Friday, September 9, 2011

ஏழாவது அறிவின் தோற்றத்தை அழிக்கும் ஆறாவது அறிவு!

மனித மனத்தின் விந்தைகளும் அதன் செயற்பாடுகளும், எமது கற்பனைக்கும் எட்டாத வகையில் மிக அதிசயமானது என்பதுடன், வக்கிரமானதும்கூட.

மனிதனுடைய சில செயற்பாடுகள் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்கு அப்பால் பட்ட நிலையில், சாதாரண மனிதர்களின் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கும் மோசமான செய்திகளுடன் கூடிய கென்பிரஸி தியரிகளாக சிக்குப்பட்டு கிடக்கின்றன.

சில ஆழமான அறிவியல் விடயங்கள் தொடர்பாக அவனது அறிவியல் இரகசிய காய் நகர்த்தல்கள் பெரும் ஆச்சரியமாகவும், சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவுமே இருந்துவருகின்றன.

உலகில் வாழும் ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு, மற்றும் ஐந்தறிவு விலங்கினங்களைவிட பகுத்தறியும் அறிவு என்ற ஆறாவது அறிவினால் மனிதன் எடுத்திருக்கும் விஸ்வ ரூபயங்களே புதிரானதும், அதிசயமானதும்தான்.

விலங்கினமாக திரிதல், வேட்டையாடல், நதிக்கரைகளை சேர்த்தல், பயிர்செய்தல், நாகரிகம் பெறல், தன்னிறைவு அடைதல் வான் பார்த்தல் என மனித இனம் இந்த ஆறாவது அறிவின்மூலம் எடுத்துக்கொண்ட விஸ்வரூபங்கள் புதிரானவை.

இங்கே கூர்ப்பு விதிகள், இல்லாத ஒன்று புதிதாக வருவதில்லை எனவே ஏற்கனவே மனித வலுவுடை சமுதாயம் ஒன்று இருந்துள்ளது, போன்ற தியரிகள் இப்போதும் விவாதங்களுக்கு உரியதாக உள்ளதால் அவற்றினை விட்டுவிட்டு மற்றவற்றை பார்ப்போம்.

உன்னிப்பாக கவனித்தீர்களே என்றால் 19 ஆம் இருபதாம் நூற்றாண்டுகள் மனித இனத்தின் ஆறாம் அறிவின் உச்சமான ஒரு பாய்ச்சல்காலம் என்பதை அவதானிக்கமுடியும். இக்காலங்களிலேயே மனிதன் இயற்கையினையும் வென்றுவிடுவான் என்ற மமதைகள் மனித மனங்களுக்குள் வித்திட முயன்றன.

காலப்போக்கில் பிரபஞ்சத்தின் விஸ்தாரமும், மனிதனின் அறிவு வளர்ச்சியும் இயற்கையினை வெற்றிகொள்ளல் என்ற சொல்லே எவ்வளவு அபத்தமானது என்று அதே மனத்தை வெக்கம் கொள்ள வைத்தது.

இதேவேளை இயற்கை பற்றிய நுண்ணறிவில் ஆறறிவு உள்ள மனிதனை விட ஐந்தறிவுள்ள விலங்கினங்கள் அபாராமாக செயற்பட்ட சம்பவங்களையும் நாம் கவனிக்கலாம். இதற்கு மிகச்சிறந்த உதாரணம், 2004ஆம் ஆண்டு எமது பிரதேசங்களில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம்.

சரி நாம் இப்போது அந்த ஏழாவது அறிவு என்ற விடயத்திற்கு வருவோம். இந்த ஏழாவது அறிவைக்கூட மனஅதிவளம் மட்டுமின்றி உடல் வலு உச்சத்தினையும், சக்தி உச்சத்தினையும்கூட கவனிக்கவேண்டும் என்று கூறப்படுகின்றது.

இந்த ஏழாவது அறிவின் தோற்றப்பாடுகள் மனித வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் கவனிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய அதி உச்ச அறிவியல் யுகத்தில் இந்த ஏழாவது அறிவு இன்னும் கற்பனைக்கு எட்டாத வகையில் புலப்படும் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கே ஈஸ்பி பவர் என்னும் அசாதாரண சக்தியை ஒருவர் கொண்டிருப்பதும், சாதாரண மனிதர்களைவிட மிஞ்சிய அறிவாற்றல், தகவல்களை வைத்திருக்கும் நடைமுறைப்படுத்தும் தன்மைகளை கொண்டிருத்தல், சாத்தியப்படாத சிலவற்றை சாத்தியப்படுத்துபவர்கள் என தென்படும் சிலர் இந்த ஏழாவது அறிவின் வெளிப்பாடுகள் என்று கூறப்படுகின்றது.

சிறப்பு தேர்ச்சிகளின் அடிப்படையில் வெளிப்படும் திறமைகள், அனுபவம் மற்றும், கடுமையான பயிற்சிகளின் அடிப்படையில் வெளிப்படும் திறமைகள் என்பவற்றை தாண்டி அல்லது தவிர்த்து எட்டமுடியாத உச்சங்களை அதிசக்தி வலுக்களை அடையும் வலுவையே அந்த ஏழாவது அறிவு கட்டத்தினுள் இவர்கள் இடுகின்றார்கள்.

குறிப்பிட்ட நபர்கள் இந்தவகையில் பட்டியலிடப்படுகின்றார்கள், நொஸ்ரடாமில் இருந்து மிச்சல் பெல்ப்ஸ் வரையான பட்டியல் இவற்றை பற்றி ஆராயப்பட்டுவருகின்றது.

சரி… இந்தவிடயங்கள் இவ்வாறாக இருக்க முக்கியமான விடயத்திற்கு வருவோமானால், இந்த ஏழாவது அறிவு சமுதாயம் ஒன்று உருவானால் இது இன்றைய ஆறாவது அறிவு சமுதாயத்திற்கும், இந்த பூமிக்கும் அழிவுநிலையினை உருவாக்கிவிடும் என்று நினைக்கும் ஒரு அறியவியல்க்கூட்டத்தால் இவ்வாறான ஏழாமறிவின் தோற்றப்பாடுகள் எங்கு புலப்பட்டாலும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது அல்லது அமுக்கப்படுவதாகவும் சில அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்திகளில் அவ்வாறான அதிசக்தி ஆற்றலுடைய அறிவுடைய பலர் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. குறிப்பாக அறிவியல் அதிசக்தி வாய்ந்த சிலர் உலகில் குறிப்பிட்ட விஞ்ஞான ஆய்வகம் ஒன்றினால் உள்வாங்கப்பட்டு, அவர்களின் சக்திகள் கணிப்பிடப்பட்டு தரவுகள் பெறப்பட்ட பின்னர் அவர்கள் அழிக்கப்பட்டதாகவும், அதேவேளை வெளியில் இருந்து புகழ்படைத்த சிலர், திட்டமிட்டவகையில் அழிக்கப்பட்டதாகவும், கென்பிஸி தியரிகளின் அடிப்படையிலான சில செய்திகள் உலாவுகின்றன.

இவ்வாறு அழிக்கப்பட்டவர்கள், அல்லது அமுக்கப்படுபவர்கள் பட்டியலில் புரூஸ்லி, மற்றும் சில விளையாட்டுவீரர்களின் பெயர்களும் உள்ளமை ஆச்சரியமாக உள்ளது.

அடுத்த கட்டமாக சுட்டிக்காட்டப்படும் முக்கியமான விடயம் என்னவென்றால், இவ்வாறு நடவடிக்கைகள் சென்றுகொண்டிருந்தாலும், தற்போது பிறக்கும் 60 வீதமான குழந்தைகள், முன்னைய சமுதாயம்போல அல்லாமல் குறிப்பிட்ட வயதுகளில் அந்த சமுதாயத்தால் எட்டப்பட்ட அறிவுகளை விரைவாக எட்டுவது கவனிக்கப்படுகின்றது. ஒருவகையில் இது மரபணுவீத முன்னேற்றம் என்று பார்த்தாலும் மற்றபக்கத்தில் வேறு ஒரு கோணத்தில் ஏழாமறிவின் வரவுகள் பரம்பலாக அதிகரிக்கப்போவதை இது காட்டுவதாகவும் ஒரு ஆய்வு கூறுகின்றது.

எது எப்படியாக இருந்தாலும் உலக நியதிகளின் பிரகாரம் நடைபெறவேண்டிய மாற்றங்கள் எப்படி தடுத்தாலும் நடைபெற்றுவிடும் என்பதே யதார்த்தபூர்வமான உண்மையாக உள்ளது.

5 comments:

Philosophy Prabhakaran said...

என் ஐந்தறிவிற்கு உங்கள் பதிவின் சாரம் எட்டவில்லை...

Riyas said...

வணக்கம் ஜனா அண்ணா,

நீண்ட நாளைக்குப்பின்..

பதிவை ஒரு முறை வாசித்தைன் புரியவில்லை மறுமுறை வாசிக்கிறேன்..

Rizi said...

நல்ல பதிவு சார்..

நிகழ்வுகள் said...

///தற்போது பிறக்கும் 60 வீதமான குழந்தைகள், முன்னைய சமுதாயம்போல அல்லாமல் குறிப்பிட்ட வயதுகளில் அந்த சமுதாயத்தால் எட்டப்பட்ட அறிவுகளை விரைவாக எட்டுவது கவனிக்கப்படுகின்றது.//
உதாரணத்துக்கு இப்பவெல்லாம் பிறந்து ஆறு ஏழு வயசான சிறுவனாலே கணணியை இயக்க முடியுமாக உள்ளது.. ஆனால் எம்மால் அந்த காலத்தில் இது எட்டா கனி தான். இதுக்கு அவர்கள் வளரும் இன்றைய சூழ்நிலையும் எதுவாக இருக்குமோ???

சி.பி.செந்தில்குமார் said...

நடப்பது நடக்கட்டும்

LinkWithin

Related Posts with Thumbnails