Thursday, February 9, 2012

அவன்... அவள்... அது...



அவன்...
தொலைவாகிப்போன தூர ங்களும், ஆர்முடுகலான உணர்வுகளும் அப்பப்போ சுவாசத்தை ரணமாக்கிக்கொண்டுதான் இருக்கின்றன. வறண்டுபோன உதடுகளில் இடைக்கிடை எச்சில் தொடும் நாவின் இதம்போல சில நினைவுகள்.
கடந்தகாலங்கள், கசப்பானவை, அவையே சிலவேளைகளில் இனிய நினைவானவை, சில சமயம் ஏக்கமானவை ஏன் சில சமயங்கள் தித்திப்பானவை, இதயம் நாறிப்போகும் அளவுக்கு சில சமயம் அருவருப்பானவைகளும் கூடத்தான்.

எத்தனை சித்தார்த்தங்கள் கற்று தெளிந்துநின்றாலும், ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை புதிதாக சில சித்தார்ந்தங்களை போதித்துப்போவதையும் கவனிக்கத்தவறுவதில்லை. இப்போதெல்லாம் நிகழ்வுகளை கண்டு ஞானிகளின் மௌப்புன்னகையின் அர்த்தங்கள் புரிகின்றன அதே மௌனப்புன்னகையூடாக.

காலந்தின்ற எச்சமாகவே வந்துவிழுந்தேன் பூமியிலே, பஞ்சபூதம் தந்த உடல் இதனை அவ்வாறே அழிக்கின்றேன், நிலத்திற்காகவும், காற்றுக்காகவும், உதட்டில் தீ கொழுத்தி, வயிறுமுழுவதும் மது என்னும் நீர் நிரப்பி வான் பார்த்து நிற்கின்றேன்.

கண்முன்னே ஏராளமான ஞாபகங்கள். தன்னிலை மறந்து முதன்மை மறந்து இப்போதெல்லாம் இவன் அவனாகிப்போனான். நிற்சயமாக அவள் நினைவுகளுடன்.

அவள்...
என்னை மயக்கி வேற்றான் கையில் ஏறிய தாலி என் கழுத்தில், யுகமுடிவில் வருமென்றாலும், விழித்த நிமிடம், அறுத்தெறிந்துவிட்டு, மறுநிமிடம் உன் மடிவந்து சேர்வேன் எனக் கவி எழுதியவள் இவள்தான்.
சோன்னாங்கையா... இளமைக்காதல் 30 நாள் என்று அனுபவம் முதிர்ந்தவர்கள் சொன்னாங்கையா! மோகமயக்கதில் அகிலமே அணுவாகும் முனிவர்க்கே என்றாங்க, அப்படி என்றால் மடப்பெண் நான் மட்டும் எம்மாந்திரம்.

காதலிக்கும்போது இருக்கும் வீரமும், பற்றுக்களும் இப்போது சில வேளை பைத்தியமாகத்தோன்றுகின்றது. பெண்ணிவளால் என்ன செய்யமுடியும் என பேதைக்கதை சொல்ல நான் தயாரில்லை.
காதலித்தவன் ஒருவன் கரம்பிடிப்பது இன்னொருவன், என்ற எழுதாமறையில் நானும் குடமுழுக்காட்டப்பட்டது இப்போதும் எனக்கு ஆச்சரியமானது என நினைக்கும் பெண்ணாகத்தான் இப்போதும் அப்போதும்.

முறந்துவிடு மன்னித்துவிடு என்று உன்னிடம் கூற மறந்துவிட்டவள் நான் அல்ல.. அப்படி என்றும் உன்னிடம் கேட்காத கர்வக்காரிதான் நான்.
'நல்லாயிரு என்றுமட்டும் எப்போதும் உன்னைக்கேட்டுக்கொள்கின்றேன் நீயாவது!'
முதற்காதல் மறக்காதாம் எத்தனையோ சினிமாவின் டயலக் அது என்று கல்யாணம்முதல் இதயத்தை இறுக்கிப்பார்த்தேன். இறுதியில் என்னை சினிமா டயலாக்குகள் வென்றுவிட்டது குற்ற உணர்வுதான்.
இங்கே இவளாகவே வாழ்ந்திறக்கத்துடிக்கும் அவள்.

பெருமிடியெனச்சிரிக்கின்றது, திடீர் என அழுகின்றது, மௌனமாகப்புன்னகைக்க நினைத்து தோற்றுப்போய் கதறுகின்றது.
வயிறு புரட்டி வாந்தியெடுத்துவிட வேண்டும் என்றாலும், அவன். அவளின் வசனங்கள் கேட்டு, இறந்தே விடுவதென்று முடிவுகட்டுகின்றது

காதல் என்ற

அது.

3 comments:

கோவை நேரம் said...

அருமை .....அவன் அவள் அது///

Thava said...

சிறப்பான பதிவு..சகோ..நன்றி..அருமை.
சைக்கோ திரை விமர்சனம்

sinmajan said...

பிடித்திருக்கிறது ஜனா அண்ணா :-)

LinkWithin

Related Posts with Thumbnails