Monday, March 15, 2010

யாழிலிருந்து..மீண்டும் பதிவுகளை தொடரும் உங்கள் நண்பன்…


ஒரு நாள் பதிவு எதனையும் இடாது இருந்தாலே மனதுக்குள் ஏதோ உறுத்துவதுபோல இருக்கும்.. கொழும்பு, சென்னை போன்ற இடங்களில் வேலைப்பழுக்கள் மற்றும் கற்றல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் இடையிலும் கிடைக்கும் நேரத்திற்குள் பதிவுலக நண்பர்கள், பதிவுகள் மூலம் கிடைத்த நண்பர்கள், நலன் விரும்பிகள் என அத்தனை நண்பர்கள், ஆதரவாளர்களின் ஒத்துளைப்புடன் பதிவுகளை தொடர முடிந்தது. இருந்தபோதிலும்…கடந்த இரு மாத காலமாக பதிவுகளின் பக்கம் மட்டும் அல்ல, கணினியின் முன்னாள் இருப்பதற்கே நேரம் கிடைக்காமற்போனது என்னையும் மீறிய செயலாகிவிட்டது.

இருந்தபோதிலும், நிரந்தரமான, அதேவேளை ஒரு கௌரவமான தொழில் ஒன்றுடன் சொந்த மண்ணிலேயே (யாழ்ப்பாணம்) பணியாற்றி வாழும் பாக்கியம் தற்போது எனக்கு கிடைத்துள்ளமையினை பதிவுலக நண்பர்கள் அனைவருடனும் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இனிவரும் காலங்களிலும், எனக்கு கிடைத்த புலம்பெயர் நாட்டு பதிவுக நண்பர்கள், தமிழக, குறிப்பாக சென்னை பதிவுலக நண்பர்கள் மற்றும் என் சக இலங்கைப்பதிவர்கள் ஆகியோருடன் ஒன்றாக கைகோத்து பதிவுலத்தில் மீண்டும் புதுவித உத்வேகத்துடன் வலம் வருவேன் என்ற நம்பிக்கை மனதுக்குள் ஆணித்தரமானதாக உள்ளது.
அடடா..நண்பர்களே..எத்தனை ஞாயிற்றுநக்கிழமை ஹொக்ரெயில்கள் இன்னும் பென்டிங்கில் உள்ளது… கவலைப்படாதீர்கள்.. நிரம்ப நிரம்ப ஊற்றிக்கொடுக்க இப்போ நான் தயார்…

ஸியேஸ்……

--வித் ஜனா

12 comments:

தங்க முகுந்தன் said...

வாழ்த்துக்கள்! விரைவில் நானும் வருவேன்! சந்திப்போமா?

அடலேறு said...

வாங்க ஜனா, வாழ்த்துக்கள்

Senthini said...

வாழ்த்துக்கள் விரிவுரையாளர் அவர்களே...தொடரட்டும் உங்கள் பணி.

சயந்தன் said...

ஐனா அண்ணா வழ்த்துக்கள்.

Beski said...

வாழ்த்துக்கள்.
:)

Jana said...

///தங்க முகுந்தன் said...
வாழ்த்துக்கள்! விரைவில் நானும் வருவேன்! சந்திப்போமா?
///

நன்றி முகுந்தன் அண்ணா.. வாங்கோ.. யாழ்ப்பாணம் வர வேற்கின்றது...

Jana said...

//வாங்க ஜனா, வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா..அடலேறு.. உங்களை மறப்பேனாஎன்ன? எங்கு சென்றாலும் உங்கள் பசுமையான நினைவுகள் நெஞ்சில் இருக்கும். சொன்னதுபோல விரைவில் இலங்கை மண்ணில் சந்திப்போம்.

Jana said...

///Senthini said...
வாழ்த்துக்கள் விரிவுரையாளர் அவர்களே...தொடரட்டும் உங்கள் பணி.///

நன்றி சேந்தினி. எப்போது இலங்கை வருவதாக உத்தேசம்???

Jana said...

// சயந்தன் said...
ஐனா அண்ணா வழ்த்துக்கள்.//

நன்றி தம்பி சயந்தன். தங்கள் பதிவுகளையும் தொடருங்கள்..தொடர்ந்து சல சலக்கட்டும் நதிவழி...

Jana said...

//அதி பிரதாபன் said...
வாழ்த்துக்கள்.//

நன்றி அதி பிரதாபன்..
இல்லறம் எப்படி போகின்றது. மன்னிக்கவும் தங்கள் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.

Subankan said...

தொடருமா? எங்க காணம்

Subankan said...

தொடருமா? எங்க காணம்

LinkWithin

Related Posts with Thumbnails