Saturday, June 20, 2009

20 இற்கு 20 = டில்ஷான்.

1996 ஆம் ஆண்டுகளில் சிறி லங்கா அணி விஸ்பரூபம் கொண்டு எழுந்துநின்றபோது அன்று சனத் ஜெயசூரியா என்ற ஒருவரை உலகத்தின் கண்கள் எப்படி பாhர்த்தனவோ அதேபோல இன்று அந்தக்கண்கள் சிறி லங்கா அணியின் அதிரடி நட்சத்திரம் திலகரத்ன டில்ஷான் மீது தமது பார்வைகளை திருப்பியிருக்கின்றன..
எந்த நாட்டு, எந்த பந்துவீச்சாளர் என்றாலும் என்ன? நான் வலுவாகவே உள்ளேன் என்று சொல்லும் வகையில் அவர் முழு நிலையில் நின்று தனது துடுப்பாட்டத்தினால் பதில் சொல்லிக்கொண்டு இருக்கின்றார். சொல்லப்போனால் தற்போது சிறி லங்கா அணியின் “குயினாக” டில்ஷான், சிறி லங்கா அணியை வலுப்படுத்திக்கொண்டிருக்கின்றார். 20 இற்கு 20 என்றாலே டில்ஷான்தான் என்று சொல்லும் அளவுக்கு இன்று உலகின் கிரிக்கட் ரசிகர்கள் அனைவரையும் தன்னை திரும்பிப்பார்க்கவைத்துள்ளார்.

சிறி லங்காவின் தென் பகுதியில் உள்ள களுத்துறை மாவட்டத்தில் 1976 ஆம் ஆண்டு, ஒக்ரோபர், 14 ஆம் திகதி, மலாய் பெற்றோருக்குப்பிறந்த டில்ஷான் பிறப்பாலும், ஆரம்பத்திலும் ஒரு இஸ்லாமியராகவே இருந்தார். அப்போது அவரது பெயர் ருவான் முஹமட் டில்சான் என்பதாகவே இருந்தது. பின்னர் அவர் பௌத்த மதத்திற்கு மாறியதன் மூலம் திலகரத்ன முடியன்சீலக்க டில்ஷான் என்று தமது பெயரை மாற்றிக்கொண்டார். அதேவேளை பௌத்த பெண்ணான மஞ்சுள திலினி என்ற விளம்பர மற்றும், சிங்கள திரைப்பட, நாடாக மோடலாக இருந்த பெண்ணை திருமணம் புரிந்துகொண்டார். இவரின் முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு ஆறுவயதுடைய மகன் ஒருவரும் உள்ளார்.

இந்த முறை ஐ.பி.எல். போட்டித்தொடரின்போதே அனைவரின் கவனமும் டில்ஷான் மீது திரும்பியிருந்ததை யாராலும் மறுக்க முடியாது. டில்லி அணிக்காக விளையாடிய அவர், மிகத்திறமையாக தனது பெறுமானங்களை இதில் வெளிப்படுத்தியிருந்தார். செவாக், கம்பீர் அகியோரை விட இரசிகர்கள் வர வர இவருக்கு ஆதரவு தெரிவித்ததையும் கவனித்திருக்கலாம். அன்றே கிரிக்கட் இரசிகர்கள் புரிந்துகொண்ட விடயம். திலகரட்ன டில்ஷான் தற்போது முழு போர்மில் உள்ளார் என்பதுதான்.
ஐ.பி.எல் முடிந்து குறுகிய காலத்தின் உள்ளாகவே ஐ.சி.சி. 20 ற்கு 20 போட்டிகள் ஆரம்பமானதும் ஒருவகையில் சிறி லங்காவுக்கு நல்லாதாகவே இருந்தது. எனென்றால், ஐ.பி.எல். போட்டிகளிலேயே , டில்ஷான், சங்ககாரா, மலிங்க, முரளிதரன் என அனைவரும் முழு போர்மிலேயே இருந்தனர். இந்தியாபோல அல்லாமல் தொடர்ந்தும் அதே தங்கள் போர்மை (நிலையை) தக்கவைத்திருந்ததனால் சிறி லங்காவால், டில்ஷானின் அபார ஆட்டங்களின் உதவியுடன் தொடர்வெற்றிகளை பெறமுடிந்திருந்தது.

இம்முறை இங்கிலாந்தில் நடந்துவரும் 20ற்கு 20 போட்டிகளின் கதாநாயகன் டில்ஷான் தான் என கண்களை முடிக்கொண்டே கூறிவிடலாம். அத்தனைபோட்டிகளிலும், சிறப்பான பெறுமானங்களை காட்டி சிறி லங்கா அணியினை இறுதிப்போட்டிவரை ஒரே இழுவையில் இழுத்துவந்து விட்டிருக்கின்றார். இம்முறை போட்டிகளில், அவுஸ்ரேலியாவுக்கு எதிரான போட்டியில் (08, ஜூன்) சங்ககாரவுடன் இணைந்து சிறப்பாட்ட பெறுமதியை பெற்றுக்கொடுத்த டில்ஷான் அவுஸ்ரேலியாவுக்கு எதிராக 53 ஓட்டங்களையும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில்(10 ஜூன்) தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய சனத் ஜெயசூரியா மற்றும் டில்ஷான் ஆகியோர் மிக ஆபாரமாக ஆடி 12.3 ஓவர்களில் 124 ஓட்டங்களை குவித்திருந்தனர் இதில் டில்ஷான் 47 பந்துகளுக்கு 74 ஓட்டங்களை பெற்றிருந்தார். அடுத்து பாகிஷ்தானுடனான போட்டியில் (ஜூன் 12) 46 ஓட்டங்களை பெற்றிருந்தார், அயர்லாந்துடன் நடைபெற்ற போட்டியில் (ஜூன் 14) எந்தவொரு ஓட்டத்தையும் பெறாதநிலையில் ஆட்டமிழந்திருந்தார். அடுத்து நியூஸிலாந்துடன் இடம்பெற்ற காலிறுதிப்போட்டியில் (ஜூன் 16) 48 ஓட்டங்களைப்பெற்றிருந்தார். அடுத்து மிக முக்கியமான போட்டியான மேற்கிந்தியத் தீவுகளுடனான அரையிறுதிப்போட்டியில் (ஜூன் 19) மிக மிக அருமையாக துடுப்பெடுத்தாடி 96 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழக்காமல் நிலைத்துநின்று ஆடி அணிக்கு பாரிய அளவில் பலம் சேர்த்தார்.

அத்துடன் தற்போது இடம்பெற்றுவரும் இந்தப்போட்டித்தொடரின் மிக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற பெருமையினையும் டில்ஷான் பெற்றுள்ளார்.

டில்ஷானுடைய இந்த ஆட்டம் நிலைத்து நிற்கப்போவதில்லை, அவரது ஆட்டம் நேர்த்தியானது இல்லை எனப் பல விமர்சனங்கள் அவர் மீது சுமத்தப்பட்டாலும் தற்போதைய அணியின் தேவையினை டில்ஷான் மிக மிக நேர்த்தியாக பூர்த்திசெய்கின்றார் என்பதில் யாரும் மறுப்பு தெரிவிக்கமுடியாது.
எதிரணியினை திணறடிக்கச்செய்து அத்தனை பந்துகளையும் எல்லைக்கோடுகளுக்கு அப்பால் செலுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையினை விரைபுபடுத்தும் ஒரு கிற்றர் ஒரு திறமையான அணிக்கு வேண்டும் என்றபார்கள், அந்த வகையில் டில்ஷான் ஒரு கிற்றராக சிறி லங்கா அணியினை வெற்றிக்கொடிகளை நோக்கி பல தடவைகள் சுமந்துசென்றுள்ளார்.

எது எப்படியோ சிறி லங்கா அணி வெற்றிகளை எடுத்துநோக்கினால் அந்த அணி, மிகக்குறைந்த ஓட்டங்களைம், மத்திய தர ஓட்டங்களையும் பெற்றிருந்தாலும், அந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் எதிர் அணியை வீழச்செய்யும் வகையில் அதனது பந்துவீச்சு உள்ளது. பார்க்கப்போனால் ஒரு “வன்மான் ஷோ” வாகவே ஒவ்வொரு போட்டிகளிலும் டில்ஷான் துப்பெடுத்தாடியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுகள் அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் சோபித்தது போன்று சனத் ஜெயசூரியா மற்றப்போட்டிகளில் பெரிதாக கைகொடுக்கவில்லை, இடைக்கிடையே சங்ககாரவின் துணையுடன் டில்ஷான் மட்டுமே அணியின் ஓட்டங்களை முனகொண்டு சென்றுள்ளதை அவதானிக்கலாம்.

சிறி லங்கா இரசிகர்களை மட்டும் இன்றி தற்போது மற்ற அணியின் ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார் திலகரட்ன டில்ஷான் எனும் இந்த 32 வயது மனிதர்.எது எப்படியோ இந்த ஐ.சி.சி. வேர்ள்ட் போட்டித்தொடருக்காக டில்ஷானா? டில்ஷானுக்கான ஐ.சி.சி. வேர்ள்;ட் போட்டித்தொடரா? என்று கேள்வி கேட்கும் அளவுக்கு இன்று டில்ஷானின் திறமை அபாராமாக வெளிப்பட்டு நிற்கின்றது.சிறி லங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியிலும் டில்சான் சிறப்பாக விளையாடுவார் என பெரும்பாலான விமர்சகர்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். பார்க்ப்போனால் எந்த பந்துவீச்சாளர்களைம் எதிர்கொள்ளும் முழுமையான போர்மிலேயே டில்சானும் உள்ளார் என்பது தெளிவானதே.

3 comments:

Manoj (Statistics) said...

dilshan: one man show........
+
4M's
Murali,
MAlinga,
Mendis,
Mathewes

venkatesh said...

தில்ஷன் கீப்பெரின் தலைக்கு மேல் பந்தை செலுத்தும் shot மிக அபாரம்... எனக்கு தெரிந்தவரை இது போன்ற ஒரு shot ஐ வேறு எந்த வீரரும் இவ்வளவு நேர்த்தியாக அடித்ததில்லை.....

Anonymous said...

தில்ஷன் கீப்பெரின் தலைக்கு மேல் பந்தை செலுத்தும் shot மிக அபாரம்... எனக்கு தெரிந்தவரை இது போன்ற ஒரு shot ஐ வேறு எந்த வீரரும் இவ்வளவு நேர்த்தியாக அடித்ததில்லை.....

ம்ம்ம்

LinkWithin

Related Posts with Thumbnails