Sunday, November 15, 2009

நண்பர் கேபிள் சங்கரின் தந்தையார் அமரர்.பாலசுப்பிரமணியனுக்கு அஞ்சலிகள்.

பிரபல பதிவர், அன்பு நண்பர் கேபிள் சங்கர் அவர்களுடைய தந்தையார் பாலசுப்பிரமணியன் அவர்கள், நேற்று 14.11.2009 சனிக்கிழமை அன்று காலமாகியுள்ள செய்தி கிடைத்தது. இந்த செய்தி நான் உட்பட பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் பெரும் துக்கரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிர் கொடுத்த, ஆயிரம் கோடி தெய்வங்களிலும்மேலான ஒரு தந்தையின் இழப்பு என்பது ஈடு செய்யப்படமுடியாத ஒரு பேரிழப்பே.
எத்தனை ஆறுதல் வார்த்தைகள் கூறியோ, இயற்கையின் வழமையினை நினைத்தோ அதை ஆற்றமுடியாது.

இந்த நிலையில் ஒரு அன்பான தந்தையினை இழந்து தவிக்கும் அன்பு நண்பன், கேபிள் சங்கர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும்
என் சார்பிலும் பதிவுலக நண்பர்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

4 comments:

தங்க முகுந்தன் said...

எமது அனுதாபங்களையும் சங்கரிடம் நேரில் தெரிவியுங்கள்!

சயந்தன் said...

பதிவர் கேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

டிலான் said...

கேபிள் சங்கரின் தந்தையாரின் பிரிவு அறிந்து வருந்துகின்றேன். சங்கருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது தந்தையாரின் ஆன்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றேன்.

கவிஞர்.எதுகைமோனையான் said...

கேபிள் சங்கர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails