அவர்கள் இல்லாமல் நாம் இல்லை என்பதை எப்போதும் மறவாதீர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதேநேரம் கடந்த பல தேர்தல்களிலும் தொடர்ந்து கூட்டமைப்புக்கே வாக்களித்து வந்த மக்களுக்கு இனிவரும் காலங்களிலாவது அவர்கள் ஏதாவது செய்தே ஆகவேண்டும். வெறுமனே வாய்ச்சொல்லில் வீரர்களாகவே அவர்கள் நீடித்த அரசியலை மேற்கொள்வார்களே ஆனால் பிளவுகள் ஏற்படுவதும், புதிய கட்சிகள் உருவாவதும், பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதும் தடுக்கமுடியாதவையாகப்போகும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பம்பூதானே சர்க்கரை' என்ற மக்களின் எண்ணமே இந்த முறையும் கூட்டமைப்புக்கு இறுதியாக கொடுக்கும் பலமாக அமையும். ஆகக்கூடியது 10 ஆசனங்கள் வெளியால் போக மிச்சம் உள்ளவைகள் அனேகமாக இவர்களுக்கே செல்லும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-82687859671688294962013-09-14T16:46:00.000+05:302013-09-14T16:46:18.572+05:30வடமாகாணசபை தேர்தலும் நாம் சிந்திக்கவேண்டியவையும்! -01 <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMTz5XOx7-j2HIFSDWxPFU0yARwyCnb86xru-PQzPh1adigwkdtB8-PPn0Qpzf-5N4H3f764cUC2c9V5X1nJ9_EhIpMU8Yx1FE_gugcJ_bpdiqjLQgHMsVQnXI6zJRfxuIMcKF4cz7s0H7/s1600/Vulnerable_GND_2f-1024x700.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="435" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMTz5XOx7-j2HIFSDWxPFU0yARwyCnb86xru-PQzPh1adigwkdtB8-PPn0Qpzf-5N4H3f764cUC2c9V5X1nJ9_EhIpMU8Yx1FE_gugcJ_bpdiqjLQgHMsVQnXI6zJRfxuIMcKF4cz7s0H7/s640/Vulnerable_GND_2f-1024x700.png" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலப்பெருவெளியில் சமுக ஓட்டகளின் மத்தியில் அடிபட்டு ஒதுங்கிநிற்கும் சமுதாயம் நாம் என்ற மிரட்சியுடன், உலகியலின் ஓட்டத்திற்கு இயல்பானதாக மட்டும் அல்லாமல் ஏதோ ஒரு திசைக்கு இழுத்துச்செயல்லப்படும் சமுதாயமாகவே நாம் உள்ளோம் என்பது வெக்கப்படாமல் நாம் ஒத்துக்கொள்ளவேண்டிய தொனியாகவே உள்ளது.</div>
<div style="text-align: justify;">
எமது தலைவிதியை நிர்ணயிக்க நாம் ஒவ்வொரு கட்டங்களிலும் யார் யாரையோ பரிதவிப்புடன் பார்த்து ஏங்கிநிற்கும் பிச்சைக்காரத்தனம் எம்மிடம் எந்தப்புள்ளியில் இருந்து வந்தது! </div>
<div style="text-align: justify;">
எம்மை நாம் ஆண்டவர்கள், இலங்கையில் வாழும் மற்ற இனத்தவருடன் எப்போதும் ஒன்றாக வாழ்ந்தவர்கள் அல்லர், மாற்றார்களால் ஒன்றாக வாழ வைக்கப்பட்டோம், நான்கு நூற்றாண்டுகள் இடைவந்த மாற்றார்களின் ஆட்சிமுறைமைகளே எமக்கு இன்று பெரும் சிக்கல்களை தந்துவிட்டன என்பது ஒருபுறம், பின் நோக்கி வரலாற்றையும், முன்னோக்கி தொலைநோக்கத்தையும் அடைய வல்ல தலைமைத்துவம் இல்லாமை மற்றொரு புறம் என ஒரு முடிவின்றி இழுபடும் சமுதாயமாக நாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கை சுதந்திரம் அடைந்த தினத்தில் இருந்து ஒரு தசாப்தத்தின் உள்ளேயே, சேர்ந்துவாழ்தல் என்பதற்கான ஆழமான கேள்விக்குறிகள் விழ ஆரம்பித்ததுதான் வரலாறு. பிரித்தானியா தனது பிரித்தாளும் தந்திரத்தில் 'சிறுபான்மைத்தமிழரை தமது அதிகாரிகளாகவும், பெரும்பான்மை சிங்களவர்களை சாதாரணர்களாகவும் வைத்திருந்துவிட்டு, தான்போகும்போது, பெரும்பான்மை சாதாரணர்களிடம் அதிகாரத்தை கையளித்துப் போனமைதான்' கொடிதிலும் கொடிது.</div>
<div style="text-align: justify;">
இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது தமிழ்த்தரப்பில் ஒரு ஆணித்தரமான தலைமை அன்றைய 1940 களில் இல்லாமையே. சேர்.பொன். இராமநாதன் அவர்கள் பிரித்தானியரிடம் மட்டும் அன்றி மகாராணியிடமே செல்வாக்கு உள்ளவராக இருந்தாலும்கூட 1930 ஆண்டு அவரது இறப்புக்கு பின்னரும், பின்னர் 50 களின் நடுப்பகுதிகளில் மிளிரத்தொடங்கிய தந்தை செல்வா, ஜீ.ஜீ.பி என்போரின் வருகைக்கும் இடையில் ஏற்பட்ட வெற்றிடம் தமிழருக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தியது என்பதை பலர் கவனிக்கத்தவறுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எமது வரலாற்றை முறைப்படுத்தி அதைக்கையில் எடுத்து, எமது உரிமைகள் பற்றி சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த நாம் தவறிவிட்டோம் என்பது மறுக்கமுடியாத உண்மை. இன்றும் வரலாற்றைக் கையில் எடுத்து தமிழ்ச்சார்பு கட்சிகள் செயற்படவில்லை, வரலாறு மிக முக்கியமானது என்பதையும் இந்த வரலாற்றினை வைத்தே பல காய்களை நகர்த்த முடியும் என்பதையும் தமிழ்த்தரப்பு முதலில் அறிந்துகொள்ளவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழர் தரப்பு சொல்வதுபோல அவர்களது அகிம்சைவழி, மற்றும் அரசியல்வழி, ஆயுத வழிப்போராட்டங்கள் என அனைத்து அஸ்திரங்களும் பாவிக்கப்பட்டதும், ஆனால் இன்று வரை அவர்களுக்கான தீர்வு என்பது கேள்விக்குறியாகவே இருப்பதும் அனைவரும் அறிந்த விடயமே. </div>
<div style="text-align: justify;">
காலம் காலமாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும், பேச்சுவார்த்தைகளும் குப்பையில் போடப்பட்டு இந்த சமுதாயத்தின் முன்னால் நடாத்தப்படும் நாடகத்தின் ஒரு அங்கமாக இப்போது வந்து நிற்கின்றது வடமாகாணசபைத் தேர்தல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<u><b>வடமாகாணசபைத்தேர்தலும் மக்களும்</b></u></div>
<div style="text-align: justify;">
1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பயனாக உருவானதே இந்த மாகாணசபை மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் ஆனால் பெரிய விந்தை என்னவென்றால் வடகிழக்கு மாகாண தமிழ் மக்களின் பொருட்டு கொண்டுவரப்பட்ட இந்த மாகாணசபை முறமையை வடகிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்கள் இதுவரைகாலமும் முறையாக அனுபவித்து வந்தன என்பதே.</div>
<div style="text-align: justify;">
யுத்த வெற்றியின் பின்னதாக எல்லா மகாணங்களிலும் வெற்றிக்கொடி ஏற்றிவரும் ஆளும் தரப்பு ஆரம்பத்தில் வட மாகாணசபை தமக்கு கிடைக்காது என்ற யதார்த்தத்தினை உணர்ந்து அங்கு தேர்தலை நடத்த பின்னடித்தே வந்தது என்பதும் முற்றிலும் உண்மையே. அதேவேளை இன்றைய நிலையில் தேர்;தலை அங்கு நடத்தியே தீரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ஆளும்தரப்பு, வடக்கிலே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து தனது பங்காளிக்கட்சியான ஈ.பி.டி.பியையும் தனது சின்னத்திலேயே போட்டியிட இணைத்து தேர்தல் களத்தில் களம் இறங்கியுள்ளது. மறுபுறம் ஒரு ஊரைமட்டும் நம்பி தானும் தேர்தல்களத்தில் களமிறக்கியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி! இவையே இங்கு பிரதானம் மற்றக்கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் என்பன வேறு!!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மக்களை பொறுத்தவரையில் மிக நீண்ட நாட்களின் பின்னால் தேர்தலில் வாக்களிக்க ஒவ்வொருவரும் ஆர்வம் கொண்டிருப்பது ஒரு கவனிக்கப்படவேண்டிய விடயம். இந்த வடமாகாணத் தேர்தலில் குறைந்தது 75 வீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்பது கணிப்பீடு. இத்தோடு முதல் முதல் வாக்களிக்க உள்ளோரின் வீதமும் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
வீடு, வெற்றிலை, யானை இந்த மூன்றுக்கும் வாக்குகள் இந்த மக்களிடம் இருந்து பிரதானமாக கிடைக்கும், மற்றக்கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு விழும் வாக்கு வீதம் கண்டிப்பாக மிக மிக குறைவானதாகவே அமையும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<u><b>வடபகுதி மக்களின் இன்றைய வாழ்வியல்</b></u></div>
<div style="text-align: justify;">
வடபகுதியில் வாழும் இன்றைய சராசரி மக்களின் வாழ்க்கையினை யதார்த்தமான பார்வையில் கவனித்தோமாயின், நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர்களின் வாழ்வியலில் பல மாற்றங்கள் உருவாகியுள்ளன என்பது உண்மை.</div>
<div style="text-align: justify;">
யுத்தத்தின் பின்னான காலத்தின் ஆரம்பத்தில் திடு திடுப்பென மாற்றமெடுத்த வாழ்வியல் மாற்ற நிலை இன்று மெதுவான ஒரு ஓட்டத்திற்கு வந்துள்ளதெனினும் சீராகவில்லை. இந்த வாழ்வியல் மாற்றங்கள் பல எதிர்மாறான பலன்களையும் அவர்களுக்கு தந்துள்ளது என்பதை மறுக்கமுடியாது.</div>
<div style="text-align: justify;">
அடுத்து முக்கியமாக ஒரு சமுதாயத்தின் வாழ்வியலில் தாக்கம் செலுத்தும் காரணி தலைமுறைகள், எமக்கான உரிமையினைப்பெறும் போராட்டத்தின் விடை கிடைக்கும் முன்னதாகவே நான்கு தலைமுறைகள் கடந்துவிட்டன என்பதே உண்மை. இந்த கால தேச வர்த்த மானங்களால் எழுந்துள்ள தலைமுறை இடைவெளி வடபகுதி வாழ்வியிலில் பெரும் முரண்பாடு ஒன்றை கொண்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொதுவாகச்சொன்னால் ஆயதப்போராட்டத்திற்கு முன்னர் பிறந்தவர்களின் மனநிலை, ஆயுதப்போராட்டத்தின்போது பிறந்தவர்களின் மனநிலை, 1990களின் பின்னர் பிறந்தவர்களின் மனநிலை என்பன முற்றிலும் முரண்பாடுகளை கொண்டதாகவே கருத்திலும், செயலிலும் உள்ளதை ஒரு உளவியல் கண்ணேட்டததின் ஊடாக கண்டு கொள்ளமுடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வளப்பயன்பாட்டை எடுத்துக்கொண்டால் மறைமுகமாக யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வடபகுதி வளங்கள் சுரண்டப்பட்டு, ஏமாற்றப்பட்டு அல்லது அத்துமீறப்பட்டு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
கடல் உணவில் இருந்து இரும்பு, மரங்கள் வரை தொடர்சியாக தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><u>வர்த்தகம்.</u></b></div>
<div style="text-align: justify;">
உழைத்தலுக்கும் சேமிப்புக்கும் பெயர் பெற்றது வடபுலம். கட்டைவில் நோண்டும்போது தண்ணீர் பீச்சி வேளான்மை செய்யும் கூட்டமல்ல இவர்கள். உடல்வருத்தி வான்பார்த்து பயிரிட்டு நலக்கீழ்நீரை துலாமித்து வருந்தி உழைத்து முன்னேறிய சமுகப்பாரம்பரியம் கொண்டவர்கள் இவர்கள். </div>
<div style="text-align: justify;">
வெள்ளையர்காலத்தில் இருந்தே கல்விநிலையில் உயர்வு பெற்று உயர்தொழில்களும்புரிந்து மெல்ல மெல்ல வர்த்தகத்திலும் கொடி நட்டு, முழு இலங்கையிலும் பெரு வர்தகர்களாக கோலாச்சியவர்கள் இவர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று.........</div>
<div style="text-align: justify;">
யுத்தம் முடிவடைந்தது என்ற அரசர்கத்தின் அறிவிப்பையும், பாதை திறப்பையும் அடுத்து தென்னிலங்கை நிறுவனங்கள் பல போட்டிபோட்டுக்கொண்டு ஓடிவந்து தங்கள் மடைகளை திறந்தன, திறந்து கொண்டு இருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
'ஆசியாவின் சந்தை இலங்கை! இலங்கையின் சந்தை யாழ்ப்பாணம்!!' என்பதுதான் உண்மை. </div>
<div style="text-align: justify;">
'நீங்கள் எதுவும் உற்பத்தி செய்யவும் வேண்டாம், விற்பனை செய்யவும் வேண்டாம், நாங்கள் தருவதை வாங்குபவர்களாக மட்டும் இருங்கள் போதும்' என நேரடியாகவே வட புலத்தாரை தென்னிலங்கை சொல்வதுபோலவே வடபுல வர்த்தகத்தின் இன்றைய நிலை உள்ளது.</div>
<div style="text-align: justify;">
முன்னொரு காலத்தில் பெருமளவு பணத்தினை சேமிப்பில் போட்டு பணமிருக்கு பொருள் இல்லை என்று சொல்லிவந்த வடபுல வர்த்தகர்களின் இன்றைய நிலை, பல நிதி நிறுவனங்களால் பரிதாபகராமாக்கப்பட்டுவிட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சாதாரணமாக மருதானார்மடம், திருநெல்வேலிச்சந்தைகளில் மரக்கறி விலைகளை தம்புள்ள மரக்கறிகளின் வரவே தீர்மானிக்கும் நிலை வந்துவிட்டது.</div>
<div style="text-align: justify;">
ஏந்தவொரு கைத்தொழில் நிலையமோ, பக்டரியோ இங்கு இல்லை, இயங்கவும் முடியாது என்ற நிலைக்கு யாழ்ப்பாண வர்த்தகம் மறைமுகமாக திட்டமிட்டு கொண்டுவரப்பட்டுவிட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>தொடரும்.....</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-46143010120074783032013-05-04T14:19:00.000+05:302013-05-04T14:52:04.108+05:30கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்....... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWt1FtjphvwbMqviM0mlVulVAIWUDqhdzGyctzqS1Nh03O8mQwNQfH162LLwx4w8ueqSBD05Xm59rxu_84PoO-e2Aw0uuOMmb0r-ZDS30O68AdQkDucpY5yc1Y59PLC6U94cHe_cCaeN2i/s1600/trisha-krishnan-wallpaper-18.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWt1FtjphvwbMqviM0mlVulVAIWUDqhdzGyctzqS1Nh03O8mQwNQfH162LLwx4w8ueqSBD05Xm59rxu_84PoO-e2Aw0uuOMmb0r-ZDS30O68AdQkDucpY5yc1Y59PLC6U94cHe_cCaeN2i/s400/trisha-krishnan-wallpaper-18.jpg" width="323" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வழமையாகவே ஏப்ரல், மே மாதங்களின் வெயில் இளையராஜா பாடியதுபோல பசுமையே இல்லாமல் காஞ்சுபோய்த்தான் இருந்தது.</div>
<div style="text-align: justify;">
மத்தியான நேரம் வெள்ளவத்தை காலி வீதியில் இந்த நேரத்தில் நடந்துவருவதென்றால் வாகனச்சத்தம், வாகனப்புகை, என முழுவதும் மனதுக்குள்ளும் ஒரு எரிவை ஏற்படுத்திவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பரபரப்புடன் பிங் கலர் குடையை பிடித்துக்கொண்டு நிலப்பக்கமாக நடந்து வந்துகொண்டிருந்தவள், நெருசலில் சில ஆண்டிமாரும், சில நடுத்தரங்களும் உஸ்.. உஸ் கொட்டியபோதுதான், குடை அவர்களுடன் உரசிப்பார்த்ததை உணர்ந்து அவசரமாக தனது குடையினை சுருக்கிக்கொண்டாள்.</div>
<div style="text-align: justify;">
அவள் இலங்கையில்தான் வசித்துவந்தாலும் சத்தியமாகத்தான் அவளுக்கு வெயில் ஒத்துவராது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நிலப்பக்கத்தில் இருந்து கடற்பக்கமாக மாறினால் கொஞ்சம் வெயில் குறைவாகப்படும் என்று அவளது ஆறாவது அறிவு அந்தப்பக்கம் இழுக்கவே மற்றப்பக்கமாக கடக்க எத்தனித்தவள் தன்னிலை மறந்து கொஞ்சநேரம் ஸ்தம்பித்து நின்றாள்...</div>
<div style="text-align: justify;">
ஆமாம் அவளைச்சுற்றி நுவரேலியாவின் குளிர் சூழ தொடங்கியது, கொழுத்தும் வெயில் சண்கிளாஸினூடே பார்ப்பதுபோல மங்கிப்போனது, அவளைச்சூழ புரூட் பெர்பியூம் நறுமணம் பரவ தொடங்கியது......</div>
<div style="text-align: justify;">
ஆம் நிச்சயமாக அவன் வந்துவிட்டான்...... இது அவனேதான் என்று உணர்ந்த மறுகணமே அவளது முகம் இன்னும் சிவந்துகொண்டது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஓவ்வொன்றையும் இரசித்தபோதும் அவன் பின்தொடர்வதை உணர்ந்த அவள், அவசரமாக தன் நடையினை வேகமாக்கிக்கொண்டாள். அவன் வந்த அறிகுறிகள் ஒன்றும் குறையாததைக்கண்டு அவன் தனது நடைக்கு ஈடாகவே தானும் பின்தொடர்வதை அறிந்துகொண்டாள். மனதிற்குள் விபரிக்கமுடியாத ஒரு கிளுகிளுப்பு! ஆதனால் அவளுக்கு பயங்கரமாக ஒரு படபடப்பு ஏற்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தான் முதல் நினைத்ததுபோலவே வாகனங்களை சமாளித்துக்கொண்டு அவசரமாக எதிர்த்திசை சென்று, அதே அவரமாக தரிப்பிடத்தில் இருந்து புறப்பட தொடங்கிய பஸ்ஸில் அது என்ன பஸ்? எத்தனையாம் இலக்கம் என்பதைக்கூட பார்க்காமல் ஏறிக்கொண்டாள்.</div>
<div style="text-align: justify;">
பஸ்ஸில் கொஞ்சம் கூட்டம்தான் ஒருவாறு சமாளித்துக்கொண்டு நின்றவள், தன் அருகில் நிலவிய குளிர்மை அதிகரித்திருப்பதையும், பூருட் பெர்பியூம் மிக அருகில் மணப்பதையும் உணர்ந்து கால்கள் நடுங்கத்தொடங்க பயந்தவளாக அதேநேரம் அதை இரசிப்பவளாக முகத்தில் சிறு புன்முறுவல் பூத்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்ன 155 பஸ்ல ஏறியிருக்கிறீங்க? மோதரைக்குத்தானே போறீங்க? என்று அவள் காதுமடல்களின் பின்னால் குழைவான குரலில் அவனது குரலைக்கேட்டதும் சொக்கித்து நின்றாள். </div>
<div style="text-align: justify;">
அந்தநேரத்தில் கொன்டக்டர் வரவே மோதரைக்கு இரண்டு என்று சிங்களத்தில் சொல்லி காசைக்கொடுத்தான் அவன்.<br />
மற்ற ஆள் யார்? என்று சிங்களத்தில் கென்டக்டர் கேட்டபோதுதான் இயல்பு உலகத்திற்கு வந்தான் அந்த காதல் கிறுக்கன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com2Colombo, Sri Lanka6.9270786 79.8612430000000596.8009751 79.69988150000006 7.0531821 80.022604500000057tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-3394781214861364412013-05-02T17:41:00.000+05:302013-05-02T17:41:09.549+05:30நதியா ஸ்கேட் முதல் நதியா கச்சான் வரை.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimjEAR28MymPzE841hPpRcchrlt3gFWMDMNF6VRLKPFAdw8a9hGvTIb-CZx2WC2pXQun3IPH3inLIQoxJ11LPhvIjsvEQMqPhwFRCu39x7kCp_Aoza8VvGtHI2SkxZh2e2Yph5sRVXTrZj/s1600/nathiya-064.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimjEAR28MymPzE841hPpRcchrlt3gFWMDMNF6VRLKPFAdw8a9hGvTIb-CZx2WC2pXQun3IPH3inLIQoxJ11LPhvIjsvEQMqPhwFRCu39x7kCp_Aoza8VvGtHI2SkxZh2e2Yph5sRVXTrZj/s640/nathiya-064.jpg" width="433" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆம் அது ஒரு காலம்....... யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படை அமைதி காக்கத்தான் வந்திருக்குது, எங்கட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்று கனக்கக்கப்பேர் அவையை பூப்போட்டு வரவேற்ற காலம்.</div>
<div style="text-align: justify;">
அதாவது 1987 ஆம் ஆண்டு ஜூலை, ஓகஸ்ட் மிஞ்சி மிஞ்சிப்போனால் வெறும் இரண்டு மாத்களே. அதற்குள் என்றுமில்லாத விமர்சையாக வந்து போன நல்லூர்த்திருவிழா!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சும்மா சொல்லக்கூடாது இந்த இரண்டு மாதங்களும் யாழ்ப்;பாணத்தைப் பொறுத்தவரை ஒரு ஜொலிபுள் மாதங்கள் தான். அப்ப விடலை கண்ட அண்ணை அக்கா மார், ரியூசனுகளுக்கும் சாலியில (ஒரு வகை மோட்டார் சைக்கிள்) போய் இறங்கினது இப்பவும் என் கண்ணில் நிற்கிறது.</div>
<div style="text-align: justify;">
ஜி ரென் டெக்குகளும், சொனி ரீவிகளும் ஒவ்வொரு வீட்டுக்கும் வந்திறங்கி வீடியோ வாடைக்கு விடுறவைபாடு படு பிஸியாக இருந்த காலகட்டம் அது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தியாவில இருந்து பாஸ்போட் இல்லாம வந்திறங்கிய அமைதி காக்கும் படையுடன், யாழ்ப்பாணத்திற்கு அந்த நதியா மோகமும் வந்திறங்கியதாகவே இப்பவும் நான் நினைத்துக்கொள்வதுண்டு.</div>
<div style="text-align: justify;">
தமிழ்நாட்டுக்காரார் முக்கியமாக ஒன்றை கவனிக்கவேண்டும், அங்க முதல் முதல் ஒரு நடிகைக்கு கோவில் கட்டினதென்டால் அது குஸ்புக்கு என்றுதான் அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பார்கள்...... ஆனால் யாழ்ப்பாணத்திலை அந்தநேரம் நதியாக்கு இருந்த மார்க்கட்டே தனி ரகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த நாட்களில் பூக்கும் பூக்கள் எல்லாம் நதியாவாகவே பல அண்ணன்மாருக்கு பூத்தன, தலை வெட்டிலிருந்து பாவாடை வெட்டுவரை நதியாவாகவே பல அக்காமார் மாற முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
நதியாவின் வகை வகையான புகைப்படங்கள் சேர்ப்பதிலே பல அண்ணன்மாருக்கு போட்டி நடந்துகொண்டிருந்தது. </div>
<div style="text-align: justify;">
நதியாவின் புண்ணியத்தில் பான்ஸி கடைகள் எல்லாம் வீறுகொண்டு எழுந்து கூட்டத்தில் சிக்கித்தவித்தன. பல பான்ஸி கடைக்காரர்களின் யாழ்ப்பாண பீக் ரைம் இதுதான் என்று இன்றும் பல மூத்த பான்ஸி கடைக்காரார்கள் சொல்லிக்கொண்டிருகின்றார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புடவைக்கடைகளில் நதியா புரொக், நதியா ஸ்கேட், நதியா புளவுஸ், நதியா பெல்ட், நதியா பியாமா என்று நிறைய, பன்ஸி கடைகளில் நதியா தோடு, நதியா வளையல், நதியா ஹேர் பான்ட், நதியா கம்மல், நதியா பட்டன் என ஏராளமான நதியா ஐட்டங்கள் வெளியில் எடுத்து 15 நமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தன.</div>
<div style="text-align: justify;">
மறு புறம் நதியா செருப்பு, நதியா சைக்கிள், நதியா பொட்டு, நதியா ஹான்ட் பாக் என குவிந்துகொண்டிருந்தன.</div>
<div style="text-align: justify;">
இவற்றில் இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இவை எல்லாம் நதியா திரைப்படங்களில் உடுத்து, அணிந்து நடித்த பார்க்கக்கூடிய ஐட்டங்கள்தான்.</div>
<div style="text-align: justify;">
ஆனால் அதே நேரத்தில் நதியா சென்ட் என்று ஒரு ஜஸ்மின் நறுமண சென்ட் வகை அப்போது பெண்கள் பெரும்பாலானவர்கள் பாவித்த ஒன்று!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரி........ இவ்வாறு வாங்கிக்குவித்தவற்றை போட்டுக்காட்டுவதற்கான களம் ஒன்று வேண்டாமா? கணக்காக வந்தது நல்லூர் கந்தன் திருவிழா. அப்பா அந்த 25 நாட்களையும் வேற எந்த வருட 25 நாட்களுடனும் ஒப்பிட முடியுமா என்ன?</div>
<div style="text-align: justify;">
நதியா ஹாவ்சாறிகள் நிறைந்து நின்றன நல்லூர் வீதிகள் எங்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேற்சொன்ன நதியா வகையறாக்களை விட மேலும் பல நதியா ஐட்டங்கள் வந்து குவிந்தன இதைப்பார்த்து வேறு விற்பனையாளர்கள் கூட தமது பொருட்களையும் நதியா என்ற அடைமொழியுடனே விற்கத்தொடங்கினர்.</div>
<div style="text-align: justify;">
நதியா ஐஸ்கிறீமில் இருந்து நதியா கச்சான் வரை சென்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மைதான் என்னைப்பொறுத்தவரை நதியா, மற்றும் நதியா கோஸ்மட்டிக் பொருட்களுக்கு அப்போதைய யாழ்ப்பாண இளைஞர்கள் கொடுத்த வரவேற்பை அதன் முன்போ, அதன் பின்போ வேறு யாருக்கும் தரவில்லை.</div>
<div style="text-align: justify;">
யாழ்ப்பாணம் ஜொலிபுள்ளாக இருந்த அந்த 1987 ஜூலை, ஓகஸ்ட்டு மாதங்களில் அடித்த நதியாப்புயல் அதை நினைத்துப்பார்க்காத அளவுக்கு கரைபுரண்டு சென்றது அடுத்தடுத்து நிகழ்ந்த யுத்தங்களால்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-80428474173039088702013-05-01T19:32:00.000+05:302013-05-01T19:32:22.438+05:30 வல்லமை தாராயோ.......... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr9JSuC777CFvcwN3Amj1dYshs6SQcYZbQlWj5bDnsPdWCDj9kmIc1uk4QhWsfwjwlbd3DrJ80dfzebNXpU0rIsBI4Ctc5dGdGfoEAlGb4Cug5ZCdGl9kMzU4iVCbPkcSPrGcVsjTigyQh/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr9JSuC777CFvcwN3Amj1dYshs6SQcYZbQlWj5bDnsPdWCDj9kmIc1uk4QhWsfwjwlbd3DrJ80dfzebNXpU0rIsBI4Ctc5dGdGfoEAlGb4Cug5ZCdGl9kMzU4iVCbPkcSPrGcVsjTigyQh/s1600/images.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த வரிகள் இப்போதெல்லாம் அடிக்கடி இதயப்பொருமலுடன் முணுமுணுத்துக்கொள்ளும் வறட்சியான வார்த்தைகளாக இதயத்தில் தொக்கி நிக்கின்றது. </div>
<div style="text-align: justify;">
'கலியுக முடிவுக்காலம் என குறிப்பிடப்பட்ட விபரணங்கள் எமக்கே நடப்பதுபோல ஒரு முரட்சியும் அப்பப்போ மிரட்டிக்கொண்டுதான் இருகின்றது'</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகப்பரப்பில் நாம் யார்? நாம் சபிக்கப்பட்ட ஒரு இனமா? அரசியல் அநாதைகளா?</div>
<div style="text-align: justify;">
இவையே மனம் முழுவதும் மரணவேதனையை விட அதிக ரணம் தரும் சுய அதிஉச்ச கேள்வியாக உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனையும் துளைத்துக்கொண்டிருக்கின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கால தேச வர்த்த மானங்களைத்தாண்டி ஒரு முடிவின்றி வரையறையின்றி அல்லலும், இன்னலும்;தான் பரிசுகளாக மாறி மாறி வருவதென்றால் வாழ்வியலில் எங்கோ ஆழமான ஒரு புரழ்வு இருப்பதாகவே தெரியும்.</div>
<div style="text-align: justify;">
மறுபுறம் முடிவின்றி தொடரும் அல்லல்களின் இடையே பல தலைமுறைகள் மாறிவிட்டன. தலைமுறைகளின் சிந்தனை வயப்புகள் பெரும் வியப்பு நிலைக்கு இட்டுச்செல்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்நிலைக்கு காரணம் அவைதான், அவர்கள்தான், அவங்கள்தான், என மாறி மாறி விரல்களை சுட்டிக்கொட்டிக்கொண்டிப்பதிலேயே காலங்கள் கரைந்துகொண்டிருகின்றது. </div>
<div style="text-align: justify;">
வரலாற்று, பூகோள, அமைவிட, கலாசார இருப்புகள்தான் நமக்கு பாதகமாகப்போகினவோ தெரியாது! </div>
<div style="text-align: justify;">
சரியான ஒரு அரசியல் தலைமை இல்லை, பொறுப்பான ஒரு வழிகாட்டல் இல்லை, தோழ்கொடுக்க ஒரு நாடுகூட இல்;லை, அடக்கு முறையை எதிர்க்க ஒரு நாதி இல்லை, நாளைகள் மீது நம்பிக்கை மட்டும் எப்படி வரும்? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்போதெல்லாம் நம்மில் பலரை பார்த்திருக்கின்றேன், எதையும் யோசிக்காமல், பத்திரிகை கூட பார்க்காமல் கஸ்டப்பட்டு தாம் உண்டு தம்பாடு உண்டு என்று இருக்கவேண்டும் என்றே பிரயத்தனம் எடுத்து வாழப்பழகுகின்றார்;கள், இருந்தபோதிலும் ஏதோ ஒரு வகையில் அவர்களையும் அக்கிரமங்களும், அஜாக்கிரகங்களும் துரத்திக்;கொண்டுதான் இருகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு முப்பது வயதை கடந்து அடுத்த சந்ததியையும் கைகளில் ஏற்தியுள்ள பெண் ஒருவர் 'நான் பிறந்தது மயிலிட்டி ஆனால் நான் இன்றுவரை என் இடத்தில் வாழ்ந்ததில்லை' என கண்களின் ஈரத்துடன் சொல்வது ஒன்றும் செய்திக்;கான தொனிப்பொருள் இல்லை, அந்த சொல்லின் உள்ளே அவளின் ஆணிவேரே அறுக்கப்பட்ட வேதனை அடங்கியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாதியற்று குற்றுயிராய்க்கிடக்கும் ஒரு சமுதாயம் வேதனையுடன் வான் பார்த்து நிற்பதென்னமோ.... அட எங்காவது ஒரு ஒளிக்கீற்றாவது தென்படுகின்றதா என்பதுதான். இப்போது தென்படும் எரிகற்களை எல்லாம் நட்சததிரங்கள் என்று நம்பினால் மீண்டும் ஒரு ஏமாற்றததுடன் நிரந்தரமாக கண்மூடுவதை தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பதே யதார்த்தம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீண்டும் இதெற்கெல்லாம் காரணம் அவங்கள்தான், அவர்தான், அவைதான், என்று சுட்டுவிரல்களைக் காட்டாமல் ஒட்டுமொத்தமாக உ(எ)ங்கள் யாருக்குமே வல்லமை இல்லை என்ற பெரிய உண்மையை ஒத்துக்கொண்டு.</div>
<div style="text-align: justify;">
இனியாவது சிந்தித்து சாணக்கியத்தனமாக வல்லமையாக இருக்க முயற்சி செய்வோமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
(அடடா...... இந்த பதிவை பொறித்துக்கொண்டு இருக்கும்போது வீதியால் ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது என ஒரு ஐஸ்பழ வாகன ஒலிபெருக்கி பாடிக்கொண்டு செல்கின்றது)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-4045302575848065902013-01-08T21:27:00.002+05:302013-01-08T21:31:06.465+05:30தேவதைக்கதைகளின் கதை – 02<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgR69VwInKqb_m2_WqFIi0LVlvFW0H0catcsU0ssEid3ZvzASYLocSNisCck6eHW0T3pwIJzbBDoK8zK6zaJ77K4SkKYmddblhKh76GcKzlqPPTol2qFEevN4WMTrC69RSbLdoUQKPlBbEB/s1600/009.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="346" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgR69VwInKqb_m2_WqFIi0LVlvFW0H0catcsU0ssEid3ZvzASYLocSNisCck6eHW0T3pwIJzbBDoK8zK6zaJ77K4SkKYmddblhKh76GcKzlqPPTol2qFEevN4WMTrC69RSbLdoUQKPlBbEB/s400/009.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொதுவாகவே ஐரோப்பிய தேவதைக்கதைகள் சிறுவர்களுக்கு ஏற்றவாறாக இரத்தல் உணர்வு பீரிட ஒரு தேவதைக்கொப்பான பெண்ணை மையமாகவைத்தே கதைக்கரு சுற்றிக்கொண்டிருக்கும். அடக்குமுறை, அவமதிப்பு, ஏழ்மை, வஞ்சகம், ஏமாற்றம், கொடுமை, அடிமை நிலை என்பவற்றினால் தவிக்கும் இந்த தேவதைக்கதாபாத்திரங்கள் கதையோட்டத்தால் அந்த சூழ்சிகளில் இருந்து தப்பி இறுதியில் உயர்ந்த நிலையை அடைவதாகவே கதையோட்டங்கள் யாவும் அமைந்துசெல்வதை கவனிக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாலர் பருவங்களில் அவர்களின் மனங்களில் விதைக்கப்படும் இந்தக்கதைகள், காலங்கள் கடந்தாலும் அவர்களின் மனங்களை விட்டகலாமல் இருப்பதற்கு அந்தக்கதைகளின் பாத்திர வார்ப்புக்களும் பிரதான காரணம்தான் எனலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>பியூட்டி அன்ட் த பீஸ்ட்</b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoI8nDXzeMhhHx4u_XRda_E-wJOh5IUqwu-TKA08Mu6DNlh3WHPR19mhnXrhjbOqEkZ_PPPcd2JQKECWvC4MCHRP3UvDiw-EmbAb6reSPvFVbmkuY8fgzvcoYi3hXSNZUbIRnLAW9OGT2y/s1600/Beauty-And-The-Beast-classic-disney-6411821-1024-768.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoI8nDXzeMhhHx4u_XRda_E-wJOh5IUqwu-TKA08Mu6DNlh3WHPR19mhnXrhjbOqEkZ_PPPcd2JQKECWvC4MCHRP3UvDiw-EmbAb6reSPvFVbmkuY8fgzvcoYi3hXSNZUbIRnLAW9OGT2y/s400/Beauty-And-The-Beast-classic-disney-6411821-1024-768.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த தேவதைக்கதையின் நாயகியாகிய தேவதையின் பெயர் பெல்லி. மென்மையான எதையும் நேசிக்கும் மாசற்ற அன்புள்ளம் கொண்டவர்களுக்கு எவற்றின்மீதும், மயமோ, அச்சமோ, அதீத ஆசைகளோ கிடையாது அன்பு எந்தவொரு மாஜத்தையும் செய்துவிடும் என்று கருத்தை பறைசாற்றுகின்றது இந்தக்கதை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுவும் ஒரு பிரஞ்சுதேசத்துக்கதைதான், 1740 ஆம் ஆண்டு பிரஞ்சுப் பெண் புனைகதை எழுத்தாளரான கேப்ரியல் ஸூசான் பார்போர்ட் விலனியூவ் என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது என அறியப்படுகின்றது.</div>
<div style="text-align: justify;">
அதேவேளை 1756ஆம் ஆண்டு இதே கதையினை ஜென்னி மரீன் என்பவர் மீள் பிரசுரம் செய்துவைத்தபோதே இந்த தேவதைக்கதை மிகப்பிரபலம் அடைந்ததாக குறிப்புக்கள் கூறுகின்றன.</div>
<div style="text-align: justify;">
அந்தவகையில் அடுத்த ஆண்டாகிய 1757ஆம் ஆண்டே இது ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து உலகமெல்லாம் பீஸ்ட்டுடன் அந்த தேவதை உலாவரத் தொடங்கினாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது மட்டுமன்றி மேற்படி பியூட்டி அன்ட் த பீஸ்ட் 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடக அரங்கங்களில் பெரிதும் இடம்பிடித்த மக்களின் மனதைக்கவர்ந்த நாடகமாவும் குறிப்பிடப்படுகின்றது.</div>
<div style="text-align: justify;">
குழந்தைகளுக்கு நவரசத்தையும் அவர்களுக்கு ஏற்ற வகையில் கொடுத்திருக்கும் இந்தக்கதை அவர்களை வெகுவாகக்கவர்ந்து கொண்டது எவ்வாறு என்ற சந்தேகத்தையே இல்லாது செய்துவிட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மனைவியை இழந்து தனது மூன்று பெண் குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்துவந்தார் ஒரு வர்த்தகர். அந்த மூன்று பெண்களிலும் இளையவளான மூன்றாவது பெண் பெல்லி ரொம்ப அழகானவள்.</div>
<div style="text-align: justify;">
அவளது அழகு மட்டும் அன்றி, அவளது இனிமையானபேச்சு, அன்பான அணுகுமுறை, மென்மை, நேர்த்தி என்பன பலருக்கு அவள் மேல் பேரபிமானத்தை ஏற்படுத்திவிட்டன.</div>
<div style="text-align: justify;">
இதனால் மூத்தவர்களான இரண்டு பெண்களுக்கும் இவள்மேல் பொறாமை இருந்துவந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தவேளை வர்தகரின் கப்பல் ஒன்று புயலிலே சிக்குண்டுவிட்டதாக செய்திவருகின்றது. அதனால் அவர்களின் தந்தையான வர்த்தகர் பெருந்துயரத்திற்கு உள்ளாகின்றார். அந்தவேளை பெல்லி அவருக்கு ஆறுதல் வார்ததைகள்கூறி அவரை ஆசுவதப்படுத்துகின்றாள். கப்பல் மீண்டும் கிடைத்துவிடும் நம்பிக்கையோடு இருங்கள் என்கின்கின்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவள் சொன்னதுபோலவே வணிகருடைய கப்பல் துறைமுகத்துக்கு வந்துசேர்ந்ததாக செய்தி வருகின்றது. சந்தோசமடைந்த வர்ததகர் கப்பலை பார்க்க பிராயாணத்திற்கு ஆயத்தமாகின்றார்.</div>
<div style="text-align: justify;">
அந்தவேளை தமது மூன்று பெண்களையும் அழைத்த தந்தை, உங்களுக்;கு என்ன வேண்டும் என்று வினவுகின்றார். அதற்கு பதிலளித்த முதலிரு பெண்களும், தமக்கு விதவிதமான உயர்தர ஆடைகள், ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருட்கள் என அடுக்குகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
ஆனால் பெல்லியோ தனக்கு எதுவும்வேண்டாம் என தந்தையின் நிலையை உணர்ந்து சொல்கின்றாள். ஆனால் அவளது தந்தை எதையாவது நீயும் கேள் மகளே என்றபோது.... சரி எனக்கு ஒரே ஒரு ரோஜாப்பூ மட்டும் வாங்கிவாருங்கள் என்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
துறைமுகத்தை அடைந்த தந்தை அங்கு தனது கப்பலை பார்த்துவிட்டு, நெடுந்தூரப்பயணமாக பெருநகரத்தில் தனது முதல் இரு மகள்மாரின் வேண்டுகோளுக்கான பொருட்களை வாங்கிக்கொண்டு குதிரையில் ஏறி நெடுந்தூரம் தனது வீட்டைநோக்கி பயணிக்கும்போது தாகம் பசி கழைப்பு நிலைக்கு உள்ளாகின்றார், தூரத்தில் அவர் கண்களுக்கு அழகான அரண்மனை ஒன்று தென்படுகின்றது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மகிழ்ச்சியுடன் அந்த அரண்மனையை அடைகின்றார், அங்கு எவரையும் காணமுடியவில்லை, ஆனால் நிறைய பழரசங்கள் முதல் மேசையிலே இருந்தன, அவற்றை எடுத்து அருந்தி தாகத்தை தீர்த்துக்கொள்கின்றார். பின்னர் அறுசுவை உணவாக பலவேறான உணவுகள் நாவுக்கு ருசியாக அவருக்கு தெரிகின்றன அவற்றையும் உட்கொண்டு பசியாறுகின்றார்.</div>
<div style="text-align: justify;">
அடுத்து சோம்பலாக இருக்கவே காற்றோட்டமான இடத்தில் உயர்தர இலவம்பஞ்சு மெத்தையிலே படுத்து உறங்குகின்றார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உறக்கம், சோம்பல் இரண்டும் விடுபட்ட நிலையில் அப்போது மேசைமேலே இருந்த தேனீரை அருந்தியவாறே இந்த உபசரிப்பு செய்தவர் யார்? அவருக்கு நன்றி சொல்லவேண்டும் என அங்குமிங்கும் யாராவது உள்ளனரா எனத்தேடுகின்றார்.</div>
<div style="text-align: justify;">
அந்தநேரம் அந்த அரண்மனை தோட்டத்திற்கு வருகின்றார். அங்கே பூத்துக்குலுங்கும் ரோஜாக்களைக்கண்டு தனது இளைய மகளின் நினைவு வரவே ஒரு ரோஜா மலரை அவர் பிடுங்கிவிடுகின்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்தவேளையில் பேரிரைச்சலுடன் அவர் முன்னால் ஒரு பூதம் தோன்றுகின்றது...</div>
<div style="text-align: justify;">
ஏ...... மானிடனே உன் புத்தியை காட்டிவிட்டாயே........ அருந்த பழரசம், விதவிதமான உணவு, இளைப்பாற மெத்தை இத்தனையும் தந்தேன் ஆனால் இந்த நந்தவனத்தில் உள்ள பூக்களை கொய்ய உனக்கு உரிமை இல்லை. இந்தப்பூவை நீ யாருக்காக கொய்தாயோ அவரை நீ இங்கே சேவகம் செய்ய நீ அனுப்பி வைக்கவேண்டும் என ஆணையிடுகின்றது........</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதன் பின்னர் அந்த அரண்மனைக்கு வரும் பெல்லியின் அன்பால், கவரப்படும் பூதம் ஒரு கட்டத்தில் அவளைப்பிரிந்து இறக்கும் நிலைக்கு செல்லும்போது, பெல்லி ஓடிவந்து அந்த பூதத்திறகாக அழுவதும், அவளது தூய்மையான கண்ணீர் பட்டதும் பூதம் சாப விமோசனம் பெற்று அழகிய இளவரசனாகி பெல்லியையே மணந்துகொள்வதும் நீங்கள் அறிந்த கதைதானே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வாறான தேவதைக்கதைகள் குழந்தைகளின் முனதில் எவ்வளவு தாக்கம் செலுத்துகின்றது என்பதற்கு இந்த தேவதைக்கதைகள் தொடரை எழுதும் நானே சிறந்த உதாரணம். இந்தக்கதைகளை படித்த பாலர் காலத்திலே எனது பெரிய தந்தையார் வெளியூர் பிரயாணம் ஒன்று செல்லும்போது அன்பாக எம்மிடம் பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது ஒவ்வொருவரும் ஒன்றைச்சொல்ல 'எனக்கு ஒரே ஒரு ரோஜாப்பூ போதும்' என்று சொன்னவன் சாட்ஜாத் நான் தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்த பதிவில் மீண்டும் ஒரு தேவதையுடன் உங்களை சந்திக்கின்றேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-14064371853239176612013-01-07T23:05:00.002+05:302013-01-07T23:05:34.850+05:30தேவதைக்கதைகளின் கதை – 01<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGyPb6OrsWeOZET-8orO1ZJ8_I9FA96hHR5D72CIc3b1H1wx39sAwwgUI3AOSpv35crd8i2i53UqdCtO6CyiEJxjMekHZtX3VK-ExowoaGe8FY-KalHLprHZsym_EzAPQGUL5gHEAzelKj/s1600/Angel-13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGyPb6OrsWeOZET-8orO1ZJ8_I9FA96hHR5D72CIc3b1H1wx39sAwwgUI3AOSpv35crd8i2i53UqdCtO6CyiEJxjMekHZtX3VK-ExowoaGe8FY-KalHLprHZsym_EzAPQGUL5gHEAzelKj/s640/Angel-13.jpg" width="448" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
பாலர் பருவங்களில் பலரின் இதயங்களில் மென்மையாக வருடிச்சென்று அந்தப்பருவகாலங்களின் கனவுகளிலும் தாக்கம் செலுத்துபவையே இந்தத்தேவதைக்கதைகள்.</div>
<div style="text-align: justify;">
தலைமுறைகள் பல தாண்டியும் இந்தக்கதைகளில் வரும்தேவதைகளுக்கும், இந்தக்கதைகளுக்கும் ஏனோ வயதாகிவிடவில்லை. இந்தக்கதைகளை புனையும்போது இந்தக்கதைகளை புனைந்தவர்களுக்கு தெரியுமோ தெரியாது இந்த தேவதைகள் சாகாவரம் பெற்றவை என்று.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவதைகளுக்கும் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்? அந்தக் குழந்தைகளின் கற்பனைகளுடனான யதார்த்தப்பின்னல்களுடன் இந்த தேவதைகள் எப்படி இணைக்கப்பட்டார்கள்? குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகள், அவர்களின் குழந்தைகள் என ஒவ்வொரு மருபுக்கும் இந்தத்தேவதைகளின் பாச்சல் எப்படி சாத்தியமானது என்பன போன்ற கேள்விகள் அதிசயிக்க வைக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெறுமனே ஐரோப்பிய காலாச்சாரமும், காலனித்துவமும், நாடுகாண்பயணங்களும் மட்டுமே இந்த தேவதைக்கதைகளை உலகமெங்கும் கொண்டு சென்றன என்று ஒற்றைவரியில் சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிடமுடியாது.</div>
<div style="text-align: justify;">
மாறாக இந்தக்கதைகளில் வரும் தேவதைகளுக்கு ஐஸ்லாந்து என்றால் எக்ஸிமோக்களின் உடை உடுத்தவும், ஜப்பான் என்றால் ஹிமோனோவை போர்திக்கொள்ளவும், தென்ஆசியா என்றால் சேலை கட்டிக்கொள்ளவும் தெரிந்ததே அவை என்றும் அழியாத வரம பெற்று தலைமுறைகளுக்கு கடத்தப்படுவதற்கான காரணம் என்றுவேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐரோப்பிய கதைகள் மட்டும் இல்லாமல் இந்தியாவிலிருந்து பஞ்சதந்திரகதைகள், தெனாலி ராமன் கதைகள், அராபியாவின் ஆயிரத்தோர் இரவுகதைகள், ஈசாப்கதைகள் என்று கதைகள் ஆயிரம் வந்தன. இருந்தாலும் ஐரோப்பிய தேவதைகளின் காஸ்லியோ இல்லை காலனித்துவம் செய்பவர்கள்மேல் உள்ள உயரிய எண்ணமோ இந்த தேவதைக்கதைகள் பாலர்வயதிலேயே அனைவர் மனதிலும் பசுமரத்தாணிபோல் நச் என்று இறங்கிவிட்டன மனதில்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரி..... அந்த தேவதைகளை ஒவ்வொருவராக நினைவு படுத்திக்கொண்டு அவர்களின் கதைகளின் கதைகளை பார்ப்போமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>ஸின்ரெல்லா...</b></div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6mvp4jzxAho_MPgSdPjOMvoPTlumF-HAAUf5WD9OlpQPK__b2hQgMcoK1BjONJPwbmqlaNT1QE-tdaezkmU0g0mEgMU3u4WQTWLYSRDBuOBpe5eoGaXpcc_FI35S_fTU0mifHrJNLXeqA/s1600/Walt-Disney-Screencaps-Cinderella-cinderella-32064698-2560-1899.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="237" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6mvp4jzxAho_MPgSdPjOMvoPTlumF-HAAUf5WD9OlpQPK__b2hQgMcoK1BjONJPwbmqlaNT1QE-tdaezkmU0g0mEgMU3u4WQTWLYSRDBuOBpe5eoGaXpcc_FI35S_fTU0mifHrJNLXeqA/s320/Walt-Disney-Screencaps-Cinderella-cinderella-32064698-2560-1899.jpg" width="320" /></a></div>
<br />
பிரஞ்சுதேசத்திற்கு முதற்சொந்தமான இந்ததேவதை 'த லிட்டில் கிளாஸ் சில்பர்' அலலது ஸின்ரெல்லா ஆகிய கதைகளின் நாயகி ஆவாள்.</div>
<div style="text-align: justify;">
அறிந்த மட்டில் 1634 ஆம் ஆண்டளவில் இந்தக்கதை வெளிவந்ததாக அறியமுடிகின்றது.</div>
<div style="text-align: justify;">
சார்லஸ் பெர்லட் அவர்கள் எழுதிய இந்தக்கதை உலகம் முழுவதும் பலதடவைகள் மீள் வெளியீடு செய்யப்பட்டு சில நாடுகளில் சிலசில மாற்றங்களுடன் இன்றும் சிறுவர்களின் மனதை தொடும் முதல் தேவதையாக உலவருகின்றாள் இந்த ஸின்ரெல்லா........</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒருவள் திடீர் அதிஸ்டத்தினால் இளவரசி ஆவதுபோல உருவாக்கப்பட்டுள்ளதே இந்தக்கதை.</div>
<div style="text-align: justify;">
இருந்தபோதிலும் ஆரம்பத்தில் கிரேக்கத்தில் இதுபோன்ற சாயலினான கதை ஒன்று வழக்கத்தில் இருந்துவந்ததாகவும், அதேபோல எகிப்தில் முதலாம் நூற்றாண்டு காலத்தில் இருந்தே வழக்கில் இருந்த ஒரு கதைபோலவே இநத கதையின் கரு உள்ளதாகவும் சுட்டிக்;காட்டப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது தவிர ஒவ்வொரு தேசப்பதிவுகளிலும் சிறு சிறு மாறுதல்கள், கதைச்சூழ்நிலை மாற்றங்கள் உள்ளன என்பதும் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்றாகவே உள்ளது. இருந்தாலும் பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்த நாடுகளில் ஆங்கிலப்பதிப்பே வந்து சேர்ந்தமையினாலும் அதேவேளை அந்தக்கதையே தற்போதும் தொடர்வதனால் நாம் முக்கியமாக ஆங்கிலப்பதிப்பு தேவதைகளுடனேயே வலம்வரவேண்டி ஏற்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆங்கிலேயர்கள் பொதுவாக அற்புமான முடிவுகளையும், சிறுவர்களுக்கு மகிழ்வூட்டும் முடிவுகளையுமே விரும்புவதனால் ஆங்கிலப்பதிப்புகளின் தேவதைக்கதைகளின் முடிவுகள் மிகவும் கழிப்பூட்டுபவையாக உள்ளன.</div>
<div style="text-align: justify;">
அதேவேளை சில நாட்டுப்பதிவுகளில் பல சோகமுடிவுகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வாழ்கின்றாள் ஸின்ரெல்லா. ஆனால் அவளது விதி, அவளின் தந்தை அவளைவிட வயதான இரண்டு பெண்குழந்தைகளை உடைய ஒரு விதவையை மறுமணம்புரிகின்றார்.</div>
<div style="text-align: justify;">
அதன் பின்னர் மாற்றாந்தாயாலும், சகோதரிகளாலும் ஸின்ரெல்லா கொடுமைப்படுத்தப்படுகின்றாள்.</div>
<div style="text-align: justify;">
ஒரு அடிமைப்பெண்ணாக அவர்களுக்கும், அவர்களின் வீட்டிற்கும் சேவகம் செய்துவருகின்றாள். அந்தநேரம் அரண்மனையில் ஒரு விடே நிகழ்வுக்கு அனைவரும் மன்னரால் அழைக்கப்பட்டு சென்றுகொண்டிருகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
இவள் மட்டும் அடுக்களையில் முழு வேலைகளையும் செய்துவிட்டு அயர்ந்து தூங்குகின்றாள். திடீர் என்று அவள்முன் ஒரு தேவதை தோன்றி, அவளை பேரழகியாக்கி, பூசணியை தேராகவும், எலிகளை குதிரையாகவும் ஆக்கி, அந்த விழாவுக்கு அரண்மனைக்கு போ என அனுப்பி வைக்கின்றது.</div>
<div style="text-align: justify;">
ஆனால் போகுமுன் அவளுக்கு ஒன்றை நினைவூட்டுகின்றது,</div>
<div style="text-align: justify;">
அது என்னவென்றால் இன்று நள்ளிரவு தாண்டினால், அவளது தோற்றம், மற்றும் தேர், குதிரைகள் அனைத்தும் சுய உருவத்திற்கு வந்துவிடும் அதன் முன்னர் நீ வீடு திரும்பிவிடவேண்டும் என்பதே அது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேரழகியாக அரண்மனை வரும் அவளை இளவரசன் கண்டு காதல் வயப்படுகின்றான், அவளுடன் நடனம் புரிகின்றான், மெல்ல மெல்ல நேரம் நள்;ளிரவை தொட்டு அலாரம் அடிக்கும் தருணம் தேவதை சொன்னது நினைவுவர, ஸின்ரெல்லா தனது இருபபிடததை நோக்கி ஓடுகின்றாள், அவள் ஓடும்போது அவளது பாதணி ஒன்று கழன்றுவிழுகின்றது........</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவளை திடீர் என பிரிந்த இளவரசன் காதல் உணர்வு பீரிட, அவளது பாதணியை எடுத்து அவனது மந்திரியின் சொற்படி அந்தப்பாதணிகளை நகரில் உள்ள அனைத்து இளம் பெண்களையும் அணியும் படியும் பாதணி யாருக்கு பொருந்துகின்றதோ அவளே என் தேவதை என்று ஆணை இடுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
பாதணியுடன் வீடு வீடாக வரும் சேவகர்கள், ஸின்ரெல்லாவின் வீட்டை அடைகின்றனர், அடுக்களையில் அடைந்து கிடக்கும்; ஸின்ரெல்லாவையும் அவளது வீட்டார்களின் பல்வேறு மறுப்புக்கு பின்னரும் அந்த பாதணியை அணிய வைக்கின்றனர். அந்த நேரம் அதே தேவதை தோன்றி அவளை முன்னர்போல அழகி ஆக்கியது. அதன்பின்னர் அவள் அந்த நாட்டின் இளவரசியாக முடிசூட்டப்பட்டாள் என அந்தக்கதை முடிகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது நாம் சிறுவயதில் படித்து இப்போ நமது சிறுவர்களுக்கும் சொல்லிக்கொடுக்கும் ஒரு தேவதைக்கதைதானே?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்த தேவதை யார்? அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.</div>
</div>
Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-60943288173530023692013-01-05T20:38:00.004+05:302013-01-05T20:38:57.246+05:30பிரபஞ்ச இரகசியம் இது!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilvX-eXxFW0YdZzgJHkq_M_rK3U01IFBWRaFpM_NvXgYp9MLsKyX0z0p6GwDGjgt4UYN5gKEhB9k5YiXYcHsTbct9tTE2GVFwY6_7la-G4xsfDB7KCytC1O1FuxQXxbqYb6PZiwfDWqZsw/s1600/birth_to_death3.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="638" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilvX-eXxFW0YdZzgJHkq_M_rK3U01IFBWRaFpM_NvXgYp9MLsKyX0z0p6GwDGjgt4UYN5gKEhB9k5YiXYcHsTbct9tTE2GVFwY6_7la-G4xsfDB7KCytC1O1FuxQXxbqYb6PZiwfDWqZsw/s640/birth_to_death3.png" width="640" /></a></div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
எனக்குள் திடீர் என்று என்ன இது மாற்றம்! முதன்முதலாக திகைத்துப்போகின்றேன். என்னை அறியாமலேயே என் கைகால்களை அடித்து, ஏதோ முன்னர் அனுபவப்பட்ட இடத்திற்கு வரவேண்டும் என்று உள்ளுக்குள் எந்த மொழி என்று தெரியாத ஒரு உத்வேகம்.</div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
வழிஎங்கும் சிகப்பு நிறம். மெல்லிய இளஞ்சிகப்பில் ஒரு வெளி வெளிச்சம்.</div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
ஏதோ ஒன்றால் எங்கோ இழுக்கப்படுவதுபோன்ற ஒரு உணர்வு. பலநேர அவஸ்தை, உடல்நோவுவேறு.. ஒன்றும் புரியவில்லை சில மணித்தியாலங்களாய்…</div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
<br style="clear: left;" /></div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
மீண்டும் திடீர் என்று ஒரு உந்துதல். அடடா.. இதுவா என் குரல்? என்னை அறியாமல் என் வாயல் ஓவென்று குழறுகின்றேன். கண்ணை இலேசாகத்திறக்கின்றேன்..முன்னர் பார்த்திராத அதிக வெளிச்சம் கண்ணை கூசவைக்கின்றது.. யார்யாரே என்னை ஸ்பரிசிக்கின்றார்கள்.</div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
மீண்டும் எனக்குள் ஒரு வேதனை. எனக்கும் நான் என் பிரபஞ்சம் என்று நினைத்திருந்த இடத்திற்குமிடையேயான, அப்போதுகளில் எனக்கு சகலதும் ஆகவிருந்த என் ஜீபனோபாயக் கயிறு அறுபடும் உணர்வு.</div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
<br style="clear: left;" /></div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
மெல்ல மெல்ல..கண்கள் கூச திறந்து பார்க்கின்றேன்.. மிகை ஒளியுடன், ஒரு பிரபஞ்சம் வியாபித்திருந்தது. குறிப்பிட்ட இத்தை மட்டும் என்னால் பார்க்கமுடிகின்றது. அதற்கு அங்கால் ஏதோ பரந்த ஒன்று வியாபித்து இருந்தது.</div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
<br style="clear: left;" /></div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
அடடே..முதன் முதலில் நான் அனுபவித்த உணர்வே இது..இத்தனைநாளாக இந்த உணர்வு எனக்குள்த்தானா? மறைந்திருந்தது? உணர்வுகளை நினைத்து பிரமித்துப்போகின்றேன்.</div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
அந்த உணர்வின் பின்னரான… தாயவளின் கதகதப்பு, தந்தையின் இனிய அரவணைப்பு, சொந்தங்களின் பாசங்கள், உணவு உண்ணும்போது வேடிக்கை காட்டிய பறவை விலங்குகள், பள்ளிபோன முதலாம் நாள், விளையாடிய விளையாட்டுக்கள், பாடப்புத்தகங்களில் இருந்த பாடங்கள், முதன்முதல் பார்த்தமழை, பரீட்சை ஒன்றில் தோற்ற துயர்உணர்வு, முதல் முதல் இழந்த பாட்டனாரின் துயரம், மீசை அரும்பியபோது ஏற்பட்ட கிளர்ச்சி, மனது இலகித்த கன்னியர், முதற்காதல், கல்லூரிவாழ்வு, வேலைக்குப்போனது, திருமணம்கண்ட காட்சி, தாம்பத்தியசுகம், முதற்குழந்தை, இடமாற்றம், அடுத்த குழந்தை, குழந்தைகள் வளர்ப்பு, குழந்தைகள் கல்வி, அவர்களின் வாழ்வு, பாட்டனார் ஆனமை, மனைவியின் இழப்பு.. என அனைத்தும், கோர்வையாக வந்து வந்து போகின..</div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
<br style="clear: left;" /></div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
மூச்சுவிட மிகச்சிரமமாக இருக்கின்றது. என் பேர் சொல்லி மருத்துவர் அழைப்பதும் தூரத்தில் கேட்பதுபோல் தோன்றுகின்றது…</div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
<br style="clear: left;" /></div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
ஆ..மீண்டும் அதே உணர்வு…</div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
<br style="clear: left;" /></div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
எனக்குள் திடீர் என்று என்ன இது மாற்றம்! முதன்முதலாக திகைத்துப்போகின்றேன். என்னை அறியாமலேயே என் கைகால்களை அடித்து, ஏதோ முன்னர் அனுபவப்பட்ட இடத்திற்கு வரவேண்டும் என்று உள்ளுக்குள் எந்த மொழி என்று தெரியாத ஒரு உத்வேகம்.</div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
வழிஎங்கும் சிகப்பு நிறம். மெல்லிய இளஞ்சிகப்பில் ஒரு வெளி வெளிச்சம்.</div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
ஏதோ ஒன்றால் எங்கோ இழுக்கப்படுவதுபோன்ற ஒரு உணர்வு. பலநேர அவஸ்தை, உடல்நோவுவேறு.. ஒன்றும் புரியவில்லை சில மணித்தியாலங்களாய்…</div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
<br style="clear: left;" /></div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
மீண்டும் திடீர் என்று ஒரு உந்துதல். அடடா.. இதுவா என் குரல்? என்னை அறியாமல் என் வாயல் ஓவென்று குழறுகின்றேன். கண்ணை இலேசாகத்திறக்கின்றேன்..முன்னர் பார்த்திராத அதிக வெளிச்சம் கண்ணை கூசவைக்கின்றது.. யார்யாரே என்னை ஸ்பரிசிக்கின்றார்கள்.</div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
மீண்டும் எனக்குள் ஒரு வேதனை. எனக்கும் நான் என் பிரபஞ்சம் என்று நினைத்திருந்த இடத்திற்குமிடையேயான, அப்போதுகளில் எனக்கு சகலதும் ஆகவிருந்த என் ஜீபனோபாயக் கயிறு அறுபடும் உணர்வு.</div>
<div style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; text-align: justify;">
<span style="color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: x-small;"><span style="line-height: 18px;">(மீள் பதிவு)</span></span></div>
</div>
Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-50831140394574819712013-01-04T22:07:00.003+05:302013-01-04T22:07:55.994+05:30மியூஸிக் தெரப்பி.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjekotXMq7hFIL_wI02NMhRonCGhvfhG_s6XfHvDJ9D0BEvaZfsfmQkerZpZlqxpWpeOKWwRKm5YjyqTPaK5p8aHTM0Ej8jInqVWBSb_VDQtr07J7AeaTxRCPoTff-phbmpbE2Ut1LqzyAk/s1600/TTTTTTTTTTTTTTTTTTT.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjekotXMq7hFIL_wI02NMhRonCGhvfhG_s6XfHvDJ9D0BEvaZfsfmQkerZpZlqxpWpeOKWwRKm5YjyqTPaK5p8aHTM0Ej8jInqVWBSb_VDQtr07J7AeaTxRCPoTff-phbmpbE2Ut1LqzyAk/s640/TTTTTTTTTTTTTTTTTTT.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'இசையால் வசமாகா இதயமெது? இறைவனே இசைவடிவம் எனும்போது' என்று மெய்சிலிர்க்க வைத்திடும்பாடல் வரிகள் ஒரு மிகைப்படுத்தப்பட்ட பாடல் வரிகள் என்று சொல்லிவிட முடியாத அளவுக்கு இசையின் மகத்துவம் பற்றி இன்று பல்வேறு ஆராட்சிகள் ஆச்சரியமான முடிவுகளை தந்துகொண்டிருகின்றன.</div>
<div style="text-align: justify;">
இசை என்பது மனிதனை மகிழ்வூட்டுவது, மனிதனை மட்டுமன்றி உயிரினங்களை சிலர்க்கவைக்கின்றது, மனித மனங்களின் சோர்வுகள், அலர்ச்சிகளை போக்கி புத்துணர்வை தருகின்றது என்பனவற்றை எல்லாம் கடந்து மருத்;துவரீதியில்க்கூட </div>
<div style="text-align: justify;">
பல நோயாளர்களின் உள, உடல் ஆற்றல்களை மேம்படுத்தி இசையால் நோய்கள் நீங்கும் பண்புகள் பற்றி அண்மையில் ரீடேஸ் டஜஸ்ட்டில் வந்த கட்டுரை ஒன்று மனதை ஆச்சரியம் கொள்ள வைத்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுமார் எழுபது ஆண்டுகளாகவே இசையில் இருந்து நாம் அடையக்கூடிய வித்தியாசமான நன்மைகள் பற்றி பல நிபுணர்கள் பாரிய ஆராயவுகளை மேற்கொண்டுவருகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
இவர்களின் ஆராட்சிகளில் இசை மனித, உடல் மற்றும் மனதிற்குள் நடத்தும் ஆச்சரியங்களும், மாறுதல்களும் மிக ஆச்சரியமானதாகவும், எதிர்பார்த்ததைவிட பாரிய அளவு பிரமிப்புக்களை உண்டாக்கக்கூடியதாகவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
இசை நோயாளர்களுக்கு மிக மிக நன்மையான ஒன்று அடித்துக்கூறுகின்றார்கள் அவர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அமெரிக்க ஒஹியோ மாநிலத்தில் மரினா என்ற பெண் பயங்கர கார்விபத்து ஒன்றில் சிக்கிக்கொண்டாள். அவள் க்ளீவ்லான்டில் உள்ள செயின்லூக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள்.</div>
<div style="text-align: justify;">
சுற்றிலும் அறுவைச்சிகிற்சை நிபுணர்கள். மரினாவின் உடலின் பாகங்களை சிஸ்ரங்களுடன் இணைத்தார்கள். அவை அவளது மூளை அதிர்வுகளையும், இதயத்துடிப்பையும் பதிவு செய்தது. </div>
<div style="text-align: justify;">
மறுபக்கம் இயர்போனை அவள் காதில் பொருத்தி, விவால்டி இசைத்த இசை இறுவெட்டொன்றை இசைக்கவிட்டனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அறுவைச்சிகிற்சையின்போது அறுவை நிபுணர்கள் மற்றொருபுறம் மொஸார்ட், ப்ரொம்ஸ் போன்ற மேதைகளின் இசையினை கேட்க ஏற்பாடாகியிருந்தது.</div>
<div style="text-align: justify;">
தியேட்டரில் எந்த ரென்ஸனும் இல்லாமல் இயங்க இசை எமக்கு உதவியது. என்றும் </div>
<div style="text-align: justify;">
நோயாளியின் முளையினை பதிய பொருத்தப்பட்ட சிஸ்ரத்தில் அவரது காதில் இயர்போன் மூலம் இசை சைக்கப்பட்ட பின்னர் ஆச்சரியமான வகையில் முளை அதிர்வுகள் அமைதியானதை அவதானிக்கமுடிந்ததாகவும், நோயாளி ரிலாக்ஸானதை தாம் உணரக்கூடியதாக இருந்ததாகவும் க்ளைட் நாக்ஷ் என்ற பெண் அறுவை சிகிற்சை நிபுணர் தெரிவித்துள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'மருந்தைவிட இசை மேலானது, அதனால் வலிநிவாரணி வழங்கப்படுவதை விட இசையினை பயன்படுத்துவது சிறந்தது என ஆயவாளர்கள் தெரிவித்துள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இசை நோயின்போது ஏற்படும் கடுமையான சிக்கல்களை தவிர்க்க உதவுகின்றது.</div>
<div style="text-align: justify;">
நோயாளியின் ஆரோக்கியத்தை மே;படுத்துகின்றது. நோயாளி மருத்துமனையில் தங்குவதற்கு அதிகநாள் எடுப்பதை தவிர்த்துவிடுகின்றது என்கிறார் நியூயோர்க் மருத்துவமனை நோயியல் நிபுணர் டாக்டர் மத்யூலி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடுமையான தலைவலியில் இருந்து நிவாரணம்பெற இசை உதவும். இரத்த அழுத்தத்தை குறைக்கவும், சுவாசத்தை சீராக்கி மன இறுக்கத்தை இல்லாதொழிக்கவும் வைக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சூசன் கோல்ஸ்கி என்ற பெண்ணுக்கு முதற்பிரசவம். பிரசவிடுதியில் இரண்டு நாட்களுக்கும் மேலாக வலியினால் பெரும் அவதிப்பட்டாள். வலி பொறுக்கமுடியாமல் அவள் அவதிப்பட்டபோது, பீத்தோவான், பார்க் ஆகியோரின் இனிய இசையினை மாறிமாறி ஒலிக்கவிட்டனர்.</div>
<div style="text-align: justify;">
சூசன் சாந்தமாகினாள் பிரசவிக்கின்ற கட்டத்தில் ப்ரொம்ஸின் ஸிம்பொனி வரவேற்புடன் குழந்தை உலகிற்கு வந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புற்றுநோயாளிகள் டாக்டர்களிடம்பேசுவதற்கு நிறைய யோசிப்பார்கள், இசைச்சிகிற்சை அவர்களுடனான தகவல் தொடர்புகளை இலகுபடுத்தி சிகிற்சையின்போது நோயாளிகளை ஒத்துளைக்கவைக்கின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அமெரிக்க மாநிலமான மேரிலான்டில் பள்ளிக்கூடமொன்றில் மூளை வளர்ச்சி குறைந்த, உணர்வுகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் மற்றும் உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் இசையிலும் நடனத்திலும் பயிற்சி அளிக்கின்றார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நரம்புக்கோளாறு காரணமாக பேசவோ அசையவோ முடியாதவர்கள்கூட இசையின் அற்புதத்தால் ஆடவும் பாடவும் செய்கின்றார்கள்.</div>
<div style="text-align: justify;">
மூளைக்கோளாறுகளை சீரழிவில் இருந்து தடுத்து ஆரோக்கியத்துடன் இயங்கச்செய்யவும் இசை உதவுகின்றது.</div>
<div style="text-align: justify;">
தமக்கு பிடித்தமான இசையினை தொடர்ந்து கேட்கும்போது ஸ்ரோக் உள்ளவர்களும் குணமாக முடிவதாக தெரியவந்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சோக நிமிடங்களை மகிழ்ச்சியாக்குவது இசை. அதை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுமபோது அதன் சக்தியும் கூடுதலாக இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
இசை நோய் பற்றிய கவலையினை மனதில் இருந்து அகற்றும். மன இறுக்கத்தை குறைக்கும். பிரச்சினைகளை இலேசாக்கும்.</div>
<div style="text-align: justify;">
எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.</div>
</div>
Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-18428265396505730112013-01-03T23:27:00.000+05:302013-01-03T23:55:22.344+05:30டாக்டரின் டாக்குமென்றி......<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizzoS43uU5UhS7YTONdeedkqxeOvHvQx1PXIBN4iiC1-Baj8LcqQIJ9Pgjr2emdQEQGDdwW5swPzqrm9g4gF6CQCVdU6qW_J_Y34NwVEGLPWVimu_-puxJvKA_SWa1lonbJiakm_7xCJGD/s1600/224896_4443738844901_1235896211_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="233" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizzoS43uU5UhS7YTONdeedkqxeOvHvQx1PXIBN4iiC1-Baj8LcqQIJ9Pgjr2emdQEQGDdwW5swPzqrm9g4gF6CQCVdU6qW_J_Y34NwVEGLPWVimu_-puxJvKA_SWa1lonbJiakm_7xCJGD/s320/224896_4443738844901_1235896211_n.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
டாக்டர் பதிவர் பாலவாசகன் ம<span style="background-color: white; color: #4e4e4e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;">லைசூழ்</span> குளிர்மை குழுவிருக்கும் இடத்தில், ரொம்ப "வோர்மாக" தனது வைத்தியக் கடமையினை செய்துவருகின்றார்.</div>
<div style="text-align: justify;">
இப்போது பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும் பாலவாசகனின் பார்வை புகைப்படக்கலையின் பக்கம் திரும்பிள்ளது என்பதை பலர் அறிந்திருப்பீர்கள்.</div>
<div style="text-align: justify;">
குருநாதர் இல்லாபோது குயில்ப்பாட்டைப்போல புகைப்படக்கலையிலும் புகைப்பட நுட்பங்களை தனது பிளிக்கர் எக்கவுண்ட்மூலம் பல பிரமுகர்களிடம் இருந்தும், இணையத்தேடல்களில் இருந்தும் கற்று தனது அதிநுட்ப நிக்கோன் புகைப்படக்கருவிகளால் பல பேசாத காட்சிகளை பேசவைத்துக்கொண்டிருக்கின்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
டாக்டர், இந்த புகைப்பட ஆசை உங்களுக்கு எப்போது வந்தது என்று நான் ஒரு சமயம் கேட்டபோது, தான் சின்னவயதாக இருக்கும்போது தனது மாமனாரின் பொழுதுபோக்காக இருந்த சீனரிகள் உள்ள கிரீட்டிங் கார்ட்ஸ் சேர்க்கைக்களை தாம் ஆவலோடு பார்த்துவந்ததாகவும், அந்த காட்சட்டைப்பருவங்களில் மேற்படி கார்ட்களில் இருக்கும் சீனரிகளை இரசித்து மெய்மறந்த நாட்களில் இருந்தே தாம் புகைப்படத்துறைமேல் பேரார்வத்தை கொள்ள ஆரம்பித்ததாக தெரிவித்திருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாலவாசகனுடன் நெருங்கி பழகிய பதிவர்களான மருதமூரான், சுபாங்கன், மற்றும் நான் அவரின் புகைப்பட நுணுக்கங்கள் பற்றியும் அவரது பேரார்வம் பற்றியும் ஆரம்பத்திலேயே அறிந்திருந்தோம்.</div>
<div style="text-align: justify;">
ஒரு மருத்துவ மாணவனாக இருந்த காலங்களில் பதிவெழுதி வந்த பாலவாசகன், தான் முழுவைத்தியரானதும் தனது முதல் மாத ஊதியத்தில் ஆசையாக வாங்கிக்கொண்டது என்ன தெரியுமா?</div>
<div style="text-align: justify;">
ஒரு டி எஸ் எல் ஆர் கமரா!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதன் பின்னர் பிளிக்கரில் டாக்டரின் புகைப்பட டாக்குமென்றிகள் வெளிவர தொடங்கின. மிக நுணுக்கமான புகைப்படங்கள் பலரை வாவ்............ என பல தடவை சொல்ல வைத்தன.</div>
<div style="text-align: justify;">
தனது விடுமுறை ஒன்றில் யாழ் வந்த டாக்டர் என்னை சந்தித்தபோது சில பறவைகளையும் இயற்கை காட்சிகளையும் குறிவைத்து ஒரு விடுமுறைநாளில், புகைப்படம் எடுப்பதற்கான பயணம் ஒன்றை மேற்கொணடோம், யாழ் கடநீரேரிப்பகுதிகள், தீவகம் என்பன எமது இலக்காக இருந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போதுதான் ஒரு பறவையினை புகைப்படக்கருவிக்குள் சிக்கவைக்க பல நிமிடங்கள் காத்திருப்பும், அதற்கான ரைமிங்கும், புகைப்பட கருவியை அவர் இயக்கும் லாவகத்தையும் கண்டு அதிசயித்தேன்.</div>
<div style="text-align: justify;">
ஒரு ஆன்ஸெல் அடெம்ஸையும், ரொபேட் ஹபாவையும் கண்முன் பார்பதுபோன்ற ஒரு பிரமை என்னுள்ளே.......</div>
<div style="text-align: justify;">
சிறந்தவற்றை, வளரத்துடிப்பவாகளை பாராட்டியே தீரவேண்டும் என்பதற்காகவே இந்தப்பதிவு.........</div>
<div style="text-align: justify;">
இதோ டாக்டரின் கமராவில் அன்று சிக்கியவைகள் சில........ </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFffWPbCrFT1g4JXuAEQBFz8wA5Vv3Ro_PWDrhhntTq7MGS7fCbA0s0kMqpAoao896P39a_mn5tLuCzNuETy3Hq1s0MU6YBRzbwH574DrOPf8UTdxXiEZ2P6zwRbA7wlX6fMjsxchGj8Pq/s1600/5823221328_e4bc4f87bb_z.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="233" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFffWPbCrFT1g4JXuAEQBFz8wA5Vv3Ro_PWDrhhntTq7MGS7fCbA0s0kMqpAoao896P39a_mn5tLuCzNuETy3Hq1s0MU6YBRzbwH574DrOPf8UTdxXiEZ2P6zwRbA7wlX6fMjsxchGj8Pq/s320/5823221328_e4bc4f87bb_z.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCZwRC4ZdGuqLcypUoCis7Yu4yvqegQLoQot_iIrmWUoNJdUyyGTVlQMlwQYnGZ4LgmeUnNZG4Wme0R2OhXHpW0VPpZvsCK3fGi8CllwCCluJ2Ek7SV-VU6blfzPbCwOlJWRiNn7uyZesK/s1600/8100337525_94a8574781_c.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="215" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCZwRC4ZdGuqLcypUoCis7Yu4yvqegQLoQot_iIrmWUoNJdUyyGTVlQMlwQYnGZ4LgmeUnNZG4Wme0R2OhXHpW0VPpZvsCK3fGi8CllwCCluJ2Ek7SV-VU6blfzPbCwOlJWRiNn7uyZesK/s320/8100337525_94a8574781_c.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbD-9f9uX9qI4RogS34qPNu7C-tT9boik8k4r7cmxM-QH7Zz3WR0w9YFkETyVt45NcksawFfmO3GOJJnmbnkizwcvuKQhT2bbDKB4605nM4ys5GjdmpXHNemrwSGrIvVu9jIf2b5CGDcAP/s1600/7938209554_9cec9f2886_c.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbD-9f9uX9qI4RogS34qPNu7C-tT9boik8k4r7cmxM-QH7Zz3WR0w9YFkETyVt45NcksawFfmO3GOJJnmbnkizwcvuKQhT2bbDKB4605nM4ys5GjdmpXHNemrwSGrIvVu9jIf2b5CGDcAP/s320/7938209554_9cec9f2886_c.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNHSZWivQTUL04zX0xdydoauLcAMdCT3IojtSI2xEqzy_sDkglLY3DIlLqn8O7bcsFLt52KPXxW_Cw1O3fQeVSPBe7NqTXZJbezqAa2Kl6HJp2R0TmtXXqdJWSaqlt7ORvoTMdMoNvxvv6/s1600/8235069178_8231443dea_z.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="249" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNHSZWivQTUL04zX0xdydoauLcAMdCT3IojtSI2xEqzy_sDkglLY3DIlLqn8O7bcsFLt52KPXxW_Cw1O3fQeVSPBe7NqTXZJbezqAa2Kl6HJp2R0TmtXXqdJWSaqlt7ORvoTMdMoNvxvv6/s320/8235069178_8231443dea_z.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfK35f4XaAHJDR0V9MPi3aK5Bfls_HHgqbifT7Ui48qqbkFpbOuHTS9UrhNPBRyu0CFEys0WKGzgXMkPAU3c4N0iUbp-8T5cBSA2hrHtS0_JHrELO5jkYCskcFOiIxs6ruOF6iEf-Kv5-S/s1600/8112935715_7677f5ec5c_c.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfK35f4XaAHJDR0V9MPi3aK5Bfls_HHgqbifT7Ui48qqbkFpbOuHTS9UrhNPBRyu0CFEys0WKGzgXMkPAU3c4N0iUbp-8T5cBSA2hrHtS0_JHrELO5jkYCskcFOiIxs6ruOF6iEf-Kv5-S/s320/8112935715_7677f5ec5c_c.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirZ7mTodG7ALVo1QHQIlaGVg_gkJrOkdCscAgDjRj1jxVcTm5Rn9ngATXFS9EO0J1Wujdx1nhR9KOiWiufeYwrCTyVPvkhAXGZXb9_zmOWRKG6-0_uHqymqKnIeijJC0J8ilcjAtESPUCE/s1600/8203651838_2cc8921a92_z.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="242" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirZ7mTodG7ALVo1QHQIlaGVg_gkJrOkdCscAgDjRj1jxVcTm5Rn9ngATXFS9EO0J1Wujdx1nhR9KOiWiufeYwrCTyVPvkhAXGZXb9_zmOWRKG6-0_uHqymqKnIeijJC0J8ilcjAtESPUCE/s320/8203651838_2cc8921a92_z.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjG1f1DuVvEM7OaX3KApRy7jCXMkqh-cT-k_ekc96jbLESJ5G1Icm6ac-OLLGjbsK8MWUFDtSrjZmlDO0MlwH-Kf5-fH_V1hVcrxbpv_BH6pHVUslOHnxNmRp3DBFyAEyP68vSBrE9kOijW/s1600/8102858499_baae881395_c.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjG1f1DuVvEM7OaX3KApRy7jCXMkqh-cT-k_ekc96jbLESJ5G1Icm6ac-OLLGjbsK8MWUFDtSrjZmlDO0MlwH-Kf5-fH_V1hVcrxbpv_BH6pHVUslOHnxNmRp3DBFyAEyP68vSBrE9kOijW/s320/8102858499_baae881395_c.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikK2bqj9Meft2_D2ml79wjc9kBeGP5xt6sJQLBmLCMY8WDr0TfXd5CMYS2I78l99QvUy0nzrR0iVJf0_Ac3xBapD8fVeH4M2ljAy-hxQd8kqAwkIfk3Un3PkX1FlMYfX541x_WPb2-p7jT/s1600/7824436144_7360842b31_c.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="229" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikK2bqj9Meft2_D2ml79wjc9kBeGP5xt6sJQLBmLCMY8WDr0TfXd5CMYS2I78l99QvUy0nzrR0iVJf0_Ac3xBapD8fVeH4M2ljAy-hxQd8kqAwkIfk3Un3PkX1FlMYfX541x_WPb2-p7jT/s320/7824436144_7360842b31_c.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்ன பிடிச்சிருக்கா.........</div>
<div style="text-align: justify;">
மேலதிக படங்களை பார்க்க</div>
<div style="text-align: justify;">
<a href="http://www.flickr.com/photos/balavasakan/" style="background-color: white; color: #1155cc; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: start;" target="_blank">http://www.flickr.com/photos/<wbr></wbr>balavasakan/</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-77068274547253096182013-01-02T21:52:00.002+05:302013-01-02T21:52:52.853+05:30அழக்கூடாதே என்பதற்காக சிரித்தவர்தானா லிங்கன்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9lnJxtQhK3K98wyX9XmJ4VmC-lfPWdF7IRWoFbZG3T1CB8ZNY9AhLXtxg4UmSP_rz2PvraA4D6sIEdtQWobPAwntOC0lCulV8q0n7MEJppMwrygMAHwPDMebboPAcauPhpQ5owAI3rIbe/s1600/bc-lincolnhair-art-grbd97nk-1presidential-flies.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9lnJxtQhK3K98wyX9XmJ4VmC-lfPWdF7IRWoFbZG3T1CB8ZNY9AhLXtxg4UmSP_rz2PvraA4D6sIEdtQWobPAwntOC0lCulV8q0n7MEJppMwrygMAHwPDMebboPAcauPhpQ5owAI3rIbe/s320/bc-lincolnhair-art-grbd97nk-1presidential-flies.jpg" width="286" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆபிரகாம் லிங்கன் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். தோல்விகளின் குவியல்களில் இருந்து எழுந்துவந்து பெரு வெற்றி பெற்றவர், இன்றும் அமெரிக்க அதிபர்களின் மிகச்சிறந்தவர்கள் பற்றிய பட்டியலில் முன்னிற்பவர்,</div>
<div style="text-align: justify;">
'மக்களால் மக்களை ஆளும் ஆட்சியே மக்கள் ஆட்சி' என்று குடியாட்சிக்கு வியாக்கியானம் தந்தவர், உலகம் போற்றும் ஹெட்டிச்பேர்க் பேருரையை எழுச்சியோடு வழங்கியவர், அடிமை முறையை ஒழிக்க அயராது பாடுபட்டவர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் லிங்கன் பற்றி இன்னும் வெளிச்சத்திற்கு வராத பிரம்மரகசியங்கள், அந்த வெள்ளைமாளிகையிலேயே புதைக்கப்பட்டிருப்பதாக இன்று பலர் கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டே வருகின்றார்கள்.</div>
<div style="text-align: justify;">
ஏன்...... எல்லாவற்றிற்கும்மேலாக லிங்கனின் ஆவி தற்போதும் வெள்ளைமாளிகையை சுற்றி வருவதாக பலமாக நம்பும் அமெரிக்கர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.</div>
<div style="text-align: justify;">
பாரிய சோதனைகளையும், கஸ்டங்களையும் அவர் தன்னகத்தே கொண்டு, வேதனையுடனேயே நாட்களை நகர்த்தினார் என அவரது உறவினர்களே கருத்து வெளியிட்டும் உள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஓகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் 1865 அன்று தனது துணைவி சகிதம் 'அமெரிக்கன் ஹசின்' என்ற நாடகம் பார்க்கச்சென்றிருந்தார் லிங்கன். அந்த நாடகத்தின் ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்துக்கொண்டிருந்;த ஜோன் வில்ஸ் பூத் என்பவன், மேடையில் இருந்தே முன்வரிசையில் அமர்ந்து நாடகத்தைப்பார்த்துக்கொண்டிருந்த லிங்கனை குறிவைத்து தனது கைத்துப்பாக்கியால் சுட்டான். குண்டு துளைத்து துடித்து விழுந்த லிங்கன் மறுநாள் இந்த உலகத்தை விட்டுப்பிரிந்திருந்தார்..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆபிரகாம் லிங்கனுடைய வலதுகரமாக திகழ்ந்த ஸ்ரான்டன், லிங்கனது இறுதிநிகழ்வு உரையில் 'அவர் அழக்கூடாதே என்பதற்காகவே தன்னை வருத்தி சிரித்துக்கொண்டிருந்தார்'; என கண்ணீர் மல்கத் தெரிவித்திருந்தார்.</div>
<div style="text-align: justify;">
உண்மையில் லிங்கனுக்கு என்ன பிரச்சினை???</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆபிரகாம் லிங்கன் பலமுறை மன உபாதைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றார். சிறு வயது முதலே கடுமையான சோகத்துடனேயே அவர் காணப்பட்டிருகின்றார்.. விடலைப்பருவத்தில் பார்ப்பவர்களுக்கு பைத்தியக்காரன் போலவே அவர் தோற்றியிருக்;கின்றார்.</div>
<div style="text-align: justify;">
அவரது திருமணத்தில்க்கூட உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் சேர்ச்சில் உரிய நேரத்தில் லிங்கனையே காணாமல் திகைத்துப்போய் எல்லா இடத்திலும்தேடி இறுதியாக அவரை அவரது அறைமுலையில் குறுகிய நிலையில் அவர் துயரத்துடன் நடுங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே அவரை மீட்டுள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
லிங்கனுடைய சுயசரிதையை எழுதிய டேல்கார்னகி அவருடன் நன்றாக நெருங்கிப்பழகிய ஒருவர். அவர் லிங்கன் பற்றி தனது குறிப்பில்,</div>
<div style="text-align: justify;">
லிங்கன் உடல் மற்றும் மனோரீதயில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். விசனம் தோய்ந்த முகத்துடன்தான் அவர்; எப்போதும் காட்சியிளிப்பார். கொஞ்சமும் சம்பந்தமில்லாத வசனங்களை தனக்குத்தானே அவர் பேசிக்கொண்டிருப்பார். தற்கொலை மனப்பாண்மை அவரிடம் இருந்தமை உண்மை, லிங்கனை தற்கொலை முயற்சிகளில் இருந்து பாதுகாப்பதற்கே நண்பர்கள் யாராவது அவர் கூடவே எப்போதும் இருந்ததாகவும், கத்தி துப்பாக்கி என்பவற்றை அவருக்குத்தெரியாமல் மறைத்;தே வைத்திருந்ததாகவும் அவர் லிங்கன் பற்றிய தனது நூலில் தெரிவித்துள்ளார்.</div>
<div style="text-align: justify;">
லிங்கன் இறந்ததன் பின்னர் அப்போது சிறுவனாக இருந்த அவரது மகன், என் தந்தை இப்போதாவது உறங்கட்டும் அவர் எப்போதும் நின்மதியாக உறங்கியதை நான் பார்த்ததில்லை' எனத்;தெரிவித்திருகின்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் மறுபுறத்தே இத்தனை உள்ளக குறைகள் இருந்தும் லிங்கன், தீமைகளை கண்ட இடத்தில் எதிர்த்தவர், அதற்கு சிறந்த உதாரணமாக தென்அமெரிக்காவில் உள்ள நிற வெறியர்களுடன் அவர் நடத்திய போரைச்சொல்லலாம். ஆவர் ஒரு சட்டததரணி என்றபடியால் வழக்குக்கு வந்த பல பிரச்சினைகளை நீதிமன்றத்திற்கு வெளியிலேயே தீர்த்துவைத்திருந்தார். நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் தன அதிகாரத்தைப் பயன்படுத்தி பல தூக்கு தண்டனைகளை இரத்து செய்து வைத்துள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தன்னுடைய சாதனைகள் பற்றி அவர் விளம்பரப்படுத்திக்கொள்வதில்லை. மாறாக</div>
<div style="text-align: justify;">
'முட்புதர்களை அகற்றி முட்கள் இருந்த இடங்களில் பூக்கள் மலரச்செய்தான் லிங்கன்' என்று வரலாறு என்னைக்குறிப்பிட்டாலே போதும் என்றவர் ஆபிரகாம் லிங்கன்.</div>
<div style="text-align: justify;">
ஆனால் அவரது கண்களில் இருககும் சோகத்தையும், ஏக்கத்துடனான பார்வையினையும் அவரது புகைப்படங்களிலேயே மிக இலகுவாக யாரும் கண்டுபிடித்துவிடமுடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
லிங்கன் ஏன் இப்படி ஆனார் என்பதற்கு சில மனோவியல் நிபுணர்கள் தெரிவிக்கும் காரணங்கள்:</div>
<div style="text-align: justify;">
லிங்கன் சிறுவயதில் இருந்தே வறுமையின் கோரத்தில் சிக்கியமை.</div>
<div style="text-align: justify;">
வாழ்க்கையில் இந்த நிலையினை அவர் எல்லோரையும் விட மிகவும் உச்சமாக போராடியே பெறவேண்டி இருந்ததால்; அவர் அதில் சோர்வுற்றிருக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
ஏல்லாவற்றிற்கும்மேலாக அவருக்கு வாய்த்த இல்லறம் நல்லறமாக இல்லை. அவரை விஞ்சிய மனைவி என தொடர் சோகங்களையே அவர் பெற்றுக்கொண்டமையினை சுட்டிக்காட்டுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்போது இல்லினாய்ஸ் நகரில் லிங்கனின் பழைய வீட்டை லிங்கன் நினைவாலயமாக அமெரிக்க அரசு மாற்றியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
அந்தபகுதியால் தனது மகளை பாலர் பாடசாலைக்கு ஒரு பெண் வழமையாக அழைத்துச்சென்று வந்துகொண்டிருகின்றாள்.</div>
<div style="text-align: justify;">
ஓவ்வொருமுறை இநத நினைவாலயத்தை கடக்கும்போதும் அவள் தனது சின்னஞ்சிறு மகளுக்கு ஆபிரகாம் லிங்கனின் பெருமைகளை எடுத்துரைத்துக்கொண்டு செல்வது வழக்கம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருநாள் இரவுநேரம் அந்தப்பெண் தனது மகளுடன் ந்த நினைவாலயத்தை கடக்கும்போது நிறைய மின் விளக்குகள் நினைவாலயத்தில் ஒளிர்வதைக்கண்டாள்.</div>
<div style="text-align: justify;">
'அம்மா பாருங்கள் லிங்கன் தாத்தா எல்லா மின் விளக்குகளையும் ஒளிரவிட்டிருக்கின்றார் என்றாள் மகள்' </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆமாம் மகளே லிங்கன் தான் மின்விளக்குகளை ஒளிரவிட்டிருகின்றார்......உலகத்தில் உள்ள எல்லோருக்காகவும் என உணர்ச்சிப்பெருக்கத்துடன் இதோ கூறிச்செல்கிறாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-66537985706272398442013-01-01T19:21:00.001+05:302013-01-01T19:21:46.122+05:30உடலினை உறுதி செய்வோம்..........<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHmuTQmGf8wBJbIBeOnLpa3hDntsqweOItxNxhrBCTzMysSdhmOkVu2oHkJPtdlmlpJxDUjyP5P4pdSHIw05WsWDzXFT3mfUuwwkcXWsBzzhGfQbbyjYe23HKnlPiE41a_52FelF4o5Fsq/s1600/excr.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHmuTQmGf8wBJbIBeOnLpa3hDntsqweOItxNxhrBCTzMysSdhmOkVu2oHkJPtdlmlpJxDUjyP5P4pdSHIw05WsWDzXFT3mfUuwwkcXWsBzzhGfQbbyjYe23HKnlPiE41a_52FelF4o5Fsq/s320/excr.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எமது வாழ்வின் வெற்றிகரமான முன்னேற்றத்திற்கும் மகிழ்ச்சி மிகுந்த வாழ்வாதாரத்திற்கும், மனம் செழுமையாக எப்படி இருக்கவேண்டும் என்று கூறப்படுகின்றதோ அதேபோல உடல் வலு, உடலின் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்றே.</div>
<div style="text-align: justify;">
முன்னைய காலங்களில் உடல் வலு உழைப்பு, நடை, பிராயணங்கள் என்பன பெரு வசதி கண்டு இருக்காத காலங்களில் வாழ்ந்தவர்கள், இரசாயனப்பதார்தங்கள் கலக்காத இயற்கையான ஆகாரங்களை உண்டு உடல் உறுதியை பேணி வந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று பரிதாபகரமான நிலை என்னவென்றால், முப்பது வயதை தாண்டு முன்னதாகவே பெரும்பாலானவர்களுக்கு நீரிழிவு, கொலஸ்ரோல், பிரஸர் என அத்தனை நோய்களும் எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டன.</div>
<div style="text-align: justify;">
இதற்கெல்லாம் காரணம் என்ன என்றால், உடல் வலு பயிற்சிகள் இன்மையும், பாஸ்பூட் என்ற கண்றாவி பஸன் ஆகி ஆட்கொள்வதையும், இருந்த இடத்தில் இருந்து மணித்தியாலக்கணக்காக வேலை செய்தலையும் முக்கியமாகக்குறிப்பிட்டுக்கொள்ளலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று சுகாதார அமைச்சும், சில தொண்டு நிறுவனங்களும், நீரிழிவை ஒழிப்போம், கொலஸ்ரோலைக்குறைப்போம் என்று பிரச்சாரங்கள் செய்து துண்டுப்பிரசுரங்களை வீடுவீடாக கொடுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு இன்று நாட்டில் இளவயதிலேயே </div>
<div style="text-align: justify;">
பாரிய நோய்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதை கவனிக்காமல் இருந்துவிடமுடியாது.</div>
<div style="text-align: justify;">
இந்த நோய்கள் கட்டுப்படுத்தப்படாமல் உயர்ந்துகொண்டு சென்றால் நாடு தனது சராசரி உயிர்வாழும் வயதினை 45 இற்கு இறக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையே ஏற்படும் என்று சொன்னாலும் தப்பில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிலரை கவனித்திருப்பீர்கள், கோடிகோடியாக பணம் இருக்கும், பணம் என்பதை நாடியே ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருப்பார்கள், ஆனால் வாய்க்கு ருசியாக ஒரு சாக்லட்டையோ, அல்லது விசேட விருந்துகளில் ஒரு மட்டனையோ வாயில் வைத்தால்கூட அவை விசமாகிவிடும் என்ற நிலை. சாப்பாடாக மாத்திரைகளையும், மாத்திரிரையளவு சாப்பாட்டையும் பத்தியமாக சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். </div>
<div style="text-align: justify;">
பணம் இருந்தும், மேலும் மேலும் உழைப்பு இருந்தும் என்ன பிரியோசனம்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'21 வயது வரை உடல் எம்மை கட்டுப்படுத்தும், 21 வயதில் இருந்து உடலை நாம் கட்டுப்படுத்த தொடங்கிவிடவேண்டும்' என்ற குறிப்பு எவ்வளவு யதார்த்தமானது. ஆனால் எங்களைப்பொறுத்தவரையில் 21 வயது வரை ஏதோ ஒரு வகையில் உடல் வலுப்பயிற்சிகளை மேற்கொண்டிருப்போம் அதன் பின்தான் உயர்கல்வி, தொழில் என்று உடலை கவனியாது விட்டிருப்போம்.</div>
<div style="text-align: justify;">
முறையான உடல்பயிற்சி செய்து 50 களை எட்டியவர்களை பார்த்து உலகமே பொறாமைப்படும் ஏனெனில் அவர்கள் தம் மகன் அல்லது மகளிற்கு தந்தையின் தோற்றத்தில் அல்லாமல் அண்ணனின் தோற்றத்திலேயே இருப்பார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொதுவாகவே பவருக்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, விளையாட்டுக்கள் என்பவற்றில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்கூட வேலைப்பழு, சோர்வு, பஞ்சி என்பன வர்களின் மனதை கெடுத்துவிடும் என்பதுதான் உண்மை.</div>
<div style="text-align: justify;">
அதேநேரம் பிரபல வியாபார நிறுவன தலைவர்கள் நாள் தவறாத உடற்பயிற்சிகளுடன் யோகாவையும் அப்பியாசம் செய்துவருவதை நாம் சிறந்ததொரு முன்னுதாரணமாகக்கொள்ளலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டமைப்பு பேணல், நோய்களை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்ற நடவடிக்கைகளை எவ்வாறு எடுத்தல் என்பது குறித்து அண்மையில்கூட யாழ்பாணத்தின் முதற்தர விளையாட்டு பயிற்றுனர் வி.கே.சண்முகலிங்கம் அவர்களிடம் வினவியபோது. </div>
<div style="text-align: justify;">
'உண்மையிலேயே உடற்கட்டமைப்பை நடுத்தர வயது கடந்தும் அப்படியே கச்சிதமாக வைப்பதெனில் 'பார் பயிற்சிகளையும், யோகாவையும் முறைப்படி செய்யலாம், அதேவேளை காலைநேர குறிப்பிட்ட அளவு நடைப்பயிற்சி, சுவாசத்திற்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சியை தரவல்லது என்றார்.</div>
<div style="text-align: justify;">
அதேவேளை நீச்சல் பயிற்சிகள் உடலின் பல பாகங்களுக்கும் சக்தியோட்டத்தையும், சகல பாகங்களுக்கும் உரிய பயிற்சிகளையும் வழங்கும்.</div>
<div style="text-align: justify;">
அதேவேளை இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் தொப்பையும் கரைக்கவல்லது, சைக்களிங்கும் அதற்கு உதவும் எனத்தெரிவித்திருந்தார்.</div>
<div style="text-align: justify;">
உடற்பயிற்சி, விளையாட்டுத்துறை என்பவற்றை அவர் ஒரு ஹபிட்டாக கைக்கொண்டு 60 களை தொட்டு நிற்கும் வயதிலேயும் இரும்பாக இருக்கிறார் என்பது அவரை அறிந்த அனைவருக்கும் நன்கு தெரியும். உடற்பயிற்சி என்ற அடிப்படையில் நேற்றைய இளைஞர்கள், இன்றைய இளைஞர்கள் ஏன் நாளைய இளைஞர்களுக்கும் அவர் ஒரு சிறந்த முன்னுதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவர் இருந்தால்ததானே சித்திரம் வரையலாம்! எமது வாழ்வு என்பது ஒரு சிறந்த சித்திரமாக இருக்க அதற்கு மூலதனமான உடல் முழுத்தகுதியுடையதாக இருக்கவேண்டும் அல்லவா?</div>
<div style="text-align: justify;">
அதேவேளை பெரும்பாலும் இனறைய இளைஞர்களை தாக்கும் நோய்களை வராமல்; பாதுகாப்பதற்கு ஏதுவான வழிகள் என்பவற்றில் நூற்றுக்கு நூறுவீத மருத்துவ நிபுணர்களும் குறைந்தது 30 நமிட (நாளொன்றுக்கு) உடற்பயிற்சியையே குறிப்பிட்டுள்ளதையும் காணலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே இன்றைய புதுவருட உங்கள் சிமார்ட் கோல் வரைபுகளில் கண்டிப்பாக ஏதோ ஒரு உடற்பயிற்சி அல்லது விளையாட்டுக்களை தெரிவு செய்து எமது உடலினை உறுதி செய்வோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-28039792465563344412012-12-30T14:26:00.000+05:302012-12-30T14:26:01.715+05:30மெய் வருத்தக்கூலி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijmknTSpypCuSUTJV6nQbqnA6e0jB3kqoLInCIJTdK_tgEXZ9O7kpLWNQdbqCvnOVDGfvXT0vJJebHwTxo9Vf5_8vH1gm45LmjWItRjhvbDNUiBbc43hKVRpstIW3SGUwd7VHWT-L9VZZl/s1600/capitalism.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="231" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijmknTSpypCuSUTJV6nQbqnA6e0jB3kqoLInCIJTdK_tgEXZ9O7kpLWNQdbqCvnOVDGfvXT0vJJebHwTxo9Vf5_8vH1gm45LmjWItRjhvbDNUiBbc43hKVRpstIW3SGUwd7VHWT-L9VZZl/s320/capitalism.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
21ஆம் நூற்றாண்டின் உலகமயமாக்கலைத்தொடர்ந்து இன்று மிலேனியம் ஆண்டுகளில் பல தொழில் பெருவளர்ச்சிகள், தொழில் மேன்மைகள் கண்டு உலகம் எங்கும் வர்த்தகமும், பொருளாதாரமும், உழைப்பு எனும் இயந்திரச்சுழற்சிகளால் உச்சம் பெற்று நிற்கும் இந்த வேளைகளில்கூட உழைப்பவர்கள் பலர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறமுடியாமல் பண முதலைகளின்; உழைப்புச்சுரண்டலுக்கு ஆளாகிவருகின்றனர் என்பதே யதார்த்தமான உண்மை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வளச்சுரண்டல், பணச்சுரணடல், சொத்து சுரண்டல், நிர்வாகச்சுரண்டல் என்பவற்றிலும் மிக வேதனையானதும், மிகக்கேவலமானதுமே இந்த உழைப்புச்சுரண்டல்.</div>
<div style="text-align: justify;">
பொதுவாகமே மூன்றாம் உலக நாடுகளில், நிலவும் பாரிய வேலையில்லாத்திண்டாட்டம், மற்றும் அரச தொழில்; சீரின்மையால் பெரும்பாலான படித்தவர்கள் தனியார் நிறுவனங்கள், அரசசாரா நிறுவனங்களிலேயே மிகப்பெரிய போட்டிகளின் மத்தியில் தமக்கான தொழிலை பெற்றுக்கொண்டு ஓடாய்த்தேய்ந்து உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.</div>
<div style="text-align: justify;">
மேலோட்டமாக பார்த்தோமானால் அதிக வருமானம்பெற்று சீராக வாழ்பவர்கள் அவர்கள் என்ற தோற்றப்பாடே புலப்படும். ஒருவகையில் அதுவும் உண்மைதான்.</div>
<div style="text-align: justify;">
இவர்கள் அதிக வருமானத்தை ஈட்டுபவர்களாகவும், அதேவேளை அதிகமாக வேலைநேரத்தை கொண்டிருப்பவர்களாகவுமே இருக்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றைய தேதியில், கணனி மென்பொருள் வடிவமைப்பாளர்கள், தகவல் தொழிநுட்ப துறையினர், முதலீடு மற்றும் காப்புறுதி துறை சார்ந்தவர்கள், அரசசாரா நிறுவனங்களில் தொழில்புரிபவர்கள், தனியார் தயாரிப்பு நிறுவனங்களில் பதவி வகிப்;பவர்கள், தனியார் ஊடக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என பலர் மூன்றாம் உலக நாடுகளில் தனியார் துறைகளில் அதிக வருமானத்தினை பெறுபவர்களாக உள்ளனர். அதாவது ஆண்டு வருமானம் ஆகக்குறைந்தது 6000 அமெரிக்க டொலர்களை பெறுபவர்களாக இவர்கள் கணிப்பிடப்பட்டுள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதல், மற்றும் இரண்டாம் உலக நாடுகளில் (அபிவிருத்தி அடைந்த நாடுகள், அபிவிருத்தி கண்டுள்ள நாடுகள்) பாரிய அளவில் தனியார்துறைகளே பெருவளர்ச்சி கண்டுள்ளதனால் ஊழியர்கள் தொடர்பான நலன்கள், வசதிகள் உழைப்பையும் தாண்டிய சலுகைகள், மேலதிக ஊதியங்கள், ஊதியத்துடனான கட்டாய ஓய்வு விடுமுறைகள், உல்லாசப்பயணங்களுக்கான செலவுகள், குடும்ப நிகழ்வுகளுக்கான கொடுப்பனவுகள், சேமலாப நிதி, நிறுவனத்தின் லாபத்தில் குறிப்பிட்டதொரு பங்கு என உழைப்பையும் தாண்டிய பல சலுகைகளை பெற்று பதட்டமில்லாத நிதானமான மனநிலையுடன் தொழில் புரிகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் பெரும்பாலும் உழைப்புச்சுரண்டல்களும், முளைச்சுரண்டல்களுமே நேரடியாகவும், மறைமுகமாகவும் இடம்பெற்றுவருவதை கண்ணூடே காணக்கூடியதாக உள்ளது.</div>
<div style="text-align: justify;">
இந்த நாடுகளில் கற்றவர்களின் தொகை அதிகமாகவும், கற்றலுக்கேற்ற தொழில் திண்டாட்டமாகவும், இருப்பதே பண முதலைகள் எந்தவொரு அச்சமும் இன்றி தமது ஊழியர்களின் ஊதியத்திலேயே கைவைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'தம்மிடம்; வந்திணையும் ஊழியர்களை பயன்படுத்தும் மட்டும் பயன்படுத்திவிட்டு ஊதியத்தில் கைவைத்து அவர்களை மன உழைச்சலுக்கு ஆளாக்கி வெளியே அனுப்பிவிட்டு, புதியவர்களை மீண்டும் கொண்டுவந்து, இந்த நடவடிக்கைகளை தொடர்ச்சி சுற்றாக நடத்திக்கொண்டிருப்பதே இவர்களின் இப்போதைய ட்ரென்ட் ஆக உள்ளது'</div>
<div style="text-align: justify;">
இவ்வாறு ஊழியர்களின் ஊதியத்தில் வயிறு வளர்ப்பவர்கள், தமக்கு சாதமான வகையிலேயே ஒரு அக்ரிமென்டை தொழிலில் இணையும்போதே கொடுத்து அது குறித்த எந்த ஒரு பூரண விளக்கமும்; இல்லாமல் கையொப்பம் வாங்கிவிடுவர்.</div>
<div style="text-align: justify;">
புடித்துவிட்டு உரிய தொழில் எதுவும் இல்லை என்ற நிலையில் எதையும் பற்றி கவலைப்படாமல் உடனடியாக கையொப்பமிட்டு அந்த தொழிலில் இணையும் இளைஞர்களே இன்று அதிகம். (இது தொடர்பான வழக்குகள் பல தொழில் தருணருக்கு சாதகமாகவே தீர்நதமைக்கு பல உதாரணங்கள் உண்;டு. காரணம் மேற்குறித்த அக்ரிமென்டில் இடப்பட்டுள்ள கையொப்பம்)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னொரு பக்கம் இலங்கையை பொறுத்தவரையில் பெட்டிக்கடைகளில் இருந்து சில பாரிய நிதி நிறுவனங்;கள் வரை முறையாக தமது ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியை செலுத்துவதில்லை என்ற அண்மைய இந்த நிதியத்தின் அறிக்கை அதிர்ச்சி தரும் ஒன்றே ஆகும். அவ்வாறாயின் ஒரு ஊழியர் தமது வேலையினை இழக்கும் சந்தர்ப்பத்தில் அவரது நிலை என்ன? என்பதே பெரிய கேள்விக்குறி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னொரு பக்கத்தில் தமது தொழிலையும், நிறுவனத்தையும் நேசித்தவர்கள் கூட, மேற்படி நிறுவனங்களால் ஊழியச்சுரண்டலுக்குள்ளாக்கி தூக்கி எறியப்பட்ட சம்பவங்;களும் நிறைய இடம்பெற்றுமையும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றே.</div>
<div style="text-align: justify;">
இலாபநோக்கம் ஒன்றே குறியாக உள்ள நிறுவனங்களில் தொழில் புரியும்போது மிக அவதானமாக செயற்படவேண்டிய நிலை ஊழியர்களுக்கு உண்டு. 'தொழிலை நேசி, தொழில் தருபவனை அல்ல. உன் உழைத்தலுக்கான ஊதியமே தரப்படுகின்றது' என்ற கோட்பாடே இங்கு பொருத்தமானதாக இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
இத்தகய நிறுவனங்களில் திறமைகளுக்கான பதவி உயர்வுகளும் ஒரு வரையறை உள்ளதாகவே அமைந்திருக்கும் மறைமுகமான ஒரு 'கிளாஸ் சீலிங் போல'.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரி அவ்வாறெனில் புதிதாக ஒரு நிறுவனத்தினுள் தொழில் பெற நுளையும் ஒருவர் கவனிக்க வேண்டிய அவசியமான பண்புகள் என்ன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>01.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தொழில் பாதுகாப்பு.</b></div>
<div style="text-align: justify;">
நீங்கள் சேரவுள்ள அந்த நிறுவனத்தில் உங்கள் தொழிலை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்லுவதற்கும், வருமானம் தவிர்ந்த உங்கள் முன்னேற்றம், சேலாபம், ஓய்வூதியத்திட்டம் என்பன உள்ளதா? என்பவற்றில் அதீத கவனமாக இருங்கள்.</div>
<div style="text-align: justify;">
தொழில் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் என்ற காரணத்திற்காகவே பலர் அரச பணிகளை விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>02.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஸ்திரத்தன்மை மற்றும் முன்னணி</b>.</div>
<div style="text-align: justify;">
நீங்கள் சேரும் நிறுவனம் நிதி மற்றும் வெற்றிகரமான ஸதிரத்தன்மையை கொண்டுள்ளதுடன், மற்றய நிறுவனங்களைவிட முன்னணியில் உள்ளதா என்பதை ஆராயுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>03.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஊழியர்களுக்கான நன்மைகள்.</b></div>
<div style="text-align: justify;">
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஊழியாகள் பெறும் நன்மைகளை கொண்டிருக்காதுவிடினும் ஒப்பீட்டளவில் ஊழியர்களுக்கான, வருமான உயர்வு, திறமைக்கு இடம், உயர்வுகளுக்கான சாத்தியம், சேமலாபம் என்பன உள்ளனவா என்பதை கண்டிப்பாக அறிந்திருங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>04.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தொழில் தருனரின் பின்னணி தலைமைத்துவம்.</b></div>
<div style="text-align: justify;">
எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு தொழில் தரவுள்ள நிறுவனத்தலைவரின் பின்னணி, அவரது தலைமைத்துவப் பண்பு என்பவற்றை அறிந்துகொள்ளுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>05.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>உங்களை முழுமையாக நம்புங்கள்.</b></div>
<div style="text-align: justify;">
நேர்முகத்தேர்வின்போது அவர்கள் உங்களிடம் கேட்பதற்கு எவ்வளவு உரிமைகள் உண்டோ அதேபோல நிறுவனம் சார்ந்த முழுவதையும், உங்கள் தொழில் எத்தயது, ஊதியம் எவ்வளவு, முன்னேற்றங்களை எப்படி அடைதல், எதுவரை அடைதல் எனபவற்றை அவர்களிடம் கேட்க உங்களுக்கும் முழுமையான உரிமை உண்டு. வாககுறிதியின் அடிப்படையில் நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால் அத்தனையினையும் எழுத்துமூலமாக அடித்துக்கேளுங்கள்.</div>
<div style="text-align: justify;">
நீங்கள் நிறுவன அக்ரிமென்டில் கையொப்பம் இடும்வரையில் அவர்கள் உங்களுக்கு கட்டளை இடுபவர்கள் அல்லர்.</div>
<div style="text-align: justify;">
உங்களையும் உங்கள் திறமைகளையும் எந்த சந்தர்ப்பததிலும் விட்டுக்கொடுக்காதீர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குறைந்தது இந்த ஐந்துவிடையங்களையாவது தனியார் துறையில் நுளையமுன்னர் நீங்கள் கவனமாக அதேவேளை உறுதியாக கைக்கொண்டால் பின்வரும் காலங்களில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் தொழில் புரியலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்கள் உழைப்பு உங்களுக்கே சொந்தமானது அதில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்துகொள்ள உங்களுக்கு அவசியம் இல்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதே தொழிலாளர்களின் உலக அடிப்படை தாரக மந்திரம்.</div>
<div style="text-align: justify;">
உழைப்பை உறுஞ்சும் நிர்வாகமும், ஊதியத்திலும் அதிகமாக உழைப்பை வேண்டுதல் என்பவை இரத்தக்காட்டேறிக்குச்சமனான பண்புகள்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'மெய்வருத்தக்கூலி தரும்' என்ற ஐயன் வள்ளுவனின் திருக்குறளுக்கு அமைவான இடமே தொழில்புரிய ஏற்ற இடம். மெய்வருத்தி கூலிச் சுரண்டல் எனில்....</div>
<div style="text-align: justify;">
அந்த முற்றம் மிதியாமையே நன்று.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
( எனது நண்பர்கள் பலர் இரண்டு நிறுவனங்களில் இவ்வாறான ஊதியச்சுரண்டலுக்;கு உள்ளான கதை, நேற்றைய தினம்தான் எனக்கு முழுமையாக தெரிந்ததால் உருவான பதிவே இது..)</div>
</div>
Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-44510996774040516382012-12-29T18:12:00.000+05:302012-12-29T18:12:18.862+05:306 அடி, 6 அங்குலத்தில் ஒரு முழுமையான ஆளுமை...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLrHaCaYH-vX0pQhm6H4m5Kk6QYTl7Ofx0h5qGn8uIGFsQ5cNdAt0t_YUnnbgTnjCe70I_nFCF_Vea_eEeTKoxR0n9gLH7fNSur81wmhNJFlpLz3LG5oLEQt6IaQ7gl5y5a5HcLAP8r719/s1600/TOny+Gteig.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLrHaCaYH-vX0pQhm6H4m5Kk6QYTl7Ofx0h5qGn8uIGFsQ5cNdAt0t_YUnnbgTnjCe70I_nFCF_Vea_eEeTKoxR0n9gLH7fNSur81wmhNJFlpLz3LG5oLEQt6IaQ7gl5y5a5HcLAP8r719/s400/TOny+Gteig.jpg" width="313" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1996 ஆம் ஆண்டு இலங்கைக்கு கிடைத்த உலகக்கிண்ணத்தின் காட்சி நினைவுகளுடன், எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளச்சொந்தமான அழுத்தம் திருத்தமான ஒரு ஆங்கில உச்சரிப்பு, அதேவேளை உளமார இலங்கையின் வெற்றிகளை நேசிக்கும் உற்சாக ஒலியாக அனைத்து கிரிக்கட் இரசிகர்களின் மனங்களையும் கவர்ந்துகொண்டது அந்த ஆளுமையான குரல்.</div>
<div style="text-align: justify;">
அந்த குரலுக்குச்சொந்தக்காரன் ரொனி ஹிரேக்.</div>
<div style="text-align: justify;">
இலங்கையில் பெரும்பாலானவர்களுக்கு அவரை ஒரு கிரிக்கட் வர்ணனையாளராகத்தான் அறிமுகம். 1996 உலகக்கிண்ணத்தினை இலங்கை வெற்றிகொண்டதைத்தொடர்ந்து இலங்கை குவித்த வெற்றிகளிலும், சனத்தின் விஸ்வரூபங்களிலும் இந்தக்குரல் இலங்கை மக்களின் குரலாகவே பெரும் குதூகலத்துடன் ஓங்கி ஒலித்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்தநாட்களில் இலங்கை அணி வெற்றியின் விளிம்புகளில் இருக்கும்போது, வானொலி, தொலைக்காட்சிகளில் மேற்படி போட்டியை சத்தமாக போட்டுவிட்டு, சரவெடிகளுடன் தெருக்களில் காத்திருக்கும் இரசிகர்களுக்கு, வெற்றி என்ற சுப செய்தியை தரும் தேவதூதுவராகவே ரொனி ஹிரேக் தெரிவார்.</div>
<div style="text-align: justify;">
ஹெங்கிராருலேஷன் ஸ்ரீ லங்கா......... என்ற அவரின் குரலை கேட்டவுடனேயே சரவெடிகள் காதைப்பிளக்கும் நினைவுகள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனது வர்ணனைகளில் சில சுவாரகசிய சொற்களை புகுத்தி இரசிகர்களை லகிக்க வைத்த வல்லமை அவரிடம் உண்டு. </div>
<div style="text-align: justify;">
தவறுவதற்கு சந்தர்ப்பமே இல்லாத பிடிகொடுப்பை 'லொலிபப் ஹச்' என்பது முக்கியமாக அன்றைய இலங்கை அணியின் விக்கட் காப்பாளர் களுவிதாரணாவை நகைச்சுவையாகப் போட்டுத்தாக்குவது குறிப்பாக 'லிட்டில் களு' என கொமன்ட் அடிப்பதை களுவிதாரணாவே ரசிப்பதும் குறிப்பிடத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வாறே இலங்கையர்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட அந்த மனிதர் உண்மையில் இலங்கைமீது பெரு மதிப்பு வைத்திருந்தார். இலங்கை கிரிக்கட், சுனாமி, இலங்கை உல்லாசப்பயணிகள் வருகை என்பவற்றிற்காக தனது முழுமையான பங்களிப்புக்களையும் வளங்கியிருந்தார் என்பதையும் மறந்துவிடக்கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>ரொனி ஹிரேக் (சில குறிப்புகள்) </b></div>
<div style="text-align: justify;">
1946 ஒக்ரோபர் மாதம் 06ஆம் நாள் தென்ஆபிரிக்காவின் ஹேப்மாகாணத்தில் க்யூன்ஸ்ரவுணில் பிறந்தவர். தனது கல்வியை தென்னாபிரிக்காவிலேயே தொடர்ந்த அவர், அதன் பின்னர் இங்கிலாந்து சென்று இங்கிலாந்து அணியில் தனக்கான இடத்தினை படித்துக்கொண்டார்.</div>
<div style="text-align: justify;">
1972 முதல்; 1977 வரையான ஐந்தாண்டு காலங்கள் அவரது சர்வதேச கிரிக்கட் காலகட்டங்களாக இருந்தது. ஒரு சகலதுறை ஆட்டக்காராக அவர் தனது பங்களிப்பினை இங்கிலாந்து அணிக்கு விளங்கியிருந்தார்.</div>
<div style="text-align: justify;">
வலது பக்க துடுப்பாட்டக்கரான இவர், 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 599 ஓட்டங்களை பெற்றதுடன், ஆகக்கூடியதாக 148 ஓட்டங்களை பெற்றதுடன், 141 விக்கட்களை தமது டெஸ்ட் வாழ்வில் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1975 ஆம் ஆண்டு உலக கிண்ணப்போட்டிகளில் இவர் பங்களித்திருந்தார். அதன் பின்னதான 1976-1977 கால இங்கிலாந்து அணியின் இந்திய வருகை, டெஸ்ட்போட்டிகள் முக்கியமானவை என கூறப்படுகின்றது.</div>
<div style="text-align: justify;">
குறிப்பாக கல்கத்தாவில் நடந்த இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் ஹிரேக்கின் ஆட்டத்தை அப்போதைய கல்கத்தா இரசிகர்கள் என்றும் மறக்கமாட்டார்கள் என வர்ணிக்கப்படுகின்றது. அந்தப்போட்டியில் ஹிரேக் 103 ஓட்டங்களை பெற்றிருந்தார் என்பதுடன் அப்போது இங்கிலாந்து அணியின் தலைவராக இருந்த அவர் தனது தலைமைத்துவத்தையும் நிரூபித்திருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறுவயதில் இருந்து வலிப்பு நோய் ஹிரேக்கிற்கு இருந்து வந்துள்ளமையும், அதனால் அவர் சில அசௌகரியங்களை சந்திக்கவேண்டி இருந்ததாகவும் அறியமுடிகின்றது.</div>
<div style="text-align: justify;">
தனது ஓய்வின் பின்னர் வர்ணனையின் பக்கம் கவனம் செலுத்திய அவர் உலகின் தலைசிறந்த வர்ணனையாளனாக தன்னை நிரூபித்துக்கொண்டார் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2011 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுலாவின் விசேட தூதுவராக இவர் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
நுரையீரல் புற்றுநோய் காரணமாக அவுஸ்ரேலியா சிட்னியில் மருத்துவம் பெற்றுவந்த அவர், இன்றைய தினத்தில் தனது இன்னுயிரை நீத்துள்ளமை கிரிக்கட் இரசிகர்களுக்கு அதிலும் குறிப்பாக இலங்கை அணி இரசிகர்களுக்கு மிகவும் வருத்தமான செய்திதான். </div>
<div style="text-align: justify;">
அந்த ஆறடி ஆறங்குல ஆளுமைக்கு எமது இரங்கல்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-61447794392586131972012-12-28T21:26:00.000+05:302012-12-28T21:26:12.284+05:30அது.........<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZ7yclOquGGjsKesNK8dOUi8uzHj6qWoKFdNfmOkb7ngOpLMg6kYAsyJlUL6MeArrzfFH2oeCyutToIf8CWhJ-dmCnN3zK_HN9hCTL56WYukRs5Qof-EXMLEv5lj0ca4RYCu4x617nUN4l/s1600/NGC1232.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZ7yclOquGGjsKesNK8dOUi8uzHj6qWoKFdNfmOkb7ngOpLMg6kYAsyJlUL6MeArrzfFH2oeCyutToIf8CWhJ-dmCnN3zK_HN9hCTL56WYukRs5Qof-EXMLEv5lj0ca4RYCu4x617nUN4l/s320/NGC1232.jpg" width="317" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கணம் தப்பித்துப்போகும் மாயங்களும், சில நொடி ஒரு நிகழ்தகவின் அடிப்படையில் போட்டுப்போகும் புதிர்களுக்குள்ளும் புரிதல்கள் சிக்கித்தவிக்கின்றமையே வாழ்க்கையோட்டமாக சென்றுகொண்டிருக்கின்றது போன்ற ஒரு பிரமை. </div>
<div style="text-align: justify;">
அவன், அவள், அவர், அவர்கள், என்பவையே உயர்திணை என்பது கண்டிப்பாக முட்டாள் மனித மனத்தின் ஆரம்பநிலை பண்புகளாகவே இருக்கவேண்டும். </div>
<div style="text-align: justify;">
இவை தாண்டி <b>அது</b> புரியும் ஜாலங்களும், ஆச்சரியங்களும், பிரமாண்டங்களும் அதையும் தாண்டி ஏன் அவற்றின் விஸ்வரூபங்களும் அவன், அவள், அவர்களை தூசிலும் சிறியர் ஆக்கிவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மனங்களில் ஏற்படும் அவன், அவள், அவர்களுக்குள்ளான முரண்பாட்டுச்சுழற்சிகளில், அது தன்பாட்டிற்கு ஏதோ செய்துகொண்டுதான் இருக்கின்றது. இவர்களின் முரண்பாட்டு உச்சத்தில் <b>அது</b> தன்னைப்பற்றி இவர்களை சிறிதுநேரம் சிந்திக்கத்தூண்டுவதும் உண்டு, அச்சமூட்டுவதும் உண்டு, மகிழ்வூட்டுவதும் உண்டு.</div>
<div style="text-align: justify;">
ஆனால் என்ன உயர்திணை எண்ணங்கள் அதை அகிறிணையாக்கி தமக்குத்தாங்களே மகுடம் சூட்டிக்கொண்டிருக்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
'பிரமித்துப்போபவனே பாக்கியசாலி' என்ற மனநிலையில் ஆதியில் அவன், அவள் அவர், அவர்கள் இருந்தனர். </div>
<div style="text-align: justify;">
இன்று 'பிரமாண்டங்களே எமைக்கண்டு பிரமிக்கவேண்டும்' என்ற எண்ணத்தில் அவர்தம், உயர்திணை வீரிய எச்சங்கள் கொக்கரிக்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிரபஞ்சமையத்தின் திசை கெட்டு நிற்கும் ஏதோ ஒரு புள்ளியில் எங்களின் வாழ்விடம். மனித வெற்றுக்கண்ணிற்கும் புலப்படும் பிரபஞ்சவெளியின் தென்படும் அத்தனை வெள்ளொளிகளிலும் ஏதோ ஒரு ரகசியம் பொதிந்திருக்கத்தான் வேண்டும். இல்லை அத்தனையும் காட்சிப்பிழை என்ற ஒற்றைவரி வியாக்கியானங்களும் உயர்திணையாகிவிடுவதும் உண்டு.</div>
<div style="text-align: justify;">
'காரணங்கள் இன்றி எந்த காரியங்களும் இல்லை' என்பதை <b>அது</b> பல தடவைகளில் உயர்திணையாருக்கு உபதேசிப்பதும் உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவன், அவள், அவர், அவர்கள், ஒழுங்காக்கப்பட்டது! நாகரிகம் எனப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<b>அது</b> ஓழுங்காகவே இருந்தது, ஒழுங்காகவே இருக்கின்றது, ஒழுங்காகவே இருக்கும் இதில் பெரும்பாலும் மாற்றங்கள் இருந்ததில்லை. </div>
<div style="text-align: justify;">
ஆனால் <b>அதுவின்</b> சிறு ஒழுங்கீனமே அவன், அவள், அவர், அவர்களை ஒழுங்கீனமான ஓலங்களாக்கிவிடமுடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>அது</b> பற்றிய அச்சம் குறித்த ஒரு ஒழுங்கீனத்தாலும், அதன் பின்னும் உயர்திணைக்கு வரும். அது வல்லது என்ற பேருண்மையும் ஆழ்மனதிற்கு அடிப்படையாகப்புரியும், இருந்தாலும் அவன், அவள், அவர், அவர்கள், உயர்ந்தவராகவே...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் அந்த <b>அது.....</b></div>
<div style="text-align: justify;">
பிரபஞ்சம், அகிலம், இயற்கை, நியதி, விதி, கடவுள்... எதுவானாலும்</div>
<div style="text-align: justify;">
அது அஃறிணையாகவே இருக்கட்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-68766289125943260162012-06-13T02:28:00.000+05:302012-06-13T02:28:25.981+05:30கோப்பையில் குடியிருப்பவை :)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
புராதனகால சோமபானத்தில் இருந்து இன்றைய நாகரிக உலகத்தில் புதிது புதிதாக கலக்கப்பட்டு பகிரப்படும் விதவிதமான குடிவகைகள் வரை போதை என்பது மனித குலத்தை வாழ்வியலின் ஒவ்வொரு கட்டத்திற்கும் அவனுடனேயே ஒட்டிக்கொண்டே வருகின்றது.
சாத்தானின் சாபமாகவும், தேவதையின் பரிசாகவும் ஒவ்வொருவராலும் விதம்விதமாக இந்த குடிபானங்கள் பற்றி வியாக்கியானப்படுத்தப்பட்டு வருகின்றது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எமது அன்றாட வாழ்வில்கூட குடிப்பதற்காக உழைத்து நிறைபோதையில் சுழன்றுவிழும் குடிமகன்களையும் கண்டிருக்கின்றோம், அதேபோல ஏழுநட்சத்திர ஹோட்டல்களில் ஆடம்பர மிடுக்கோடு விதவிதமான விலையுயர்ந்த குடிபானங்களை உட்கொள்ளும் மிடுக்குகளையும் பார்த்திருக்கின்றோம்.
அந்த வகையில் உலகில் அதிகம் மிடுக்கோடு நுகரப்படும் ( ஆனந்தத்தோடு அருந்தப்படும்) 10 குடிபானங்களை இப்போது உங்களுக்கு ஊத்திக்கொடுக்கப்போகிறேன்......</div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b>பியர் அல்லது (இந்திய நண்பர்களுக்கு பீர்)</b> </div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsfen-BXbiLZCbQJpUNroG1VqOx1_Hx5kypqjpNkyVOAGPiKN-NFVXw8Hfty4eCUd1FkSOD4QMrFYraDePWsNcFZGwcZ4KqZ1YSS_8JevcPwkx-qE6HqW1n5XJhyG0BsLDrC6pqhHJ5880/s1600/organic-beer-health-benefits.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsfen-BXbiLZCbQJpUNroG1VqOx1_Hx5kypqjpNkyVOAGPiKN-NFVXw8Hfty4eCUd1FkSOD4QMrFYraDePWsNcFZGwcZ4KqZ1YSS_8JevcPwkx-qE6HqW1n5XJhyG0BsLDrC6pqhHJ5880/s400/organic-beer-health-benefits.jpg" width="299" /></a> </div>
<div style="text-align: justify;">
இன்று உலகலாவிய ரீதியில் குடிவகை பானங்கள் என்ற வகைப்படுத்தில் மிக அதிகமாக அருந்தப்படும் பானமாக பியர் உள்ளது.
பியர் தயாரிப்பு பண்டைய நாட்களில் இருந்தே நெறிப்படுத்தப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.
'பார்லித் தண்ணி' என்று நண்பர் வட்டாரத்தில் பியரை அழைப்பத்திலும் அறிவியல் உண்மை ஒன்று உள்ளது. குறிப்பாக பியர் வகைகள் தானியங்களில் இருந்து பெறப்படும் மாப்பொருட்களை நொதிக்க வைத்தே வடித்தெடுக்கப்படுகின்றன.
முக்கிமாக பார்லி தானியம் இதற்கு எடுக்கப்படுகின்றது.</div>
<div style="text-align: justify;">
அத்தோடு கோதுமை, அரிசி, சோளம் என்பவையும் இதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
இன்று உலகில் பெரும்பாலான பியர் தயாரிப்பு நிறுவனங்களும் 'ஓவ்' என்னும் வகை தாவரத்தின் பூவையே இதற்கான சுவையூட்டியாக பாவிக்கின்றனர். பொதுவாகவே ஓவ் பூக்கள் கைப்பு தன்மை கொண்டவை.
அதனாலேயே பியர்கள் ஒருவகை கச்சல் தன்மையினை கொண்டுருகின்றன.
அப்புறம் 'லாகர்' என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?
தானியமாவிலிருந்து வடிந்த தண்ணீர்....
சத்தியமாக பியர் மச்சம் இல்லைங்க (வெள்ளிக்கிழமைகளிலும் குடிக்கலாம்) </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<b>ரம் அண்ட் கோக்.</b>
</div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqrwQ_qMtL0MwpxWqFHIJvkpzB_F_ePFJI54iunRAYMc-f2QmRqFL6Tw-60P4I7lLZiAhxaQf83D3JjUlSl1QUupzZviEFIetmOddfpJoN6MlFZvfPVox7QNBDwfVTvHM4ST4J5FO06lt3/s1600/rumandcoke1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqrwQ_qMtL0MwpxWqFHIJvkpzB_F_ePFJI54iunRAYMc-f2QmRqFL6Tw-60P4I7lLZiAhxaQf83D3JjUlSl1QUupzZviEFIetmOddfpJoN6MlFZvfPVox7QNBDwfVTvHM4ST4J5FO06lt3/s400/rumandcoke1.jpg" width="285" /></a></div>
<div style="text-align: justify;">
இது மிகப்பிரபலம் வாய்ந்த ஒரு குடிவகை. இதன் ஸ்பெசாலிட்டி மற்றும் பிறப்பிடமாக கரேபியன் தீவுகள், கயானா மற்றும் தென் அமெரிக்க பகுதிகளை குறிப்பிடலாம். ரம் பொதுவாக சக்கரை, அல்லது வெல்லம், கரும்புச்சாரை புழிக்கவைத்து உருவாக்கப்படுகின்றது.
ரம் பழுப்பு நிறம், மற்றும் வெள்ளை நிறத்திலும் அதிகமாக வடிக்கப்படுகின்றது. அதேநேரம் கொக்ரெயில் போடுவதற்கு ரம் முக்கியமானதாக பயன்படுகின்றது.
ரம் அண்ட் கோக் குறித்த கலவை அளவில் வெள்ளை ரம், எலுமிச்சை சாறு, மற்றும் கோக் என்பன கலக்கப்பட்டு பரிமாறப்படுகின்றது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="text-align: left;"><b><br /></b></span></div>
<div style="text-align: justify;">
<span style="text-align: left;"><b>வொ</b></span><b>ட்கா அண்ட் ஒரேஞ்ச்</b> </div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTzSAEtGfJPTnwUqenVJTcmXtvrwCX88mwAsGGheGcvBUflMbViYCJKuxAcOJ3Id8bcAGyJnF4k-lqC6CeJctVnR4FGfzU0mBUqj8ID6P25i7Xwh9trKuQiZORwjGo_RopqiovzRNAnAaJ/s1600/kokteilis.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTzSAEtGfJPTnwUqenVJTcmXtvrwCX88mwAsGGheGcvBUflMbViYCJKuxAcOJ3Id8bcAGyJnF4k-lqC6CeJctVnR4FGfzU0mBUqj8ID6P25i7Xwh9trKuQiZORwjGo_RopqiovzRNAnAaJ/s400/kokteilis.jpg" width="400" /></a> </div>
<div style="text-align: justify;">
இது ஒரு மிகப்பிரபலமான ஒரு பானம் இந்தப்பானத்தின் ஸ்பெஸாலிட்டி என்ன எனில் இதை குறிப்பிட்ட ஒரு குவளையிலேயே வழங்கவேண்டும்.
நல்ல உடன் பிடுங்கப்பட்ட ஒரேஞ்ச் சாற்றுடன் வரையறுக்கப்பட்ட அவளவில் வொட்காவை மிக்ஸ்ட் பண்ணி கொடுக்கப்படுகின்றது.
தலையிடி, உடம்பு அசதியுடன் குடிக்கச்செல்பவர்களின் முதல் சொய்ஸ் இதுதான் என்று அடித்து சொல்கின்றார்கள் அனுபவசாலிகள். காரணம் இதை லபக் செய்தவுடன் தலையிடியும், உடல் அசதியும் போய்விடுமாம், அதன் பின்னர் வேறு விரும்பிய போதையினை விதம் விதமாக ஓடர் பண்ணி பெற்றுக்கொள்ளலாம்.
ஸ்க்குரூட்ரைவர் (திருகாணியினை கழட்டும் சாதனம்) வொட்கா அண்ட் ஒரஞ்ச் இன் அண்ணன்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>ரெக்கியூலா (ரக்கிலா)</b>
</div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgL4ulfoWVhztbEOfQPlHXUQW4N88dy1ax897Z3G_qHJemRaH7QYLbJ9RYxGI41OVqZsV9Ah2sbVlm-KG0cOUv3jy3Rsmhs4okyuJ-DWH0MCLhXA68DCZDsUPO2ytFDhbq3_EYHlCDs3cMG/s1600/drink8b4637.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgL4ulfoWVhztbEOfQPlHXUQW4N88dy1ax897Z3G_qHJemRaH7QYLbJ9RYxGI41OVqZsV9Ah2sbVlm-KG0cOUv3jy3Rsmhs4okyuJ-DWH0MCLhXA68DCZDsUPO2ytFDhbq3_EYHlCDs3cMG/s400/drink8b4637.jpg" width="281" /></a></div>
<div style="text-align: justify;">
நம்ம ஊர்க்கத்தாளை போல நீலக்கத்தாளை (ப்புளு அN ஹவ்) தாவரத்தின் இலைகளில் இருந்து பெறப்பட்டதுதான் இந்த ரெக்கியூலா.
அடிச்சா சும்மா கப் என்று ஏறுமே என்பார்களே அதேபோல இதன் அட்கஹோல் செறிவு 38 வீதத்தில இருந்து 42 வரை இருக்கும்.
முக்கிமாக மெக்ஸிகோ இதை உலகத்திற்கு உவந்து வழங்குகின்றது.
அதேவேளை அதன் பின்னர் இந்த ரெக்கியூலாக்களில் ஒரு வகை புழுவை இட்டு குடிக்கும் வழக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு சில இடங்களில் அனேகர் அதைவிரும்பி லபக் என்று குடிக்கின்றார்கள்.
ஆனால் ஒரிஜினல் ரெக்கியூலாவின் ஓனர்ஸ் இது சந்தாப்பவாதிகள் சிலர் வியாபாரத்தை பெருக்க செய்யும் சதி என்று சொல்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>மார்கரிட்டா</b>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgULObor-8DxkhI70-JARrXHA29ez12gkDrydZXSQQAeauWOw1AyNAC5X5uOYGBB_uuGY2Dyg_g5UmQ7oNFLbh1TBv-fO7hiTxyXnQC_SUyQh74GuvyOUsENdMGGefSjyzwGGmf9JWRrCm_/s1600/margarita.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: justify;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgULObor-8DxkhI70-JARrXHA29ez12gkDrydZXSQQAeauWOw1AyNAC5X5uOYGBB_uuGY2Dyg_g5UmQ7oNFLbh1TBv-fO7hiTxyXnQC_SUyQh74GuvyOUsENdMGGefSjyzwGGmf9JWRrCm_/s400/margarita.png" width="297" /></a><br />
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
50 வீதம் ரெக்கியூலா, 29 வீத ஹொயின்ரியோ, 21 வீத லைம் யூஸ், என்ற வீதத்திலான ஒரு மிக்ஸ்ஸர்தான் மார்கரிட்டா.
இதை லபக் செய்யும்போது என்ன கொஞ்சம் தொண்டையில் இருந்து குடல்வரை ஒருவித எரிவுடனேயே பானம் பயனிக்குமாம்.
இதில் ஐஸ்கட்டிகள் இடுவது மிக மக்கிமாகுமாம்.
அது சரி நல்லா யோசித்துப்பாருங்க மார்கரிட்டா கிளாஸ் என்று கேள்விப்பட்டிருப்பீங்களே?
ஆம் இதற்கும் பிரத்தியேகமான ஒரு தனித்தர குவளையிலேயே பரிமாறப்படுகின்றது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<br />
<div style="text-align: justify;">
<b>வைய்ட் ரஸ்ஸியன்.</b>
</div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMwDFIVL7AmjO0NBp8ep_iPd5U14C5q8PyhY8M3dtWigJPFUZU7hVJj_07cs8I9u5mkLNuFmdy3OXNn1hvuwEE4oubmWtU68NUGlX7NRBGhudP7QgI5qeapTApsZGoJxUwj4PPD-rTNdpL/s1600/Kahlua_White-Russian_s3x4_lg1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMwDFIVL7AmjO0NBp8ep_iPd5U14C5q8PyhY8M3dtWigJPFUZU7hVJj_07cs8I9u5mkLNuFmdy3OXNn1hvuwEE4oubmWtU68NUGlX7NRBGhudP7QgI5qeapTApsZGoJxUwj4PPD-rTNdpL/s400/Kahlua_White-Russian_s3x4_lg1.jpg" width="300" /></a> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வோட்கா, ஹலுவா, ஐஸ் கிறீம், பால், ஹாவ் அண்ட் ஹாவ், மற்றும் ஐஸ் கட்டிகள் கொண்டு பக்குவமாக இரண்டு தட்டுகளாக தயாரிக்கப்படுகின்றது வைய்ட் ரஸ்ஸியன்.
போதை இனிப்பாகவே கிடைக்கும்..... </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>செக்ஸ் ஒன் பீச்...</b> </div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZSFQ7I9KTUFVHLgBTZAgKXVFh3CKnfHdgbLK507ePOQXXQ7pk71YeJzdF90GGNRsliT87aKHgefvLiWsqnCjA2ZdZMBtkEaC1_7uDr6JOvzsGkjGyMxo1xvw5v86nyiLipOME2zxf7h2g/s1600/Sx-On-The-Beach.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZSFQ7I9KTUFVHLgBTZAgKXVFh3CKnfHdgbLK507ePOQXXQ7pk71YeJzdF90GGNRsliT87aKHgefvLiWsqnCjA2ZdZMBtkEaC1_7uDr6JOvzsGkjGyMxo1xvw5v86nyiLipOME2zxf7h2g/s400/Sx-On-The-Beach.jpg" width="300" /></a> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெயரே ஒரு ஹிக்காத்தானே இருக்கு?
மிகப்பிரபலமான ஒரு குடிவகை இது.
வொட்கா, ஒரேஞ்ச் யூஸ், கிரான்பெரி யூஸ், சம்போhட் என்பவற்றை மிக்ஸ் பண்ணி அருந்தும் ஒரு குடிவகையே இந்த செக்ஸ் ஒன் பீச்...
இது பீச்சிலதான் குடிக்கிறதோ என்று தப்பா யோசிக்க கூடாது.</div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b>ஜஹர்...</b>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9tvI0KSPzr7Zidt04vQczvenpssM2dJo9K69iOvqrat8bSM6Yrv83sucucfQixFBk7bWT7fnbpOCtjIMaAbdHUrBnvDoN5xfMr253E8HJcEIrztThg3GpMVbFtFHGEvWZ7Q-mwLkmpGsz/s1600/jager_bomb_wideweb__470x365%252C0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="311" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9tvI0KSPzr7Zidt04vQczvenpssM2dJo9K69iOvqrat8bSM6Yrv83sucucfQixFBk7bWT7fnbpOCtjIMaAbdHUrBnvDoN5xfMr253E8HJcEIrztThg3GpMVbFtFHGEvWZ7Q-mwLkmpGsz/s400/jager_bomb_wideweb__470x365%252C0.jpg" width="400" /></a>
ஜெர்மன் சரக்கு என்றாலே சும்மா கும்முனு ஏறும் ஹிக்கு தன்னாலே!
இது 1934 ஆம் ஆண்டு ஜெர்மனில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஹிக்கர்.
இதில என்ன விசியம் என்றால் நாம கௌ;விப்படுற ஐட்டங்கள் எல்லாம் இதில கலக்கப்பட்டு செய்யப்பட்டிருப்பதுதான்.
அப்படி என்ன நாம கேள்விப்பட்ட ஐட்டம் என்கிறீர்களா?
அதிமதுரம், சோம்பு, குங்குமப்பூ, பாப்பி விதைகள், இங்சி இப்படி நம்ம ஊர் சமாரங்கள் நிறைய கலக்கப்பட்டிருக்கு! </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>அப்ஸிந்தே</b>
</div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvOxgiq9gRf0N4FSjZ6xgSrSGF2T-l-_c7hYsXZA6xaquIhQVNKlVO75ja7MGh0aIbsFnvY2J5nkfiEnzU89PajRLwS2zPvPlDwgAsDLCdTVnfpQcVLtFHfYn5uZOBC5puywXRZFm9quth/s1600/absinthe-alcohol.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="304" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvOxgiq9gRf0N4FSjZ6xgSrSGF2T-l-_c7hYsXZA6xaquIhQVNKlVO75ja7MGh0aIbsFnvY2J5nkfiEnzU89PajRLwS2zPvPlDwgAsDLCdTVnfpQcVLtFHfYn5uZOBC5puywXRZFm9quth/s400/absinthe-alcohol.jpg" width="400" /></a> </div>
<div style="text-align: justify;">
அட்கஹோல் செறிவு மிக அதிகம் கூடிய மதுவகைகளில் ஒன்று, இது குறிப்பிட்ட தானியங்களை அதிக கொதிநிலைக்கு கொண்டு சென்று பின்னர் ஆவியாக்கி ஒடுக்கி நீராக எடுக்கப்படும் குடிவகையாகும்.
பச்சை தேவதை என்று சிறப்பாக அழைக்கப்படும் பெயர் கொண்டதும்கூட.
சுவிஸர்லாந்தை பிறப்பிடமாக கொண்டாலும் இந்த பானம் பிரபலமானது பிரான்ஸிலதான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>முக்கிய குறிப்பு – குடி நாட்டுக்கும் வீட்டிற்கும், உடலுக்கும் கேடுவிளைவிக்கும்.</b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>நல்லது நண்பர்களே கடின வேலைப்பழு காரணமாக அதிகநாட்களாக உங்களுடன் ச்சியேஸ் சொல்ல முடியாமல் போனதிற்கு மனம் வருந்துகின்றேன்.
எனவேதான் மீண்டும் எழுத வந்தவுடன் உங்களுக்கும் ஒரு கிழு கிழுப்பூட்ட இந்தப்பதிவு இனிவரும் காலங்களிலும் அன்பு நண்பர்களாகிய நீங்கள் இது வரை தந்த ஆதரவையும் உற்சாத்தையும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் உங்களுடன்<b></b></i> CHEERS WITH JANA</div>
</div>Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-82731742032423919152012-03-26T18:20:00.002+05:302012-03-26T18:29:01.275+05:30பங்குனித்திங்களும் மட்டுவில் பண்டித்தலைச்சியும்............<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfJ29DxxLCfDVm6c3KHmvO_lPGRHfIckX35RRhyNsJU_hyDDrq1wp6xPus40-wjhjUDmh07uoElRAJVUuCUpzvI8tblyGQDzrTv1G0uYK8BeeAnc8GNm5ngAjlXNdlwek90seiGYW4SgZt/s1600-h/150320102038.jpg" style="font-family: Georgia, serif; font-size: 100%; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfJ29DxxLCfDVm6c3KHmvO_lPGRHfIckX35RRhyNsJU_hyDDrq1wp6xPus40-wjhjUDmh07uoElRAJVUuCUpzvI8tblyGQDzrTv1G0uYK8BeeAnc8GNm5ngAjlXNdlwek90seiGYW4SgZt/s400/150320102038.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5449238372914430098" style="text-align: justify;display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; cursor: pointer; width: 400px; height: 300px; " /></a><div style="text-align: justify;"><span ><br /></span></div><span ><div style="text-align: justify;"><span style="font-size: 100%; ">யாழ்ப்பாண சைவத்தமிழ் மரபில் சில தினங்களில் சில தலங்கள் மிகப்பிரசித்தமானதாகவும் குறிப்பிட்ட சில நாட்களில் யாழ்ப்பாணமே திரண்டு ஒரு இடத்தில் ஒன்றுகூடி விழா எடுப்பதும் ஒரு சிறப்பான அம்சமாகும். தெய்வபக்தி, ஆன்மிகம் என்பவற்றைத்தாண்டி, காலகாலமாக ஒரு சமுதாய மரபு பல பரம்பரையினரிடையே கொண்டு செல்லப்பட்டு இன்றும் தொடர்ந்து கைக்கொள்ளப்படுவது இங்கு மிகச்சிறப்பான ஒரு அம்சமாகும்.</span></div></span><div style="text-align: justify;"><br /></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgkyrDiZElNem1Kg6p6k9B2jiMLX4CwfQf_qy1BP9qvC_VzvHiPoYA27A9iqrBUDj-xTh9-QjI6WcZy9dndecA-u-geJIncWYBPphSAJUyFzO6YqXUG6JcKiDQdwKzybssBbrxqSBMFQmu/s1600-h/150320102040.jpg" style="font-family: Georgia, serif; font-size: 100%; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgkyrDiZElNem1Kg6p6k9B2jiMLX4CwfQf_qy1BP9qvC_VzvHiPoYA27A9iqrBUDj-xTh9-QjI6WcZy9dndecA-u-geJIncWYBPphSAJUyFzO6YqXUG6JcKiDQdwKzybssBbrxqSBMFQmu/s400/150320102040.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5449238718768198674" style="text-align: justify;display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; cursor: pointer; width: 400px; height: 300px; " /></a><span ><div style="text-align: justify;"><span style="font-size: 100%;">அந்த வகையில், யாழ்ப்பாண நகரில் இருந்து வட கிழக்காக தென்மராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமமே மட்டுவில் என்னும் மருதநிலம் சார் ஊராகும். அங்கு சிறப்பம்சம் பொருந்திய ஒரு தலமாக உள்ளது மட்டுவில் </span>பண்டித்தலைச்<span style="font-size: 100%;">சி கண்ணகை அம்மன் தேவஸ்தானமாகும்.</span><span style="font-size: 100%; "> </span></div></span><span ><div style="text-align: justify;"><span style="font-size: 100%; ">தமிழில் பங்குனி மாதம் தொடங்கியவுடன், வரும் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும், யாழ்ப்பாணத்தின் மற்ற அனைத்து ஊர்களில் இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் பெருந்தொகையான மக்கள் இங்கு வந்து குவிவது சிறப்பான ஒரு அம்சமாகும்.</span></div></span><div style="text-align: justify;"><br /></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF-2aaBfX1A920aru56w8YimLKoqpl2YfBG3SCyOIgW-9Jn9hajYM0ZjOELeV30ISUDRcuXSJ0Yf5ZYne6P_f3Ra4IUCs37Hw0bKv5XWVA0x8vhnJ8VYNVb0_m1hJnmtfPwOlQQ1zdDz8q/s1600-h/150320102044.jpg" style="font-family: Georgia, serif; font-size: 100%; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF-2aaBfX1A920aru56w8YimLKoqpl2YfBG3SCyOIgW-9Jn9hajYM0ZjOELeV30ISUDRcuXSJ0Yf5ZYne6P_f3Ra4IUCs37Hw0bKv5XWVA0x8vhnJ8VYNVb0_m1hJnmtfPwOlQQ1zdDz8q/s400/150320102044.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5449239088427244834" style="text-align: justify;display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; cursor: pointer; width: 400px; height: 300px; " /></a><span ><div style="text-align: justify;"><span style="font-size: 100%; ">பெரும்பாலும் உற்றாரும் சுற்றத்தாரும் தமது ஊர்களில் இருந்து பெரிய பொங்கல்பானைகள், பாளைகள் என்பவற்றை வாகனத்தில் எடுத்துவந்து, காலைவேளையே இங்குவந்து ஒன்றுகூடி இங்குள்ள தேவஸ்தான கேணியில் நிராடிவிட்டு, அம்பாள் தரிசத்தை முடித்துவிட்டு, பொங்கல்வைத்து, மடைவைத்து வணங்கி அனைவருடனும் பகிர்ந்து உண்டு மகிழ்வது சிறப்பான ஒரு அம்சமாக இன்றும் தொடர்ந்து இடம்பெற்றுவருவது சிறப்பம்சமாகும்.</span></div></span><div style="text-align: justify;"><br /></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgGBdSGxwSBEXtBQ_0QuOSoxE2P3FMrox6PuCCQUBIAqu5EMexbaG2OigAIuKw3LYSq3UjSK1v7Or9gwIf_mwoofsGykz1eB9UmDYPiabtg_gWNewswenIyrrmS2eOzutn1f2uesrpL0Yi/s1600-h/150320102058.jpg" style="font-family: Georgia, serif; font-size: 100%; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgGBdSGxwSBEXtBQ_0QuOSoxE2P3FMrox6PuCCQUBIAqu5EMexbaG2OigAIuKw3LYSq3UjSK1v7Or9gwIf_mwoofsGykz1eB9UmDYPiabtg_gWNewswenIyrrmS2eOzutn1f2uesrpL0Yi/s400/150320102058.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5449239980575048594" style="text-align: justify;display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; cursor: pointer; width: 400px; height: 300px; " /></a><span ><div style="text-align: justify;"><span style="font-size: 100%; ">இங்கு முக்கிமானதாக ஒன்றினை குறிப்பிடவேண்டும், </span></div><div style="text-align: justify;"><span style="font-size: 100%; ">ஆம் அதுதான் இந்த ஊரான மட்டுவில் என்ற ஊரினையே அடைமொழியாக வைத்து இங்கு மட்டுமே பயிரடப்பட்டு, சந்தைக்கு வரும் மட்டுவில் கத்தரிக்காய். நல்ல உறுண்டையாக வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்தக்கத்தரிக்கயை, தேங்காய்ப்பால் நிறையவிட்டு, கறிசமைத்து, வெண்பொங்கல் பொங்கி இங்கு உண்பதே பெரும்பான்மையான மக்களின் வழக்கமாக இரு</span>க்கின்றது</div><div style="text-align: justify;"><br /></div></span><div style="text-align: justify;"><span ><br /></span></div><div style="text-align: justify;"><br /></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOCb-2n4H2vOI7fKUYZklcaslEj6IHyrgFGh6MEaEsx_noVqJ_R8rWZrhBsP17JQRM9F61yOeMRoaW2QnBOXNH2_kjI3lGKKBf7vg4Evn5cBfd9ngtcZTlblKN2kgt-J_T8IG9uc9QP0oK/s1600-h/150320102045.jpg" style="font-family: Georgia, serif; font-size: 100%; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOCb-2n4H2vOI7fKUYZklcaslEj6IHyrgFGh6MEaEsx_noVqJ_R8rWZrhBsP17JQRM9F61yOeMRoaW2QnBOXNH2_kjI3lGKKBf7vg4Evn5cBfd9ngtcZTlblKN2kgt-J_T8IG9uc9QP0oK/s400/150320102045.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5449240456369631058" style="text-align: justify;display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; cursor: pointer; width: 400px; height: 300px; " /></a><span ><div style="text-align: justify;"><span style="font-size: 100%; ">எது எப்படியோ, பெரும்பாலான மக்கள் இன்றும் தமது மரபு மாறாது பங்குனித் திங்களுக்கு இங்கு வந்து ஒன்று கூடுவது இன்றும் தொடர்வது மனதுக்குள் சந்தோசமே. பல வகையான நேத்திக்கடன்களும் இங்கு நடைபெற்றுவருவது வழமை. காவடி, முடி எடுத்தல், குழந்தைகளுக்கு காது குத்தல், புது வாகனங்களை பூசை செய்தல் என்பவை இந்த தினங்களில் அதிகமாக இடம்பெற்றுவருகின்றன.</span></div></span><div style="text-align: justify;"><br /></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz_GXRno4BdSztwnj0A3_aS8cbqOy25qG1oucbHjgIM12Cta584EDt11NZxJT9q2OOtBNhyphenhyphenT0lRygDOmrOK1x9X1fAEvMU7CUN3gbaWSLHZidDTxzBmeYcN5Ue2mpC7qrpI5QRKl_YJAqX/s1600-h/150320102052.jpg" style="font-family: Georgia, serif; font-size: 100%; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz_GXRno4BdSztwnj0A3_aS8cbqOy25qG1oucbHjgIM12Cta584EDt11NZxJT9q2OOtBNhyphenhyphenT0lRygDOmrOK1x9X1fAEvMU7CUN3gbaWSLHZidDTxzBmeYcN5Ue2mpC7qrpI5QRKl_YJAqX/s400/150320102052.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5449240959421643858" style="text-align: justify;display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; cursor: pointer; width: 400px; height: 300px; " /></a><span ><div style="text-align: justify;"><span style="font-size: 100%; ">கடந்த பல வருடங்களாக யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் இடையிலான தரைவழிப்பாதை தடை செய்யப்பட்டிந்தது. </span></div><div style="text-align: justify;">தற்போது <span style="font-size: 100%;">மக்கள் சுதந்திரமாக ஏனைய பிரதேசங்களுக்கும் சென்றுவருவதனால் இம்முறை அதிகமான மக்கள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கலாம். நேற்றைய தினமே அதிகளவிலான மக்கள் வரத்தொடங்கியுள்ளமையும், தென்னிலங்கை வர்த்தகர்கள் கோவில் சுற்றாடல்களில் தமது வர்த்தக நிலையங்களை கொண்டுவந்து மடை விரித்துள்ளமையினையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.</span></div></span><div style="text-align: justify;"><br /></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpQiBjMP_iPmTLNc_O35giFuMfmYEWBfY2G9RnvlZeKBJehAUp944pCxSKGVQwprI4nvcPrrHdI-BmbJzEB6fgrQ9OEkX1urmWh5xgDAMbRMSn5bGQ6YFj43ztZz_HiOXOYSKBxEGqMBJo/s1600-h/150320102054.jpg" style="font-family: Georgia, serif; font-size: 100%; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpQiBjMP_iPmTLNc_O35giFuMfmYEWBfY2G9RnvlZeKBJehAUp944pCxSKGVQwprI4nvcPrrHdI-BmbJzEB6fgrQ9OEkX1urmWh5xgDAMbRMSn5bGQ6YFj43ztZz_HiOXOYSKBxEGqMBJo/s400/150320102054.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5449241510508878594" style="text-align: justify;display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; cursor: pointer; width: 400px; height: 300px; " /></a><span ><div style="text-align: justify;"><span style="font-size: 100%;">தற்போது புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் வாழ்ந்துவரும் ஈழத்து இதயங்கள் பலவற்றிலும், இந்த பங்குனித்திங்களும், </span>பண்டித்தலைச்சி<span style="font-size: 100%;"> கண்ணகை அம்மன் கோவில் பொங்கலும் பசுமையான ஒரு நினைவாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. </span></div></span>Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-11103210367587861942012-02-09T19:02:00.001+05:302012-02-09T19:04:26.179+05:30அவன்... அவள்... அது...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOz8DmgOxd2czDJ2axHAoLXmEmA2Z8RyU2T9SVwqmn846iOtwpTkZsXe4x1aU4B35Qp-J5ckFjJQpLX_JIsrN4rVfGjFbGXCZu33kRQyS5YWeTkKSFKFzhiRvmH9y6mWN7AbCe9xw-Xevw/s1600/he+she+it.jpg"><img style="text-align: justify;display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; cursor: pointer; width: 400px; height: 222px; " src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOz8DmgOxd2czDJ2axHAoLXmEmA2Z8RyU2T9SVwqmn846iOtwpTkZsXe4x1aU4B35Qp-J5ckFjJQpLX_JIsrN4rVfGjFbGXCZu33kRQyS5YWeTkKSFKFzhiRvmH9y6mWN7AbCe9xw-Xevw/s400/he+she+it.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5707128682059096050" /></a><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><b>அவன்...</b></div><div style="text-align: justify;">தொலைவாகிப்போன தூர<span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>ங்களும், ஆர்முடுகலான உணர்வுகளும் அப்பப்போ சுவாசத்தை ரணமாக்கிக்கொண்டுதான் இருக்கின்றன. வறண்டுபோன உதடுகளில் இடைக்கிடை எச்சில் தொடும் நாவின் இதம்போல சில நினைவுகள்.</div><div style="text-align: justify;">கடந்தகாலங்கள், கசப்பானவை, அவையே சிலவேளைகளில் இனிய நினைவானவை, சில சமயம் ஏக்கமானவை ஏன் சில சமயங்கள் தித்திப்பானவை, இதயம் நாறிப்போகும் அளவுக்கு சில சமயம் அருவருப்பானவைகளும் கூடத்தான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எத்தனை சித்தார்த்தங்கள் கற்று தெளிந்துநின்றாலும், ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை புதிதாக சில சித்தார்ந்தங்களை போதித்துப்போவதையும் கவனிக்கத்தவறுவதில்லை. இப்போதெல்லாம் நிகழ்வுகளை கண்டு ஞானிகளின் மௌப்புன்னகையின் அர்த்தங்கள் புரிகின்றன அதே மௌனப்புன்னகையூடாக.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">காலந்தின்ற எச்சமாகவே வந்துவிழுந்தேன் பூமியிலே, பஞ்சபூதம் தந்த உடல் இதனை அவ்வாறே அழிக்கின்றேன், நிலத்திற்காகவும், காற்றுக்காகவும், உதட்டில் தீ கொழுத்தி, வயிறுமுழுவதும் மது என்னும் நீர் நிரப்பி வான் பார்த்து நிற்கின்றேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கண்முன்னே ஏராளமான ஞாபகங்கள். தன்னிலை மறந்து முதன்மை மறந்து இப்போதெல்லாம் இவன் அவனாகிப்போனான். நிற்சயமாக அவள் நினைவுகளுடன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><b>அவள்...</b></div><div style="text-align: justify;">என்னை மயக்கி வேற்றான் கையில் ஏறிய தாலி என் கழுத்தில், யுகமுடிவில் வருமென்றாலும், விழித்த நிமிடம், அறுத்தெறிந்துவிட்டு, மறுநிமிடம் உன் மடிவந்து சேர்வேன் எனக் கவி எழுதியவள் இவள்தான்.</div><div style="text-align: justify;">சோன்னாங்கையா... இளமைக்காதல் 30 நாள் என்று அனுபவம் முதிர்ந்தவர்கள் சொன்னாங்கையா! மோகமயக்கதில் அகிலமே அணுவாகும் முனிவர்க்கே என்றாங்க, அப்படி என்றால் மடப்பெண் நான் மட்டும் எம்மாந்திரம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">காதலிக்கும்போது இருக்கும் வீரமும், பற்றுக்களும் இப்போது சில வேளை பைத்தியமாகத்தோன்றுகின்றது. பெண்ணிவளால் என்ன செய்யமுடியும் என பேதைக்கதை சொல்ல நான் தயாரில்லை. </div><div style="text-align: justify;">காதலித்தவன் ஒருவன் கரம்பிடிப்பது இன்னொருவன், என்ற எழுதாமறையில் நானும் குடமுழுக்காட்டப்பட்டது இப்போதும் எனக்கு ஆச்சரியமானது என நினைக்கும் பெண்ணாகத்தான் இப்போதும் அப்போதும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">முறந்துவிடு மன்னித்துவிடு என்று உன்னிடம் கூற மறந்துவிட்டவள் நான் அல்ல.. அப்படி என்றும் உன்னிடம் கேட்காத கர்வக்காரிதான் நான்.</div><div style="text-align: justify;">'நல்லாயிரு என்றுமட்டும் எப்போதும் உன்னைக்கேட்டுக்கொள்கின்றேன் நீயாவது!'</div><div style="text-align: justify;">முதற்காதல் மறக்காதாம் எத்தனையோ சினிமாவின் டயலக் அது என்று கல்யாணம்முதல் இதயத்தை இறுக்கிப்பார்த்தேன். இறுதியில் என்னை சினிமா டயலாக்குகள் வென்றுவிட்டது குற்ற உணர்வுதான்.</div><div style="text-align: justify;">இங்கே இவளாகவே வாழ்ந்திறக்கத்துடிக்கும் அவள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பெருமிடியெனச்சிரிக்கின்றது, திடீர் என அழுகின்றது, மௌனமாகப்புன்னகைக்க நினைத்து தோற்றுப்போய் கதறுகின்றது. </div><div style="text-align: justify;">வயிறு புரட்டி வாந்தியெடுத்துவிட வேண்டும் என்றாலும், அவன். அவளின் வசனங்கள் கேட்டு, இறந்தே விடுவதென்று முடிவுகட்டுகின்றது</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">காதல் என்ற</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><b>அது.</b></div><div style="text-align: justify;"><br /></div>Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-71773757328877173392012-02-06T18:22:00.003+05:302012-02-06T18:48:45.677+05:30மத்தியின் சாட்சியாக....<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ3oFYTmq0geO9DoY4QCb8J7n9SN6vcH3PW4ERz65YhreolXV19xRdSyp6Aemo1RwwRbHNZ_NC1pRIGcs1sh1ASUXTCE89SMJtjj8iJABnn6fh3SJ1FzN6J6CqiOViJHUJyq5ylHLR8WGm/s1600/crstlogo.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 275px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ3oFYTmq0geO9DoY4QCb8J7n9SN6vcH3PW4ERz65YhreolXV19xRdSyp6Aemo1RwwRbHNZ_NC1pRIGcs1sh1ASUXTCE89SMJtjj8iJABnn6fh3SJ1FzN6J6CqiOViJHUJyq5ylHLR8WGm/s400/crstlogo.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5706010963266007058" /></a><br /><div style="text-align: justify;">பெரும் அதிர்வு கொண்டு காதுபிளக்கும் எறிகணை சத்தங்களும், இடைவிடாது தொடர்ச்சியாக கோர்வையாக கேட்கும் துப்பாக்கி ரவை சத்தங்களுக்கும், யாழ்ப்பாண கோட்டையை சூழவுள்ள முழுமையான பிரதேசங்களே சுடுகாடாக காட்சி தந்தபோதும், இங்கு மட்டும் கல்விச்சத்தம் நின்றது கிடையாது.</div><div style="text-align: justify;">கூரைஇல்லாத கட்டடமுகடுகளில் சுவர் உடைந்த பிசிறல்களுக்கு இடையிலும் சரஸ்வதி குடிகொள்வாள் என்று அப்போது கண்டுகொண்டது என்னமோ இந்த இடத்தில்த்தான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">முற்றுப்புள்ளி என சிலர் <span ><b>.</b></span> இப்படி இட்ட புள்ளிகளைக்கூட அதே முற்றுப்புள்ளியில் இருந்து <span ><b>...... </b></span>இப்படி கோடிட்டு எழுந்து நின்று காட்டிய பெருமை பெற்ற கல்லூரி அது என்பதை எவரும் மறுத்துவிடமுடியாது.</div><div style="text-align: justify;">பீனிக்ஸ் பறவைக்கு ஜப்பானையும், ஜப்பான் மக்களையும் பலர் உவமானங்களாக காட்டுவார்கள். அதேபோல சாம்பலில் இருந்து மீண்டெழுந்து இன்று மீண்டும் யாழ்ப்பாணத்தின் தலைமை, நகர, பட்டிண கல்லூரி நான்தான் என்று வீறுகொண்டு எழுந்திருக்கின்றது இந்தக்கல்லூரி. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எண்பதுகளின் ஆரம்பம் முதல் தொண்ணூறுகளின் இறுதிவரை இந்தக்கல்லூரி ரணத்தோடு நடந்துவந்த சரித்திரம் ஆச்சரியமானது.</div><div style="text-align: justify;">இலங்கைக்கு முதன் முதல் சர்வதேச ரீதியாக தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்த எதிர்வீரசிங்கம், அதை பெற்றது இந்தக்கல்லூரி மாணவனாகத்தான், பாதிரியார்கள் அதிபர்களாக இருந்த கிறிஸ்தவ பாடசாலை இது என்றாலும், சைவமும், தமிழும் போற்றும் ஆறுமுகநாவலரை உருவாக்கியதும், இந்த கல்லூரிதான், கிஸ்தவ சமயத்தின் வேதாகமமான பைபிளை தமிழுக்கு தந்ததும் இந்த பாடசாலைதான், அதேபோல காலகலமாக எத்தனையோ பொறியிலாளர்கள், மேலாளர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், முகாமையாளர்கள் என சமுகமட்டத்தில் உயர்ந்தவர்கள் பலரையும் தந்ததுடன், யாழ்ப்பாணத்தில் விளையாட்டு என்றால் சென்றல்தான் என்று விளையாட்டுக்கு அன்று தொட்டு இன்றுவரை முக்கியத்துவமளித்துவருவதும் இந்தக்கல்லூரியே.</div><div style="text-align: justify;">அதற்குச்சான்றாக எந்த கல்லூரிக்கீதத்திலும் இல்லாத வகையில், இந்தக்கல்லூரியின் கீதத்தில் ஒரு உதைபந்தாட்டத்தை மையப்படுத்தியும், நேரம், மற்றும், ஒழுங்கை கொண்டாதவும் இசைக்கப்படுகின்றது.</div><div style="text-align: justify;">இதேபோல வட மாகாணத்தில், உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கொக்கி, ரக்பி, வலைப்பந்தாட்டம், என சகல விளையாட்டுக்களையும் முதன்முதல் அறிமுகம் செய்த பெருமையும் இந்தக்கல்லூரியை சார்ந்ததே. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எல்லாவற்றுக்கும் மேலாக நூற்றாண்டுகள் கடந்து சென்றாலும் சில பாரம்பரியங்களை எந்த இடர்பாடுகளுக்கு மத்தியிலும் கைக்கொண்டுவருவது இந்த கல்லூரியின் மற்றும் ஒரு சிறப்பு. </div><div style="text-align: justify;">இதில் முக்கியமானது இந்தக்கல்லூரிபோலவே நூற்றாண்டு கடந்தும் கரம்கோர்த்து அந்தப்பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் இணைந்து பயணிக்கும் பரி.ஜோவான் கல்லூரி. சென்றல் என்றால் அடுத்தது நிற்சயமாக சென்.ஜோன்ஸ் இருக்கும் என்ற அளவிற்கு இருகல்லூரிகளும் ஒன்றை ஒன்று அணைத்து சகாவாக பயணிப்பது பெரும் ஆச்சரியமே!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சரி... இந்த நாள் இந்தக்கட்டுரையை ஏன் நான் வரைய நினைத்தேன், என்பதற்கு உணர்வுபூர்வமான சம்பந்தம் உள்ளதால் இனி.. விடயத்திற்கு வருகின்றேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இந்தக்கல்லூரி வெறும் சுவர்களையும், அத்திவாரங்களையும் மட்டும் இழந்து, இன்று வீறுகொண்டெழுந்து சர்வதேச பாடசாலைகளுக்கு ஒப்பான அளவுக்கு வீறு கொண்டு எழுந்திருக்கவில்லை. பெரும் ரணத்தோடு பயணித்தே இந்த இமாலயத்தை தொட்டுள்ளது.</div><div style="text-align: justify;">கல்லூரி வேளையில், கல்லூரியில் கடமையில் ஈடுபட்டிருந்த மாணவர் தலைவன் பொன்.விபுலானந்தன், சாதாரண தரத்தில் எட்டு அதிசிறப்பு பெறுபேறுகளை தந்துவிட்டு, மீண்டும் உயர்தரத்தில் 4 அதிசிறப்பு பெறுபேறை தந்த சதீஸ்காந்தன் என பல உயிர்களையும் விலைகொடுத்துள்ளது. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">1983 ஆம் ஆண்டுமுதல் முதற்பாதி கோட்டைப்பகுதியில் நிலவிய அசதாரண £ழ்நிலை கல்லூரியை பிடுங்கி எறிந்த நிலையை தந்தது. பின்னர் இந்திய இராணுவகாலங்களின் பின்னர் 1990 – 1993 வரையான கால கட்டங்களில் நிர்மூலமாக்கப்பட்ட நிலையிலும் கல்வி தொடர்ந்ததும், மாணவர்கள் தைரியத்த்டன், உயிரைப் பயணம் வைத்து கல்வி கற்றதும் மிகப்பெரும் ஆச்சரியமே.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இப்போதும் எனக்கு நினைவு இருக்கின்றது, உடைந்த கட்டடத்தின் முன்னால் ஒன்றுகூடும் நாம், அப்போதைய எமது அதிபர் திரு. நா.க.சண்கநாதபிள்ளை எழுதிய பாடலை உற்சாகமாகப்படிப்போம்.</div><div style="text-align: justify;">'எங்கள் அரும் கல்லூரியை வளர்க்கப்போகின்றோம், இடிந்தவற்றை கட்டி மீள எழுப்பபோகின்றோம்' எனத்தொடங்கும் அந்தப்பாடல் கண்களில் கண்ணீருடன் ஆனால் மனம் முழுவதும் தைரியத்தையும் உற்சாகத்தையும் அப்போது எமக்குள் விதைத்தது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எமது கல்லூரியின் பாராம்பரியம், விழுமியங்கள், முன்னைய சாதனையாளர்கள் பற்றி இடைவிடாது எமக்கு கற்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கும். அப்போதெல்லாம் எமது கல்லூரி மீண்டும் எழும், யாழ்ப்பாணத்தில் இதுபோல ஒரு கல்லூரி இல்லை என்ற நிலைக்கு வரும் என்று கனவு காண்போம்.</div><div style="text-align: justify;">அந்த கனவு இன்று யாழ்ப்பாணம் மட்டும் அல்ல இலங்கையில் என்று சொல்லும் அளவுக்கு பெருவிருட்சமென கண்முன் நிற்கின்றது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">1991ஆம் ஆண்டு கோட்டை இராணுவ முகாமைச்சுற்றியுள்ள பிரதேசங்களில் எறிகணை சத்தங்கள், விமானத்தாக்குதல்கள் என பல இடம்பெறுகின்றன. </div><div style="text-align: justify;">ஏல்லாமே எமக்கு இசைவாக்கம் அடைந்துவிட்டதனால், எமது கல்லூரியின் பழைய மாணவர் விடுதி உள்ள பிரதேசத்தில் நானும் இரண்டு நண்பர்களும் ஆவலாக மண்ணைஆழமாக வெட்டி அதன் மேல் பொலித்தீன் பைகைளை வைத்து தண்ணீர் விட்டு நீச்சல் தடகாம் கட்டி மகிழ்ந்தோம். </div><div style="text-align: justify;">எமது கல்லூரிக்கான நீச்சல் தடாகம் அது எனவும், 12 அடிக்கு மேலே ஆழம் எனவும், பல கதைகள் சொல்லி சிரித்து மகிழ்ந்தோம். அப்போது என் அருகில் நின்ற ஜனகன் என்ற மாணவன் இந்த நீச்சல் தடாகத்தை எமது ஜனாதிபதி டிங்கிரி பண்டார விஜேதுங்க (அப்போது அவர்தான் ஜனாதிபதி) திறந்துவைப்பார் என்று சொன்னது இன்னும் நினைவு.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அட... என்ன ஆச்சரியம் நாம் அப்படி கட்டி விளையாடும்போது எந்த தேவதை மேலால் கடக்கும்போது, இது அப்படியே பலிக்கட்டும் என்றுவிட்டு போனதோ தெரியாது. </div><div style="text-align: justify;">இன்று அதே இடத்தில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்று இப்போதைய ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.</div><div style="text-align: justify;">ஆனால் அப்போது இதை சொன்ன அந்த ஜனகன் என்ற மாணவன் இப்போது இல்லை. ம்ம்ம்.... 1995 முதல் அவனது பெயரும் காணமற்போனோர் பட்டியலில்த்தான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சில ஊடகங்களின் கவனத்திற்கு – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு நீச்சல் தடாகம் என்பது சில தமிழ் ஊடகங்களுக்கு என்னவிதத்திலோ ஒருவித சலிப்பை, வெறுப்பை தருவதை சில தினங்களாகவே கவனித்தே வருகின்றேன்.</div><div style="text-align: justify;">ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் எதையும் அரசியல் பார்வை பார்க்கும் சிறு சுற்று சிந்தனையுடையவர்களாகவே அப்போது பார்க்கமுடிகின்றது.</div><div style="text-align: justify;">அன்று ஒரு பத்திரிகையில் மிக ஆடம்பரமான மத்திய கல்லூரியின் நீச்சல் தடாக படத்தையும், அருகில் தகரம் அடித்த ஒரு பாடசாலையையும் காட்டி ஒரு பத்திரிகை தனது முதலாவது பக்கத்தில் செய்தி வெளியட்டிருந்தது.</div><div style="text-align: justify;">வாஸ்தவம்தான், நகரம் மட்டுமன்றி கிராமப்புறத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவேண்டும். மறுக்கவில்லை.</div><div style="text-align: justify;">ஆனால் அத்திவாரம் தெரியும் நிலையில் எமது கல்லூரி தகர்ந்து நின்றபோது, நாமே நம்மை அசுவாசப்படுத்தி எழுந்தபோதெல்லாம் உங்கள் கண்ணுக்கு ஏன் படவில்லை? அது பற்றி எமது நிலை பற்றி ஒரு செய்தியாவது போட்டிருந்தீர்களா? </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதே நீச்சல் தடாகம் இவர்கள் எதிர்பார்க்கும் இன்னும் ஒரு கல்லூரிக்கு சென்றிருந்தால், எந்தவித கதையும், செய்தியும், படமும், கேலிச்சித்திரமும் வந்திருக்காது. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஒரு பிரபல கல்லூரிக்கு, தேசிய கல்லூரிக்கு, அதுவும் முக்கிமான மாவட்டம் ஒன்றின் நகரத்தில் உள்ள பாடசாலைக்கு உடனயடியான தரமுயர்த்தல்கள் அபிவிருத்திகள் தேவை அவையே இப்போது நடைபெறுவதாகத்தோன்றுகின்றது.</div><div style="text-align: justify;"><br /></div>Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-28211656398821295092012-01-21T14:16:00.005+05:302012-01-21T14:22:45.806+05:30டாக்டர் வாசகனின் மயக்கம் என்ன? கட்டுமஸ்தானனாக மாறும் டிலான்!<div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAmX-ou6VuUlNVj6hCcwNQANM1IIYZ6rwfh2fJvi-o5J7cXULccFwLDt3pZJ7gw_TA3JF2oEhz2_y6B4Q53bVqz78SOdNbDGoodwnc-FES-gfZj8vaYN3PUjT9ilJkdq5pdKPnnMnOowgH/s1600/332520_2573094119952_1032265342_2750513_85289611_o.jpg"><img style="text-align: justify;display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; cursor: pointer; width: 400px; height: 267px; " src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAmX-ou6VuUlNVj6hCcwNQANM1IIYZ6rwfh2fJvi-o5J7cXULccFwLDt3pZJ7gw_TA3JF2oEhz2_y6B4Q53bVqz78SOdNbDGoodwnc-FES-gfZj8vaYN3PUjT9ilJkdq5pdKPnnMnOowgH/s400/332520_2573094119952_1032265342_2750513_85289611_o.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700004158194719730" /></a><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வருடத்தின் ஆரம்பமே கூதிர்க்காலத்துடன் ஆரம்பித்துவிட்டதோ என்னமோ! இலங்கையில் வெப்பவலய பிரதேசங்களிலேயே அப்படி ஒரு குளிர்.</div><div style="text-align: justify;">இது இப்படி இருந்தால், இலங்கையின் மத்திய பிரதேசத்தில் இருக்கும் நாவலப்பிட்டியின் குளிரின் அளவை சொல்லித்தெரியத்தேவையில்லை!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நேரம் நள்ளிரவைத்தாண்டிய பின்னும்கூட, அந்த நகரின் வீதிகளின் பரிணாமங்கள், அங்கே ஊர்வன, பறப்பன, நடப்பன, விழுவன என்பவை எவையாக இருந்தாலும் கிளிக்... கிளிக் என்று ஒரு டியிட்டல் சிங்கிள் லென்ஸ் ரிபிளக்ஸ் கமரா ஒன்று உருவச்சிறைப்பiடுத்திக்கொண்டிருந்தது.</div><div style="text-align: justify;">அந்த கிளிக்கில் அகப்படும் பொருள் நிலையில் இருந்து கொஞ்சம் சூம் போட்டுப்பார்த்தால் அங்கே கமராவுடன் சிரித்துக்கொண்டு இருப்பவர் டாக்டர் வாசகன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">குறிப்பிட்ட ஒரு துறையில் மட்டுமன்றி இன்னுமொரு விடையத்தை பொழுதுபோக்காக அன்றி அதிலும் தேர்ச்சியாளனாக வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் வெற்றியாளர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். அந்த ஒரு வெற்றியாளனாக மாறிக்கொண்டிருக்கின்றார் டாக்டர் பாலவாசகன் அவர்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அண்மைக்காலமாக பேஸ்புக், மற்றும் பிளிக்கரில் முகத்தை ஆச்சரியமாக்கத்தக்க பாலவாசகனால் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் வெளிவந்திருந்தன. அவை நண்பர்கள் உட்பட பல்வேறு தரப்பட்டடோரினதும் பாராட்டுக்களையும் பெற்றவகையாகவே இருந்தன...</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அவரால் பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே உங்கள் கண்ணுக்கு விருந்தாக....</div><div style="text-align: justify;">இந்த புகைப்படங்களில் ஒரு தவளையின் படம் இருக்கும் கவனமாகப்பாருங்கள். இந்த புகைப்படம் டாக்டர் பயணித்த ஆட்டோவில் தவளை நின்றபோது உடனடியாக டாக்டர் எடுத்த புகைப்படம். </div><div style="text-align: justify;">எனினும் சில செட்டிங்சை செய்து இன்னும் உருவொழுக்கு, மறுபிரதிப்பு என்பவை, மற்றும் கோணங்களை செட்செய்து தரமான படம் ஒன்றைபெற டாக்டர் முயற்சித்துக்கொண்டிருந்தவேளை ஆட்டோக்காரார் விவரம் தெரியாமல் தவளையை அடித்து ஓடவைத்துவிட்டாராம்.</div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqfj3Jq2kAeLP4Ff9Lph5LsCPJ8_OCVEXRCxCCMael8DOiTYzYjnuXvz_QIdWRFGp7fVZc78VrEEkWfnxC6-PGWOCN4AZ9bVXtX4rY4lHe2HUP08VQGM2Mqrny1ugQlg9oliLwC9Kc65z7/s1600/383327_2708852713832_1032265342_2826382_740931983_n.jpg"><img style="text-align: justify;display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; cursor: pointer; width: 400px; height: 273px; " src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqfj3Jq2kAeLP4Ff9Lph5LsCPJ8_OCVEXRCxCCMael8DOiTYzYjnuXvz_QIdWRFGp7fVZc78VrEEkWfnxC6-PGWOCN4AZ9bVXtX4rY4lHe2HUP08VQGM2Mqrny1ugQlg9oliLwC9Kc65z7/s400/383327_2708852713832_1032265342_2826382_740931983_n.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700004727766984402" /></a><div style="text-align: justify;"><br /></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_gZ4U0Sja8p7I2aYDZMni6uBoJ11vGexsDCml48Vib4bkJTnW4wSy-J1I_cZdeF-LyhzeMT51oN8dZkNUTj_KUG1iF-C2o1LQvwfkU6NewruWbuiF8QePYgICyrlc9egEdfrc0fa25YbY/s1600/thavalai.jpg"><img style="text-align: justify;display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; cursor: pointer; width: 305px; height: 400px; " src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_gZ4U0Sja8p7I2aYDZMni6uBoJ11vGexsDCml48Vib4bkJTnW4wSy-J1I_cZdeF-LyhzeMT51oN8dZkNUTj_KUG1iF-C2o1LQvwfkU6NewruWbuiF8QePYgICyrlc9egEdfrc0fa25YbY/s400/thavalai.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700004723113648642" /></a><div style="text-align: justify;"><br /></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJw28OXMOE5lra1FloyyEO_UE-x8YUOhZ8NRzZ-zBhvKXVxad3F0xXGJUTc3wZh3fGcxbdf8ktYXmkuE4_rl_CUCXr20m4vPrHBdhDtFP0z_Tbe4iYWM5Ya7DvCQkhVyNDwNIoI1oqBhsq/s1600/390509_2608201677619_1032265342_2771081_521040970_n.jpg"><img style="text-align: justify;display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; cursor: pointer; width: 400px; height: 240px; " src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJw28OXMOE5lra1FloyyEO_UE-x8YUOhZ8NRzZ-zBhvKXVxad3F0xXGJUTc3wZh3fGcxbdf8ktYXmkuE4_rl_CUCXr20m4vPrHBdhDtFP0z_Tbe4iYWM5Ya7DvCQkhVyNDwNIoI1oqBhsq/s400/390509_2608201677619_1032265342_2771081_521040970_n.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700004708192145890" /></a><div style="text-align: justify;"><br /></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjr_9PvuTQV9WFiPwjcuTmUIZ8A0LvRqNV0uG1OBX4vN04YWEYrsSKiyyII0RU849nRuqVZEWXQjMYrl087M_kmVLo8uJiK5UAtnSgVTWhbu2a_Wj6W1pyTEk3FZPAau6I4V-UlqIpuUHB/s1600/332110_2678302470095_1032265342_2813057_1059771320_o.jpg"><img style="text-align: justify;display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; cursor: pointer; width: 400px; height: 257px; " src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjr_9PvuTQV9WFiPwjcuTmUIZ8A0LvRqNV0uG1OBX4vN04YWEYrsSKiyyII0RU849nRuqVZEWXQjMYrl087M_kmVLo8uJiK5UAtnSgVTWhbu2a_Wj6W1pyTEk3FZPAau6I4V-UlqIpuUHB/s400/332110_2678302470095_1032265342_2813057_1059771320_o.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700004704918074322" /></a><div style="text-align: justify;"><br /></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcv08Xsdcd1YWYjG_S6gmm45paH_5dFjbIT6US9UMvW966g0NuvWTFWcZCPrbMto1axFwHWnUEpIbO0YpibY76PqniyU_9_Jxhy9NZk_Ekc_ee5_H46-9iKgkiaAHDQTG2AHJbOmXv6Zwl/s1600/327156_2678298589998_1032265342_2813056_1912342157_o.jpg"><img style="text-align: justify;display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; cursor: pointer; width: 400px; height: 262px; " src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcv08Xsdcd1YWYjG_S6gmm45paH_5dFjbIT6US9UMvW966g0NuvWTFWcZCPrbMto1axFwHWnUEpIbO0YpibY76PqniyU_9_Jxhy9NZk_Ekc_ee5_H46-9iKgkiaAHDQTG2AHJbOmXv6Zwl/s400/327156_2678298589998_1032265342_2813056_1912342157_o.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700004703641139218" /></a><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">2012 ஞாயிற்றுக்கிழமை 22 தேதி தனது பிறந்தநாளை நாவலப்பட்டியில் கொண்டாடும் அன்புத்தம்பி டாக்டர் பாலவாசகனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உடலினை உறுதி செய்....</div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-8ZeC7Mtgx6Cm7tz8MBL4qMpv89a8nOVIsRltHz8Dd5GNLgO7_2OLSib6pmxgUG0XdFgt5Xl7sP9HjbjJdnFdRYKjOYEA2cRAaglA-_CGN4YRAOXz_Tl_o2bO7qqGS7OxTUdKE1x1Zq5S/s1600/388793_324286707583726_100000071983282_1375707_1500380342_n.jpg"><img style="text-align: justify;display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; cursor: pointer; width: 300px; height: 400px; " src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-8ZeC7Mtgx6Cm7tz8MBL4qMpv89a8nOVIsRltHz8Dd5GNLgO7_2OLSib6pmxgUG0XdFgt5Xl7sP9HjbjJdnFdRYKjOYEA2cRAaglA-_CGN4YRAOXz_Tl_o2bO7qqGS7OxTUdKE1x1Zq5S/s400/388793_324286707583726_100000071983282_1375707_1500380342_n.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700005031261828642" /></a><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">டிலானை இப்போது பேஸ்புக்கிலோ, ஸ்கைப்பிலோகூட பிடிப்பது மிகக்கஸ்டமான காரியமாக இருக்கின்றது. பிஸி பிஸி என்றே அழைப்புக்கள் எடுத்தாலும் நிலமை உள்ளது.</div><div style="text-align: justify;">இருந்தாலும்கூட பேஸ்புக்கிலே பல்வேறு உடற்பயிற்சிகளை டிலான் மேற்கொள்ளும் புகைப்படங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.</div><div style="text-align: justify;">புறவாய் இல்லை பயபுள்ளைகள், தங்கள் பிரபொஸனல்களைவிட போட்டோ கிராபியிலும், ஜிம்மிலும் பொழுதை கழிப்பது பாராட்டக்கூடியதாகவே உள்ளது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நான் டிலானை சந்தித்தபொழுதுகளில் எல்லாம் சொல்லிக்கொள்வது, எப்போதும் ஸ்போட்ஸ் மற்றும் உடல்மீது கவனம் கொண்டிருக்கும் நீ... வெளியே போனால் இதெற்கெல்லாம் டைம் கிடைக்காமல் நம்மளைப்போல ஆகிவிடுவாய் பார் என்று.. இருந்தாலும்கூட அண்ணே! ஒருபோதும் இல்லை எனக்கு எதிலை கொன்ரோல் இருக்கோ இல்லையோ ஜிம் விடயத்தில் வேற கிரகத்திற்கு போனாலும் ஜிம்முக்கு போவேன் என்பான். </div><div style="text-align: justify;">அதைப்போல வேற தேசம்போனாலும் ஜிம்முக்கு போவது சந்தோசமே.</div><div style="text-align: justify;">வெகு விரைவில் மங்களகரமாக இலங்கைவருவேன் என்ற டிலானுடைய அறிவித்தலை ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பதிவுலகில் பதிவர்கள் என்று பலர் நண்பர்களாக வந்தாலும், இருந்தாலும் எப்போதும் அத்தனையையும் தாண்டி என் சகோதரர்களாக இருப்பவர்கள் இந்த இருவர். எங்களுக்குள்ளான அதி உச்ச தொடர்பு என்ன வென்று அனைவருக்கும் தெரியவேண்டும் என்றால், என் பதிவுலகம் சம்பந்தமான சகல கடவுச்சொற்களும் பாலவாசகனுக்கு தெரியும், ஆதேபோல டிலானுக்கும் தெரியும், அதேபோல அவர்களுடையதும் எனக்கும் தெரியும் </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">2012 ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் தேதி ஜிம்மிலேயே தனது பிறந்தநாளை கொண்டாடும் டிலானுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஒரே ஆண்டு, ஒரே தேதி, ஒரே மாதத்தில் பிறந்து, என் இதயத்திற்கு மிக நெருக்காமாக உக்காந்திருக்கும் இரண்டு தம்பியருக்கும் எனது பிறந்ததின வாழ்த்துக்கள்.</div>Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-42521785283592263452012-01-04T17:58:00.000+05:302012-01-04T17:59:15.544+05:30மீண்டும் கொஞ்சநேரம் பேசலாமா???<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjp05rfyOu5Jwz0hmJE6tUKgPYP_ndMMvm04t5HTBtOoaLkz7dnyTRN_TatCiXNDSpkHWVmVNT8ESWsvwSIIn5kIYhpttCI46PMSBpfM-ArWff9givRVvwbMIejxk5OMBy_8XfBG3_FzYXx/s1600/GIRL.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjp05rfyOu5Jwz0hmJE6tUKgPYP_ndMMvm04t5HTBtOoaLkz7dnyTRN_TatCiXNDSpkHWVmVNT8ESWsvwSIIn5kIYhpttCI46PMSBpfM-ArWff9givRVvwbMIejxk5OMBy_8XfBG3_FzYXx/s400/GIRL.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5546422251300286402" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 400px; height: 400px; " /></a><br /><div style="text-align: justify; "><span class="Apple-style-span" style="font-size: large; "><b>நா</b></span>ம் கதைகேட்டு அதை கற்பனையாக மனத்திரையில் விழுத்தி, அதில் சுவைகண்ட வேளைகளில் எம் உணர்வுகள் எப்படி?</div><div style="text-align: justify; ">“சினோவைட்” மீள எழுந்திருக்கவேண்டும் என்று கதைகேட்டபோதே எம் மனம் பிரார்த்தித்தலில்லையா? எத்தனை இரவுகள் ஈசாப்கதைகளில் வரும் பாத்திரங்களுடன் நாமும் ரொட்டியும், பேரிச்சம்பழமும் சாப்பிட்டுள்ளோம் இல்லையா? ஆயிரத்தோர் இரவு கதைகளில் தாலிவிற்;க்கு தன் தையபாதான் கிளி என்பது தெரியவேண்டும் என்று தையபாவைவிட தவிர்தவர்கள் நாம் இல்லையா?</div><div style="text-align: justify; ">ஆக மொத்தத்தில் ஆரம்பத்தில் பிஞ்சு மனத்தில் நாம் கேட்ட கதைகள்தான் நமக்கு உணர்வுகளையும், கற்பனைகளையும் ஊட்டிவிட்டது என்பதை என்றாவது சிந்தித்துள்ளோமா?</div><div style="text-align: justify; "><br /></div><div style="text-align: justify; ">இன்று நம் கண்களால் ஆயிரம் புத்தகங்களை வாசித்து இறுதிப்பக்கத்தை மூடினாலும், அவற்றில் சில மட்டும், வாசித்து மூடும்போதே மனதிற்குள் ஏதாவது ஒரு உணர்வின் நெருடலை தந்ததாக அனுபவித்துள்ளோம் அல்லவா?</div><div style="text-align: justify; ">ஆகவே எம் அடி மனத்தில் உள்ள அந்த உன்னதமான உணர்வுகள், அன்பு, பாசம், ஏக்கங்கள் என்பவற்றை மிக இலாவகமாக தட்டிக்கொடுக்கும் எழுத்துக்கள், காட்சிகள் பார்த்துமுடியும்போது நாம் அதில் ஒன்றி இலகித்துப்போய் நிற்கின்றோம்.</div><div style="text-align: justify; "><br /></div><div style="text-align: justify; ">அத்தோடு நின்றுவிடாது அவை எம்மை குறிப்பிட்ட சில நேரத்திற்கு தன்னகத்தே ஆட்கொண்டு விட்ட நிலையில் எம் மனம் சஞ்சரித்து நிற்பதையும் என்றாவது அனுபவித்து பார்த்திருக்கின்றீர்களா?</div><div style="text-align: justify; "><br /></div><div style="text-align: justify; ">தேர்ச்சி பெற்ற ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களோ அல்லது, மிகப்பிரமாண்டமாக திரைப்படம் எடுக்கும் இயக்குனரோ தான் அதை செய்யமுடியும் என்று இல்லை.</div><div style="text-align: justify; ">இந்த உணர்வுகளின் உந்துதல்களை எம் மனத்திரைக்கு கொண்டுவரும் சாமான்ய ஒரு எழுத்தாளனும், அல்லது ஒரு குறும்பட இயக்குனனும்கூட பிரமாக்களே.</div><div style="text-align: justify; ">ஆக..உணாவுகளை தட்டியெழுப்பும் உன்னத படைப்புக்கள் கதைகேட்கும் நாட்களில் இருந்து இன்றுவரை எம் மனதை வருடிச்செல்வதை உணர்கின்றோம் இல்லையா?</div><div style="text-align: justify; "><br /></div><div style="text-align: justify; ">சில நாவல்கள் படித்து இந்த உணர்வுகளை நீங்கள் அடைந்திருப்பீர்கள், அனால் பின்னர் அதேநாவல் திரையில் வரும்போது, அது நாவல்போல் இல்லாமல் அந்த உணர்வை தராமல் ஏமாற்றிய சந்தர்ப்பங்களையும் சந்தித்திருப்பீர்கள்! அதேபோல வாசிக்கும்போது சுமாராக இருந்த நாவல்கூட, திரைக்காட்சியாகவரும்போது உணர்வுகளை தட்டிவிட்டு செல்லும் சந்தர்ப்பங்களும் உண்டுதானே!!</div><div style="text-align: justify; "><br /></div><div style="text-align: justify; ">சில வாசிப்புக்கள், திரைக்காட்சிகள், எம் மனதை வருடிவிடுகின்றன ஆனால் அந்த உணர்வு எத்தகயதாக இருக்கும் என்பது வரையறுத்து சொல்வது கொஞ்சம் கஸ்டமாக இருக்கும்.</div><div style="text-align: justify; "><br /></div><div style="text-align: justify; ">கீழே ஒரு திரைக்காட்சி…கண்டிப்பாக முழுவதையும் பாருங்கள்..</div><div style="text-align: justify; ">அந்த ஏதோ ஒரு உணர்வு கண்டிப்பாக கிடைக்கும்.</div><div style="text-align: justify; ">அதேவேளை இந்தக்கதை வாசிப்பதாக இருந்தாலும் அதே உணர்வை தந்திருக்கும்.</div><div style="text-align: justify; "><b>பார்த்துவிட்டு கண்டிப்பாக நீங்களும் என்னுடன் பேசிவிட்டுபோங்கள்…</b></div><div style="text-align: justify; "><br /></div><div style="text-align: justify; "><iframe width="425" height="344" src="http://www.youtube.com/embed/lh4hVXacjxo?fs=1" frameborder="0"></iframe></div>Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-11631765843085349682012-01-02T18:02:00.003+05:302012-01-02T18:14:20.313+05:30வாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgJkU5p2zrm4Ej008BCpDGeva2kBTbHIZ7obh45uzxcJYQ8yxcPkGtT4lgWpv_1cL3jb9BZTTRAyZtkGTnlicu1oxuWxQO5HSx21EaKUOhiD0f5WTniS3HkORVwIo4NjwanBV7ob55JvqB/s1600/10262858-thirukkural-on-mobiles.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 287px; height: 294px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgJkU5p2zrm4Ej008BCpDGeva2kBTbHIZ7obh45uzxcJYQ8yxcPkGtT4lgWpv_1cL3jb9BZTTRAyZtkGTnlicu1oxuWxQO5HSx21EaKUOhiD0f5WTniS3HkORVwIo4NjwanBV7ob55JvqB/s400/10262858-thirukkural-on-mobiles.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5693012606473989458" /></a><div style="text-align: left;"><span style="text-align: justify; ">உலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன்? அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா மொழிப் புலவன் ஐயன் வள்ளுவன்.</span></div><div style="text-align: justify;">திருக்குறள்... சொல்லியபொருளின் பொருள் உணர்ந்தார்க்கு உச்சி முதல் உள்ளம்கால்வரை சிலிர்ப்பை எற்படுத்தும். தமிழகனாகப்பிறந்துவிட்டு இன்னும் திருக்குறள் பாடி வாய்மணக்காமல் இருப்பவர்கள் எத்தனை பேர்?</div><div style="text-align: justify;">'தமிழனாக அதிலும் தமிழ் மொழி படிக்கத்தெரிந்தும், திருக்குறளை படித்து இரசிக்காதவன் ஒவ்வொருவனும் இனிமேல் இவள்போல் பிறப்பதற்கு இல்லை என்று அறிவிக்கப்பட்ட உலக அழகியைசொந்தமாக அடைந்துவிட்டும், இன்னும் அவளை தொட்டுக்கூடப்பார்க்காமல் இருக்கும் பேடியர். என்று ஒரு இளங்கவிஞன் சொன்னபோது அந்த உவமானம் என்னை சிலிர்க்க வைத்தது உண்மையும் அதுதானே?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">திருவள்ளுவர் இன்றைய எம்.பி.ஏ கற்றவரா? என்று கேட்கும் அளவுக்கு தொழில் நிபுணத்துவம் பற்றிய அத்தனை குறிப்புக்களையும் தந்திருக்கின்றமை ஆச்சரியப்பட மட்டும் அல்ல அதிசயிக்கவும் வைக்கின்றது. தலைமைத்துவம், முடிவெடுக்கும் தன்மை, ஆளுமை விருத்தி, கூட்டுச்செயற்பாடு, பங்கு, நிதி முகாமைத்துவம், நிதியியல், நிர்வாகம், அபிவிருத்தி, வியாபாராம், சுயமரியாதை, சுய கௌரவம் என எத்தனை குறள்கள் அன்றே ஒவ்வொன்றாக தித்திப்பாக தந்திருப்பது அபரிதமானதே.</div><div style="text-align: justify;">திருக்குறளில் பொதுவுடமை கருத்துக்கள் 60, 70களில் எடுத்து மேடைகளில் முழங்கப்பட்டன, அதை விட்டுவிடவோம். முன்னேறத்துடிக்கும் பக்கா முதலாளித்துவ வாதிகள் மட்டும் இந்தக்கோணத்தில் திருக்குறளைப்பார்ப்போமா?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><b>பருவத்தோடு ஒட்ட ஒழுகுதல் - திருவினைத்</b></div><div style="text-align: justify;"><b>தீராமை ஆர்க்கும் கயிறு (காலம் அறிதல் -02)</b></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஒருவரின் சாதுரியத்தால் இவர் சாதுரியர் என்று சொல்ல கேள்விப்பட்டுள்ளோம், இவர் ஒரு 'சதுரா'; என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோமா? தமிழில் சதுரர் என்ற பதம் உண்டு.</div><div style="text-align: justify;">ஒரு பிரச்சினை தோன்றிய இறந்தகாலம், இப்போதைய அதன் பரிணாமம், அதை நிவர்த்தி செய்வதால் எதிர்காலத்தில் வரும் நன்மைகள், ஒன்றும் செய்யாதுவிடின் ஏற்படும் நட்டங்கள் என நான்கு கோணங்களிலும், காலங்களை போட்டு சிந்தித்து தெளிவான முடிவெடுப்பவர்களே சதுரர்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பொருள் - காலத்துடன் பொருந்துமாறு முழுமையாக ஆராய்ந்து நடத்தல், ஓரிடத்தில் நில்லாத இயல்புகொண்ட செல்வத்தை, ஓரிடத்தில் இருந்து நீங்காமல் கட்டும் கயிறாகும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><b>உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து</b></div><div style="text-align: justify;"><b>வள்ளியம் எனும் செருக்கு (ஊக்கம் உடமை -08)</b></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஊக்கத்தால் ஒருவர் அபரிதமான முன்னேற்றத்தை அடைந்தாலும், அதே ஊக்கத்தால் முன்னேறும் முயற்சியில் அவர் தோல்விகண்டாலும், அவர்கள் அந்த வெற்றியையோ தோல்வியையோ பெரிதாக எண்ணி அதில் தம்மை இழந்துவிடக்கூடாது.</div><div style="text-align: justify;">அதேபோல எத்தனை சங்கடங்கள் வந்தாலும், இடையூறுகள் வந்தாலும் தம் இலட்சியங்களை அடைந்து உலகத்தை திரும்பிப்பாhக்க வைத்தவர்கள் அனைவருக்கும் வெற்றியின் இரகசியமாக பின்னால் நிற்பது அவர்களது ஊக்கமே. ஒருவேளை தோல்விகளை கண்டு அவர்கள் தங்கள் ஊக்கத்தை கைவிட்டு, விரக்தியில் நின்றிருந்தால் உலகம் இவர்களை பார்த்து பெருமைப்படும் சந்தாப்பம் இல்லாமற்போயிருக்கும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பொருள் - ஊக்கம் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் நாம் வல்லவர்கள் ஆகிவிட்டோம் என்று தனக்கு தான் திருப்தியுடன் பெருமைப்பட்டு மகிழ்வுறும் உச்ச மகிழ்ச்சிகளை அடைய மாட்டார்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><b>சீரினும் சீரல்ல செய்யாரே சிரோடு</b></div><div style="text-align: justify;"><b>பேராண்மை வேண்டு பவர் (குறள் -மானம் -02)</b></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வெற்றி வெற்றி வெற்றி... இந்த வெற்றி மட்மே குறிக்கோள், அந்த வெற்றியை எந்தவழிகளில் வேண்டமானாலும் அடைவோம் என்று நினைப்பவர்கள் சிலரை நாம் கண்டிருக்கின்றோம் அல்லவா? இவர்களுக்கு குறுக்கு வழியில் வெற்றி கிடைத்துவிடலாம், அனால் அந்த வெற்றி ஒருபோதும் நிரந்தரமானதாக இருக்காது. மற்றவர்கள் உளமார அதை பாராட்டவும் போவதில்லை. இந்த வெற்றிக்குப்பின்னால் அது கொடுக்கப்போகும் அவமானங்கள் கண்டிப்பாக இருக்கும். அதேவேளை வெற்றி நேரன வழியில், போராடிக்கிடைத்த வெற்றி, பல தோல்விகள், கஸ்டங்கள், நேர்மைகளின்மேல் கட்டப்பட்ட வெற்றி என்றால் அந்த வெற்றி அவர்களை விட்டு எப்போதும் போகாது. உண்மையான வெற்றியை தேடுபவர்கள் குறுக்கு வழிகளை நாடமாட்டார்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பொருள் - புகழ் அதனுடன் பெரும் தலைமை என்பவற்றை விரும்புவர்கள் புகழ், தேடும் வழியிலும்கூட குடிப்பெருமைக்கு ஒவ்வாத எந்தச்செயல்களையும் செய்யமாட்டார்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><b>கானமுயல் எய்த அம்பினில் யானை</b></div><div style="text-align: justify;"><b>பிழைத்தவேல் ஏந்தல் இனிது (படைச்செருக்கு -02)</b></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஒரு பெரிய இலட்சியத்திற்காக நேரியபாதையில், பல அர்பணிப்புகளுடனும், முறையான திட்டம், நேர்மையுடனும் உழைத்தும் அல்லது போராடியும் அந்த உழைப்பு வெற்றிபெறாதுவிட்டாலோ, அல்லது போராட்டம் தோற்றுவிட்டாலோ ஏளனமாக சிரிப்பவர்கள்தான் ஏளனமானவர்கள்.</div><div style="text-align: justify;">ஏனெனில் இலட்சியவாதிகள் ஒருபோதும் அற்ப விடயங்களுக்கு செவிசாய்ப்பதில்லை. அவர்களின் உன்னதமான உழைப்பு, தியாகம், போராட்டம் என்பன தோற்றாலும் அவர்கள் மேன்மையுற்றவர்களே. அற்பர்களுக்கு வேண்டுமானால் அது மகிழ்வை கொடுக்கலாம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பொருள் - காட்டில் ஓடும் முயலின்மீது பாய்ந்து அதை கொன்ற அம்பைவிட, வெட்ட வெளியில் நேருக்கு நேர்நின்று நேராக குறிவைத்து தவறிய ஈட்டி மிக மேலானது.</div><div style="text-align: justify;"><b><br /></b></div><div style="text-align: justify;"><b>'ஊளையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றித்</b></div><div style="text-align: justify;"><b>தாழாது உஞற்று பவர் (ஆய்வினை உடைமை -10)</b></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சில தோல்விகள் எம்மை சலிப்படையச்செய்யும் என்பது உண்மைதான். ஏனென்றால் பல தியாகங்களை புரிந்து, பல்வேறுபட்ட நேர்த்தியான திட்டங்களை வகுத்து, பலநேரத்தை செலவு செய்து, ஒன்றிப்புடன், அர்ப்பணிப்புடன் செய்யப்பட்ட செயல்கள்கூட சிலவேளைகளில் தோற்றுப்போகும். </div><div style="text-align: justify;">என்ன செய்வது தலைவதி அப்படி என்று பலர் சலித்திருப்பதை நாம் அனுபவங்களுடாக கண்டிருக்கின்றோம்.</div><div style="text-align: justify;">அதிலும் தோல்விகளில் விழிம்புத்தோல்வி அதாவது ஆங்கிலத்தில் <span style="font-size:14.0pt;line-height:115%; font-family:"Times New Roman","serif";mso-fareast-font-family:Calibri; mso-ansi-language:EN-GB;mso-fareast-language:EN-US;mso-bidi-language:AR-SA">“</span><span style="font-size:14.0pt;line-height:115%;font-family:"Calibri","sans-serif"; mso-ascii-theme-font:minor-latin;mso-fareast-font-family:Calibri;mso-hansi-theme-font: minor-latin;mso-bidi-theme-font:minor-latin;mso-ansi-language:EN-GB;mso-fareast-language: EN-US;mso-bidi-language:AR-SA">slip between cup and lip</span><span style="font-size:14.0pt;line-height:115%;font-family:"Times New Roman","serif"; mso-fareast-font-family:Calibri;mso-ansi-language:EN-GB;mso-fareast-language: EN-US;mso-bidi-language:AR-SA">”</span> வகை தோல்விகள் ஒருவனை அப்படியே சோர்வின் உச்சிக்கே கொண்டுசென்றுவிடும்.</div><div style="text-align: justify;">இருந்தபோதிலும் அந்த தோல்வியிலும் சோர்வுறாது சிலித்துக்கொண்டு மீண்டும் முயற்சியில் இறங்கிவிட்டவன், அப்படி ஒரு விதி இருந்தால் அதையும் மாற்றுபவன் ஆகிவிடுவான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பொருள் - சோர்வடையாது முயற்சியில் குறைவு இல்லாமல் தொடர்ந்தும் முயற்சி செய்பவன், வெற்றிக்கு இடையூறாக வரும் ஊழ்வினையினையும் ஒரு காலத்தில் வெற்றி பெறுவான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><b>ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை</b></div><div style="text-align: justify;"><b>ஊக்கம் அறிவுடை யார் - (தெரிந்து செயல்வகை -03)</b></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சிந்தனை முன்னோக்கியும், அறிவு பின்னோக்கியும் எப்போதும் செல்வதாக அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள். நம்மில் சிலருக்கு பின் முதுகு மட்டும்தான் கவலையினைத்தரும் ஏனெனில் நம்மால் அதைப்பார்க்கமுடியாது. இவர்கள் மின்மினிப்பூச்சிகளைப்போன்றவர்கள். மின் மினப்பூச்சிகளின் விளக்குகள் எப்போதும் அவற்றின் பின் பக்கமே இருக்கும்.</div><div style="text-align: justify;">ஒருவன் தன் தினசரிக்கடமைகளை ஆற்றும்போது அவனுக்கு நினைவாற்றல் மட்டும் இருந்தால்ப்போதும், ஆனால் முக்கிமான முடிவு ஒன்றை எடுக்கவேண்டும் என்னும்போது அனுபவங்கள் கை கொடுக்கலாம் ஆனால் அறிவு மட்டுமே பயன்கொடுக்கும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உதாரணமாக ஒன்றைப்பார்ப்போம் சிறு வியாபாரி ஒருவன் அன்றாடம் காச்சியாக இருந்து ஒரு தொகை பணத்தை சேர்த்து, பணத்தை வங்கியில் தன் குடும்ப அவசர, விசேசங்களுக்காக போட்டு வைத்திருந்தான். ஆனால் பத்திரிகையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் விற்கப்படுவதாக அவனது நண்பனின், இப்ப வாங்கினால், இன்னும் நாலுவருடத்தில் பங்கு பெரும் இலாபமென்னும் அரைகுறை கதையை நம்பி அந்தப்பணத்தில் நிறுவன பங்குகளை வாங்கினான். அவனது சேமிப்பு அத்தனையும் போனது, பங்குகள் வாங்கியதைவிட சரிந்தன.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பொருள் - பின் விளையும் ஒரு ஊதியத்தை கருத்தில்க்கொண்டு இப்போது கையில் இருக்கும் முதலை இழக்க காரணமான செயலை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><b>-தொடரும்....</b></div><div style="text-align: justify;"><br /></div>Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-80110489674042064772011-12-31T17:40:00.004+05:302011-12-31T17:57:45.671+05:30அடுத்த விநாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipEPx94fOj_GCKUUfSJzA5LgnPD8ITeS2tMpXNgmDSgHo0-6qhXwjdbcGehxjWZB9bKeiafCA36H9Ldy7B16fKOfGTL8EzbTxMWSt4T6ZV58QxwTZ9FVQqL_xqIUJP0kav06X5TAGB9dBm/s1600/year-end.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 291px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipEPx94fOj_GCKUUfSJzA5LgnPD8ITeS2tMpXNgmDSgHo0-6qhXwjdbcGehxjWZB9bKeiafCA36H9Ldy7B16fKOfGTL8EzbTxMWSt4T6ZV58QxwTZ9FVQqL_xqIUJP0kav06X5TAGB9dBm/s400/year-end.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5692264243458771986" /></a><br /><div style="text-align: justify;">இதோ இன்றுடன் எம் வாழ்வுத்தடங்களில் இன்னும் ஒரு ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெற்றுப்போகின்றது. மனிதன் ஒரு சமுகப்பிராணி என்பதை முழுமையாக நிரூபித்துக்காட்டுவது வருட இறுதிக்கணங்கள்தானோ என்று அப்பப்போ பெரும் சந்தேகங்கள் எழுந்துமறைவதுண்டு.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஒவ்வொரு ஆண்டுகளும் எமக்குப்பருவகாலங்கள்போல கொடுத்துவிட்டுப்போகும் அனுபவங்களும் வேறு வேறானவையே. ஓவ்வொரு ஆண்டின் இறுதி நாட்களிலும் ஒவ்வொருவருக்குள்ளும் இனம்புரியாது தொற்றிக்கொள்ளும், ஒரு சிறு சோகமும், அடுத்த புதுவருடத்தை வரவேற்கும் குதூகலமும் எமக்குச்சொல்லிக்கொள்ளும் உளவியல்ப்பாடங்களாகவும் இருக்கலாம். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நாம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதை நின்று நிதானித்து சற்று எம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும், சுயவிமர்சனம் செய்துகொள்ளவும், அடுத்த படியை எப்படி வைப்பது என்பதை தீர்மானிக்கவும் இந்த வருட இறுதிநாட்கள் சிறந்தவை என எல்லுனர்கள் வரையறுக்கின்றனர்.</div><div style="text-align: justify;">இந்தவருடம் உலகுக்கு உரக்கச்சொன்ன விடயங்கள், மக்கள் கிளர்ச்சிகள், ஆட்சியார்களுக்கு எதிரான போராட்டங்கள், ஒசாமா பின் லேடனின் மரணம், ஜப்பான் சுனாமி, என ஏராளம். அதேபோல ஒவ்வொருவரினதும் சுய வாழ்;கையிலும், சந்தோசங்கள், ஏற்றங்கள், இறக்கங்கள், இணைவுகள், இழப்புக்கள் என பல பல...</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நாம் திட்டமிட்டு வாழ்ந்துவந்தாலும், உலக ஓட்டம் எவ்வாறு நகரும் என்று கணித்தாலும், உண்மையில் அடுத்த நொடி எமக்கு வைத்திருக்கும் ஆச்சரியங்கள் புதிர்கள் ஏராளம்... ஏராளம்.... </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதோ வழமைபோலவே எமை நோக்கி வாசல்வரை வந்துவிட்டது 2012 என்ற ஆண்டு. (உலக அழிவு நிச்சயம் என்ற பீடிகையுடன் அதுவேறு)</div><div style="text-align: justify;">எதிர்வரும் ஆண்டு வாசகர்களான உங்களுக்கு வசந்தங்கள் மட்டுமே கொடுக்கட்டும், எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என இயற்கையினை பணிந்து அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><iframe width="459" height="344" src="http://www.youtube.com/embed/jqd6SdR0pdM?fs=1" frameborder="0" allowfullscreen=""></iframe></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஸியேஸ்....</div><div style="text-align: justify;">என்றும் அன்புடன்</div><div style="text-align: justify;"> உங்கள் <b>ஜனா</b></div><div style="text-align: justify;"><br /></div>Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-19316511039337105052011-12-15T18:00:00.002+05:302011-12-15T18:05:27.464+05:30உன்னாலும் முடியும் தம்பி! - தொடர்ச்சி<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYNYG6XcTqb2IF6UsEfdin4Jj21nRZjveStzHEssoKWxqccSFJPuLaNNw0ak8nGLcgYBmmIWvrZgdPmvCMxyyCtUX69ZgRHmPect5XO2aay0od6sX8a0KqHlgOm-fDd7r54rwESqtC3PYC/s1600/3D+man+with+money.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 347px; height: 346px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYNYG6XcTqb2IF6UsEfdin4Jj21nRZjveStzHEssoKWxqccSFJPuLaNNw0ak8nGLcgYBmmIWvrZgdPmvCMxyyCtUX69ZgRHmPect5XO2aay0od6sX8a0KqHlgOm-fDd7r54rwESqtC3PYC/s400/3D+man+with+money.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5686332498913497186" /></a><div style="text-align: justify;">ஓன்றை நிதானமாகக்கவனித்திருக்கின்றீர்களா? மழைகாலம் வரப்போகும் அறிகுறிகள் தெரிந்தவுடன் எறும்புக்கூட்டங்கள் விரைவாக தாம் வைத்திருந்த தமது உணவுக்கான பண்டங்களை தூக்கிக்கொண்டு தரையில் இருந்து மேல் இருக்கும் பகுதிகளுக்கு விரைவாக ஊர்ந்து சென்கொண்டிருக்கும்.</div><div style="text-align: justify;">அதேபோல தேனீ இருக்கின்றது அல்லவா, நாளாந்தம் பல இலட்சம் பூக்கள் பூக்கின்றது தானே நாளை தேன் கிடைக்காமலா போய்விடப்போகின்றது என்று அது ஒரு போதும் அலுத்து படுத்திருந்ததில்லை. மாறாக எத்தனையோ கிலோ மீற்றர் தாரம் பறந்து சென்று தேன் உண்டுவிட்டு, நாளைகளுக்கான தேனை தனது இருப்பிடத்திற்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.</div><div style="text-align: justify;">அதேபோலத்தான் வயல் வெளிகளில் வாழும் அகளான் என்ற எலி இனம், தன் வளைகளில் மூட்டைக்கணக்கான நெற்கதிர்களை சேர்த்துவைத்திருந்து விதைப்பு அற்ற காலங்கள், மழைக்காலங்களில் தான் சேமித்தவற்றை உண்டு உயிர்வாழ்கின்றது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இந்த எறும்பு, தேனீ. அகளான் என்று மூன்றறிவு. நான்கறிவு உயிரினங்களுக்கே நாளைகளுக்கான சேமிப்பு பற்றிய அறிவு மிகச்சரியாகத்தெரிகின்றது என்றால் </div><div style="text-align: justify;">எல்லாம் தெரிந்தவர்களான மனிதர்களான நாங்கள் எப்படி இருக்கவேண்டும்?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சில வங்கிகள் சேமிப்பு வாரம் என்று குறிப்பிட்ட ஒரு வாரத்தை அறிமுகப்படுத்தி சேமிப்பினை ஊக்கப்படுத்தி வருவதை கவனித்திருப்பீர்கள்.</div><div style="text-align: justify;">முக்கிமாக ஒன்றை கவனித்திருப்பீர்கள் என்றால் முதலாம் உலக நாடுகளில் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வங்கியில் வைத்திருக்க நீங்கள் தான் குறிப்பிட்டளவு பணத்தை செலுத்தவேண்டிய தன்மை காணப்படுகின்றது. ஆனால் நம் போன்ற மூன்றாம் உலக நாடுகளிலேயே எமது சேமிப்புக்கு வட்டியும் தந்து, மேலதிகமாக பரிசுக்குலுக்கல்களையும் தருகின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><b>திட்டம் 02 – பொற்சேமிப்பு</b></div><div style="text-align: justify;">1990 ஆம் ஆண்டு ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி என்ன என்பதையும் 21 ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்று அதே ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி எத்தனை மடங்காக உயர்ந்துள்ளது என்பதையும் நினைத்துப்பாருங்கள்.</div><div style="text-align: justify;">இன்னும் ஐந்து வருடங்களில் இன்றைய விலையில் குறைந்தது ஐந்து மடங்காவது தங்கத்தின் விலை உயர்வடையும் என்பது திண்ணம்.</div><div style="text-align: justify;">எனவே உங்கள் நாளை முன்னேற்றம் சேமிப்பு என்பதற்கான பொற்சேமிப்புத்திட்டத்தை சிறிதாக தொடங்குங்கள்.</div><div style="text-align: justify;">மாதாந்தம் அரை கிறாம் தங்கம்வீதம் வாங்க ஒரு மஸ்தீப்பு எடுத்துக்கொள்ளுங்கள். ஒருபோதும் இது கஸ்டம் என்று எழுந்தமானமாக நினைத்துவிடாதீர்கள். முயற்சிசெய்தவர்கள் பலர் வெற்றிபெற்றுள்ளார்கள்.</div><div style="text-align: justify;">மாதாந்தம் அரை கிராம் தங்கம் உங்கள் சேமிப்பு பெட்டகத்தினுள் சென்று கொண்டிருக்கட்டும். (வருமானம் குறைந்தவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு அரை கிராம் பவுண் வீதம் என வாங்கிக்கொள்ளலாம்) எப்படி வாங்குவது என்று நினைக்கவேண்டும் பிரபலமான நகைக்கடைகளில் ஒரு கிராம், அரைக்கிராம் டாலர்கள் விற்பனைக்கு வைத்திருக்கின்றார்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஒவ்வொரு மழைத்துழிகளும்தான் பெருவெள்ளமாக மாறிவிடுவதுபோல மாதாந்த உங்கள் தங்கச்சேமிப்பு நாளடைவில் தங்கப்புதையலாகவே உங்களுக்கு காட்சிதரும்.</div><div style="text-align: justify;">நாளை எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளின் திருமணவேளைகளில் இது பாரிய ஒரு உதவியாக உங்களுக்கு நிற்சயமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.</div><div style="text-align: justify;">சுமார் ஒரு வருடம் கஸ்டப்பட்டு சேர்த்தீர்களே அனால் அதன் பின்னர் அந்த பெட்டகம் தங்கத்தால் நிறைவேண்டும் என்று நீங்களே முண்டியடித்து ஒவ்வொருமாதமும் ஒரு கடமையாக ஒவ்வொரு அரை கிராமையும் போட தொடங்கிவிடுவீர்கள். குறிப்பிட்டளவு டாலர்கள் சேர்ந்தவுடன், சிறப்பான வங்கி ஒன்றின் சிறு லொக்கரை வாடகைக்கு பெற்று பாதுகாப்பு நிமித்தம் மாதாந்தம் அதற்குள் உங்கள் டாலர்களை போட்டுவரலாம். </div><div style="text-align: justify;">புதையல் தங்ககாசுகள் என்றெல்லாம் கற்பனை கதைகளில் வரலாம், அனால் இங்கே உங்களுக்கான புதையலை நீங்களே தேடிக்கொள்ளுங்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><b>திட்டம் 03 – காப்புறுதி</b></div><div style="text-align: justify;">எங்கள் சேமிப்பு, மேம்பாடு, முயற்சிகள் எல்லாமே நாளைய என்ற ஒன்றுக்காகவே, அனால் துரதிஸ்டவசமாக நாளை என்ற ஒன்று எமது கைகளில் இல்லை. </div><div style="text-align: justify;">ஆனால் எம்மில் பெரும்பாலானோருக்கு காப்புறுதி என்றவுடன், இறந்தவுடன் காசு என்ற எண்ணமே எற்படும் அதில் தவறும் பெரிய அளவில் இல்லை. ஆனால் மறு பக்கத்தில் பார்க்கப்போனால் காப்புறுதியே ஒருவரின் நின்மதியான அதேநேரம், பாதுகாப்பான முதலீடாகவும் இருக்கின்றது.</div><div style="text-align: justify;">ஏன் என்றால் குறிப்பிட்ட ஒரு தொகைக்காக குறிப்பிட்ட காலத்திற்கு நாம் எமக்கான ஆயுள் காப்புறுதி ஒன்றை பெற விளைகின்றோம், ஒப்பந்தகாலம் முடிந்தால் அதன் முதிர்வையும் கட்டிய பணத்திற்கான போஸையும் பெறுகின்றோம் அனால் திடீர் என்று எமக்கு ஒன்று நேர்ந்தால் எம் குடும்பத்தாரின் கதி! என்ற அச்சத்திற்கு ஆறுதலான முதலீடே காப்புறுதி.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால் இன்று காப்புறுதியில் பல புதிய புதிய திட்டங்கள் ஒவ்வொருவருக்கும் எற்றவாறாக வந்துள்ளமை சிறப்பான ஒரு அம்சமாகும்.</div><div style="text-align: justify;">அத்துடன் முக்கியமான ஒருவிடயம் காப்புறுதிக்கு அரசாங்கத்தில் வரி விலக்கு இருப்பதை மறந்துவிடக்கூடாது. </div><div style="text-align: justify;">இதேவேளை சாதாரணமாக நாம் வைத்தருக்கும் வாகனத்திற்கே காப்புறுதி என்பது மிக முக்கிமானதாக்கப்பட்டிருக்கின்றது, ஆனால் அதை ஓட்டும் நாங்கள் எங்களுக்கு ஒரு காப்புறுதியை பெற்றுள்ளோமா என்று நினைக்கவேண்டும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">தோழில் செய்யும் ஒருவரும் குறைந்தது ஒரு மில்லியன் கவர் தரும் காப்புறுதியை பெற்றிருக்கவேண்டியுள்ளது இன்றைய காலத்தில்.</div><div style="text-align: justify;">காப்புறுதியை பெறும்போது முக்கிமாக செய்யவேண்டிய ஒன்று காப்புறுதிப்பணம் கட்டப்படாமல் அது செயலிழக்க செய்வதை தவிர்க்க, எம் சம்பளத்தில் இருந்து தானாக அந்த கட்டுப்பணம் செத்தும் முறையினையோ, அல்லது வங்கி நிலையியல் கூற்றின் படியோ காப்புறுதிப்பணம் செலுத்துவதே ஆகும். </div><div style="text-align: justify;">இதன் மூலம் தேவையில்லாத அசௌகரியங்களை முழுமையாகத் தவிர்த்துக்கொள்ளமுடியும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><b>திட்டம் 04 – கடன்களை தவிர்த்தல்.</b></div><div style="text-align: justify;">'கடன் கொடுப்பதும் தப்பு, கடன் வாங்குவதும் தப்பு' என்று கேள்விப்பட்டிருக்கின்றோம் அல்லவா. ஆனால் ஒருவகையில் இதுவே சிறப்பான ஒரு தத்துவமாகவும் இருக்கின்றது. இராமாணயத்திலே கூட போரிலே தோற்ற இராவணனின் நிலையினை பாட எத்தனித்த கம்பர், 'கடன் பட்டார் நெஞ்சம்போல கலங்கி நின்றான் இலங்கை வேந்தன்' என்று குறிப்பிட்டுள்ளதை நினைத்துப்பாருங்கள். கடன் என்பது ஒரு திடீர் நிவாரணியாகத்தெரியலாம் ஆனால் அதுவே பாரிய சுமையாகவும், முன்னேற்றத்தடையாகவும் இருந்துவிடுகின்றது.</div><div style="text-align: justify;">அதனால் கூடுமானவரையில் கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்த்துக்கொள்ளவேண்டும். கட்டாய சேமிப்பு பழக்கம் உங்களுக்கு இருந்தால் யாரிடமும் கடன் பெறவேண்டிய தேவை உங்களுக்க இல்லை என்பதுடன் யாருக்கும் கடன் கொடுக்கவும் முடியாது என்பதவே உண்மை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சரி....... இந்த நான்கு திட்டத்தையும் கடைப்பிடித்துப்பாருங்கள், சகல வெற்றிகளும் அடுத்தடுத்து உங்கள் கைகளை வந்தடைவது சத்தியம் என்று சொல்கின்றேன். இந்த திட்டங்களை இதை படித்த யாரோ ஒருவராவது கடைப்பிடித்து வாழ்வில் வெற்றிபெற்றால் முதலில் சந்தோசப்படுவது நானாகத்தான் இருப்பேன்.</div><div style="text-align: justify;">முற்கூட்டிய வாழ்த்துக்கள் அனைவருக்கும்...</div><div style="text-align: justify;"><br /></div>Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com3