Tuesday, May 24, 2011

ஹொக்ரெயில் -24.05.2011


ரஜினிக்கு நடந்தது என்ன?
நாளாந்தம் ரஜினி பற்றிய தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அவை ஒன்றுமே ரஜினி ரசிகர்களையோ, அல்லது சாதாரண தமிழ் மக்களையோ திருப்திப்படுத்துவனவாக இல்லை. ஏனோதானோ என்ற நிலையில் வரும் அறிக்கைகளால் பெரும்பாலான மக்கள் இந்த விடையத்தில் பெரும் குழப்பத்துடனேயே இருக்கின்றர்.
தமிழர்கள் மத்தியில் ரஜினியின் தாக்கம், அவரது செல்வாக்கு என்பன உச்சத்தில் என்றும் இருப்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதே உண்மை.
ஆரம்பத்தில் ரஜினி பற்றிய செய்திகளை வதந்திகள் என்றே மக்கள் கருதினார்கள், பின்னர் வந்த செய்திகள்தான், அவரது இரசிகர்களை கவலை கொள்ளச்செய்தது.

எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்கும் ரஜினி இறுதியாக “எந்திரன்” மூலம் விஸ்வரூபம் எடுத்திருந்தார். அகில இந்தியா ரீதியில் என்றில்லாமல் உலக ரீதியில் ரஜினியின் மீது பல கண்ணகள் பட்டன.
இந்த வேளையில் அடுத்த “ராணா” திரைப்படத்திலும் உற்சாகமாக நடித்துக்கொண்டிருந்த ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு என்பது உண்மையில் பேரதிர்ச்சியான ஒன்றுதான்.

பிரபலங்களின் பிரார்த்தனைகள், அரசியல்வாதிகளின் நலம்பெறவாழ்த்துக்கள் என்பன ரஜினியின் உடல் நலக்குறைவை பெரிய அளவுக்கு சந்தேகம் கொள்ள வைக்கின்றது. எனினும் அவர் நலமாக இருக்கின்றார் என்று தொடர்ந்து வரும் செய்திகளும், இறுதியாக வெளியான புகைப்படங்களும் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கின்றன.
பலருக்கு ஒரு உதாரணபுருஸராக, உயர்ந்த இடத்தில் இருந்தும் தாழ்வுக்கு உதாரணமாக இருக்கும் உத்தமான அந்த மனிதர் இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டும் என்பதே அனைவரது அபிலாசைகளும்.
கண்டிப்பாக நம்ம சூப்பர் ஸ்ரார் விரைவில் மீண்டும் பட்டையை கிளப்புவார்.

யாழ்ப்பாண இந்து மக்களை திகிலடையச்செய்துள்ள சுவாமி சிலைத் திருட்டுக்கள்.
இப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளை எடுத்துக்கொண்டால் அதில் ஒரு வழமையான செய்தியாக ஏதாவது ஒரு கோவிலில் சுவாமி சிலை களவாடப்பட்டிருக்கும் செய்தி வந்துகொண்டிருக்கின்றது.
ஒரு நாளுக்கு குறைந்தது இரண்டு கோவில்களில் சுவாமி சிலைகள் களவாடப்பட்டிருக்கும்.
அண்மையில் திகிலூட்டும் இந்த புதுமுறைத்திருட்டுக்களால் இப்போது கோவில் தர்மகத்தாக்கள் உசாரடைந்து காவலாளிகளை நியமித்து வருவதாக அறியமுடிகின்றது.
இருந்தபோதிலும், சுவாமி சிலைகளை குறிவைத்து களவுகளை தொடரும் ஒரு கூட்டத்தின் நோக்கம் என்ன? இந்த சிலைகளால் அவர்களுக்கு உண்டாகும் இலாபம் என்ன என்பது பெரும் மர்மமாகவே உள்ளது.
கடந்த 3 மாதங்களாக இந்த தொடர் திருட்டு நடவடிக்கைகள் இடம்பெற்றுவந்தாலும்கூட, யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்து மா சபைகள், இந்து ஒன்றியங்கள், சன்னிதானங்கள், அதிகாரமுள்ளவர்கள் இந்த விடையத்தில் வாயடைத்தப்போய் உள்ளமையும் பெரும் அச்சரியமாகவே உள்ளது.

புத்தர் சிலைகள் வருகுது என்று கத்துபவர்கள், ஊர்களில் இருக்கும் பிள்ளையார் சிலைகள் களவாடப்படுவதை பற்றி கதைக்கின்றார்கள் இல்லை.
எது எப்படியோ இந்த திருட்டுக்கள் பற்றி மக்கள் மத்தியில் பலத்த ஊகங்கள் நிலவுகின்றன. அதேவேளை எவரும் எந்த நடவடிக்கையினையும் எடுக்கப்போவதில்லை என்பதையும் புரிந்துகொண்ட மக்களும், தர்மகத்தா சபைகளும், தங்கள் தங்கள் கோவில்களின் பாதுகாப்பினை தாங்களே கவனிக்க ஆரம்பித்துள்ளமை நல்ல விடையம்தான்.
கொஞ்சம் அலேட்டாக இல்லை என்றால், பிள்ளையாரை மட்டும் இல்லை நம்மையும் தூக்கிட்டு போயிடுவாங்க!!

இன்றைய காட்சி..

இந்த வார வாசிப்பு
அதிகாலையின் அமைதியில்.. சப்பா..ஒரு யுத்தகளத்தின் அருகில் இருந்து உன்னிப்பாக அந்த குறிப்பிட்ட குழுவுடனேயே இருந்து அவர்களின் வெற்றிகளில் மகிழ்ச்சி கொண்டும், ஒவ்வொருவரின் மரணங்களிலும், துடித்தும், இறுதிவரை நெஞ்சம் பதைபதைக்க அவர்களின் வெற்றிக்காக பிரார்த்தித்துக்கொண்டே படிக்கத்தூண்டும் ஒரு அற்புதமான படைப்பு இந்த அதிகாலையின் அமைதியில்.
அட..இந்த அற்புதமான படைப்பினை இத்தனை நாள் எட்டாமல் இருந்தேனே என்று மனது ஏங்குகின்றது.
கண்டிப்பாக முழுமையாக இதுபற்றி ஒரு நீண்ட பதிவு போட்டே ஆகவேண்டும்.
ப்ரீஸ்வஷிலீயின் எழுத்துக்கள் பிரமிக்கவைக்கின்றது.
ரஷ்ய – ஜெர்மன் எல்லைகளில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக்கொண்ட கதை இது. ரஷ்ய எல்லைகளுடாக ஊடுருவி கேடுவிளைவிக்க எத்தனிக்கும் ஜெர்மன் படைகளுடன் மோதும் ஒரு பிரிவு ரஷ்ய படையினரின் கதைதான் இது. பெண்கள் குழுவையும் படையில் கொண்ட ரஷ்ய படைத்தலைவன் வஸ்கோவ் இறுதிவரை நெஞ்சில் நிற்கின்றான்.
வாசிப்பில் பிரமிப்பை தேடுபவர்கள் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய ஒரு புத்தகம்.
(வாசிக்கும்போது கொஞ்சம் நம்ம பேராண்மை படமும் நினைவுக்கு வந்து போகுது)


மியூசிக் கபே

இன்றைய புகைப்படம்.
இந்த புகைப்படத்தில் சடலமாக இருக்கும் நபர் யார்? கெட்டிக்காரர்கள் பின்னூட்டுங்கள். சென்றமுறை புகைப்படத்தை கண்டுபிடித்த அகுலனுக்கு பாராட்டுக்கள்.

ஜோக் பொக்ஸ்..
இந்த பகுதிக்கு என் இனிய நண்பர் ஒருவரின் அனுபவத்தையே தருகின்றேன்.
கொழும்பில் ஒரு இடத்தில் 90களின் ஆரம்பங்களில் நண்பர்கள் ஒரு வீடொன்றை எடுத்து தங்கிருந்திருக்கின்றார்கள். அந்த வேளையில் இரவு வேளைகளில் யாரும் அறைகளில் படுத்துறங்குவதில்லையாம். எல்லோரும் ஹோலிலேயே பாயை போட்டுவிட்டு உறங்கிவிடுவது வழக்கமாமாம்.
ஒரு நாள் இரவு எல்லோரும் படுத்திருக்கவே நண்பர் அங்கிருந்த சோபா ஒன்றில் படுத்திருக்கையில், நள்ளிரவு தாண்டிய நேரம் தன் முகத்தின் முன்னால் ஒரு வெளிச்சம் வருவதுபோல உர்ந்து கண்ணை லேசாக வழித்து பார்த்திரக்கின்றார்,

எதிரே இருந்த அறையில் இருந்து அவரது கண்ணுக்கு நேரே ஒளி ஒன்று தென்பட்டிருக்கின்றது உண்மையிலேயே பயந்துபோய்விட்ட அவர், மெதுவாக எழ முயன்றிருக்கின்றார், ஆனால் அவர் எழும் நேரம் திடீர் என்று அந்த ஒளி மறைந்திருக்கின்றது. மிகவும் பயந்துபோன அவர், மற்றவர்களை எழுப்ப முயற்சித்து பின்னர், சரி படுப்போம் என்று படுத்திருக்கின்றார், அந்தநேரம் மீண்டும் அதே ஒளி தென்பட்டிருக்கின்றது. திடீர் என்று எழுந்திருக்கின்றார், ஒழி மறைந்துவிட்டிருக்கின்றது.
இப்படியே தொடர்ந்து பல தடவைகள் நடக்கவே.
நண்பர்களை அழைத்திருக்கின்றார், யாருமே எழுவதாக இல்லை, அருகில் ஒரு கட்டை ஒன்றையும் எடுத்துக்கொண்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த அறைக்குள் சென்று பார்த்திருக்கின்றார் நண்பர்.
உண்மையில் யாரோ ஒரு வல்லை படுக்கமுன்னர் அயன் பண்ணிவிட்டு, அயன் பொக்ஸை ஆவ் பண்ணாமல் போய் படுத்திருக்கின்றது. அந்த ஸ்திரி பெட்டியின் வெளிச்சமே அது என்று தெரிந்து அசடு வழிந்திருக்கின்றார் அவர்.

38 comments:

Unknown said...

//புத்தர் சிலைகள் வருகுது என்று கத்துபவர்கள், ஊர்களில் இருக்கும் பிள்ளையார் சிலைகள் களவாடப்படுவதை பற்றி கதைக்கின்றார்கள் இல்லை.//
கதைச்சு???
ஏன் நல்லா இருக்கிறது பிடிக்கலையோ ??ஹிஹி

Unknown said...

//கண்டிப்பாக முழுமையாக இதுபற்றி ஒரு நீண்ட பதிவு போட்டே ஆகவேண்டும்.//
நிச்சயமாக...

Unknown said...

//உண்மையில் யாரோ ஒரு வல்லை படுக்கமுன்னர் அயன் பண்ணிவிட்டு, அயன் பொக்ஸை ஆவ் பண்ணாமல் போய் படுத்திருக்கின்றது//
ஹிஹி அதென்ன பாஸ் வல்லை??

Unknown said...

சூபர்ய்யா!

Anonymous said...

சிலை திருடுவதால் என்ன லாபம் முன்னர் எல்லாம் சிலையை புரட்டி கீழே இருக்கும் தகடுகளை தானே அபேஸ் பண்ணுவார்கள்... ம்ம்ம் கடவுளும் கண்ணை மூடி பல காலமாச்சே

balavasakan said...

ரஜனி - வயசு போனா வருத்தம் வரத்தான் செய்யும் சூப்பர் ஸடார்னா விதிவிலக்கா என்ன ?

சிலை திருட்டு- அவை எல்லாம் தங்கச்சிலையா #டவுட்டு

குறும்படம் பாக்கேல்ல பாட்டு கேக்கல்ல;)

அந்த படம் இப்பதான் நீங்க சொன்னீங்கள் !

ஜோக் ஹி..ஹி.. சிரிச்சாச்சு !! !!

shanmugavel said...

நன்று ஜனா,புத்தகம் பற்றி மேலும் தகவல் தரவும்.ஒலி சிறப்பு

தமிழ் உதயம் said...

நம் கண்களுக்கு ரஜினி இன்னும் அநியாயத்தை தட்டி கேட்கும் வீராவேசமான இளைஞர் தான். ஆனால் உண்மை அது வல்ல. ஆனால் நாம் எதிர்பார்க்கிறோம் - ரஜினியை தளபதியாக, மன்னனாக. பிராதிப்போம் வருவார் ராணாவாக.

Unknown said...

அது கழுத்து வெட்டி கந்தன்தானே??இல்லை பாண் பராக் ரவியா??
ஹிஹி seriously i dont know boss!!

கார்த்தி said...

ஆம் ரஜினியின் தொழில்பக்தியும் உழைப்பும் போற்றுதற்குரியது!!!
சுவாமி திருடி கொண்டு போய் வெளிநாடுகளில் விற்றால் பலத்த லாபம் சம்பாதிக்கலாம். இந்த சிற்பங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி!!!
அந்த படம் யாரு சார்?
ஜோக் சுப்பர்

உணவு உலகம் said...

கவலை கொள்ளும் விஷயங்கள் நிறைய இருக்கு உங்கள் பதிவில்.

Unknown said...

கலக்கல்ஸ்!
காலங்காலமா கொழும்பில எதையாவது பார்த்து பயப்பிடுவது தொடருதோ பாஸ்! நாங்க இருந்த வீட்ல பேய்க்கு மிஸ்ட் கோல் கொடுத்தவன் எல்லாம் இருந்தாங்க!

நிரூபன் said...

ரஜினிக்கு நடந்தது என்ன?//

ரஜினி தொடர்ந்தும் நலமோடு இருப்பார்ன் எனும் நம்பிக்கையோடு இருப்போம் சகோ.

//
புத்தர் சிலைகள் வருகுது என்று கத்துபவர்கள், ஊர்களில் இருக்கும் பிள்ளையார் சிலைகள் களவாடப்படுவதை பற்றி கதைக்கின்றார்கள் இல்லை.//

மாப்பு, இதிலை உண்மையைச் சொல்லுறதெண்டால் வேலியே பயிரை மேயுது, அல்லது வேலிகளே திருட்டுக்கும் சாட்சிகளாகவும், துணையாகவும் இருக்கிறது.

நிரூபன் said...

ஒலி குறும்படம், ஏற்கனவே பார்த்து விட்டேன். ஒலியின் முக்கியத்துவத்தையும், பார்வைகளற்ற ஒரு பெண்ணின் தேடலை- ஒலிக் குறிப்பை வைத்து அவளது பாதங்கள் நகர்வதனூடாக விளக்கி நிற்கிறது.

நிரூபன் said...

அதிகாலையின் அமைதியில்.. சப்பா..ஒரு யுத்தகளத்தின் அருகில் இருந்து உன்னிப்பாக அந்த குறிப்பிட்ட குழுவுடனேயே இருந்து அவர்களின் வெற்றிகளில் மகிழ்ச்சி கொண்டும், ஒவ்வொருவரின் மரணங்களிலும், துடித்தும், இறுதிவரை நெஞ்சம் பதைபதைக்க அவர்களின் வெற்றிக்காக பிரார்த்தித்துக்கொண்டே படிக்கத்தூண்டும் ஒரு அற்புதமான படைப்பு இந்த அதிகாலையின் அமைதியில்.//

அண்ணாச்சி, இதில் ஏதாச்சும் தொக்கி நிற்குதா?

நிரூபன் said...

வாசிப்பில் பிரமிப்பை தேடுபவர்கள் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய ஒரு புத்தகம்.
(வாசிக்கும்போது கொஞ்சம் நம்ம பேராண்மை படமும் நினைவுக்கு வந்து போகுது//

எங்கே ஐயா இதெல்லாம் தேடி எடுக்கிறீங்கள்?
யாழ் நூலகத்திலா. நமக்குத் தான் இதற்கெல்லாம் நேரம் இல்லையே பாஸ்.

நிரூபன் said...

கிளிப் பேச்சுக் கேட்கவா- அன்பே வா அருகிலே...
மனதை மென்மையான இசையால் கட்டிப் போடுகிறது. பகிர்விற்கு நன்றிகள் சகோ.

நிரூபன் said...

இந்த புகைப்படத்தில் சடலமாக இருக்கும் நபர் யார்? கெட்டிக்காரர்கள் பின்னூட்டுங்கள். சென்றமுறை புகைப்படத்தை கண்டுபிடித்த அகுலனுக்கு பாராட்டுக்கள்.//

அவ்...போன முறை வாயைக் குடுத்து நான் வாங்கிக் கட்டிக் கொண்டேனா.
நான் பிழையாகச் சொல்லி விட்டேன். அவ்...

நிரூபன் said...

வல்லை படுக்கமுன்னர் அயன் பண்ணிவிட்டு, அயன் பொக்ஸை ஆவ் பண்ணாமல் போய் படுத்திருக்கின்றது. //

இதே போலத் தான் கம்பஸிலை முன் பொரு காலத்தில், ஒருத்தன் சிகரட்டை நூர்க்காமல் பத்திப் போட்டு, வைச்சிட்டன், துணி புகையத் தொடங்கத் தான் தீ அணைச்சம் என்றால் பாருங்களேன், அவ்...

நிரூபன் said...

இந்த வாரம், ஜோக்ஸ் பொக்ஸில் போதை கொஞ்சம் கம்மி, மற்றும் படி அனைத்து விடயங்களும் செம ஹாட்.

Ramesh said...

மீண்டும் அசத்தல். பல தகவல்கள். மகிழ்ச்சி...
தொடர்க..

Jana said...

@ மைந்தன் சிவா
அது சரி மைந்தன்.. உண்மைதான்.
அப்புறம் நெசமாலேயே "வல்லை" என்பதுக்கு அர்த்தம் தெரியாதா??

Jana said...

@விக்கி உலகம்
ஆஹா..நன்றியையா..

Jana said...

@ கந்தசாமி.
கந்தசாமி என்று பேரை வைத்துக்கொண்டு அப்படி கடவுளைப்பேசக்கூடாது. கடவுளும் கந்தைசாமியும் படித்ததில்லை புதுமைப்பித்தனின்.

Jana said...

@Balavasakan
வரவேண்டும் மருத்துவர் ஐயா...
அவை தங்கச்சிலைகள் அல்ல கொஞ்சம் தங்கமும் கலந்திருக்கு...

Jana said...

@shanmugavel
கண்டிப்பாக முழுமையான பதிவு சீக்கிரம் வரும்..

Jana said...

@தமிழ் உதயம்
ண்மைதான் அவர் என்றும் அன்புள்ள ரஜினிகாந்த் தான்

Jana said...

@மைந்தன் சிவா
URRRRRR>>>>

Jana said...

@கார்த்தி
அட உங்களாலையும் அந்தப்படம் யார் என்று கண்டுபிடிக்க முடியலையா?

Jana said...

@ FOOD
கடசியாக ஒரு சிரிக்கிற விசியம் போட்டிருக்கேனே ஐயா..

Jana said...

@ ஜீ...
அட..உங்கட வீட்டுப் பேய் கூட செல்போன் வைத்திருக்கா என்ன ஜீ?

Jana said...

@நிரூபன்
முதற்சொன்ன விசியம் உண்மைதான் வேலிகள் பயிரை மேயுது

அப்புறம் முக்கியமான புத்தகங்களை வாங்கி வைத்திருப்பது என் வழக்கம். மேற்படி ஒரு புத்தகத்தை மேலே காமன்ட் போட்ட மருத்துவர் பாலவாசகன் வாங்கிட்டு போய்ட்டாரு அவர் படித்த முடித்தவுடன் உங்களுக்கு வேண்டுமென்றால் தருகின்றேன்.

ஆமாம் போன தடவை நிங்க சொன்னது தப்பு... இந்த தடவை தெரியலையா ஒருவரும் சொல்லாத படியால் இறுதியாக சொல்லிவிடுகின்றேன்.

அப்ப எல்லா இடத்திலையும் வல்லைகள் இருக்குது :)

Jana said...

@றமேஸ்-Ramesh
வாங்க தாமஸ்..
எட்டி பார்த்தா மட்டும் போதாது சமத்தா இப்படி ஒரு காம்ட்டு போட்டுபோகனும் சரியா:)

மாதேவி said...

தகவல்கள்,குறும்படம் நன்று.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வழக்கம் போலவே இந்தவார காக்டேயிலும் அருமை! ரஜினி பற்றிய கருத்துக்கள், கோவில் சிலை திருட்டு, எங்கோ ஆரம்பித்து எப்படியோ முடிவுற்ற குறும்படம், அன்பே வா அருகிலே பாடல், அயார்ன் பாக்ஸ் காமெடி எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு! அந்த செத்தாளிண்ட படத்தை ஏனப்பா போட்டனியல் ! ஒரு மாதிரி கிடக்கு! ( எனக்கு )

Jana said...

@மாதேவி
நன்றி மாதேவி

Jana said...

@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

வாங்க ஓட்டவடை நாராயணன் அந்தக்கிளிப்பேச்சு கேட்கவா பாடல் இந்த பதிவை போடத்தொடங்குமட்டும் மனதுக்குள் வர மாட்டுது என்றுகொண்டே முரண்டு பிடிச்சுது. பின்னர் ஒருமாதிரி பிடிச்சுப்போட்டன் அது உங்களுக்கு பிடிச்சுக்கொண்டது சந்தோசம்தான்..

Jana said...

அது யாருடைய சடலம் என்று யாரும் கண்டு பிடிக்கவில்லையே...
சரி அந்த சடலத்துக்கு சொந்தக்காரர்
ஜோன் எவ் கெனடி :)

LinkWithin

Related Posts with Thumbnails