Saturday, September 26, 2009

காலச்சக்கரம். 04


ஹாய்…மாதவ்.. “எனி இம்புறூமென்ட்ஸ்”? என்று கேட்டாவாறே வந்தாள் ஷமி. நான் உனது செய்தி வரும் வரும் என எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன் என்றாள் அவள். உதட்டை பிதுக்கி காட்டினான் மாதவ். அப்பறம் என்ன செய்ய உள்ளாய்? இது எவ்வளவு பெரிய அதுவும் முக்கியமான வியடம் தெரியுமா? என்றாள் அவள். நீ போனவுடன் நான் சௌரத்துடன் தொடர்பு கொண்டேன் நாளை வருவதாக சொன்னான். பார்ப்போம் அவன் வரும்வரை ஏதாவது செய்து பார்க்க முற்படுகின்றேன். என்றான் மாதவ்.

சௌரத்தை பற்றிப்பேசும்போதுதான் அவனுக்கு சௌரத் இறுதியாகச்சொன்ன வசனம் நினைவு வந்தது. ஜெஸ்…அவர்கள் சிலவேளைகளில் எமது உரையாடலைக்கூட கேட்கலாம்….உடனடியாக அவன் மூளையில் உந்தவே சுய மற்றும் வெளிப்புற பாதுகாப்பு நெட்வேர்க் செயற்பாட்டை புதிதாக உருவாக்கி தனது வலையமைப்பில் புகுத்த அவன் முடிவெடுத்து அதில் மூழ்க ஆரம்பித்தான். நேரங்கள் பறந்துகொண்டிருந்தன. இடைக்கிடை ஷமியும் பல வழிகளில் அவனுக்கு ஒத்துளைப்பு வழங்கிக்கொண்டிருந்தாள். அதிகாலை இரண்டுமணி ஷமி தூங்கப்போய்விட்டாள்…

மாதவ் உலகத்தையே மறந்து தனது செயற்பாட்டில் மட்டும் முழுக்கவனத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். அவனது கடிகார சிக்னல் ஒலித்தது.
ஹாய்…மாதவ்…நான் சௌரத் உன் வீட்டின் முன்னால்த்தான் நிற்கின்றேன். உனது பாதுகாப்பு லேசர் கதிரை நிறுத்து நான் உள்ளே வருகின்றேன் என்றான். உள்ளே வந்து மாதவ்விடம் இருந்து சகலத்தையும் அறிகின்றான். உனது தூரகோள் தொடர்பாடல் தரவில் எப்படி அந்த சிக்னல் பதியாமல்ப்போயிருக்கும்? அப்படி என்றால் அந்த கோளில் உள்ளவர்களின் தொழிநுட்பம் எம்மைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும். இதுதான் எனக்கு தோன்றுகின்றது. அப்படி மட்டும் இருந்துவிட்டால் உடனடியாக தொடர்புகளை அவர்களுடன் மேற்கொண்டு அவர்களால் எங்கள் பூமிக்கு ஆபத்து எற்படாமல் பார்ப்பது எங்களின் முதல்க்கடமை என்றான் அவன்.

ஜெஸ்…சௌரத் நான் எதை நினைத்தேனோ அதையே நீ சொல்லுகின்றாய்..என்றான் மாதவ். இருவரும் மாறிமாறி அந்த அக்ரோ வெளியில் அந்தக்கோளுடன் செய்திகளையும் சமிக்கைகளையும் அனுப்பிக்கொண்டிருந்தனர். திடீர் என அந்தக்கோள் அவர்களது சுவர்த்திரையில் பிரசாகமாகின்றது…உள்ளே வந்த ஷமியும் ஆச்சரியத்தில் வாயைப்பிழந்தபடியே உட்காருகின்றாள். ரட்ஸி…ரட்ஸி.. என பிசிறலான ஒரு ஒலிச்சமிக்கை அந்தக்கோளில் இருந்து கிடைக்கின்றது. பிரமித்துப்போனபடியே…திரும்பி மாதவ்வைப் பார்க்கின்றான் சௌரவ்…


இராஜவிதியால் வண்டியைத்திருப்பி, பிரதான பாதையால் மேற்கு நோக்கி மாட்டு வண்டியை திருப்பினான் பவுணன். மாலை நேரம் கூடு திரும்பும், குருவிகளின் ரீங்காரங்களையும், இருபக்க மரங்கள், மற்றும் கண்ணில் தென்படும் பனங்கூடல்களுக்கு நடுவில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய பழம்போல மறைந்துகொண்டிருந்த சூரியனையும்பார்த்து மகிழ்ச்சியில் முகமலர்ந்தாள்; தையல்முத்து.
தூரத்தில் பல வண்டில்கள் செல்வதை சுட்டிக்காட்டியபடியே இன்று அங்காடி கழைகட்டும்போலதான் இருக்கு அம்மான் என சொன்னான் வெள்ளையன்.
“அப்படித்தான் நினைக்கின்றேன், இன்றைய அங்காடியில் மாமந்திரி அவர்கள் கலந்துகொண்டு தற்போதைய நிலைமைகள் பற்றியும், அரசரின் வணிகர்களுக்கான செய்தினையும் தெரிவிக்கவுள்ளதாக நானும் கதை அறிந்தேன் என்றான் பவுணன்.

ஒருவாறு திருநெல்வேலி இரவு அங்காடியினை வந்தடைந்தார்கள் மூவரும், பவுணனைக்கண்டதும், மேல்த்திசை வடபுறத்தே மடைவிரி பவுணன்! என்றார் அங்காடிக்காவலர். குறிப்பிட்ட இடத்திற்கு அருகில் வண்டிலை நிறுத்திவிட்டு இறங்கினர் மூவரும், தையல்முத்தும், வெள்ளையனும் வண்டியில் இருந்து பொருட்களை இறக்கி அந்த இடத்தில் அடுக்க, வண்டியில் இருந்து இரண்டு மாடுகளையும் விடுவித்து, அருகில் இருந்த தென்னையில் கட்டினான் பவுணன்.
காதுக்கெட்டும் தூரத்தில் இதுவரை அவர்கள் கேட்டிராத வெடிச்சத்தங்களும், குதிரைகளின் குழம்பொலிகளும், மக்களின் அவலக்குரல்களும் ஒலித்துக்கொண்டு, இருந்தன.. அந்தச்சத்தங்கள் தற்போது அவர்கள் பக்கத்தில் வந்துகொண்டிருப்பதுபோல இருந்தன..


பெட்டியின் பாரம் தாங்காமல் மோட்டச்சயிக்கிளின் பின்பக்கம் இருந்து சரியப்போன காண்டீபனை பார்த்த துஸ்யந்தி, என்ன காண்டீபன் அண்ணை! என்று கூறியவாறே ஓடிச்சென்று அந்தப்பாண் பெட்டியை விழாத படி பிடித்துக்கொண்டாள். இங்க சும்மா வரமனமில்லை அதனாலதான் நானும் பிரசாந்தனும் முத்தண்ணையின்ட பேக்கரியில் பாணும் கொஞ்சம் பணிசும் கட்டி வந்தோம் என்றவாறு மோட்டார் சைக்களில் இருந்து பாண்பெட்டியை துஸ்யந்தியின் உதவியுடன் தூக்கி கிழே வைத்தான் காண்டீபன்.
ஒமோம்…அதுவும் சரிதான் அதுதான் நானும், பெரிய மச்சாளுடன் கணக்கெடுக்க வரேக்கயே, பெரிய வாளியில தேத்தண்ணி ஊத்திவந்து கொடுக்கலாம் என்று வந்தோம், ஆனால் அது இங்க காணாது, அதுதான் இருந்ததை முதல்ல சின்னனுகளுக்கு கொடுத்தனாங்கள், சனங்கள் இன்னும் வந்துகொண்டுதான் இருக்குதுகள். பாவங்கள் கனக்க சனங்கள் காயப்பட்டுதுகளாம் என்றாள் துஸ்யந்தி.

சரி…இப்ப கொண்டுவந்த பாணையும் பணிசையும் நீ சொன்னதுபோல முதல்ல சின்னனுகளுக்கு கொடுப்பம் பிறகு பெரியாக்களுக்கு ஏதும் செய்யலாம்தானே என்றான் பிரசாந்தன். மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பெட்டியையும் தூக்கிக்கொண்டு அவர்கள் சேர்ச்சின் உள்ளே சென்று. பெட்டியை பிரித்தனர். நல்ல காலத்திற்கு விபரம் அறிந்து முத்தண்ணை பாண்களை கால் றாத்தலாக நாலுதுண்டுகளாக பிரிக்கக்கூடியதாகவே வெட்டி அடுக்கியிருந்தது நல்லதாய்ப்போச்சு என நினைத்துகொண்டு, அங்கிருந்த சிறுவர்களுக்கு பாண் பணிசுகளை கொடுக்கத்தொடங்கினர் மூன்றுபேரும். கொஞ்ச நேரத்தில், வெளியில் இருந்த பலர் தலைதெறிக்க தேவாலயத்திற்கள் ஓடிவருவதைக்கண்டு திடுக்கிட்டான் பிரசாந்தன். அவர்களின் ஓட்டத்தை தொடர்ந்து சிறி லங்கா விமானப்படையினரின் தாக்குதல் விமானமான புக்காரா கீழே பதியும் ஓசை மிக மிக அருகில் கேட்டுக்கொண்டிருந்தது.
தொடரும்....

2 comments:

ரமேஸ்குமார். said...

ஐயோ!!! ஜீரணிக்கமுடியாத நவாலி நரபலியல்லவா அது????

அடலேறு said...

தங்கள் நட்பு கிட்டியமை ஓரு பாக்கியம் என்றே கறுதுகிறேன். தங்கள் வலைபக்கம் முழுக்க படித்து விட்டு என் கறுத்துக்களை பகர்கிறேன்

LinkWithin

Related Posts with Thumbnails