Tuesday, December 13, 2011

அப்பா........

ஒரு மகளின் பார்வையில் அவளது அப்பா... அவளது கண்களுக்கும் மனதிற்கும் எப்படி எல்லாம் காட்சியளிக்கின்றார் உணர்வுடன் பாருங்கள்...

அப்போது தான் நான் பிறந்திருந்தேன் என்னை என் அப்பாவிடம் ஒப்படைக்கின்றனர். என் அப்பாவின்; கைகளின் ஸ்பரிசம் பட்டவுடன் இறைவனை தொட்ட உணர்வு எனக்குள்ளே...
என்னை வாஞ்சையுடன் அணைத்த என் அப்பாவின் கண்;களில் இருந்து என் கைகளிலே விழுந்த ஆனந்தக்கண்ணீர் இப்போதும் என் கைகளை நனைக்கின்றது...

சுமார் ஒரு மாதம். என் உடல் சூழல் தட்ப வெப்பங்களை மறுதலித்தபோதெல்லாம் அதற்கான ஒத்த தன்மைகளை வருடிதந்துகொண்டிருந்தார் என் அப்பா...

ஏழு மாதங்கள், நான் மெல்ல மெல்ல தவண்டு செல்ல ஆரம்பிக்கின்றேன். என் கால்கள் கொஞ்சம் வலிக்கின்றன. ஆனால் ஒவ்வொரு தடவையும் ஒடிவந்து அள்ளி அணைத்து என் கால்களை தடவிக்கொடுக்கும் என் அப்பாவின் கருணையை உணர்கின்றேன் மெல்ல...

இதோ ஒரு வயதை எட்டிவிட்டேன். ஆவலுடன் நடக்க விளைகின்றேன். நான் விழுவேன் என்றும் எனக்கு தெரிகின்றது. ஆனால் நான் ஒவ்வொரு தடவையும் விழும்போது இதயம் நொந்து கண்கலங்கி என்னை தூக்கி உச்சிமுகரும் என் அப்பா எனக்கு மலைப்பாக இருக்கின்றார்.

சில வேளைகளில் எனக்கு உடல் இயலாமை தெரிகின்றது. நோ நிமித்தம் அழுகின்றேன். எனக்கு நோ என்றால் என் அப்பா படும் அவலத்தையும், அவரது கண்களில் கண்ணீரையும் கண்டு எத்தனை தரம் பிரமித்திருக்கின்றேன்.

எனக்கு நான்கு வயது எனது அப்பா எவ்வளவு இனிமையானவர்...

இப்போ ஐந்து வயது எனது அப்பாவுக்கு தெரியாத விடயம் ஒதுவும் இல்லை..
என் அப்பா பெரீரீரீய... ஆள்.

எனக்கு வயது ஆறு: எனக்கு எல்லாவற்றையும் உணர முடிகின்றது...
என் அப்பாவைப்போல இந்த உலகத்தில் வேறு எதுவும் கிடையாது. இறைவனின் மறு உருவம்தான் அப்பா.

இப்போ வயது 8 எனக்கு ஒரு பொருள் வாங்கித்தருவதற்காக பணம் வைத்திருந்த அப்பா..
ஒருவர் அவசர உதவி நாடி வந்ததும் அதை கொடுத்த விட்டார். முதலில் கோபம் வந்தாலும், பிறகு பெருமையாக இருந்தது.

வயது 12. நான் பெண் என்பது முழுமையாக உணர்கின்றேன். அப்பாவின் பாதுகாப்பு முழுமையாக எனக்கு தேவை என்று எண்ணுகின்றேன்.

வயது 14. நான் வளர்ந்துவிட்டேன் இன்னும் என்னை குழந்தையாக நினைத்து ஒரு விடையத்தை திரும்ப திரும்ப விளங்கப்படுத்தி அறுக்கிராரே அப்பா...

இப்போ எனக்கு வயது 16 என் தனிப்பட்ட சில விருப்பு வெறுப்புகளில் தேவையின்றி தலையிடுகிறாரே இந்த அப்பா. அவரது காலம் வேறு என் காலம் வேறு புரியவில்லை இந்த அப்பாவுக்கு..
இப்போதெல்லாம் அப்பாவை நினைத்தாலே அவர் இராணுவ உடையில் இருப்பதாகத்தான் மனதில் விம்பம்.

வயது 18 முதன் முறையாக அப்பாவுடன் முரண்பட்டுக்கொள்கின்றேன். பிரமிப்பாக என்னை அப்பா பார்த்ததும், அதன் பின் பேசாமல் இருந்ததும் எனக்கு அழுகையாக இருந்தது.

இப்போ வயது 24 நான் ஒரு பட்டதாரியாக வெளியேறுகின்றேன். எல்வாம் என் அறிவினால் கிடைத்தது என்ற இறுமாப்புடன் குதூகலத்தில் துள்ளிக்குதிக்கின்றேன். ஆனந்த கண்ணீருடன் உச்சிமுகர்ந்து வாழ்துகின்றார் என் அப்பா.

வயது 25 – நான் ஏன் வேலைக்கு போகணும்? இரண்டு வயதில் இருந்து படித்து படித்து கழைத்துவிட்டேன் கொஞ்சநாளாவது ப்ரியாக இருக்கவேண்டாமா?
அதை தாங்க எலாதே இந்த மனசனுக்கு... ஏன் இந்த அப்பா இப்படி இருக்கிறாரோ தெரியாது..

வயது 28 எனக்கு திருமண ஏற்பாடு அமோகமாக நடக்கின்றது. மனதில் ஒரு மகிழ்ச்சிதான். இதோ திருமண இறுதிப்பொழுது அப்பாவுடன் மணமேடைக்கு என் கணவனை நோக்கி செல்கின்றேன். என் பெயரில் இருந்தல்ல வாழ்வில் இருந்தே அப்பா தூரப்போவதுபோல ஒரு கலக்கத்தை உணரமுடிகின்றது.

வயது 30 இப்போ என் மகனுக்கு நானும் ஒரு தாய்.
அவனது ஒவ்வொரு அசைவும் என் அப்பாவை நினைவு படுத்துகின்றன.

அவன் தவழுகின்றான், அனால் எனக்கு வலிக்கவில்லை, நடக்க முயற்சி செய்து விழுகின்றான் ஓடிப்போய் தூக்கி அணைக்கவில்லை...
ம்ம்ம்.... அப்பா சொல்லுவது எல்லாம் சரிதான்...


இப்போ எனக்கு வயது 35 - என் அப்பாவைப்போல இந்த உலகத்தில் வேறு எதுவும் கிடையாது. இறைவனின் மறு உருவம்தான் அப்பா.

13 comments:

Admin said...

கால்ங்கள் கடந்த பின்புதான் நிறைய சமன்பாடுகளுக்கு விடைகள் கிடைக்கின்றன. அதில் அப்பாவும் அடக்கம்.

அனுபவதில் உணர்ந்ததை எழுத்தில் வடித்துள்ளீர்கள் ..

வாழ்த்துக்கள் ஜனா அண்ணா

Anonymous said...

பதினஞ்சு கடந்தாலே அப்பா தொல்லையாய் தான் தெரியும்..)

Unknown said...

சூப்பருங்கோ!

ரொம்ப நாள் கழித்து... :-)

Unknown said...

பதிவு அருமை.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்க்கை ஒரு சக்கரம்.
வாழ்த்துகள்.

balavasakan said...

:-(

KANA VARO said...

Oh! Thala comeback. Nicee post brother

சுதா SJ said...

அப்பா..... இன்று முழுக்க அப்பா நினைவுடந்தான்...... தேங்க்ஸ் அண்ணா. அருமையான பதிவு.... பதிவை படிக்கும் போதே பல நினைவுகள் மனதோடு.....

Ramesh said...

எனக்குள்ளும் மாறுதல்களை சொல்லி வைத்தீர்கள்.
அப்பாவுக்கும் மகளுக்கும் செல்லச் சண்டை போல

Nathimoolam said...

அற்புதமான பதிவு

yathavan64@gmail.com said...




அன்பு தமிழ் உறவே!
வணக்கம்!

இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"எல்லோருக்கும் பிடித்த ஹீரோ"

சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!

வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

வலைச் சரம்

கவி மழை புவி புகும்
இல்லம் வலைச் சரம்!
கதை நல் விதை விதைக்கும்
விளை நிலம் வலைச்சரம்!
கட்டுரைத் தேன் தென்றல் தழுவிடும்
மேனி வலைச் சரம்
செந்தமிழ் இலக்கியம் பைந்தமிழ் இலக்கணம்
பிறக்கும் கருவறை வல்லோர்
நிறைந்த வலைச்சரம் வாழி!

புதுவை வேலு

Citiinc said...

என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
  நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
  மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
  வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
  தொடர்பு: zechkovivan@mail.ru
  அல்லது greskychanosky@post.cz
  வந்து ஒரு வரும் அனைத்து

Citiinc said...

என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
  நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
  மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
  வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
  தொடர்பு: zechkovivan@mail.ru
  அல்லது greskychanosky@post.cz
  வந்து ஒரு வரும் அனைத்து

LinkWithin

Related Posts with Thumbnails