Friday, July 3, 2009

இந்தியாவின் பெரும்பான்மையானவர்களின் “ஹலோக்களின் சொந்தக்காரர்”.


சீர்மையான நிர்வாகம், மேலும்மேலும் சிறப்பு, சிறந்தவைகளின் தொடர்பு, அடுத்த கட்டங்கள் பற்றிய தெளிவு இவற்றுக்கு அர்த்தம் என்ன வென்றால் கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம், பார்தி குழுமத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான சுனில் பார்தி மிட்டல் என்று.
“ஏர்டெல்” இந்தியர்களின் தொலைத் தொடர்பின் மற்றுமொரு பெயர் என்ற அளவுக்கு அந்த நிறுவனம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டும் இன்றி பட்டி தொட்டி எல்லாம் தன் கிளைகளைப்பரப்பி நிற்கின்றது. இன்று தேச எல்லைகளையும் கடந்து சிறி லங்காவிலும் ஏர்டெல் தன் சேவையினை விஸ்தரித்துள்ளது.

இந்தியாவின் 27 சதவிகித மொபைல் சந்தாதாரர்கள் இவர் வசமுள்ளனர். அதாவது நூறு மில்லியன் இணைப்புக்கள். உலகின் மிகப்பெரிய மொபைல் சேவை நிறுவனங்களில் மூன்றாவது இடத்தில் ஏர்டெல் உள்ளது.
இத்தனை சிறப்புக்களுக்குரியவராக சுனில் மிட்டல் இருந்தபோதிலும் இன்றும் அவரது சுறுசுறுப்பிலும், தொழிற்பாட்டிலும், சிறு ஆறுதலையும் காணமுடியவில்லை. மேலும் மேலும் சிறப்பு என்ற தத்துவத்தின்படி மேலும் பல தொழிநுட்பங்களை (3ஜீ உட்பட) தமது சேவையில் புகுத்த அவர் அயராது பாடுபட்டுவருகின்றார்.


சுனில் மிட்டலின் தந்தை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர், என்ற போதிலும் சுனில் மிட்டல் அவரது அடியை ஒற்றி அவரது பெயரை வைத்து வெற்றிபெற்றவர் அல்லர். 1957ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம், 23 ஆம் திகதி ஷட் பவுல், லலிதா தம்பதிகளுக்கு, பஞ்சாப்பின் லுத்தியானாவில் பிறந்த சுனில் மிட்டல், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் அரசியல் ஆகிவற்றில் பட்டம் பெற்றவராவார்.
தனது தந்தை வழியில் அரசியலில் இவர் இறங்க ஆதரவுகள் பல இருந்தபோதிலும் அதில் நாட்டம் கொள்ளாத இவர், உச்ச பெறுமானத்தை தருவது வியாபாரமே என்ற கொள்கையுடன் இருந்தார். இதன் படி தனது நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் சைக்கிள், மற்றும் உதிரிப்பாகங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் ஒரு வியாபாரத்தை 1979 ஆம் அண்டு தொடங்கி நடத்தினார். இதற்காக இவர் தனது தந்தையிடம் பெற்ற தொகை 20 000 ரூபா. அதன் பின்னர் டில்லி பம்பாய் ஆகிய இடங்களுக்கிடையில் 1981 வரை பல வியாபரங்களில் அவர் ஈடுபட்டிருந்தார்.

1981 ஆம் அண்டு ஜப்பானில் இருந்து ஜெனரேட்டர்களை வாங்கி இந்தியாவில் விற்பனை செய்யும் தொழிலை அவர் ஆரம்பித்திருந்தார். எனினும் அன்று இறக்குமதிக்கு இந்திய அரசாங்கம் தடை விதித்தமையினால் அவரால் அந்த வியாபாரத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. இருந்தபோதிலும், தொழில் நுணுக்கங்கள், விளம்பரப்படுத்தல் போன்ற விடயங்களை அவர் இதன்போது கவனித்து வைத்திருந்தார்.


1990 களில் சுனில் மில்டனின் கவனம் தொலைத் தொடர்பில் திரும்பியது அப்போது தான் அவர் தனது வெற்றிப்பாதையின் முதலாவது அடியினை எடுத்துவைக்கின்றார் என்பது இந்தியாவுக்கோ, உலகத்திற்கோ தெரிந்திருக்க எந்த நியாமும் இல்லை.
90 களின் ஆரம்பங்களில் தமது தாய்வானிய விஜயத்தின்போது அவர் ஆழுத்தும் தன்மை கொண்ட தொலைபேசி மொடல்களைக்கண்டு அவற்றை குறிப்பெடுத்து வந்து, தாம் ஸ்தாபித்த பார்தி ரெலிகொம் லிமிட்டட் மூலம் ஜெர்மனிய தயாரிப்புக்களான “சிமென்ஸ்” போன்களை வாங்கி இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். அடுத்த கட்டங்களாக 90 களின் ஆரம்பங்களிலேயே கோர்ட்லெஸ் போன்கள், மற்றும் நவீன ரக பக்ஸ் மெசின்களையும் இறக்குமதி செய்து அறிமுகப்படுத்தியது பார்தி ரெலிகொம் லிமிட்டட்.

இந்த நிலையில் வாழ்க்கையின் முக்கியமான திருப்பக் கட்டமாக 1992 ஆம் அண்டு சுனில் மெட்டலுக்கு அமைந்திருந்தது. ஆம் இந்திய அரசாங்கம், மொபைல் போன் சேவைக்கான அனுமதியினை முதற்தடவையாக தனியார் ஒருவருக்காக இவருக்கு வழங்கியமைதான் அது. ஆரம்பத்தில் பிரெஞ்ச் சேவை ஒன்றின் உதவியுடன் இவர் தமது சேவைகளை ஆரம்பித்தார். அதன் பின்னர் தமது மொபைல் சேவையினை டில்லிக்கு வழங்கும் நோக்கில் அவர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருந்தார். 1995 ஆம் ஆண்டு “பார்தி செலுலர் லிமிட்டட்” தமது பிராண்ட் நாமமான “ஏர்டெல்” என்ற சொல்லின் கீழ் கொண்டுவரப்பட்டது.
ஆரம்பத்தில் டில்லிக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் கடின உழைப்பு, மிட்டலின் சுறுசுறுப்பான தொழிற்பாடு, முயற்சிகளால் விஸ்பரூபம் எடுக்கத் தொடங்கியது. முதன் முதலில் இந்தியாவில் சர்வதேச அழைப்புக்களை ஏற்படுத்திக்கொண்டுத்த தனியார் தொலைபேசிச்சேவை என்ற பெருமையினையும் ஏர்டெல் பெற்றுக்கொண்டது.
டில்லியில் மையம் கொண்ட இந்த “ஏர்டெல் புயல்” இன்று முழு இந்தியாவின் தொலைத்தொடர்பின் நாமமாக மாறி, இன்று சிறி லங்காவையும் மையமிடத்தொடங்கிவிட்டது.


2002 ஆம் அண்டின் சர்வதேச விருதான “தொழிநுட்ப மனிதன்” என்ற விருதை சுனில் மில்டன் பெற்றார், இவ்வாறு அவரை விருதுகள் துரத்த ஆரம்பித்தன. எனினும் இன்றும்கூட அவர் ஓய்நது;விட்டதாக இல்லை.
குறிப்பாக ஒரு பிரபலமான உலக சஞ்சிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஒவ்வொரு மனிதனின் வெற்றிகளின் பின்னாலும், எத்தனை கரடுமுரடான பாதைகளும், சில சறுக்கல்களும், அதிருப்திகளும், அவமானங்களும் வழக்கொழிந்து கிடக்கின்றன என்பதை நான் எனது அனுபவத்தின் மூலம் கண்டுகொண்டேன். சாதித்தவர்கள் என்று சொல்வது சுலபம் அந்த சாதனைகளின் அவர்களின் பாதைகள் நினைததுப்பார்க்கமுடியாதவைகள்.
ஓய்வு என்பது இப்போதைக்கு எனக்குத் தேவைப்படாது. நான் நாளைய ஓய்வுக்காக இன்று கடினமாக வேலை செய்கின்றேன். இதேபோல நாளைய ஓய்வுக்காக மிகக்கடினமாக இன்று வேலைசெய்பவன் ஒருவன் தோற்றுப்போவது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

3 comments:

Pradeep said...

குளுகுளு அறையில் உட்கார்ந்துகொண்டு, கடைநிலை வாடிக்கையாளரைக் கவர்வது சாத்தியமில்லை. தரையில் இறங்கி அவர்களை நெருங்கவேண்டும். உளப்பூர்வமாகத் தொட்டுப் பார்க்கவேண்டும். இந்த அணுகுமுறைதான், சுனில் மிட்டலை இந்தியத் தொலைத் தொடர்புத்துறையின் தவிர்க்கமுடியாத சக்தியாக உருமாற்றிய தாரக மந்திரம்.

குப்பன்.யாஹூ said...

nice post, he is gr8 man, but Airtel becomes stronger after it acquired Touchtel

shazini said...

அந்த மனிதனின் கடின உழைப்பு இலங்கையில உள்ள airtel நிறுவனத்தில் இல்லை என்பதே உண்மை . அவர் இங்கு தோற்று விட்டார் என்பதே உண்மை

LinkWithin

Related Posts with Thumbnails