Thursday, July 9, 2009

பிறரின் சிரிப்புக்காக முட்டாள்ப்பட்டத்தையும் சந்தோசமாக ஏற்கும் சர்தாஜிகள்.


மனிதனது உணர்வின் வெளிப்பாடுகளில், மகிழ்ச்சிக்குரிய ஒரு புள்ளியாக நகைச்சுவைகள் உள்ளன. உண்மையிலேயே இன்றைய இயந்திரத்தனமான உலகத்தில் சிரிப்பினை தொலைத்துவிட்டு இறுகிய முகத்துடன் மனிதன் எதையோ நோக்கி பலவற்றை தொலைத்துக்கொண்டு செல்கின்றான்.
விஞ்ஞானம் இதை கூர்ப்படைகின்றான், நாகரிகம் அடைந்து செல்கின்றான் என்கின்றது. உண்மையில் மனிதன் நாகரிகம் அடைந்துவிட்டானா? என்ற கேள்விக்கு உண்மையான பதில் இன்னும் இல்லை என்பதாகே இருக்கும்.


இந்த நிலையில் பண்டைய காலங்களில் இருந்து ஒவ்வொரு இனத்தினரும், நகைச்சுவை உணர்வுகொண்டவர்களாக பல நகைச்சுவை பாத்திரங்களை முன்னிறுத்தி நகைச்சுவைகளை எழுதியும் சொல்லியும் வந்தனர்.
பரமார்த்த குருவும் சிஷ்யர்களும், முல்லாவின் கதைகள், மாதனமுத்தா கதைகள்,
பலரையும் கவர்ந்த சர்தாஜி ஜோக்ஸ்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்தியாவிலே பலவேறு தரப்பட்டோரினாலும், பல ஊடகங்களில்க்கூட “சர்தாஜி ஜோக்ஸ்” என்பது மிகப்பிரபலமாக சொல்லப்பட்டு அனைவரினதும் அபிமானத்தைப்பெற்றதாக இன்றும் உள்ளது.


அரசியல், மதத் தீவிரவாத சக்திகளும், இந்திய கொள்ளைவகுப்பு பார்ப்பன் ஆதிக்க சக்திகளும் ஆரம்பங்களில் இருந்து தமக்கு பெரும் இட்டுக்கட்டாக இன ரோசத்துடன் எதிர்த்த சீக்கியர்களை (இன்று நிலை வேறு) வேண்டும் எனவே அவமானப்படுத்துவதற்காகவே சர்தாஜிகளை முட்டாள்களாக்கி சந்தோசப்பட்டுக்கொண்டனர் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.
இது குறித்து ஊடகம் ஒன்று நன்கு படித்த, உயர் பதவியில் இருக்கும் சீக்கியர்கள், சீக்கிய உயர் கல்வி கற்கும் மாணவர்களிடம் எடுத்த கருததுக்கணிப்பில் “ மற்றவர்களின் கண நேர சிரிப்புக்கு, துக்கத்தை மறந்த அவர்கள் முகம் மலர்வதற்கு ஏதோ ஒருவகையில் நாம் காரணமாக சித்தரிக்கிகப்படுகின்றோம். அந்தவகையில் எம்மை முட்டாள்கள் ஆக்கினாலும் எம்மால் மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படமால் அவர்களுக்கு மனமகிழ்ச்சியையே வழங்ககின்றோம்” என்று அவர்களில் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான அவர்களது கருத்து அவர்களின் பெருந்தன்மையினையே காட்டுகின்றது.

சரி, தலைப்பில் இருந்தே சர்தாஜி ஜோக்ஸை படிக்கவேண்டும் என்று ஆர்வமாக இருக்கும் உங்களின் எணத்தை புரிந்துகொண்டு, அனைத்து மேன்மக்களான சர்தாஜிகளிடமும், அவர்களின் எண்ணப்படியே இந்த நகைச்சுவைகளையும் மற்றவர்களின் சிரிப்புக்காக சர்தாஜி ஜோக்ஸ்களில் தேர்தெடுக்கப்பட்ட சில ஜோக்ஸ்ஸை உங்களுடன் பகிர்கின்றேன்.

நெப்போலியனும் சர்தாஜியும்.

நம்ம சர்தாஜி ஒருநாள் நூலகத்திற்கு சென்றிருந்தார். அங்கே நெப்போலியனின் படமும் போட்டு..”முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது” என்ற அவரது வசனமும் போடப்பட்டிருந்தது. அதை வாசித்த சர்தாஜி, நெப்போலியனின் படத்தைப்பார்த்து
இப்ப நீங்கள் இதைச்சொல்லி என்ன பிரியோசனம்.? அகராதியை வாங்க முதல் நீங்கள் அதை கண்டிப்பாக சரிபார்த்திருக்கவேண்டும். வாங்கிவிட்டு குறைகூறக்கூடாது என்றார்.

டிடக்ரிவ் சர்தாஜி

புலனாய்வு நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதற்காக நம்ம சர்தாஜி விண்ணப்பித்திருந்தார். சர்தாஜிக்கு அந்த நிறுவனத்தில் இருந்து நேர்முகப்பரீட்சைக்கு தோற்றுமாறு அழைப்பு வந்தது. சர்தாஜி அங்குவந்து காத்திருந்தார். அவருடன் ஒரு இத்தாலியரும், ஒரு யூதரும் அதேவேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தனர். முதலில் உள்ளே போன யூதரிடம்….புலனாய்வு அதிகாரி..ஜேசுவைக்கொன்றவர்கள் யார்? என்று கேள்வி கேட்டார்? யூதர் அது நிற்சயமாக ரோமர்கள்தான் என்றார்..சரி நீங்கள் போகலாம் என்றுவிட்டு அடுத்ததாக இத்தாலியரை அழைத்தார் புலனாய்வு அதிகாரி…அவரிடமும் ஜேசுவைக்கொன்றவர்கள் யார்? என்று கேட்டார். நிச்சயமாக அது யூதர்கள் தான் என்று அடித்துக்கூறினார் இத்தாலியர்…சரி..நீங்கள் போகலாம் என்று விட்டு கடைசியாக நம்ம சர்தாஜியை கூப்பிட்டார் புலனாய்வு அதிகாரி.. சர்தாஜியிடமும் ஜேசுவைக்கொன்றவர்கள் யார்? என்று கேட்டார். கொஞ்சம் யோசித்த சர்தாஜி எனக்கு கொஞ்ச நாட்கள் தருகின்றீர்களா கண்டுபிடித்து சொல்கின்றேன் என்றார். அதிகாரியும் சரி போய்வாருங்கள் அனால் அடுத்த வாரம் இதே நாளுக்கிடையில் சொல்லவேண்டும் என்றார்.
வீடு செல்லும் வழியிலேயே சர்தாஜியைக்கண்ட அவரது மனைவி…எப்படி நேர்முகத்தேர்வு? எனக்கேட்டார்..அதற்கு சர்தாஜி…ம்ம்ம்ம்..ரொம்ப நல்லது..எனக்கு வேலை கிடைத்துவிட்டது. ஒருவரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கவேண்டி உள்ளது. உன்னுடன் கதைக்க நேரம் இல்லை இன்னும் ஒருவாரத்துக்குள் அவர்களை பிடிக்கவேண்டும் என்றுவிட்டு ஓடினார் சர்தாஜி.

நேர்முகப்பரீட்சையிலும் கொப்பி அடித்த சர்தாஜி

நம்ம சர்தாஜி அரசாங்க வேலை ஒன்றுக்காக விண்ணப்பித்து நேர்முகப்பரீட்சைக்காக வெளியில் காத்திருந்தார். உள்ளே இன்னும் ஒருவர் நேர்முகப்பரீட்சையை சந்தித்துக்கொண்டிருந்தார்.
நிர்வாகி - இந்தியாவுக்கு எப்போ சுதந்திரம் கிடைத்தது?
மற்றவர் - பல ஆண்டுகள் தள்ளிப்போய் இறுதியில் 1947 இல்.
நிர்வாகி -இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தவர் யார்?
மற்றவர் - பலர்..இதில் ஒருவரை சொல்லி மற்றவர்களை அவமதிக்க
என்னால் முடியாது.
நிர்வாகி – நல்லது. எயிட்ஸ் நோயை தடுக்கமுடியுமா?
மற்றவர் - இது பற்றிய பரிசோதனைகள் நடந்துவருகின்றன. எனவே
அவை வெளியிடப்பட்டதும் திட்டவட்டமாக சொல்கின்றேன்.
மேற்படி மற்றவரின் பதிலை கேட்ட நிர்வாகிகள் அவரை கைலாகுகொடுத்து வாழ்த்துவதையும், மெச்சுவதையும் கண்ணாடியினூடாக நம்ம சர்தாஜி பார்த்துவிட்டார். அவர் வெளியில் வந்ததும் அவரிடம் ஓடிச்சென்று..நண்பரே உள்ளே அவர்கள் எத்தனை கேள்வி கேட்டார்கள்? என்று கேட்டார்..அவரும் 3 என்றார்…..சரி அப்படி என்றால் அந்த 3 கேள்விக்கும் நீங்கள் சொன்ன பதிலை எனக்கு சொல்லுங்கள் என்றார் அவரும் சொன்னார்..
அடுத்து உள்ளே போன நம்ம சர்தாஜி நிர்;வாகியிடம் தெரிவித்தவைகள்
நிர்வாகி – நீங்கள் எப்போது பிறந்தீர்கள்?
சர்தாஜி - பல ஆண்டுகள் தள்ளிப்போய் இறுதியில் 1947 இல்.
நிர்வாகி – உங்களது தந்தை பெயர் என்ன?
சர்தாஜி - பலர்..இதில் ஒருவரை சொல்லி மற்றவர்களை அவமதிக்க
என்னால் முடியாது.
நிர்வாகி – உனக்கு என்ன பைத்தியமா?
சர்தாஜி - இது பற்றிய பரிசோதனைகள் நடந்துவருகின்றன. எனவே
அவை வெளியிடப்பட்டதும் திட்டவட்டமாக சொல்கின்றேன்.

பில்கேட்சுக்கு சர்தாஜி எழுதிய கடிதம்.

ஐ.பி.எம் கணனி ஒன்றை வாங்கிய சர்தாஜி அதில் எம்.எஸ்.ஒபிஸ், மற்றும் விண்டோஸ் ஆகியவற்றை ஆராய்து அதில் உள்ள குறைபாடுகள் பற்றி மைக்கிரோ ஸொப்ட் அதிபர் பில் கேட்சுக்கு எழுதிய கடிதத்தை படித்தப்பாரங்கள்…

Dear Mr Bill Gates,

This letter is from Banta Singh from Punjab. We have bought a
computer for our home and we found problems, which I want to bring to
your notice.

1. After connecting to internet we planned to open e-mail account and
whenever we fill the form in Hotmail in the password column, only ****** appears, but in the rest of the fields whatever we typed appears, but we face this problem only in password field.

We checked with hardware vendor Santa Singh and he said that there is no problem in keyboard. Because of this we open the e-mail account with password *****.

I request you to check this as we ourselves do not know what the
password is.

2. We are unable to enter anything after we click the 'shut down '
button.

3. There is a button 'start' but there is no "stop" button. We request you to check this.

4. We find there is 'Run' in the menu. One of my friend clicked 'run' has ran upto Amritsar! So, we request you to change that to "sit", so that we can click that by sitting.

5. One doubt is that any 're-scooter' available in system? As I find only 're-cycle', but I own a scooter at my home.

6. There is 'Find' button but it is not working properly. My wife lost
the door key and we tried a lot for tracing the key with this ' find',
but unable to trace. Is it a bug??

7. Every night I am not sleeping as i have to protect my 'mouse' from
CAT, So i suggest u to provide one DOG to protect from the cat.

8. Please confirm when u are going to give me money for winning
'HEARTS' (playing cards in games) and when are u coming to my home to
collect ur money.

9. My child learnt 'Microsoft word' now he wants to learn 'Microsoft
sentence', so when u will provide that?

10. Hey, I brought computer, cpu, mouse and keypad there is only one
icon with 'MY Computer', where is remaining ?

11. And in 'MY Pictures' there is not even single photo of mine, So when u will keep my photo in that.

Thanks
Banta Singh…

நாள்பூராகவும் வானத்திலேதானா???

மும்பையில் இருந்து ரொரன்டோவுக்கு விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தார் நம்ம சர்தாஜி. நீண்ட தூரம் என்பதால் தூங்கியிருந்த சர்தாஜிக்கு விமானியின் ஒலிபெருக்கி ஊடான அழைப்பு திடுக்கிடவைத்தது.
கனவான்களே…சிமாட்டிகளே…எமது விமானம் இன்னும் 15 நிமிடத்தில் ரொன்டோ விமானநிலையத்தை அடைந்துவிடும் என்றார் விமானி…
அடுத்த 10ஆவது நிமிடத்தில் கனவான்களே…சிமாட்டிகளே…எமது விமானத்தில் 4 என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன அவற்றில் ஒன்று வேலை செய்ய முடியாமல் போய்விட்டது ஆகவே இன்னும் ஒரு மணித்தியாலம் தாமதித்தே நாம் ரொடன்டோவை அடைவோம். பயப்படத்தேவையில்லை எமது பொறியிலாளர்கள் செயற்பட்டுக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார் விமானி…
அடுத்த ஒரு மணித்தியாலத்தில்… கனவான்களே…சிமாட்டிகளே…எமது விமானத்தில் அடுத்த ஒரு இன்ஜினும் வேலை செய்யவில்லை எனவே வெறும் இரண்டு என்ஜினுடன் நாம் பயணிக்கவேண்டியுள்ளதால் நாம் ரொரன்டோவைச்சென்றடைய இன்னும் 2 மணித்தியாலங்கள் ஆகும்.. பயப்படத்தேவையில்லை எமது பொறியிலாளர்கள் செயற்பட்டுக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார் விமானி…
அடுத்த இரண்டாவது மணித்தியாலத்தில் கனவான்களே…சிமாட்டிகளே…எமது விமானத்தில் அடுத்த ஒரு இன்ஜினும் வேலை செய்யவில்லை எனவே வெறும் ஒரு என்ஜினுடன் நாம் பயணிக்கவேண்டியுள்ளதால் நாம் ரொரன்டோவைச்சென்றடைய இன்னும் 4 மணித்தியாலங்கள் ஆகும்.. பயப்படத்தேவையில்லை எமது பொறியிலாளர்கள் செயற்பட்டுக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார் விமானி…
பொறுக்கமுடியாத சர்தாஜி..எழுந்து நின்று அடுத்த என்ஜினும் பழுதானால் நாங்கள் நாள்பூராவும் வானத்தில்த்தான் நிற்கவேண்டிவரும் போல என்றார்…

sardar wrote an essay
Our sardar had to learn two essays for the exam. One is about friend and the other is about father. He had studied only about friend. But in the exam the essay asked was about father. Sardar dint give up. He replaced father with friend in the essay and it read:

"I am a very fatherly person, I have lots of fathers, My best father is my neighbor."

He ended the essay as, "A father in need is a father in deed....!"

3 comments:

Pradeep said...

என்னடா...நவரசங்களையும் உள்ளடக்கியதாக உங்கள் பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. நகைச்சுவையினை காணவில்லையே என நினைத்திருந்தேன். இந்த பதிவை பதிந்ததன் மூலம், தாங்கள் ஒரு நவரச எழுத்தாளன் ஆகியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள்.

Unknown said...

I think Indians mostly imitate Sardajies . But today Indian prime minister also one of Sardaji.
You are absolutely right. Indian Law makers (Brahmin sociality) think all other Societies are foolish (Not only sardajies)

Anonymous said...

sardar wrote an essay
ha ha ha ...Vayiru Kulunka Srikka vaikirathu...

LinkWithin

Related Posts with Thumbnails