Monday, November 29, 2010

வேற்றுமொழிக்கதைகள்>>>>அமெரிக்க தேவதை..(21+)




கதைக்குள் நுளைவதன் முன் - கதைக்கான படத்தையும் அதன் கீழ் உள்ள தரச்சான்றிதழ் சின்னத்தையும் பார்த்திருப்பீர்கள்தானே! ஆம் இந்தக்கதையில் தவிர்க்கமுடியாத காம இரசம் கலந்துள்ளதால் 21 வயதுக்குட்பட்ட பக்குவப்படாத குழந்தைகள், ஒரு தடவை ஓ…போட்டு… கைதட்டிவிட்டு, வேறுபதிவுகளை வாசிக்கச் சென்றுவிடங்கள்.

மொஸ்கோ நகரின் மையப்பகுதி இலைதுளிர்காலங்களில் சூழலில் மட்டும் அன்றி அங்கிருப்பவர்கள் மனதிற்குள்ளும் நிறைந்த உற்சாகங்களை விதைத்துவிடும்.
அங்கிருப்பவற்றுக்குள் பிரபலமான, அதேநேரம் பணமும் குறைவான இடமாக இருந்தது மெட்ரோபோல் விடுதி.
அதன் அருகில்த்தான், ஒரு கைட் மற்றும் புகைப்படப்பிடிப்பாளனாக தனது சிறிய அலுவலகத்தை வைத்திருந்தான் டேமியன்.

டேமியன்… ஆங்கிலம், பிரஞ்ச், ஸ்பானிய மொழிகளில் சரளமாக உரையாடக்கூடியவன். ஆணோ, பெண்ணே எவராக இருந்தாலும் பார்ப்பவர்களை மறுபடி பார்க்கச்செய்யும் வசீகரம் அவனிடம் உண்டு. அது தவிர அவன் கைகளில் கமரா எப்போதும் இருக்கும். அவன் எடுக்கும் புகைப்படங்கள் அந்த அளவுக்கு மிகத்துல்லியமாக இருக்கும் என்பதே பலரதும் பேச்சு.

இவைதான் இளம் பெண்கள் தவிர்ந்த ஏனையவர்களிடம் டேமியனைப்பற்றிக்கேட்டால் உடனடியாகக்கிடைக்கும் பதிலாக இருக்கும்.
உண்மையான டேமியன்……

ஆம்… காலையில் கண் வழித்துக்கொள்வதுமுதல், இராக்காலத்தில் கண் மூடும்வரை அவனின் மனதில் இருப்பது பெண்கள், பெண்களின் நளினமான அங்கங்கள், விதவிதமான புணர்வு நுட்பங்களே..
பெரும்பாலும் என்ன! முழுவதுமாகவே!! அந்த விடுதியில் தங்கவரும் பெண்களில் இவனிடம் பேச்சுக்கொடுக்கும் பெண்கள் முழுப்பேரையும் தன் கட்டிலில் அணுஅணுவாக இரசித்தும், தன்னை இரசிக்கவும் வைத்திருக்கின்றான் அவன்.
அசைக்கமுடியாது என்று சவால்விட்ட "இரும்புச்சீமாட்டிகள்" பலபேரையும், தற்போதும் தன் கட்டிலடிக்கு முண்டியடித்து வரிசையில் நிற்கச்செய்துள்ளான்..
அவனுக்குத்தேவை பெண்கள், விதவிதமான பெண்கள், அதிலும் நளினம் மிக்க பெண்கள். புதிய பெண்களைக்கண்டுவிட்டால், அவர்களின் அங்க அசைவுகளை பார்த்துவிட்டால் இவனுக்குள் உறங்கு நிலையில் இருக்கும் அளவு நாடா அந்த அங்கங்களை அளவெடுக்க ஆசைப்பட்டுவிடும்.

இதோ இப்போது கூட ஸ்பெயினில் இருந்து வந்த ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கின்றான் அவள் விடுதி அறையில் இருந்துகொண்டே..
அறையின் பல்கனிப்பக்கமாக இருந்த கண்ணாடியூடாக வெளியில் தெரியும் சுகமான இயற்கையை பார்த்தவாறே அவள் கேட்கின்றாள்..

டேமியன்..உண்மையை சொல்! நீ கூறுவதுபோல நான் அவ்வளவு அழகா என்ன?
மெல்ல எழுந்து சென்று அவள் பின்புறம், தன்னுடன் முட்டியும் முட்டாமலும் இருக்கும் நிலையில், அவளின் பின்புறத்தோழ்களில் சாய்ந்தவாறு, அவள் கழுத்தில் உஷ்ண மூச்சுக்களை சொரிந்துகொண்டு சொல்கின்றான் டேமியன்..

"நான் பொய் சொல்வது குறைவு அழகானவளே..அதிலும் அழகிய பெண்களிடம் எப்போம் பொய் பேசுவதில்லை". அவள் பின்புறம் தனக்கு நெருக்கமாக இறுக்கியவாறே அவள் கழுத்தினுள் முகம் புதைகின்றான்.
அவளுக்குள் ஆகாயத்தில் பறப்பதுபோன்ற உணர்வு… இதுதான் முதற்தடவை என்று அவளுக்கும் பொய்சொல்ல மனம் விரும்பவில்லை ஆனால் இத்தனை நுட்பமாக கலவிக்கு அழைப்பது புதுமையே…

கழுத்தில் புதைந்திருந்த அவன்முகம் விலகி அவளை திருப்புகின்றது. இலகித்துப்போய் நின்ற அவளுக்கு கண்திறக்கவே முடியவில்லை..அத்தனை பரமசுகம். இதழ்களின் ஊடே தானே புகுந்துவிவானோ? என்று சொல்லும் அளவுக்கு ஒரு உகைப்பான தொடர்முத்தம். அப்படியே அவன் உதடுகள் கீழே சென்றுகொண்டிருந்தன. ஒரு ஏவாளாக, அவனால் அழுத்தி அழுத்தி அமர்த்தப்பட்டுக்கொண்டிருந்தாலும்.. நினைவில் வானில் மிதந்துகொண்டிருந்தாள் அவள்.

பெண்களுக்கு பிடித்தவன் “குளோடியஸ்” என்று எந்த முட்டாள் கவிஞை சொன்னாள்? இவனை மட்டும் சந்தித்திருந்தாள் என்றாள்.. அவன் டேமியன்..டேமியன் என்று மட்டுமே பிதற்றி இருப்பாள் என மனதுக்குள் நினைத்துக்கொண்டே தன் ஆடைகளை அணிந்துகொண்டாள். இதை டேமியனிடம் சொல்லவேண்டும்போல அவளுக்கு இருந்தாலும் அவனிடம் சொல்லவில்லை.

விடுதியில் இருந்து அலுவலகத்திற்கு வந்துகொண்டிருந்தான். பனி மெல்லிதாக பெய்துகொண்டிருந்தது. வீதியில் பெரிதாக அவரவம் இல்லை. அலுவலக சட்டரை ஓரளவுக்கு இழுத்துவிட்டு, தன் சாய்வு கதிரையில் சாய்ந்தவாறே.. சிவேடிரேரின்
“புகையின் ஊடே நிலவு” படித்துக்கொண்டிருந்தான்.
ஓன்றைச்சொல்லியே ஆகவேண்டும், கவித்துவமான புத்தகங்கள் என்றால் அது அவனுக்கு பெண்களுக்கு அடுத்தது என்றே சொல்லவேண்டும். அவனுக்கும் கவிகள் தன்பாட்டிற்கு வரும். பல பெண்களிடமும் அவன் கவிபாடியதுண்டு, ஆனால் அவர்கள் அவனை இலகித்து இரசிப்பதனால் அவன் கவிதைகள் காதில் விழுந்தது கிடையாது.

சிவேடிரேரின் வரிகளுடன் ஒன்றிப்போய் இருந்தான். ஒரு இடத்தில் அவன் கண்கள் குத்திக்கொண்டு நின்றது.
“நீண்டநாள் கோபம், பேசாமை, அவளின் அசண்டையீனம் இத்தனையும் அவனை இன்னும் வெறுப்பேற்றின? கோப உச்சத்தில்க்கூட காமம் வருமா? அவனது வெறி கோபத்தீயாகி எதிரே இருந்த தன் காதலியை, அசுரத்தனமாக கீழே தள்ளி, ஆவேசமாக அவள் உதடுகளை கடிக்கின்றான்! ஆரம்பத்தில் திமிறினாலும், அது அவளுக்கு பிடிதிருக்கவே அவனைவிட அசுரவேகம் காட்டினாள் அவள்.
உடைகள் களையப்படவில்லை கிழிக்கப்பட்டன. இறுதியில் இருவருக்கு அது புது அனுபவம், சுவை அனுபவம்கூட!!
சிவேடிரே.. எனக்கு புதிய ஒரு நுட்பத்தை காட்டித்தந்தீர்..என வாய்விட்டே சொன்னான் டேமியன்.

அரவமற்ற வீதியில் சீறிக்கொண்டே வந்து, இவன் அலுவலகம் முன்னால் நின்றது ஒரு ராக்ஸி. தலையை சாய்த்துப்பார்த்தான். ஒரு பெண் ராக்ஸியில் இருந்து, ஒரு சூட்கேசுடன் இறங்குவது தெரிந்தது. சட்டரை பதிவாக இழுத்துவிட்டதனால், அளவது மார்பகங்களும், அதற்கு கீழ்ப்பட்ட அங்கங்களையுமே பார்க்கமுடிந்தது. அவனது அளவெடுக்கும் கண்கள், திகைத்து நின்றன. அத்தனை கச்சிதமாக ஒருத்தியா என்று வாசல்வரை ஓடிச்சென்று பார்த்தான். உண்மையில் அவள் போல் ஒரு உன்னத அழகியை அவன் கற்பனைகூடச்செய்து பார்த்ததில்லை. அதே விடுதிக்கு அவள் சென்று கொண்டிருந்தது தெரிந்தது. இவன் மனம் அவள் பின்னாலேயே சென்று கொண்டிருந்தது.

மறுநாள் அலுவலகத்திற்குச் சீக்கிரமே வந்தான். அவள் வருவாள் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான். மாறாக நேற்று அவனுடன் சல்லாபித்தவள் வந்து அவனை அழைத்துக்கொண்டிருந்தாள். தனக்கு உடம்புக்கு முடியவில்லை எனவும், அலுவலகத்தைமூடிவிட்டு செல்லவுள்ளதாகவும், நேற்று அவளுக்குச்சொன்ன, “அழகிய பெண்களிடம் நான் பொய் சொல்வதில்லை” என்ற வார்த்தையை அப்பட்டமாக மீறினான்.

பொய்க்கோபத்துடன் அவள் சென்றுவிடவே, புதியவளுக்காக காத்திருந்தான்.
என்ன அதிசயம்!! அந்த விடுதி வாசலால் அவள் வந்துகொண்டிருந்தாள். திடீர் என்று தன் உடலே லேசாக பற்றி எரிவதுபோன்ற உணர்வு அவனுக்கு. நேராக இவனிடம்தான் வந்தாள்.
“காலை வணக்கங்கள், என் பெயர் கிலேரா”.. அமெரிக்காவில் இருந்து வந்திருக்கின்றேன். நீங்கள் சிறந்த வழிகாட்டியா? எனக்கு உதவ முடியுமா? நான் மோஸ்கோவை சுற்றிப்பாக வேண்டும் என்றாள்.
அதற்காகத்தானே காத்திருக்கின்றேன். என்று நினைத்தபடியே
இதோ இப்போதே..என்று எழுந்தான்.

அவளை அழைத்துக்கொண்டு முக்கிமான இடங்களை காட்டினான். அவளது இனிமையான பேச்சுக்கள் இவனுக்கு மேலும் கிளர்ச்சியை உண்டாக்கின. மிகவும் சகஜமாகப்பழகினாள். பல விடயங்களில் விநோதமானவளாகவும், இரக்கமுள்ளவளாகவும் தெரிந்தாள். ஓரிடத்தில் ஓய்வெடுக்கும்போது, இலக்கியம், பற்றியபேச்சுகள் வந்தது, இவனது அறிவு, கவிதைகளில் வியந்துபோனாள் கிலேரா..
திடீர் என்று அவளினுள் ஒரு மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தான்.
அவள் பார்வையில் இவன்மேல் ஒரு மரியாதை உண்டானது.

ஒரு வாரம் தான் இங்கே தங்கவுள்ளதாக தெரிவித்த கிளேரா..மூன்றுநாட்களிலேயே ஒரு இனிமையானவளாக மாறிவிட்டாள் டேமியனுக்கு.
அவளை அனுபவிக்கும் சந்தர்ப்பம் எப்போது என்று நகம் கடித்துக்கொண்டிருந்தான் அவன். ஒருவாறு பல கதைகள் பேசும்போது, வெளிப்படையாகவே செக்ஸ் பற்றிக்கேட்டான் டேமியன், அது அவர் அவர் இரசனைக்கும், அறிவுக்கும் ஏற்றது என்றாள் கிளேரா!
அது அருவருக்கும் விடயமோ, வேண்டா ஒன்றோ இல்லை. உண்மையைச்சொன்னால் செக்ஸை வெறுப்பது ஆண்டவனின் படைப்புகளையே வெறுப்பதுபோன்றது என்றாள் துல்லியமாக.

பின்னர் வந்த சந்தர்ப்பங்களிலும், இவன் தேவையற்ற பேச்சுக்களிலும், செக்ஸை நுளைத்தே பேசினான், ஆனால் கண்களால் சிரித்துக்கொண்டே அந்தப்பேச்சுக்களில் எடுபடமால் பேசினாள் கிளேரா.
அவனிடம் வந்து அவன் கிறுக்கி வைத்த இலக்கியங்களை ஒரு பொக்கிசங்களை கண்டதுபோன்ற உணர்வுடன் வாங்கிக்கொண்டாள். நாளை காலை தான் புறப்படுவதாகவும், இரவு தன்னுடன் உணவருந்திவிட்டு, தன் அறையிலேயே வந்து தங்கும்படியும் அன்பு கட்டளை போட்டாள் இவனிடம்.

வானத்தில் பறந்துகொண்டான் டேமியன். அவளுடன் தன் படுக்கை பகிர்வு எண்ணஓட்டங்கள் கற்பனையாக மனதிற்குள் ஓடின.
இருவரும் உணவு அருந்திவிட்டு அவள் அறைக்குச்சென்றனர். உன் எழுத்துக்கள் பெறுமதியில்லாதவை டேமியன் என்றாள் அவள்.
எழுந்து சென்று அவளை இறுக்கிக்கொண்டே, அவள் பின்புறத்தில் தன் கையை படரவிட்டுக்கொண்டு, நீ கூட பெறுமதியற்றவள் என்றான் டேமியன்.
திடீர் என்று விலகிச்சென்று, ஒளிரும் மேசை விளக்கிற்கு முன்னாள் வந்தாள் கிளேரா..

டேமியன்.. நீ..ஒரு அற்புதமானவன், உன் எழுத்துக்கள் பற்றி உனக்கே தெரியாது, அவை விலைமதிப்பில்லாதவை. உன் கவிதைகளாலும் உன் எழுத்துக்களாலும் உன்மேல் எனக்கு உன்னைவிட அதிக பிரியமும், மரியாதையும் உண்டு.
ஆனால் கேவலம் ஒரு செக்ஸ் உனக்கு எல்லாவற்றிலும் பெரிதாகத்தெரிவதை எப்போதோ நான் புரிந்துகொண்டுவிட்டேன்.
உனக்கு நீ.. உலகக்கவிஞனாக மாறவேண்டும் என்ற என் ஆசை தீர்க்கவிரும்பினால், நீ எனக்காக உயர்ந்துவிடு, இல்லை காகமம்தான் பெரிது என்றால் இதோ …ஆனால் இன்றுடன் எம் உறவும் முடிந்துவிடும், நீ கவிதைகளையும் மறந்துவிடவேண்டும் என்று தனது மேலாடைகளை விலக்கினாள்…

சில மாதங்களின் பின்: டேமியன் இப்போது உலகம்போற்றும் உன்னத கவிஞனாகியிருக்கின்றான்

23 comments:

Subankan said...

ஓ....
கைதட்டல் ;-)

Ramarajan said...

good story. Keep it up friend.

எஸ்.கே said...

மிக அருமை!

pichaikaaran said...

ஒரு புதிய கதையை படிக்க வாய்ப்ப்ளித்தமைக்கு நன்றி

Unknown said...

நல்ல கதை! முதல்ல கை தட்டிட்டு போலாம்னுதான் பார்த்தேன்...அப்புறம் வாசிச்சிட்டேன்! Sorry அங்கிள்! :-)

Kiruthigan said...

அனுபவபகிர்வு போலுள்ளது..
நான் சிறுவன் என்பதால் படிக்காமல் வந்துவிட்டேன்..
வாழ்த்துக்கள்.

பெஸ்கி said...

ஜனா,
காமத்தைத் துறந்த அந்த மகா கவிஞன் யாரோ?

-பெஸ்கி.

KANA VARO said...

கை தட்டி தட்டி வலிக்குது...

KANA VARO said...

ஒண்ணுமே புரியல... ஏன் அண்ணா?
:)
:)
:)
:)
:)
மறந்திட்டன் எனக்கு இன்னும் 15 வயசு ஆகல...

டிலான் said...

ஓ...போட்டு கைதட்டிவிட்டு ஓடியேவிட்டேன். ஆனால்... வாசித்திட்டேன். டேமியன் கவிஞன் ஆகாமலே விட்டிருந்தால் இன்னும் சந்தோசப்பட்டிருப்பேன்.

ம.தி.சுதா said...

இல்லையண்ணா இது 21 ற்கு மேற்பட்டதல்ல teen age ற்கு கட்டாயமான கதை காமத்தையும்.. வாழ்வையும்.. யாதார்த்தப்படுத்திக் காட்டியுள்ளது... 60 வயதிலும் சின்டேல் மாத்திரை போட்டால் உணர்வு வரும் ஆனால் சாதிப்பதென்பது இந்த வயதில் தான் பெரும் சாத்தியமான விடயம்....

Jana said...

@ Subankan
ஆஹா..நல்லது.

Jana said...

@Ramarajan
Thank you Ramarajan

Jana said...

@எஸ்.கே
மிக்க நன்றிகள் S.K

Jana said...

@பார்வையாளன்
வெல்கம் பார்வையாளன். அடிக்கடி வந்து இங்கேயும் பாருங்களேன்.

Jana said...

@ஜீ...
நன்றி மாப்ளே..தங்கள் வரவுக்கு நல்வரவுகள். அடிக்கடி வந்து போங்கள்.

Jana said...

@ Cool Boy கிருத்திகன்.
நீங்களா சின்னப்பையன். காமம் எப்போது சலிக்கும் என்று தத்துவத்தையே புரியவைத்தவரல்லவா நீங்கள்?

Jana said...

@பெஸ்கி
உண்மைதான் பெஸ்கி

Jana said...

@ KANA VARO
கைதட்டி மட்டும்தானா?

Jana said...

@KANA VARO
15 வயது ஆகலையா? வாழைப்பழத்தை வைத்தால் கடிக்க தெரியுமா இல்லையா வரோ?

Jana said...

@டிலான்
//டேமியன் கவிஞன் ஆகாமலே விட்டிருந்தால் இன்னும் சந்தோசப்பட்டிருப்பேன்.//

அடப்பாவி..இங்க பிட்டுப்படமா காட்டினேன்???

Jana said...

@ம.தி.சுதா
//காமத்தையும்.. வாழ்வையும்.. யாதார்த்தப்படுத்திக் காட்டியுள்ளது..//

எனக்கே புரியலை நீங்கதான் சொல்லுறீங்க சுதா..

மன்னார் அமுதன் said...

நல்லாருக்குக் கதை...

LinkWithin

Related Posts with Thumbnails