Thursday, June 4, 2009

உலக வரலாற்றில்.ஜூன் மாதம் 04ஆம் நாள்.

கிமு 780 - முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது.

1039 - மூன்றாம் ஹென்றி புனித ரோமப் பேரரசன் ஆனான்.

1584 - சேர் வால்ட்டர் ரேலி முதலாவது ஆங்கிலக் குடியேற்றத்தை வட கரோலினாவின் ரோனோக் தீவில் அமைத்தார்.

1707 - யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டம் ஒல்லாந்தரினால் அமுல்படுத்தப்பட்டது.

1794 - பிரித்தானியப் படைகள் ஹெயிட்டியில் போட்-ஓ-பிரின்ஸ் துறைமுகத்தைக் கைப்பற்றினர்.

1878 - ஓட்டோமான் பேரரசு சைப்பிரசை ஐக்கிய இராச்சியத்துக்கு கொடுத்தது.

1917 - முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன. 1928 - சீனக் குடியரசின் அரசுத் தலைவர் சாங் சுவோலின் ஜப்பானியக் கையாள் ஒருவனினால் படுகொலை செய்யப்பட்டார்.

1939 - 963 யூத அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஐக்கிய அமெரிக்காவினால் திருப்பி அனுப்பப்பட்டது. இந்த அகதிகளில் பெரும்பாலானோர் பின்னர் ஜெர்மனியின் நாசி வதைமுகாமில் சிறைவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் டன்கேர்க் என்ற இடத்தில் இருந்த 300,000 பிரித்தானியப் படைகள் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டனர்.

1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மானியப் படைகள் பாரிஸ் நகரைனுள் நுழைந்தனர்.

1943 - ஆர்ஜெண்டீனாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் ரமோன் கஸ்டீல்லோ பதவியிழந்தார்.

1944 - இரண்டாம் உலகப் போர்: ரோம் நகரம் நேச அணிகளிடம் வீழ்ந்தது.

1970 - தொங்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

1973 - ஏடிஎம் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை டொன் வெட்சல், டொம் பார்ன்ஸ், ஜோர்ஜ் சாஸ்டெயின் ஆகியோர் பெற்றனர்.

1979 - கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் ஜெனரல் ஆச்சியாம்பொங் பதவியிறக்கப்பட்டு ஜெரி ரோலிங்க்ஸ் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.

1987 - பூமாலை நடவடிக்கை: இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட வான்பரப்பில் அத்து மீறி உள்நுழைந்த இந்திய வான்படை விமானங்கள் யாழ் குடாநாட்டின் மீது உணவுப் பொதிகளை வீசியது.

1989 - சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. பல மாணவர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1989 - போலந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சொலிடாரிட்டி இயக்கத்தின் வெற்றி கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்துக்கு எதிரான புரட்சியைக் கிளறியது.

1989 - ரஷ்யாவில் இரண்டு தொடருந்துகள் இயற்கை வாயுக் குழாய் ஒன்றைக் கடக்கையில் இடம்பெற்ற விபத்தில் 575 பேர் கொல்லப்பட்டனர்.

2001 - அரச மாளிகையில் ஜூன் 1 இல் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து கயானேந்திரா நேபாளத்தின் மன்னராக முடி சூடினார்.

இன்றைய நாளில் பிறந்த பிரபலங்கள்.

1910 - கிறிஸ்தோபர் கொக்கரல், ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர் (இ. 1999)

1946 - எஸ். பி. பாலசுப்ரமணியம், இந்தியத் திரைப்பட இசைப் பாடகர்

1959 - அனில் அம்பானி, இந்தியத் தொழில் அதிபர்

இன்றைய நாளில் மறைந்த பிரபலங்கள்.

1925 - வ. வே. சு. ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1881)

2001 - தீபேந்திரா, நேபாள மன்னர் (பி. 1971)

1 comment:

Pradeep said...

ம்ம்ம்....என்க்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கு. இன்றைய நாளில்த்தான் வயித்துக்குத்தக்காரர், இப்ப கதைக்கின்ற இலங்கையின் இறமைகளை எல்லாம் பார்க்காமல் வானத்தில் இருந்து பருப்பு கொட்டினவை.

LinkWithin

Related Posts with Thumbnails