Saturday, July 25, 2009

யூதர்கள் - தமிழர்கள்!! (ஆய்வுத்தொடர் -02)


தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைவதென்பது இனி வெறும் கனவுதான் என சொல்ல சோபா சக்திபோன்றவர்களுக்கு அல்ல, வேறு எந்த நாலுகால்களால் தெருவில் ஓடி, நாக்கை தொங்கப்போட்டுத்திரியும் மிருகங்களுக்கும் உரிமை கிடையாது.
ஒரு இனத்தின் வரலாற்றுப்பாதை இப்படித்தான் அமையும் என எவராலும் ஆரூடம் கூறிவிடமுடியாது. வரலாறுகள் பல மாற்றங்களை உண்டாக்கும். உண்டாக்கியும் இருக்கின்றன. உலகின் தமது எழுச்சிக்காக போராடிய சகல மக்களையும் எடுத்துப்பாருங்கள். அவர்கள் இன்று தாம் நினைத்ததைவிட உயர்ந்த நிலையிலேயே உள்ளனர். உலகவரலாற்றினையும், இயற்கையின் நியதியையும் வைத்து அடித்துச்சொல்லலாம் ஒரு இனத்தின் தன்னை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள், இலட்சியங்கள் தோற்றுப்போனதாக இல்லை. ஏதோ ஒரு வடிவத்தில் ஏதோ ஒரு தந்திரத்தில், ஏதோ ஒரு முறையில் அவர்களின் இலக்குகள் அடையப்பட்டே தீரும்;. உண்மையான நியாயமான தமது இலட்சியங்களை இன்று அடையாதவர்கள் நிற்சயம் அதை நாளை அடைந்தே தீர்வார்கள்.
தமிழ்ழர்களுக்கு உரிய நாடு ஒன்று இன்றோ அல்லது நாளையோ பிறந்தவிடும் என கால நிர்ணயம் தந்து கூறிவிடமுடியாதுதான், அனால் இன்னும் 10 வருடங்களிலோ அல்லது 100 வருடங்களிலோ அது சாத்தியப்படலாம் அல்லது இன்னும் நாட்கள் எடுக்கலாம். யூதர்களின் வரலாறே இதற்கான சாட்சியம்தானே…சரி நாம் விடயத்திற்கு வருவோம்…

1870 இல் பெஞ்சமின் டி இஸ்ரேலி என்ற யூதர் பிரித்தானியாவின் பிரதமராகவே ஆகிவிட்டாரே. அப்பறம் என்ன நீண்ட நூற்றாண்டுக்குப்பிறகு யூதர்களின் வரலாற்றில் ஒரு வசந்தகாலம் உருவானது. அவர்கள் அதுவரை தாங்கள் அனுபவித்திருக்காத சுகங்களை அனுபவித்தனர். அதுவரை எட்டாத உயரங்களை தொட்டனர். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் யூதர்கள் சம அளவு உரிமைகளை பெற்றனர்.
ஆனால் மறுபக்கம் ஜெர்மனி, போலந்துபோன்ற நாடுகளில் யூதர்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்தவண்ணம் இருந்தனர். கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு “மதம் மாறு அல்லது மடிந்துபோ” என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
பிரிட்டனில் சாதகமான நிலை இருந்தமையினால் யூதக்குடியிருப்புக்களின் எண்ணிக்கை பல மடங்குகள் உயர்ந்தது. ஜோர்ஜ் மன்னர் இரண்டாவது அலெக்ஸ்ஸாண்டர் படுகொலைக்குப்பின்னர் ரஷ்யாவின் யூத ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்துகொண்டே இருந்தது.


தொடர்ந்தும் துரத்தப்படும், அழுத்தப்படும் இனமாக இருந்த யூதர்கள் சிந்தித்தனர்.
நமக்குத் தேவை நாம் நின்மதியாக வாழ்வதற்கு எமக்கேயான நிரந்தரமான ஒரு தேசம். எத்தனைகாலம்தான் நாம் இப்படி ஓடிக்கொண்டே இருப்பது? உலகில் பெரும்பான்மையான இனங்களுக்கு தாம் வாழ்வதற்கென்று நிரந்தரமான தேசங்கள் இருக்கின்றன. நமக்கு மட்டும் ஏன் இந்த நிலை? ஏன் எங்களுக்கு என்று எங்கள் நிலமான பாலஸ்தீன் இருக்கின்றதே! அதை நாங்கள் எப்படி அடைவது? இன்றைய உலகியலின் பார்வையில் அது சாத்தியமே இல்லையே! சாத்தியப்படாதவற்றையும் நாம் எப்படி சாத்தியப்படவைப்பது? என இவற்றைத்தான் அவர்கள் சிந்தித்தார்கள். சிறு சிறு குழுக்களாக கூடிப்பேசினார்கள். எல்லாமே இரகசியக்கூட்டங்கள். சுற்றியிருக்கும் சுவர்களில் ஒருவார்த்தைகூட எதிரொலிக்காத வண்ணம் தமது வார்த்தைகளை மிக இரகசியமாகப்பேசினார்கள்.
இவர்களில் தியொட்டர் ஹெசில் என்ற ஜெர்மனியில் இருந்த யூதர், பாலஸ்தீனத்தை நாம் கைப்பற்ற என்ன வழி என்று ஒரு பாரிய திட்டமே போட்டு வைத்திருந்தார்.
அந்த திட்டத்தை நிறைவேற்ற யூதப்பணக்காரர்களின் உதவிகளை அவர் நாடினார். எவ்வளவுதான் பணக்காரர்களாக யூதர்கள் மற்ற நாடுகளில் மாறியிருந்தாலும் அவர்கள் யூதர்கள் என்ற இன உணர்வு மிக்கவர்களாகவே இருந்தார்கள். ஹெசில் இந்த திட்டம் குறித்து பல யூதப்பணக்காரர்களுடன் இரகசியப்பேச்சுக்களை நடத்தினார். ஹெசிலின் இந்த திட்டம் ஜியோனிசம் எனப் பெயரிடப்பட்டிருந்தது.


முதலில் யூதர்களை ஒருங்கிணைக்கவேண்டும். மிகப்பிரமாண்டமான வலையமைப்பு ஒன்றை அமைக்கவேண்டும், உலகில் யூதர்கள் எந்த மூலையில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரினதும் எண்ணங்கள் ஒரே புள்ளியை நோக்கித்தான் குவியவேண்டும். அந்தப்புள்ளிதான் யூதர்களின் பூமியாகிய பாலஸ்தீன். அதனை அடைய எத்தனை காலம்வேண்டுமானாலும், எத்தனை இழப்புக்களை சந்திக்கவேண்டுமானாலும் யூதர்கள் தயாராக இருக்கவேண்டும். சுருக்காகச்சொல்வதென்றால் ஜியோனிஸத்தின் அர்த்தம் கொள்கை நோக்கம் எல்லாம் இதுதான்.
இந்த ஜியோனிஸம், 1975 களில் மிகத்தீவிரமாக மிக இரகசியமாக யூதர்களிடம் பரவிக்கொண்டிருந்தது. ரபிக்கள் ஜியோனிஸம் பற்றி யூதமக்களிடம் விரிவாக, ஆழுத்தம் திருத்தமாக எடுத்துக்கூறினர்.
“யூதர்களிடையே இந்த எண்ணத்தினை மிக ஆழமாக விதைக்கவேண்டும். யூத தேசிய உணர்வை அவர்களுக்குள்த் தூண்டவேண்டும். நமக்கு நாடு வேண்டும் என்றால் நாம்தான் அதற்காக உழைக்கவேண்டும். கலாலங்காலமாக நாம் எத்தனையோ பாhர்த்தாகிற்று, எத்தனையோ இழந்தாயிற்று. யாரும் எமக்கான தனிநாட்டை தட்டில்வைத்து தூக்கிக்கொடுத்துவிடப்போவதில்லை. எல்லோரும் அவர் அவர்களின் சுயநலங்களிலேயே தங்கிருக்கின்றனர். ஆனால் எமக்கான நாட்டை நாமே மலரச்செய்யவேண்டும்”
நாடு என்றால் என்ன? ஒரு நிலப்பரப்பு. குடியிருபுக்கள். வணிகநிலங்கள், வயல்வெளிகள் தோட்டங்கள் என பலவற்றை அடுக்கியது. அவ்வளவுதானே? நாம் அவற்றை விலைகொடுத்துவாங்குவோம். வீடுகளில் இருந்து பெரிய நிறுவனங்கள்வரை வாங்குவோம், விவசாயம் செய்ய நிலங்களை வாங்குவோம். வாங்கி வாங்கி யூதர்களுக்கே உரியதாக சேர்ப்போம். சேர்த்துக்கொண்டே போவோம். இப்படி நாம் செய்துகொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் ஒரு பெரிய நிலப்பரப்பினை நாம் காசு கொடுத்துவாங்கியிருப்போம். கிட்டத்தட்ட ஒருதேசமே யூதர்களுக்குச்சொந்தமாக இருக்கம். அந்த நிலப்பரப்பு பாலஸ்தீனமாக இருக்கட்டும் அது தானே எம் பல நூற்றாண்டுக்கனவு! ஹெசிலின் இந்தத்திட்டம் யூதப்பணக்காரர்களை மெய்சிலிர்க்க வைத்தது. உணர்சிவசப்பட்டவர்களாக எவ்வளவு பணம் என்றாலும் வழங்க தாம் தயார் என்றனர்.


இதன் முதற்கட்டமாக 1896ஆம் ஆண்டில் “உலக யூதர் கொங்கிரஸ்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் முதல் மாநாடு சுவிட்ஸர்லாந்தில் மிக இரகசியமாக அழைக்கப்பட்ட ஒரு சிலருடன் நடைபெற்றது. இங்குதான் ; The grand Plane என்ற நூறுபக்க அறிக்கையினை ஹெசில் வாசித்தார். அதை “ஒபரேஷன் பாலஸ்தீன்” என்று கூட அழைக்கலாம். யூதர்கள் இனிவரும் காலங்களில் எப்படி எல்லாம் தமது புத்திசாலித்தனங்களை உபயோகித்து தந்திரமாக காய்களை நகர்த்தவேண்டும். எப்படி எல்லாம் செயற்படவேண்டும், எப்படி எல்லாம் செயற்படக்கூடாது என சகலவற்றையும் விலாவாரியாக தெரிவிக்கப்பட்ட அறிக்கையாக அது இருந்தது.
அந்த அறிக்கையில் யூதர்கள் அன்றைய நிலையில் எப்படி காய்களை நகர்த்தவேண்டும் என சொல்லப்பட்வைகளில் முக்கியமானதை பார்த்தோமானால்,
“யூதர்களுக்கு என்று ஒரு தேசத்தை அமைத்தே தீருவோம் என நாம் சபதம் எற்றுக்கொள்வோம். எத்தனை இழப்புக்களை நாம் சந்தித்தாலும், எத்தனைபேர்களை நாம் இழந்தாலும், எந்தச்சூழ்நிலையிலும் எமக்கான தேசம் என்ற நிலையில் இருந்து நாம் பின்வாங்கக்கூடாது. எம் தேச உருவாக்கலை தகர்க்க பல சக்திகள் எம்மைத்தடுக்க எப்படியான சதித்திட்டங்களையும் தீட்டும், அவற்றை உடனடியாக இனங்கண்டு நாம் தகர்க்கவேண்டும். எம் இனம்மீதான பற்றும், எமக்கான நாடு என்ற உறுதியும் எம்மனங்களில் இருந்தால் எவராலும் எதனையும் செய்துவிடமுடியாது”

ஜேசுவைக்கொன்றவர்கள், ஜேசுவைக்கொன்றவர்கள் என்று நம்மீது பல ஆண்டுகளாக பழி சுமத்தி எம்மை அழித்துக்கொண்டே வருகின்றனர். அவர்களின் அடிப்படை மரபுகளிலும், விசமத்தனமான சிந்தனைகளிலும் ஊறிப்போன இதனை உடனடியாக அழித்துவிடமுடியாது. சாமர்த்தியமாக சமாளிக்க நாம் தயாராகவேண்டும். கிறிஸ்தவர்களுடன் பல வழிகளிலும், தோன்றல்களிலும் நாம் ஒத்திருந்தும் அவர்கள் நீண்ட நாட்களாக எமக்கு தொடர் துரோகங்களையே செய்துவந்துள்ளனர்.
ஐரோப்பாவில் மிக அதிகமாக வாழ்பவர்கள் கிஸ்தவர்கள்தான். அவர்கள் நம்பகைவர்களே. அனால் இப்போது அது எமக்கு முக்கிமல்ல. உணர்ச்சிகளையும் பழிவாங்கல்களையும் விட்டுவிட்டு, இனிநாம் தந்திரமாக முன்னேறவேண்டும், கிறிஸ்தவர்களுடன் நட்பு கொள்ளவேண்டும். அவர்கள் மனதில் இருந்து நம்மீதான பகைமை உணர்வை சிறிதாவது அகற்றவேண்டும். இந்த திட்டங்கள் உடனடியாக நிறைவேறப்போகும் திட்டங்கள் அல்ல. பல ஆண்டுகள் நாம் தீராமல் உழைப்பதன்மூலம் அடையப்போகும் திட்டங்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இந்த இடத்தின் எம்தமிழினத்தின் இன்றைய சூழலில், யூதர்களாக தமிழர்களையும், கிறிஸ்தவர்கள், ஐரோப்பாவாக இந்தியாவையும், ஜேசுவாக ராஜூவ் காந்தியையும் ஒப்பிட்டு பார்த்து மீண்டும் வாசித்துப்பாங்கள் கன கச்சிதமாக எப்படி பொருத்தமாக உள்ளது என்று)

சரி…யூதர்களின் இந்த திட்டங்களை நிறைவேற்ற பணம் தேவை. அதற்காக யூதர்களால் ஒரு வங்கி உருவாக்கப்படும். அதன் பெயர் “யூத தேசிய வங்கி” யூதர்கள் பாலஸ்தீனத்தில் நிலங்களை வாஙகுவதற்கான சகல உதவிகளையும் அந்த வங்கி தரும் என அறிவிக்கப்பட்டது.
சொன்னபடியே எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக இயங்கியது யூத தேசிய வங்கி. பிற நாடுகளிலும் இருந்த யூதர்கள் மெல்ல மெல்ல பலஸ்தீனத்தை நோக்கி நகரத்தொடங்கினார்கள். பலஸ்தீன யூதர்கள் மௌனமாக புரட்சிக்கு தயாராகிகொண்டிருந்தனர்.
இருபதாம் நூற்றாண்டு பிறந்தபோது, பலஸ்தீனத்தில் இருந்த மொத்த யூதர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு இலட்சத்தை தாண்டியது.
மெல்ல மெல்ல பலஸ்தீனத்தில் யூத நில வங்கிகள் முளைக்க ஆரம்பித்தன. அதிக இலாபம் கிடைக்குதென எண்ணி அரேபியர்கள் யூதர்களின் வலையில் விழுந்தனர். அரேபியர்கள் அபபோது நினைத்ததெல்லாம் ஒன்றுதான். இன்னும் எவ்வளவு அதிகமாக விலை சொல்லலாம் என்பதுதான.; அதன்படியே புறம்போக்கான தங்கள் நிலங்களுக்கு எல்லாம் தாறுமாறாக விலைகளைச்சொன்னார்கள், எவ்வளவு சொன்னாலும் யூதவங்கிகள் அவற்றை வாங்கிப்போட்டுக்கொண்டே இருந்தன. மறுபுறம் யூத வங்கியின் நிலங்கள் பெருகிக்கொண்டே இருந்தன.
இன்னொருபுறம் உலகமெங்கும் உள்ள யூதர்கள் தங்கள் பங்கிற்கு நன்கொடையாக தமது பணத்தினை இந்த வங்கிக்கு வழங்கிக்கொண்டே இருந்தனர். பணம் இல்லாத யூதர்கள் கூட, தம்மாலான வழிகளில், புத்தகம்விற்று, கலைநிகழ்வுகளை நிகழ்த்தி, சாகசங்கள் புரிந்து, என உணர்வுடன் இந்த வங்கிக்கு பணம் வழங்கிக்கொண்டே இருந்தார்கள்.


யூதர்களை எப்படி அடக்கலாம்? இழந்த நிலங்களை எப்படி மீட்கலாம் என அரேபியர்கள் காலம்தாழ்த்தி விழித்துக்கொண்டு தமக்குள் பேசிக்கொண்டிருக்கையில், இன்னும் மிச்சமிருக்கும் நிலங்களையும் எப்படி அபகரிக்கலாம் என யூதர்கள் திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். யூத தேசிய நிதி என்ற பெயரில் ஜியோனிஸ இயக்கத்திற்காக உலக யூதர்களிடமிருந்து பணம், மூட்டை மூட்டையாக குவிந்துகொண்டிருந்தது. யூதர்களின் பொருளாதார பலம் என்பது படு சுபீட்சமாக இருந்தது. சமுதாய பலத்திலும், அவர்கள் முக்கிய நாடுகளின், பெரிய பதவிகளிலும். ஆட்சியாளர்களுக்கு தேவைப்படுபவர்களாகவும் இருந்தார்கள். பண பலம் இருக்கின்றது. எதையும் சாதிக்கலாம் என்ற தைரியம் அவர்களுக்கு இருந்தது, தாராளமாக எங்கும் இலஞ்சத்தை பழக்கிவிட்டார்கள். அதன்மூலம் தமது காரியங்களை பணத்தினால் சாதித்துக்கொண்டார்கள். பலஸ்தீனத்தில் மட்டும் இன்றி, இங்கிலாந்துபோன்ற பல மேலை நாடுகளிலும் உயர் அதிகாரிகளுடனான நட்பை, பணத்தினால் பலப்படுத்தி இருந்தார்கள்.
அரேபிய முஸ்லிம்களின் யூதர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் அதிகரித்தபோது யூதர்களுக்காக பலஸ்தீன் என்ற கோரிக்கையோடு, ஹெசில் சில நாடுகளின் ஆட்சியாளர்களை சென்று சந்தித்தார். ஜெர்மனியச்சக்கரவர்த்தி ஹெய்ஸர் வில்லியம் 2, துருக்கியின் சுல்த்தான் மெஹ்ருத் பதிதீன் ஆகிய இருவரும் அவருக்கு உதவ பின்வாங்கினர்.

ஹெசின் பிரிட்டனுக்குச்சென்றார். பிரித்தானியாவுக்குரிய காலணிகளை நிர்வகித்துக்கொண்டிருந்த மூத்த அமைச்சர் ஜோசப் ஷேம் லெலினை சந்தித்து பேசினார். அவர் நிதானமாக யோசித்து, அப்போதிருந்த யதார்த்த நிலையில் யூதர்களுக்கு பலஸ்தீனம் சாத்தியம் இல்லை எனத் தெரிவித்தார். ஆனால் வேண்டும் என்றால் கிழக்கு ஆபிரிக்காவில் உகண்டாவில் யூத நாட்டினை அமைக்கலாம் என்று தெரிவித்தார்.
இந்த பதிலால் ஹெசில் மகுந்த வருத்தமடைந்தார். அப்போதைய நிலமைகளை மட்டும் வைத்துக்கொண்டு எவ்வாறு பலஸ்தீன் யூதர்களுக்கு சாத்தியப்படாது என சொல்லமுடியும் என வேதனைப்பட்டார். என்றாலும் அதை பிரிட்டனிடம் காட்டாமல் இது குறித்து யோசித்து முடிவெடுக்கலாம் எனச்சொல்லிவிட்டு விடைபெற்றார்.
எத்தனை நூற்றாண்டுகளாக நாம் துரத்தப்பட்டு ஓடிக்கொண்டே இருப்பது? நமக்கென்று பலஸ்தீனத்தை வாங்கிவிடலாம் எனத் திட்டம் தீட்டி, அந்த திட்டமும் ஓரளவு வெற்றிகரமாக தனது இலக்கை நோக்கிக்கொண்டு செல்லும் வேளையில், இன்னொரு புறம் எமக்கு எதிரான சக்திகள் கூட்டுச்சேர்ந்துகொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் தீர்;வு தனி நாடுதான். பிரிட்டனின் யோசனைப்படி உகண்டாவை ஏற்றுக்கொண்டால் என்ன? ஒரு தற்காலிகத்தீர்;வு கிடைக்குமே! இதிலிருந்து பலஸ்தீனத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாமே!! என ஹெசில் யோசித்தார்.

இந்த யோசனையினை ஆறாவது யூதர்கள் கொங்கிரஸ் மாநாட்டில் அவர் முன்வைத்தார். அவ்வளவுதான், ஹெசில் தடம்மாறிவிட்டார். பாலஸ்தீன் கனவை கைவிடச்சொல்கின்றார், இவருக்கு பித்து பிடித்துவிட்டது, பிரிட்டனிடம் விலைபோய்விட்டார் இப்படி பல விமர்சனங்களுக்கு அவர் ஆளானார்.
யாருக்காக பாடுபட்டோமோ அந்த மக்களே இப்படித்தாற்றுகின்றார்களே என்று பெருமளவில் உடைந்துபோனார் ஹெசில். இதனால் படுத்த படுக்கையாகி 1904 ஆம் அண்டு இறந்துபோனார். அதன்பின்னரே ஹெசிலின் வார்த்தைகளில் இருந்த உண்மையினையும், தங்கள் வார்த்தைகளில் இருந்த விசத்தன்மையினையும் யூதர்கள் புரிந்துகொண்டு கண்ணீர்வடித்தனர். ஹெசிலிடம் மானசீகமாக மன்னிப்புக்கேட்டுக்கொண்டனர்.
-தொடரும்…

4 comments:

Anonymous said...

You are Doing good Job Sir. -Vithusan

திறனாளன் said...

முதலில் காலத்தின் தேவையான இந்த பதிவுக்கு எனது பாராட்டுக்களும்இ நன்றிகளும். அண்மையில் ஒரு சந்தர்ப்பத்தில் சிலருடன் தமிழர்கள் குறித்து விவாதிக்கவேண்டி வந்தது. அந்த வேளைகளில் உங்களின் பதிவுகள் எனக்கு உதவின. மனந்திறந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த தொடரை இன்னும் விரிவாக எழுங்கள் நண்பரே.அது என் போன்ற பல வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.

குமரன் said...

ஆருமை...அருமை..அருமையான பதிவு. அட பல இடங்களில் யூதர்களுடன் நாம் ஒத்துப்போகின்றோமே...ஆனால் அங்கே தேசத்திற்காக உழைத்த மற்றய யூதர்களையும் பாருங்கள் இங்குஇ சுயநலங்களுக்காக தன் இனத்தினையெ அடகுவைத்து முத்தமிழை வித்தவர்களையும் பாருங்கள். யூதர்கள்போல தமிழ்நாட்டில் உள்ள அத்தனைபேரும் இருந்திருந்தால் ஒரு மாதத்தில் தமிழுக்கான தேசத்தை நாம் அடைந்துவிடுவோமே

எஸ் சக்திவேல் said...

>தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைவதென்பது இனி வெறும் கனவுதான் என சொல்ல சோபா சக்திபோன்றவர்களுக்கு அல்ல, வேறு எந்த நாலுகால்களால் தெருவில் ஓடி, நாக்கை தொங்கப்போட்டுத்திரியும் மிருகங்களுக்கும் உரிமை கிடையாது.

இதிலுள்ள விடயத்தையும் , எழுத்துத் திறனையும் ரசித்தேன்.

LinkWithin

Related Posts with Thumbnails