Friday, August 6, 2010

வேற்றுமொழிக்கதைகள்>>>>03. மொஸ்கோத் திருடன்.


அதிகாலைநேரமே ரூஷா நகர வர்த்தக தொகுதியில் பரபரப்பு தொடங்கிவிட்டது.
பாரிய இரும்பு விற்பனை கடை ஒன்றில் பல இலட்சம் ரூபிள்கள் கொள்ளைபோய் இருந்தது. கடையின் வலதுபுற ஓரமாக கன்னமிடப்பட்டு துணிகரமாக அதேநேரம் மிகச்சாதுரியமாக கொள்ளையிடப்பட்டிருந்தது.
உடனடியாக யாரும் உள்நுளைய அனுமதிக்கப்படவில்லை. மொஸ்கோ நகரப் போலீஸார் இரும்புக்கடையினைச்சுற்றி தடைவேலிகளை அமைத்திருந்தனர்.

சற்று நேரத்திற்கெல்லாம் காவற்துறை அதிகாரி ஜோர்ஜிலி அந்த இடத்திற்கு விரைவாக வந்து, சற்று நிதானமாக நின்று அந்த கடையை ஆழமாக நோட்டமிட்டார். பின்னர் கன்னமிடப்பட்ட வாசல்வழியாக உள்நுளைந்து மெதுவாக ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தார். பணம் இரும்பு பெட்டகத்தினுள்ளே வைக்கட்டு பூட்டப்பட்டிருந்ததாக கடையின் உரிமையாளர் கூறியிருந்தார்.
இரும்பு பெட்டகமோ எந்தவித சேதங்களும் இன்றி மிக இலாவகமாக திறக்கப்பட்டு, பணம் அத்தனையும் திருடப்பட்டிருந்தது. ஜோர்ஜிலி அதிசயத்துடன் நெற்றியை சுருக்கிக்கொண்டார்.

தனது வழமையான பாணியிலேயே கடையினை முழுதாக ஆராய்ந்தார். ஏதாவது துப்பு கிடைக்கின்றதா என்று பார்த்தார். அதிசயம்!! கால் அடையாளம்கூட நிலத்தில் பதியப்பட்டிருக்கவில்லை. பிரிஸ்வெட், இஸ்ரா நகரங்களில் இடம்பெற்ற களவுப்பாணியினை இது ஒத்திருந்ததை அவர் குறிப்பெடுத்துக்கொண்டார்.
சட்டென்று பொறி தட்டவே விரைந்துசென்று காசாளர் மேசைமீது நோட்டமிட்டார்.
ஆம்..அவர் எதிர்பார்த்தது கிடைத்தது.

ஒரு ரூபிள் நாணையத்தில் மூன்று ஓட்டைகள் இடப்பட்டிருந்தன. ஆம்..இது அவர்கள்தான் அல்லது அவன்தான் என தனக்குள் சொல்லிக்கொண்டார்.
ஜோர்ஜிலியின் கோபம் கண்களில் தெரிந்தது.
அவருக்கு இந்த சம்பவங்கள் மனதில் பெரும் சவாலகவே இருந்தது.

காவல் நிலையம் வந்து, தனது இருக்கையில் இருந்த வண்ணம் அந்த மூன்று ரூபிள் நாணையங்களையும் எடுத்து எதையோ ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தார்.
ஒருபக்கம் கவர்ணரின் நச்சரிப்பு, மறுபக்கம் எத்தனை சிறமைகள் கொண்டு, பல கலவரங்களையே அடக்கி, எத்தனை பெரிய கொள்ளை, கொலைக்காரக்கும்பல்களையே சில நாட்கணக்கில் அடக்கிவிட்ட தனக்கு இது பெரும் சவாலாக வந்துவிட்டதே என்று மனம் பேதலித்துக்கொண்டிருந்தது.

மூன்று கொள்ளைக்கும் எதாவது தொடர்பு உள்ளதா என்று ஆராய்ந்துபார்த்தார்.
ஓன்று மெடிக்கல் சொப், அடுத்தது ஒரு ட்ரஸ்ட், மூன்றாவதாக இப்போது இரும்புக்கடை. வர்த்தக ரீதியிலும் ஒருவருக்கு ஒருவர் அவர்களிடம் தொடர்பு கொண்டிருக்கவில்லை. ஆனால் கொள்ளை நடந்த இடங்களில் காவற்துறையினரை கோபப்படுத்தும்படியாக ஒவ்வொரு களவுக்கும் ஒவ்வொரு துளைகளாக ரூபிள் நாணயத்தில் ஓட்டைபோட்டுச்செல்வது அவருக்கு பல கேள்விகளை மனதிற்குள் கொண்டுவந்துகொண்டிருந்தது. ஆனால் மூன்று கொள்ளைகளுக்கும் இடையில் உள்ள ஒரு சிறிய தொடர்பை கவனிக்காமலேயே நகர்களை கண்காணிப்பதற்கும், துப்புக்கள் துலக்குவதற்கும் அதிகாரிகளை பணித்துவிட்டு அன்றாட கடமைகளில் ஈடுபடத்தொடங்கினார்…முடியவில்லை அந்த ரூபிள் நாணையங்கள் அவர் மனதை குமுறிக்கொண்டிருந்தன.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரொயிட்ஸ்க் நகரம் கலவரப்பட்டுக்கொண்டிருந்தது. ஆம்..அரச வங்கி ஒன்றில் கொள்ளை போய் இருந்தது. இம்முறை கன்னமிடப்பட்டிருக்கவில்லை. வங்கியின் பின்புற கதவு உடைகப்பட்டு உள்ளே மேலும் நான்கு கதவுகள் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் 10 இலட்சம் ரூபிள்கள் மட்டுமே திருட்டு போயிருந்தன. அங்கே இங்கே பார்த்து நேரத்தை வீணடிக்காமல் நேரே காசாளர் கவுண்டர்களில் நாணையத்தை தேடினார் ஜோர்ஜிலி.
எதிர்பார்த்ததுபோலவே ஒரு ரூபிள் நாணயம் இருந்தது.
அதில் ஐந்து துளைகள் போடப்பட்டிருந்தன. ஓ…அசிங்க வார்த்தை ஒன்றை பேசி தன் துடையில் அடித்துக்கொண்டார் ஜோர்ஜிலி.

உடனடியாக வேறு எங்காவது களவுபோனதாக தகவல்கள் வந்துள்ளனவா என்று சக அதிகாரிகளிடம் வினவினார் ஜோர்ஜிலி. அதேநேரம் உள்ளே வந்த அவரின் உதவி அதிகாரி ஒருவர் இதே நகரத்தில் உள்ள முக்கிய பிரபலம் ஒருவரின் வீட்டில் களவு போயிருந்ததாக தெரிவித்தார். விசாரணைகளுக்கு வங்கியில் சில அதிகாரிகைளை பணித்துவிட்டு குறிப்பிட்ட அந்த வீட்டை அடைந்தார் ஜோர்ஜிலி.
அந்தப்பிரபலமோ கொள்ளையர்கள் வந்து போனதே தமக்கு தெரியவில்லை, காலையில் எழுந்து பார்த்தால் களவு போனவிடயம் தெரிந்தது என்றார் என்றார்.
சற்று முற்றும் தேடிப்பார்த்தில் அங்கிருந்த மேசைமீது இருந்தது நான்கு துளைகளுடன் ஒரு ரூபிள் நாணயம்.

-அடுத்த பதிவில் மொஸ்கோ திருடன் வருவான்.

7 comments:

ம.தி.சுதா said...

வரட்டும் வரட்டும் எப்பிடிப் பிடிக்கிறேன் பாருங்கள். இல்லாட்டி ஒண்ணு செய்யலாம் காசில் ஓட்டை போட இடமில்லாட்டி திருட்டை விடக்கூடும் அது வரை கேஸை இழுத்தடிப்போம்.

Anonymous said...

click and read


ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

.........

தர்ஷன் said...

அடுத்த பாகத்துக்கு வெய்ட்டிங்

balavasakan said...

அய்யோ கடசில கவுத்திட்டீங்களே என்னா சஸ்பென்சு...

Pradeep said...

கண்டுபிடித்துவிட்டேன்.அடுத்த கட்டங்களில் பல கசமுசாக்களும் வருமே ஜனா! எப்படி எழுதப்போகின்றீர்கள்?

டிலான் said...

கவனம் ஜனாஅண்ணா

Kiruthigan said...

எப்படி தொடரை முடிக்க போகிறீர்களென பரபர என காத்திருக்கின்றேன்..
அருமை..

LinkWithin

Related Posts with Thumbnails