Monday, October 3, 2011

தொழில் மேன்மைக்கு படியமைக்கும் வலுவூட்டல்.


வரையறுக்கப்பட்ட வளங்களை அடைவதற்கு வரையறையற்ற தேவைகளுடன் இன்று உலகில் வாழும் ஒவ்வொருவரும் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

எங்கள் தேவைகள், எங்கள் இலட்சியங்கள் இவை என வரையறைகளை வகுத்துக்கொண்டு அந்த ஓட்டத்தில் பங்கு பற்றுபவர்கள் பலர் தமது விடா முயற்சியினால் குறிப்பிட்ட அளவுக்கு முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் ஏதோ வேலை ஒன்று இருந்தால் சரி, கையில் கொஞ்சம் பணம் இருந்தால் அதுபோதும் என்ற எண்ணத்துடனேயே இன்று பலர் அவர்களின் பின்னால் உலக ஓட்டத்தில் ஓட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

நாளைகள் என்ற சிந்தனைகளே அற்ற நிலையில் இன்று பல இளைஞர்கள் தங்கள் காலங்களை வீணாக்கிக்கொண்டிருப்பது இதில் கொடுமையிலும் கொடுமையானது.

இன்று உலகத்தில் சாதித்து காட்டியவர்கள் ஒவ்வொருவரையும் எடுத்தப்பாருங்கள், அவர்கள் வீட்டு கதவை எந்த ஒரு அதிஸ்ட தேவதையும் வந்து ஒருமுறை தட்டிவிட்டுப்போகவில்லை.

அவர்கள் தங்கள் சொந்த முயற்சியாலும், விடாமுயற்சியாலும், தங்கள் இலட்சியங்களில் கொண்டிந்த இலட்சிய வெறிகளாலும், எல்லாவற்றையும்விட அவர்கள் தங்கள் தொழில்களின் மேல் வைத்திருந்த அர்ப்பணிப்பகளாலுமே அந்த எல்லைகளை அடைந்திருக்கின்றார்கள் என்பதற்கு மாற்கருத்து ஏதாவது இருக்கமுடியுமா?

ஒருவகையில் சொல்லப்போனால் இப்பேற்பட்ட கொள்கைகள் எந்தக்கணமும் மாறாத, அதேவேளை எதிர்மறை சிந்தனைகள் என்ற எண்ணமே அவர்களின் மனதில் உதிக்காததையே அதிஸ்டம் என்றுவேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

நாம் இன்று பார்க்கப்போகும் விடயம் இந்த வெற்றியாளர்கள் வெற்றிபெறுவதற்கு அவர்களுக்கு ஒரு உந்துதல், வலுவூட்டல்கள் எவ்வளவு அவசியம் என்பதையும், சாதிக்கத்துடிக்கும் ஒருவனுக்கு இப்பேற்பட்ட வலுவூட்டல்கள் எத்தனை தூரம் வெற்றிகளுக்கான படிக்கட்டுகளாக அமையும் என்பதையே.


ஒருவனுக்கான வலுவூட்டல் என்பது அன்றாடம் அவன் காணும் காட்சிப்புலங்களிலேயே அவனுக்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றது என்கின்றார் உலகின் தலைசிறந்த வலுவூட்டல் பயிற்சியாளர் ஜோன் பெக்லம்.

ஒருவனுக்கு இவ்வாறான வலுவூட்டல்கள் ஒவ்வொரு கட்டத்திலும் அவனை சுற்றி அவனை வலுவூட்ட நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது.

கஜினி முஹம்மதுவுக்கு சிலந்தி காட்டியதுகூட ஒரு வலுவூட்டலே, அதேபோல, அரிச்சந்திரன் என்ற ஒரு நாடகத்தின் வலவூட்டலே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற சிறுவனை மகாத்மா ஆக்கியது.


ஆனால் இன்றைய வர்த்தகமய உலகத்தில் வலுவூட்டல் என்பது அத்தியாவசிய தேவையாகி வலுவூட்டல் என்பதே ஒவ்வொரு பெரிய நிறுவனங்களுக்கும் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது. காரணம் அப்படியான வலுவூட்டல் நிகழ்ச்சிகளின் பின்னர் கிடைத்த விடைகள் பிரமாதமாக அமைந்துவிடுவதனால்த்தான்.


பலர் நினைக்கலாம் இதெல்லாம் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நன்றாகத்தான் இருக்கின்றது ஆனால் செயற்படுத்தவதுதான் கஸ்டம். இப்படியே எல்லோரும் வலுக்கொண்டவர்களானால் உலகம் என்னத்துக்கு ஆவது என்று!

உண்மையில் கஸ்டம் என்று நினைத்து இதபோன்று கதைபேசுபவர்களை எந்த வெற்றியாளன் வந்தாலும், தேர்ச்சி பெற்ற வலுவூட்டல் பயிற்சியாளர் வந்தாலும் மாற்றமுடியாது. ஏன் என்றால் எவ்வளவுதான் வலுவூட்டல் கிடைத்தாலும் அதை நிறைவேற்ற தேவையான தன்னம்பிக்கை ஒவ்வொருவனினதும் மனங்களில்தான் உள்ளது.

நிற்க.... ஏன் ஒரு சிலர்தான் சிகரம் தொட்டவர்கள் வெற்றியாளர்களாக முன்னுக்கு நிற்கின்றார்களே என்பதற்கான கேள்விக்கு விடை இதுதான்.


உலகில் உள்ள மனிதர்கள் இன்று மூன்றுவகையினர் உள்ளனர்.

நல்லவர்கள், மேலே குறிப்பிட்டதுபோல கேள்விகேட்கும் எதிர்மறை சிந்தனையாளர்கள், அடுத்து வல்லவர்கள்.

இது கண்டிப்பாக அனைவரும் தெரியவேண்டிய விடையம் என்பதால் கொஞ்சம் தனித்தனியே பார்ப்போம்.


நல்வர்கள் யார்?

அனைத்துவிடயங்களையும் நல்லதாகவே பார்ப்பவர்கள் (மகாபாராதத்தில் யுதிஸ்திரன்போல) எளிதாக உணர்ச்சிவசப்படுபவர்கள், கடிவாளம் கட்டிய குதிரைகளைப்போல தங்களுக்கு வைக்கப்பட்ட கடமைகள் எவையோ அவற்றை பக்கவாக செய்துமுடிப்பவர்கள், இதற்கு அப்பால் சென்று சிந்திகத்தெரியாதவர்கள். தமது வாழ்வில் அனைத்து கட்டங்களிலும் நன்மைகளையே காணத்துடிப்பவர்கள். இவர்களுக்கு மற்றய இரண்டு பகுதியிரையும் கண்டு அறிய முடியாது. மனிதாபிமானம் என்ற வகையில் மற்றவர்களை திருப்திப்படுத்த தம் வாழ்க்கையை நாளாந்தம் இழந்துகொண்டிருப்பவர்கள்.


எதிர்மறையாளர்கள் யார்?

இவர்கள் சற்றும் இடத்தில் நேர்மை, கடமை, கண்ணியம், பொறுப்பு, என்பவற்றின் அகராதியே இருக்காது இவர்களுக்கு இவர்கள் செய்வதுதான் சரி. தாம் மனச்சாட்சிப்படி செய்வது தவறாக இருந்தாலும் தாம் செய்வது சரி என்று வாதிட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் குறுக்கு வழியில் வெற்றிகளை குறிவைப்பவர்கள். தொழில் செய்யுமிடவிசுவாசம் என்பது கிடையாது. அடிக்கடி தொழில்புரியும் இடங்கள் மாறிக்கொண்டே இருக்கும். அவற்றிற்கும் ஏராளமான காரணங்களை அடுக்க கூடியவர்கள் இவர்கள். தமது நலத்திற்காக எதையும் செய்யத்துணிவர்கள். பொறாமைக்குணம் பிறப்பிலேயே குடிகொண்டிருக்கும் இவர்களிடம்.


வல்லவர்கள் யார்?

இவர்களுக்கு நல்லவர்களையும் தெரியும், எதிர்மறையாளர்களை இனங்காணவும் தெரியும். வல்லவர்களிடம் மற்றய இருவரும் அதிக நாட்கள் அணுகமுடியாதவாறு இருக்கும். மற்றயவர்கள் இருவரும் இன்று பேசுவது இவர்களுக்கு ஒருபோதும் கேட்பதற்கு நியாமில்லை, ஏன் என்றால் இவர்கள் சிந்தனைகளாலும். திட்டங்களாலும் மற்றவர்களைவிட 20 வருடங்கள் முன்னுக்கு சென்றிருப்பார்கள்.

எண்ணம் சிந்தனை எல்லாமே குறிக்கோள் குறிக்கோள் குறிக்கோள் என்றே இருக்கும்.

இவர்களே அந்த சிகரம் தொட்ட, தொடும் வல்லவர்கள்.


இன்றைய சமுதாயமட்டத்தில் பார்த்தோமே ஆனால் நல்லவர்கள் 30 வீதமும், எதிர்மறையாளர்கள் 68 விதமும் அந்த வல்லவர்கள் வெறும் 02 வீதத்தினருமே உள்ளனர்.

இப்போது நீங்களே உங்கள் மனச்சாட்சியை கேட்டுப்பாருங்கள் நீங்கள் யார்?

எப்போது வல்லவராவதாக உத்தேசம்?


வலுவூட்டல்களில் புதிய ஒரு ஆணுகுமறை என்னவென்றால், தனித்தவமாக முன்னேறமுடியாதவர்கள் தங்கள் ரோல் மொடல்களை அப்படியே கொப்பி அடிப்பது. அவர்களின் நித்துவ அறிக்கை, வேலை திட்டங்கள், அவர்களது பேச்சுக்கள், அனுபவங்கள். நுணுக்கங்கள், ஏன் அவர்களது நடை, உடை பாவனை அத்தனையும் போலச்செய்தல், இதிலும் அச்சரியம் என்னவென்றால் ஒரு ஆராட்சி சொல்கின்றது இவர்களும் வெற்றி பெற்றவர்களாக வந்திருப்பதாக..

எனவே இங்கே வெற்றி பெற்ற ஒவ்வொருவனும் எமக்கான வலுவூட்டும் நபரே.

இது நீங்கள் கேட்ட பாடல்தான், அனால் இங்கே உங்களுக்கு விஜய்யோ, ரஹ்மானோ தெரியமாட்டார்கள்...

ஒவ்வொருநாள் பணிகளை தொடங்குமுன்னரும் இந்த பாடலை உணர்வோடு கேட்டு வேலையை தொடங்கிப்பாருங்கள்...


மனம் இருந்தால் நிறையவே இடமும் உண்டு. மனம் மட்டும் வையுங்கள் எராளமான பணம் உங்கள் கையில்...


12 comments:

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் பாஸ்,

முதலில் நட்சத்திர வார வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

விரிவான கருத்துக்களோடு பின்னர் வருகிறேன்.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்லதொரு உற்சாக டானிக் உங்களது கட்டுரை. நாம் மறந்த மறைந்த இயல்பு நிலை வாழ்க்கை, மீறி இன்று விளிம்பு நிலை மனிதர்களாக உருமாறி வருகிறோம். அவ்வப்போது இம்மாதிரியான கட்டுரைகள் மனிதனை சற்றே இளைப்பாற வைக்கும். நன்றி!

நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துகள்!

சுதா SJ said...

அழகான பதிவு.. என்னை நானே சுய விமர்சனம் செய்ய உதவியது இப்பதிவு.. தேங்க்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் பல விடயங்களைச்சொல்லியுள்ளீர்கள் பிரயோசனமாக இருந்தது நன்றி பாஸ்

நிரூபன் said...

மீண்டும் இனிய இரவு வணக்கம் பாஸ்,

வாழ்க்கையில் திட்டமிடல்களை மேற் கொண்டு எம் நாட்களைப் பயன்மிக்கதாக்கி சவால்களைக் கடந்து வாழ்வில் மேம்படுவது எப்படி என்பதனை அறிய வைத்திருக்கிறது இப் பதிவு.

shanmugavel said...

ஆமாம் மனம் இருந்தால் அனைத்தும் சாத்தியமே! நட்சத்திர வாழ்த்துக்கள்.

Unknown said...

//நாளைகள் என்ற சிந்தனைகளே அற்ற நிலையில் இன்று பல இளைஞர்கள் தங்கள் காலங்களை வீணாக்கிக்கொண்டிருப்பது இதில் கொடுமையிலும் கொடுமையானது//

உண்மை!

நட்சத்திர வாழ்த்துக்கள்!

தமிழ்நங்கை said...
This comment has been removed by the author.
தர்ஷன் said...

நான் இதில் எந்த வகை என யோசித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல பதிவு

அப்புறம் இந்த வார தமிழ்மண நட்ச்சத்திரமாக மிளிர்வதற்கு வாழ்த்துக்கள்
லாபம் எங்களுக்குத்தான் மினக்கெட்டு நிறைய பதிவுகளை எழுதுவீரகள் இல்லையா.....

Kiruthigan said...

ஜனாண்ணா...! என் அறிவுக்கண்ணை எக்குத்தப்பா திறந்து வி்டுட்டீங்க!
நாங்க என்னிக்கு தொழில் கத்துக்க போறோமோ..!!!

Citiinc said...

என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
  நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
  மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
  வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
  தொடர்பு: zechkovivan@mail.ru
  அல்லது greskychanosky@post.cz
  வந்து ஒரு வரும் அனைத்து

Citiinc said...

என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
  நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
  மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
  வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
  தொடர்பு: zechkovivan@mail.ru
  அல்லது greskychanosky@post.cz
  வந்து ஒரு வரும் அனைத்து

LinkWithin

Related Posts with Thumbnails