இது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்...
Sunday, February 27, 2011
இந்தவாரப் பதிவர் - திரு.மைந்தன் சிவா
Thursday, February 24, 2011
சிவாஜி கணேசனின் பிற்கால டுயட் மெலடிகள்.

Tuesday, February 22, 2011
ஹொக்ரெயில் - 22.02.2011


Sunday, February 20, 2011
இந்தவாரப் பதிவர் - திரு. ஜீ
“கவிதையோ இலக்கிய உரைநடையோ எனக்கு தெரியாது> எனது கருத்துக்களையும்> அனுபவங்களையும்> நான் இரசித்தவற்றையும் கொஞ்சம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்” என்பதே தன்னைப்பற்றி தனது வலைத்தளத்தில் பதிவர் ஜீ தெரிவித்துள்ள கருத்து.
உண்மைதான்> அவரது வலைத்தளத்திற்கு சென்றால்> சிந்திக்க தூண்டும் கருத்துக்களையும்> உணர்வோட்டமான அனுபவங்களையும்> பிரமிப்பான இரசிப்புக்களையும் கண்டு கொள்ளலாம்.
கௌரவமான எழுத்தோட்டம் ஜீயினுடைய எழுத்துக்களின் புலப்பாடு. இவரது எழுத்துக்களை வாசித்துகொண்டிருக்கும்போதே எழுதிய அவர்மேல் எம்மையும் அறியாத ஒரு கௌரவம் தோன்றிவிடுவது யதார்த்தம்.
பல பதிவுகள் அடடா..இவை நாமும் அனுபவித்த விடயங்களாயிற்றே> ஏன் நமக்கு இப்படி தோன்றவில்லை என ஆனந்தமான ஆச்சரியம் கொள்ளச்செய்யும் தன்மைகள் ஜீயினுடைய எழுத்துக்களின் புலப்பாடு.
இப்படியும் பலர் இரசிக்கத்தக்க அதேநேரம் சிறப்பான பதிவுகளை இடமுடியும் என்பதற்கு ஜீயினுடைய பல பதிவுகள் எடுத்துக்காட்டு.
கிருபாகரன் உமாசுதன் என்ற இயற்பெயரைக்கொண்ட பதிவர் ஜீ.. 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதிவுலகத்தில் தடம்பதித்துகொண்டார். அன்றிலிருந்து தன் தனித்துவமான அனைவரும் விரும்பும்> இலகுவான அதேநேரம் சிறப்பான ஒரு எழுத்துநடையை தனதாக்கிக்கொண்டு பலரையும் கவரும் வண்ணம் பதிவுகளை தந்துவருகின்றார்.
எந்த ஒரு விடயத்தையும் மிக ஆழமாக பார்க்கும் ஜீயின் பார்வைகள்> அனுபவங்கள்> தான் சந்தித்துகொண்டவை> ஏன் கசப்பான அனுபவங்களை பதிவிடும்பொழுது கூட> உணர்வானதாகவும்> அதேநேரம் யதார்த்தமானதாகவும்கூட தொட்டுச்செல்வது அவருக்கே உரித்தான பண்பு என்று தான் சொல்லவேண்டும்.
முக்கிமானதாக ஜீயினுடைய வாசிப்பு என்ற விடயத்தை சொல்லியே ஆகவேண்டும். பலவேளைகளில் ஜீயினுடைய வாசிப்பு பற்றிய அவரது பதிவுகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருக்கும். காரணம் ஜீ.. பல எழுத்தாளர்களின் நாவல்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டவர். இருப்பினும் அவர் தெரிவு செய்து படிக்கும் நாவல்களே இங்கு குறிப்பிடப்படவேண்டியவை. பிரபலமான எழுத்தாளர்களின் மிக தரமான நாவல்களை ஜீ தெரிவு செய்து படித்து வருவதும் அந்த அனுபவங்களை பிறருக்கும் தெரிவித்து பிறரையும் அந்த சுகாவனுபவங்கைளில் இலகிக்க வைப்பதிலும் ஜீ..க்கு அலாதியான பிரியம் உண்டு என்பது புலப்படுகின்றது. (றீடர்ஸ் ஹைட்)
நல்லதொரு கலைஞன், நல்லதொரு எழுத்தளான், தேடல்கள் உடையவன்> தன்மேல் திருப்திப்பட்டுக்கொள்ளாமல்> தன்னை நாளாந்தம் மென்மேலும் சிறப்பு செய்பவன்> இசை என்னும் விடையத்தில் அன்நியமாக நிற்பது என்பது முடியாத காரியம். அதற்கு ஜீ யும் விதிவpலக்கில்லை. ஜீ யினுடைய இசைக்காதல் அவரது பல பதிவுகளில் வெளிப்பட்டு நிற்கின்றன. அந்த இசைக்காதல்> இன்னது என்ற வரையறைக்குள் மடடுப்படாமல்> இலகிக்கவைக்கும் இசைகள் அனைத்தின்மீதும் பிரியம் கொள்ளும் தன்மைகள் தொக்கி நிற்கின்றன.
யாருக்கு தன் காதுகளால் முதன்முதலில் கேட்ட பாடல் நினைவு இருக்கும்?
ஒரு சிலருக்கு மட்டுமே இத்தனை நினைவாற்றல்கள் வரமாக கிடைத்திருக்கும். அப்படி ஒரு வரம்வாங்கிவந்தவராக ஜீ யை தைரியமாகக்கூறிக்கொள்ளலாம்.
நினைவுகள்> அவற்றின் ஞாபக சக்திகள் என்பனவே> உணர்வோட்டமான பழைய விடங்கள் பற்றி அனுபவங்களை எழுதுபவர்களுக்கும்> அவற்றை சுவாரகசியம் குன்றாமல் தருவதற்கும் மிகத்தேவையான விடயம். அந்த வகையில் ஜீயினுடைய அனுபவப்பகிர்வுகள்> ஜீயினுனைய கண்களினூடாக நாம் பார்க்கும் காட்சிகள்போல வாசிக்கும் எங்களை அந்த காலங்களுக்கு அழைத்துச்செல்வது ஆச்சரியமான ஒரு அனுபவம்.
உலகசினிமா> மற்றும் கொலிவூட் பார்வைகள்! ஆம்> இது தான் ஜீயின் விஸ்பரூபம் என்று மலைத்துப்பார்க்கும் அளவிற்கு இருக்கின்றன. முக்கிமான தரமான உலக சினிமாக்கள் பற்றிய ஜீயினுடைய ஆராய்வுகள். எப்படி இந்த மனிதன் ஒரு படத்தின் இத்தனை நுன்னிய விடயங்களையும்> அவதானிக்கின்றார் என்ற ரீதியில் அவை அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு படங்கள் பார்த்து முடிந்தவுடனும் ஒவ்வொருவர் மனதினுள்ளும் சில கேள்விகள் இருக்கும்> யதார்த்தமுரணான சில கட்டங்கள்> சில கட்டங்கள் திரைப்படத்தில் ஏன் புகுத்தப்பட்டன> சில கட்டங்கள் அர்த்தமின்றி வந்தனவே அதற்கும் பிரதான கதைக்கும் என்ன தொடர்பு! என்பனபோன்ற கேள்விகளை நாம் கேட்டுவிட்டு பேசாமல் இருந்துவிடுவதுதான் இயல்பு.
ஆனால் இந்த மனிதர்> அந்த கேள்விகளுக்காகவே மீள் பார்வை ஒன்றை பார்க்கின்றார் போல! பின்னர் மனதில் தோன்றும் அந்த கேள்விகளுக்கான விடைகளையும் கண்டுபிடித்து விடுகின்றார்> அதை எழுதியும் விடுகின்றார்.
ஆச்சரியம்தான்…
“உண்மையில் அந்த சிறகுகள் வானம் தாண்டிவிட்டன..”
இந்தவாரப்பதிவர் ஜீ.. பற்றிய சிறிய பார்வை ஒன்றை கண்டோம். சரி..இனி இந்த வாரப்பதிவர் ஜீ.. இடம் கேட்கப்பட்ட அந்த மூன்று கேள்விகளையும் பார்ப்போம்…
கேள்வி : பதிவு எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது உங்களுக்கு?
எந்த ஒரு தமிழ் பரீட்சையிலும் ஒழுங்காக ஒரு கட்டுரை எழுதியதாக ஞாபகமில்லை!சும்மா முயற்சி செய்யலாமேன்னு தான் எட்டுமாசமா பதிவுலகில்.
ஆனால் வாசிப்பு பழக்கம் மட்டும் சிறுவயதிலிருந்து இருக்கு! தீவிர சுஜாதா ரசிகன் நான்!
எந்த தயார்படுத்தலும் இன்றி வந்ததால் மற்றவர்களிடம் சேர்க்கவேண்டும் என்று யோசிக்காமல் முதல் நான்கு மாசம் நானே எழுதி நானே வாசித்தேன்! (முற்றிலும் ஒரு டைரியாகவே)
நான் என்ன நினைக்கிறேனோ, உணர்கிறேனோ அதை சரியாக எனது எழுத்துக்களில் சரியாக வெளிப்படுத்த முடிந்ததில்லை!
எழுதும்போது ஏற்படும் ஏதோ ஒரு அவசரம், பரபரப்பில் எல்லாமே காமாசோமாவாகி விடுகிறது!
பதிவுலகிற்கு வந்தபின்னர் பதிவுலகம் தாண்டிய வாழ்க்கையில் ஏற்பட மாறுதல்கள் என்று சொல்வதற்கு, பெரிதாக எதுவுமில்லை!
blog என்பது ஒரு டிஜிட்டல் டைரி போன்றது! என்ன ஒரு வித்தியாசம் மற்றவர்களைப் படிக்க அனுமதிக்கும் டைரி.
எனது நண்பர்களில் ஒரு பத்துப் பேருக்குகூட எனது டைரி அறிமுகமில்லை. அப்படித்தெரிந்தவர்களிலும் வாசிப்புப் பழக்கம் உள்ளோர் ஓரிருவர் மட்டுமே!
என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு வீட்டிற்கு வரும்போதெல்லாம் எனது சமீபத்திய பதிவு ஒன்றை வாசித்துப் பார்க்க சொல்வேன்!
இப்ப அவன் வீட்டுக்கு வருவதையே நிறுத்திட்டான்! :-)
எனது பதிவுகள் பற்றி எப்போதாவது பேசுபவன் நண்பன் பார்த்தி மட்டுமே! ஜீ என்ற பெயர் யாழில் நான் வசித்த ஏரியால உள்ள சிலருக்கு மட்டுமே பரிச்சயம்.
எனது வீட்டிலும் யாருக்கும் தெரியாது! ஆகமொத்தத்தில் பதிவுலகம் என்பது என்வரையில் ஒரு தனியுலகமாகவே உள்ளது! இது எனக்குப் பிடிச்சிருக்கு!
அதே போல் ஏதோ ஒரு கணத்தில் நான் திடீரென நிறுத்திச் சென்றும் விடலாம்! :-)
என்னை வெளிப்படுத்திக் கொள்வதில் எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. இயல்பில் கூச்சசுபாவி என்பதாலும் இருக்கலாம்!
(ஆமா! இல்லாட்டி மட்டும் பாக்கிறவங்க எல்லாம் ஆட்டோக்ராப் கேட்டுடுவாங்க! யாருப்பா அது திட்டறது? :-))
நீங்கள் வற்புறுத்தியதால் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன். அதன் மூலம் ஒருசில நண்பர்கள் அறிமுகமானார்கள். சமீபத்தில் மருதமூரான் எப்படியோ என்னை அடையாளம் கண்டுகொள்ள, பேசினோம்!
பதிவுலகில் நிறைய நண்பர்களை, ரசனையுள்ளவர்களைக் கண்டுகொண்டேன். அதே போல் ஜீ- யையும் ஒரு சிலருக்கு தெரிந்திருக்கிறது!
எனக்கு சினிமா பிடிக்கும்! பிடிக்கும் என்பதைவிட I Love cinema. அனால் நான் படங்கள் பார்ப்பது குறைவு!
நான் பர்த்த சில படங்களில் உலக சினிமாக்களே அதிகம். ஹாலிவுட் குறைவு.
ஆரம்பத்தில் ஈரானிய சினிமா! Majid Majidi யின் படங்கள்!
அதேபோல் இத்தாலிய சினிமா என்னைக் கவர்கிறது - இயக்குனர் Guiseppe Tornatore, Roberto Benigni போன்றோரின் படங்கள்! என்னை ஆகக் கவர்ந்த இத்தாலியப் படம் 'Cinema Paradiso'.
அதே போல் கொரியப் படங்கள் குறிப்பாக Kim Ki -duk இன் படங்கள்!
அப்படிப் பார்த்ததில் பல படங்கள் எனது பதிவில் எழுதப்படாமலே இருக்கிறது! எல்லாம் சோம்பேறித்தனம் தான் காரணம்!
தமிழ்- இயக்குனர்,பதிவுலக விமர்சனங்களைப் பார்த்தே தெரிவு செய்து பார்ப்பேன்!
நான் இந்தியாவில் இருந்தால் இப்போது ஒரு உதவி இயக்குனராக மாற முயற்சியாவது செய்திருப்பேன்! :-)
கடந்த நான்கு வருடங்களாக எனது வாசிப்புப் பழக்கம் (புத்தகங்கள்)வெகுவாகக் குறைந்துவிட்டது! ஆனால் பதிவுகளை வாசிப்பதால் நிறையத் தெரிந்து கொள்ள, ரசிக்க, சிரிக்க, ஆச்சரியம் கொள்ள முடிகிறது!
இந்த உலகில் எந்த பேதமுமின்றி ஒவ்வொருவரிடமும், ஏதோ எங்களுக்குப் புதிய, ரசிக்கக்கூடிய ஒரு விஷயம், செய்தி இருக்கிறது! பதிவுலகமும் அப்படியே!
ஜீசஸ், நபி, புத்தர், கிருஷ்ணர் மட்டுமல்ல! ஒரு வகையில் எல்லா மனிதர்களுமே ஒரு Messenger என்றே நான் நினைக்கிறேன்!
எப்போதும் நான் ஒரு ரசிகனாகவும், பார்வையாளனாகவுமே இருக்கின்றேன்!
எனது பதிவுகளிலும் நான் ரசித்த, பார்த்த, என அனுபவங்களையே அதிகமாக சொல்லியிருக்கிறேன்!
உணர்ந்து கொள்ளாத எதையும், முழுதுவதும் கற்பனையாக என்னால் எழுத முடிவதில்லை!
எனக்கு நகைச்சுவை கலந்த எழுத்துக்கள் பிடிக்கும்! (சுஜாதா மாதிரி) அம்மாதிரி பதிவுகளை விரும்பி வாசிப்பேன்!. அம்மாதிரி எழுவது கடினமானதும் கூட.
நம்மிடையே அருகி வரும் நல்ல குணங்களில் ஒன்று நகைச்சுவை உணர்வு!
நம்மவர்கள் பலர், எபோதும் படு சீரியஸ் ஆகவே இருக்கிறார்கள்! வடிவேலு காமெடியையே படு சீரியஸா உர்ர்ர்ர்ரென்று பார்ப்பவர்கள் ஏராளம்! நம்மவரின் நகைச்சுவை உணர்வு அப்படி!
அதேநேரம், ஒரு சீரியசான விஷயத்தையும் 'அவல நகைச்சுவையாகச்' சொல்லிச் செல்லலாம்!
Thursday, February 17, 2011
மரணத்தின் பின்னர்!!!!

Tuesday, February 15, 2011
ஹொக்ரெயில் - 15.02.2011


Sunday, February 13, 2011
இந்தவாரப் பதிவர் - திரு.மாத்தியோசி றஜீவன்.

நகைச்சுiவாயக பேசவும், எழுதவும் தெரிந்தவர்கள் எல்லோரையும் தம்மகத்தேகவர்ந்துகொள்வது இயல்பு என்பது றஜீவனின் பதிவுகளில் மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ராமலிங்கம் றஜீவன் என்ற இயற்பெயரைக்கொண்ட இவர், யாழ்ப்பாணம்மானிப்பாயை பூர்விகமாகக்கொண்டவர். தனது உயர்தரக்கல்வியைவவுனியாவில் கற்று, பின்னர், ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியைபூர்த்திசெய்து வன்னி மண்ணில் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றியவர். அதன்பின்னர் ஈழத்தமினத்தின் தலைவிதியான புலர்பெயர்வு வாழ்வு இவரையும் வந்துசூழ, தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துவருகின்றார்.
ஆனால் இவரது எழுத்து நடைகளையும், எழுதும் விடையப்பரப்பக்களையும்காணும் பலர் இவரை தமிழ்நாட்டுப்பதிவராகவே கருதுகின்றார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
தமிழ் மட்டும் இன்றி “With Me” என்ற ஆங்கில வலைப்பதிவையும், Avec மொய் என்ற பிரஞ்சுவலைப்பதிவையும்கூட இவர் பதிந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதொன்றே. ஒருவகையில் மூன்று மொழிகளில் பதிவெழுதும் பதிவர்களில் நாம் அறிந்துமும்மொழி புலமையுடன் இருக்கும் ஒருவர் றஜீவன் என்பதும் பெருமைசேர்க்கும் ஒருவிடயமே.
கடந்த வருடம் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதிவுலகத்தில் முழுமையாககளமிறங்கிய றஜீவனின் பதிவுகளும், வாசகர் தொகையும் மளமளவெனஅதிகரித்து சென்றதற்கு அவரது தொடர் ஈடுபாடும், பல துறைத்தேடல்களுமேபெரும் காரணங்களாக அமைந்துள்ளதை கண்டுகொள்ளலாம்.
சினிமா, இசை, பாடல்கள், சமுகம், சமகால நிகழ்வுகள், அரசியல், அரசல்புரசல்கள், தொழிநுட்பத்தகவலல்கள், ஒவ்வொரு பதிவுலும்அட்மார்க்குடன் எட்டிப்பார்க்கும் கவிதைகள் என வாசிப்பவர்களை நிறையயோசிக்கவும் வைத்து, அதேநேரம் எந்தவொரு இடத்திலும் சலிப்புத்தன்மையைகொஞ்சமேனும் வாசகர்களுக்கு வராதபடி அவதானமாக கையாளும் எழுத்துக்கள்றஜீவனிடம் அலாதியாகவே உள்ளன.
நகைச்சுவைக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கும் றஜீவனுடைய எழுத்துக்கள், தன் பதிவுகள் மற்றவர்களுக்கு ஒரு றிலாக்ஸ்ஸாக இருக்கவேண்டும் என்றஅவரது எண்ணத்தின் வெளிப்பாடாகவே இருக்கும் என்பதில் எந்தவொரு ஐயமும்இல்லை.
அதேவேளை சகல பதிவர்களுடனும், மென்மையான உணர்வோடும்நகைச்சுவையுடனும் அவர் எழுததுக்களால் தொடர்பு கொண்டுள்ளதும், காத்திரமான பதிவுகளுக்கும், உபயோகமான பதிவுகளுக்கும் ஓடிச்சென்றுவாசிப்பது மட்டும் அன்றி எழுதும் சக பதிவரை ஊக்குவிக்கும் பண்பும் அவரிடம்இயல்பாகவே உள்ளதை அவதானித்துகொள்ளமுடிகின்றது.
அடுத்த ஒரு முக்கியமான விடயம் என்னதான் நகைச்சுவைகள் கொண்டதாகஅவரது பதிவுகள் இருந்தாலும் உன்னிப்பாக கவனித்தால் அந்த எழுத்துக்களிலும், கருப்பொருள்களிலும் எந்தவொரு யதார்த்த மீறல்களையோ, அல்லது சார்பானதகவல்களையோ காணமுடியாதிருப்பது அவரது எழுத்துக்களின் முக்கியமானஒரு சிறப்பு.
பதிவுலகில் கால் பதித்து கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குள் மிக அதிகமானநண்பர்களையும், வாசகர்களையும், சக பதிவர்களையும் அவர்பெற்றுக்கொண்டுள்ளது மிக முக்கிமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயமே.
தனது வலைத்தளத்தில் “என்னைப்பற்றி” என்ற இடத்தில் எதையும் இதுவரைசாதிக்கவில்லை சாதித்துவிட்டு சொல்கின்றேன் என்ற கருத்தை இட்டுள்ளமை, அவையடக்கமாக மட்டுமே கருத முடிகின்றது. அதற்கு கீழேயே அப்படிபார்க்காப்போனால் எப்போதுமே என்னைப்பற்றி சொல்லப்போவதில்லை என்று, எழுத்தினால் கண்ணடிப்பதும் அதைவிட ஒரு அவையடக்கமாகவே தெரிகின்றது.
சரி.. இந்தவாரப்பதிவரான மாத்தியோசி றஜீவன் பற்றிய சிறிய பார்வையைஇதுவரை பார்த்தோம். இனி இந்தவாரப்பதிவர் றஜீவனிடம் கேட்கப்பட்ட அந்தமூன்று கேள்விகளையும் அதற்கான அவரது பதில்களையும் பார்ப்போம்.
கேள்வி: சம்பிரதாயக் கேள்விதான் தங்கள் வலையுலகப்பிரவேசம் எப்படி?
றஜீவன் : எங்க எது ப்ரீ யா குடுத்தாலும் அத வெக்கப்படாம வாங்குறது நம்ம பழக்கம்! கூகுளும் ப்ளாக்குகளை பிரீயாகத் தருவதால், சரி நம்மளும் ஆரம்பிப்போமே என்று தொடங்கினேன்!
கேள்வி: தங்கள் வலைப்பதிவில் குறிக்கோள் அப்படி ஏதாவது உண்டா?
றஜீவன் : எல்லோரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கவேணும்! இதுதான் எனது குறிக்கோள்! ஆனால் இது லேசான காரியம் இல்லை! கிரியேட்டிவ் மைன்ட் நிறைய வேணும்! எனக்கு கிரியேட்டிவ் மைன்ட் உள்ள எல்லோரையும் ரொம்ப பிடிக்கும்! எமது மூளையை கசக்கி பிழிந்து அதில் சாறெடுத்து, நாம் எதையாவது சாதிக்க வேண்டும் என்று சிறிய வயதில் இருந்தே யோசிப்பேன்!
கேள்வி: வலையுலகம், எழுத்துக்கள் சார்பாக எதிர்காலத்திட்டங்கள் ஏதாவது?
றஜீவன் :கண்டிப்பாக! முதல் முறையாக இதனை இப்போதுதான் ஏனைய நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்! அதாவது சினிமாவில் ஸ்க்ரிப்ட் ரைட்டராக வரவேண்டும் - அதுவும் மிகச்சிறந்த காமெடி ஸ்க்ரிப்டுகளை எழுதி அதனை நல்லதொரு இயக்குனரின் கையில் கொடுத்து, நல்ல நகைச்சுவைப் படங்கள் எடுத்து மக்களை சிரிக்க வைக்க வேணும் என்பதே எனது குறிக்கோள்!
எனது வலைப்பூ மூலமாக நான் இதற்கான பயிற்சியினை மேற்கொண்டு வருகிறேன்! நான் எழுதும் ஒவ்வொரு பதிவும் எனக்கான பயிற்சியே! இப்படியே எழுதி எழுதி நன்கு புடம் போடப்பட்ட பின்னர் - சினிமாவுக்குள் நுழைவதாக எண்ணம்! காமெடி ஸ்க்ரிப்டுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும்!
திரைப்படங்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் எனது நண்பர்கள், இப்போதே எதையாவது எழுதும்படி கேட்கிறார்கள்! ஆனால் நான் அவசரப்படவில்லை! என்னை இன்னும் நிறைய வளர்த்துக்கொள்ள வேண்டும்! பின்னர்தான் கால்வைக்க வேண்டும்!
றஜீவனின் - மாத்தியோசி
Friday, February 11, 2011
இரும்புச்சீமாட்டியின் இறுக்கமானபிடியும் போக்லண்ட் யுத்தமும்.

Tuesday, February 8, 2011
ஹொக்ரெயில் - 08.02.2011


Sunday, February 6, 2011
இந்தவாரப் பதிவர் - திரு. கூல்போய்
