Tuesday, August 11, 2009

ஆசியாவை மையப்படுத்தியுள்ள நிலநடுக்கங்கள்.


2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி ஆசியாவை மட்டும் இன்றி முழு உலகத்தையும் உலுக்கிவிட்ட சுனாமித்தாக்கத்தின் பின்னர் குறிப்பாக ஆசிய மக்களிடம் இயற்கை அனர்த்தப்பீதி அதிகரித்துவந்துவிட்டது என்பதே உண்மை. ஏனென்றால் அந்த பாரிய தாக்கத்தின் கொடூரம், பார்த்துக்கொண்டிருக்க ஒரு கணப்பொழுதில் பலர் காவுகொள்ளப்பட்டமை, பல கடற்கரைக்கிராமங்களே முழுவதுமாக சுனாமி அலைகளால் விழுங்கப்பட்ட பீதியில் இருந்து உண்மையில் மனதளவில் மக்கள் இன்னும் மீளவில்லை என்பதே உண்மை.

இந்த நிலையில் அன்று கடலடி நில நடுக்கம் ஏற்பட்ட யாவா, சுமாத்திரா, மற்றும் இந்தோனேசியாவுக்கு இடைப்பட்ட இடங்களில் இன்றும் அப்பப்போ 4 ரிக்டர் தொடக்கம் 7 தொடக்கம் தசங்கள் கொண்ட ரிக்டர்வரை நில அதிர்வுகள் இடம்பெற்றவண்ணமே உள்ளன.
ஏதோ மிகப்பெரும் ஆபத்து நிறைந்த கொடுங்கடல்மேல் நாம் பயணிப்பதுபோன்றும், எந்தநேரமும் 2004 ஆம் ஆண்டு போலவோ அதைவிட மோசமாகவோ நாம் காவுகொள்ளப்படலாம் என்ற உள்ளுனர்வு எச்சரிப்புக்கள், சில ஆரூடங்கள் என்பவற்றை கேட்டுக்கொண்டே, மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கை என்ற அச்சில் தமது அன்றாட நடவடிக்கைகளில் இவற்றை மறந்து சுழன்றுகொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில்த்தான் தற்போது ஆசியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இவை பேரளிவு ஒன்றுக்கான இயற்கையின் எச்சரிப்புக்களா? அல்லது சாதாரணமான நிலத்தடி தகட்டசைவின்போது எற்பட்ட ஒரு சிறு அதிர்வா? என புரிந்துகொள்ளமுடியாமல் மக்கள் அச்சமடைந்துபோயுள்ளனர். சாதாரண நிகழ்வுகள்தான் என்று பேசாமல் இருப்பதற்கும் எவரது மனதும் இடம்கொடுப்பதாய் தெரியவில்லை.
எது எப்படியோ இவ்வாறான ஆக்ரோசமான இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டி அறியக்கூடிய நிலையில் மனிதன் இன்று ஓரளவுக்கு முன்னேறியிருக்கின்றபோதும், அந்த இயற்கை அனர்த்தங்களை வெற்றிகொள்ளும் அளவுக்கு மனிதனோ அவனது விஞ்ஞானமோ முன்னேறவில்லை என்பதே உண்மை.


நேற்றிரவு அந்தமான் கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இந்தியா, தாய்லாந்து, மியான்மர், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நாடுகளிலும் இன்று அதிகாலை வரை மக்களிடம் பீதி காணப்பட்டது. உண்மை என்னவென்றால் நள்ளிரவு என்பதால் அதிகமானவர்களுக்கு
விடியும்வரை என்ன நடந்ததென்பதே தெரியாது.

இந்தியாவைப்பொறுத்தவரை நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த கடல் பகுதி இந்தியாவில் இருந்து 1200 கி.மீ. தொலைவில் உள்ளது. என்றாலும், சென்னை, நாகை, கடலூர், ஐதராபாத், திருப்பதி, விசாகப்பட்டினம், விஜயவாடா நகரங்களில் நிலநடுக்க பாதிப்பு இருந்தது. இதேவேளை இலங்கையிலும் சில பகுதிகளிலும் இலேசான நில அதிர்வினை உணரக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓரிசாவில் தலைநகர் புவனேஸ்வரிலும்; நிலநடுக்க தாக்கம் இருந்தது இன்று காலையில் தெரியவந்தது. புவனேஸ்வர் நகரை நிலநடுக்கம் அடுத்தடுத்து இரண்டு தடவை குலுக்கி எடுத்துள்ளது. உயரமான கட்டிடங்கள் சுமார் 20 வினாடி ஆடின. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர். இந்திய கடலோர நகரங்களில் எங்கெங்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள் என இந்திய அனர்த்த மையம் அறிவித்துள்ளது.


நிலநடுக்கத்தின் மையப்பகுதி தாய்லாந்து நாட்டில் இருந்து 825 கி.மீ. தொலைவில் இருந்தது. பாங்காங் நகர கட்டிடங்கள் லேசாக குலுங்கின.
அது போல 365 கி.மீ. தொலைவில் உள்ள மியான்மர் நாடும் நில நடுக்கத்தால் குலுங்கியது. வங்கதேசத்தை பொறுத்தவரை கட்டிடங்கள் குலுங்கவில்லை. பெரிய அளவில் நிலநடுக்கம் உணரப்படவில்லை.
என்றாலும் சுனாமி அலைகளால் ஆபத்து உள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருந்ததால் அந்த நாட்டு மக்களிடமும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது என செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சுனாமி தாக்குதலின்போது அதிக உயிர்களை பறிகொடுத்தது இந்தோனேசியாதான். எனவே இந்தோனேசியா மக்களிடம் அதிக பீதி காணப்பட்டது. சுனாமி எச்சரிக்கையை அறிந்ததும், மக்கள் கூட்டம், கூட்டமாக மேடான இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் சுனாமி தாக்கம் எற்படாது என்று இந்தோனேசியா அரசு மக்களிடம் அமைதி ஏற்படுத்தியது. என்றாலும் மீண்டும் நிலநடுக்கம் வரும் என்று இந்தோனேசியா மக்கள் பீதியுடன் உள்ளனர்.

இதேவேளை தமிழக மீனவர்கள் கடலில் ஒரு மாற்றத்தை அவதானித்ததாகவும், வழக்கத்தினைவிட நேற்று மிக அதிகமான மீன்கள் அவர்களின் வலைகளில் பிடிபட்டதாகவும் ஆழமான கடல் பகுதியில் காணப்படும் மீன்கள் கூட 500 அடி தூரத்திலேயே தமது வலைகளில் சிக்கியமை தமக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


இந்தக்கதை இப்படி இருக்க ஜப்பான் நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் நேற்றிரவு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் டோக்கியோவில் இருந்து 90 மைல் தொலைவில் ஷிசோகா கடலோரத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலுக்கு 6.6 புள்ளியாக அது பதிவாகி இருந்தது.
நில நடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 14 மைல் தொலைவில் இருந்தது. நிலத்தின் மேற்பரப்பில் உண்டான இந்த நில நடுக்கம் காரணமாக கட்டிடங்கள் அதிர்ந்தன. உயரமான கட்டி டங்கள் காற்றில் தென்னை மரம் சாய்வது போல சாய்ந்து மீண்டன. இதனால் உயரமான கட்டிடங்களில் வசித்தவர்கள் உயிரை காப்பாற்றக்கோரி அலறினார்கள். வீடுகள், கடைகளில் அடுக்க வைக்கப்பட்டிருந்த பொருட்கள் உருண்டன.
வீட்டின் சுவரில் பொருத்தப்பட்டிருந்த டி.வி. உள்ளிட்ட பொருட்கள் கீழே விழுந்து நொறுங்கின. இத்தகைய சம்பவங்களில் சுமார் 85 பேர் காயம் அடைந்தனர்.
2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மின்சாரம் தடைபட்டது. மின்சாதன பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தப்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக ரெயில் பாதைகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் ரெயில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது. டோக்கியோ, நகோயா நகரங்களுக்கு இடையே ஓடும் புல்லட் ரெயிலும் நிறுத்தப்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டது. அதை நிரூபிப்பது போல ஷிசோகா மாகாண கடலோரங்களில் சிறிய அளவில் பேரலைகள் வந்து தாக்கின. கடல் நீர் மட்டம் 40 செ.மீ. அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. இந்த சுனாமி பெரிய அளவில் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
என்றாலும் 12 பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்துக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கையை ஜப்பான் திரும்பப் பெற்றது.
(செய்திகள் - மாலைமலர்)

ஜப்பானில் நில நடுக்கம் சம்பந்தமான படங்களை கீழே பாருங்கள்…






















5 comments:

நந்தா said...

ரொம்ப பயப்படுத்திறிங்க பொஸ், அப்ப வேறு ஒரு கிரகம் பார்த்திடவேண்டியதுதான்!

Unknown said...

நீங்கள் தெரிவிப்பதுபோல எம்மில் பலருக்கு இப்படி ஒரு நில நடுக்கம் வந்துள்ளதாகவே காலைதான் தெரியும். அப்படி என்றால் இந்த நள்ளிரவு நேரத்தில் பாரிய பூகம்பங்கள் ஏதும் வந்திருந்தால் தூக்கத்திலேயே நிரந்தர தூக்கத்திற்கு சென்றிருப்போம். அப்பா...ஜீரணிக்கமுடியாத ஆபத்துக்கள் எம் தலைக்கு மேலே...இல்லை இல்லை பூமிக்கு கீழே..

கவிஞர். எதுகைமோனையான் said...

நடக்கும் என்பார் நடக்காது! நடக்காது என்பார் நடந்துவிடும்!!

Unknown said...

Waaw...next post your 50th Post no? My advance Congratulations.

Unknown said...

26.12.2006jaralum marakkamudiyathu antha thakkam ennum mkkalai veddu pokvillai.

LinkWithin

Related Posts with Thumbnails