Monday, September 19, 2011

அர்த்த யாமம் அர்த்தமுள்ளது – சென்னை நைட்லைஃப்


அன்னியத்தாக்கங்கள், நவீனத்துவமோகங்கள், பிரமாண்டங்களை கண்ட பிரமிப்புக்கள் என்பன எமக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் பல. அவற்றில் ஒன்றுதான் பெருநகரங்களில் களைகட்டும் களியாட்டங்களை மையப்படுத்திய இரவு கேளிக்கைகள் அல்லது நைட்லைஃப்.
கலாசார விழுமியங்கள், கலாசாரத்திற்கு உதவாத நடத்தைகள் என்பனபோன்ற பார்வைகளை ஒரு பக்கம் இப்போதைக்கு வைத்துவிட்டு யுத்புஃள் மைண்டுடன் இவை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
ஒருவகையில் சொல்லப்போனால், நைட் கிளப்பிற்கு அல்லது பப்பிற்கு போவதே ஒரு பெரிய ஸ்டேட்டஸை தரும் என்ற நினைப்புக்கூட பல இளவட்டங்களுக்கு உண்டு. அதேபோல இரவுகளின் சௌர்க்கபுரி இது என்று நாளாந்தம் தஞ்சமடையும் பலரும் இங்கு உண்டு. ஏன் ஒரு சிலருக்கு இது ஒருவித அடிட்டாகவே போய்விட்டதும் உண்டு.

சென்னை நைட் கிளப்களை எடுத்துக்கொண்டால் எல்லா கிளப்களிலும் களியாட்டங்கள் எக்பென்ஸிவாக இருந்தாலும்கூட சில வி.ஐ.பி மற்றும் பாரினஸ் ஒன்லி கிளப்களும் உண்டு. இந்த கிளப்கள் சும்மா சொல்லக்கூடாது ஒரு நைட்கிளப்புக்கரிய முறையான அம்சங்களுடனேயே இருக்கின்றன.
நடனமாடும் இடத்தின் அதன் தளத்தின் தன்மை, அதன் அளவு, ஒலி, ஒளி லைட்டிங் முறைகள் எல்லாம் பக்காவாக இருந்தன. குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் கரோக்கி வசதிகள் கூட இங்கே தரப்படும் என்பதுடன் உயர் மட்டத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் செம டீசென்ஸியும் இருந்ததை காணக்கூடியதாகவே இருந்தது.

இது தவிர சில உயர் இடத்து பயல்கள் தங்கள் பிறந்ததினங்களை மேற்படி கிளப்பில் தங்கள் நண்பர்களுக்கு பெரிய அளவிலான ட்ரீட்டாக செலிபிரேட் பண்ணுவதையும் காணலாம்.
பெரும்பாலும் ஐ.டி துறைசார்ந்தவர்களை கணிசமான அளவுக்கு மேற்படி கிளப்களிலும், பப்களிலும் காணக்கூடியதாக இருக்கும்.

சரி... நம்ம அனுபவத்திற்கு வருகின்றேன். நான் சென்னையில் இருந்த நாட்களில் லண்டனில் இருந்து நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவரது அழைப்புக்கிணங்கவே முதல்முறையாக சென்னையில் ஒரு கிளப்பிற்கு சென்றேன்.
அந்த கிளப் பாரினஸ் ஒன்லி கிளப்தான், நாம அங்க பாரினஸ்தானே! சோ...சாதாரணமாக நாங்கள் அங்கே போகலாம். அதேவேளை கோள்டன் நுளைவு அனுமதி பெற்றால் உள்ளூர் ஒருவரையும் ஒருபாஸ்போர்ட் வீதம் அழைத்து செல்லலாம் என்றபடியால், சென்னை சிட்டி சென்டரில் முதல்நாள் சந்தித்த நண்பிகள் ஆன இருவரையும் அழைத்து சென்றிருந்தோம் (தமிழச்சிகள் அல்லர்) கொழும்பு கிளப்களுக்கும் இதற்கும் பாரிய வித்தியாசத்தை காணக்கூடியதாக இருந்தது.

சும்மா சொல்லக்கூடாது ரோயல் சேர்விஸ் தரத்திற்கு அவர்களது சர்விஸ் இருந்ததை மறுக்கமுடியாது. என்னடா இது வெளியில கஸ்டமர் கெயார் என்றால் என்ன? என்று கேட்கும்படியான சேவைகளும் மூடப்பட்ட பிரமாண்டமான இடத்தில் விழுந்துவிழுந்து கவனிப்பதும் எனக்கு பெரும் ஆச்சரியமாகவே இருந்தது. எங்கும் காசுதான் குறிக்கோள் என்றாலும் அந்த காசைப்பெறுபவர்களுக்கு உயர் கௌரவத்தை வளங்கும் தன்மை ரொம்ப பிடித்துப்போன ஒரு விடயம் தானே!

இது தவிர தொடர்ந்து வாரத்தில் ஒருநாள் என தொடர்சியாக சில கிளப்புக்கு சென்னை ஐ.டி நண்பர் ஒருவர் தந்த ஹைட் வியூவுடன் சென்று வந்தோம்.
என்ன சார்.... நீங்க இப்பெல்லாம் இங்கு வந்து துட்டை வீசுவதால் பிகர்ஸ் எல்லாம் ஸ்ரீ லங்கன் என்றவுடன் பின்னால போகிறாளுக, நம்மளை கணக்கெடுக்கமாட்டாளுக என்று ஆதங்கத்துடன் சொன்னார் அந்த நண்பர்.
அவர் சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்பதை பல கிளப்களிலும் கண்டுகொண்டேன்.. அந்த இரச்சல்களின் மத்தியிலும் பலர் எம்மிடம் யுவர் நேட்டிவ் ஜஃப்னா? என்று கேட்டு இப்போ என் பேஸ்புக் நண்பர்கள் பட்டியலிலும் உள்ளனர் நம்ம பயலுகள்.

டப்ளின் என்ற கிளப்பில் அப்போது பல குறைபாடுகள் இருந்தன என்பதைவிட, மனுகாட்டில் உள்ளதை விட அதிகமான பணத்தை பில்லாக தந்த சம்பவமும் அங்கு மட்டும் நடந்தது.
ஜொப்ரீஸ், ஏச்.எவ்.ஓ, பிளேம் லீ கிளப் என்பவற்றில் வருவோர்களின் தொகை அதிகமாகவே இருந்ததை அவதானிக்கமுடிந்தது.

சரி இனி விடையத்திற்கு வருவோம், கிளப், அல்லது பப் என்றாலே தேவையில்லாமல் காசை எடுத்து வீசும் ஒரு இடமாகவே கருதவேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் எதுவுமே தெரியாமல் நான் நல்ல பிள்ளை என்று இருப்பதை விட அனைத்துவிடையங்களையும் அறிந்து சிலவற்றை தவிர்துக்கொள்வதே சிறந்ததாக இருக்கும். யுத்புஃள் காலங்களில் இதுபோல சில கேளிக்கை விநோதங்கள் ஒருவகையில் கிளுகிளுப்பு தரும் விடையம் ஒன்றதான். ஆனால் இதற்குள் அடிட்டாகும் தன்மையினை ஒருபோதும் எட்டிவிடக்கூடாது.


அதேவேளை இந்த கிளப்களில் பேசனல் சீட்களை அரேஞ் செய்து பல கம்பனி சந்திப்புக்கள், பல முக்கிமான விடையங்கள் பற்றிய விவாதிப்புக்கள் என்பவற்றை செய்யும் சிலரையம் நான் பார்த்திருக்கின்றேன், சில பிஸ்னஸ் புறப்போசல்களை ஓ.கே பண்ண இந்த இன்வயர்மென்ட் ஒரு நபரை ஓ.கே பண்ணும் £ழ்நிலைக்கு கொண்டுவரும் என்பதை பின்னர் நான் அனுபவ ரீதியாகவும் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.

உழைத்து உழைத்து என்னத்தை கண்டோம் மாதத்தில் ஒரு நாள் கொஞ்சம் ஜாலியாக இருந்தால், மனதுக்கு கொஞ்சம் ரீபிரஸ் கிடைக்கும், வேர்க்லோட்களில் இருந்தும் ரென்சன்களில் இருந்தும் ஒரு நைட் நல்ல பூஸ்டை தருகின்றது என்றும் இந்த களியாட்டங்கள் பற்றிய சிலரது கருத்துக்கள் உள்ளன. உண்மைதான் லகரங்கள் தொட உழைப்பவர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும், ஆனால் இதை சில ஆயிரங்கள் உழைப்பவர்கள் உதாரணங்களாக கொள்ளக்கூடாது. ஏன் எனில் இங்கேயான செலவே பல ஆயிரங்களாக இருக்கும்.

ஜெஸ்... இங்கேதான் சௌர்க்கம் நரகம் இரண்டும் உள்ளதே!!

77 comments:

Unknown said...

மாப்ள கடைசில சொன்னீங்களே அது தான் நச்!

balavasakan said...

மூத்தோர் உங்களது அனுபவ பகிர்வுகள் எம்போல் இளசுகளுக்கு நல்ல பாடம்,,
ஒரு டவுட்டு ஏன் தமிழச்சிகள நைட் கிளப்புக்கு கூட்டிட்டு போகக்கூடாதா..??
இன்னு மொரு டவுட்டு அங்க போய் என்ன பண்ணினீங்கன்னு சொல்லவே இல்ல??

தமிழ் உதயம் said...

நல்ல பகிர்வு. இல்லாதவர்களுக்கு பணம் சம்பாதிப்பது குறித்து சிந்தனை. இருப்பவர்களுக்கு வாழ்க்கையை அனுபவித்தாக வேண்டுமே என்கிற சிந்தனை.

Anonymous said...

///நீங்க இப்பெல்லாம் இங்கு வந்து துட்டை வீசுவதால் பிகர்ஸ் எல்லாம் ஸ்ரீ லங்கன் என்றவுடன் பின்னால போகிறாளுக, நம்மளை கணக்கெடுக்கமாட்டாளுக என்று ஆதங்கத்துடன் சொன்னார் அந்த நண்பர்./// ஹிஹி

Anonymous said...

///அவர் சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்பதை பல கிளப்களிலும் கண்டுகொண்டேன்.. அந்த இரச்சல்களின் மத்தியிலும் பலர் எம்மிடம் யுவர் நேட்டிவ் ஜஃப்னா?//அப்போ, குறிப்பாய் ஜப்னா தானா ;-) அப்போ எனக்கும் சான்ஸ் இருக்கு ;-P

shanmugavel said...

//ஜெஸ்... இங்கேதான் சௌர்க்கம் நரகம் இரண்டும் உள்ளதே!!//

super

K said...

கிளப்புக்கே போய் வந்த மாதிரி இருக்குது ஜனா அண்ணே! ஆமா பாரிஸ் கிளப்புக்கள் பற்றிச் சொல்லவா?

maruthamooran said...

நான் இதுக்கு கருத்து சொல்ற அளவுக்கு வளரவில்லை என்பது உங்களுக்கே தெரியும்!

Jana said...

@விக்கியுலகம்
ஆமா அது சரிதானே மாப்ளே!

Jana said...

@Balavasakan

ஆ...... பெரிய புராண முற்றோதல் செய்வோம் தெரியாதா டாக்டர்?

Jana said...

@தமிழ் உதயம்
சரியா சொன்னீங்க சார்......... இதற்காகவே பசங்க அதிகம் உழைத்தாலும் சந்தோசமே

Jana said...

@கந்தசாமி.
கண்டிப்பாக உங்களுக்கும் டக்கீலாவுடன் சான்ஸ் இருக்கு கன்டோஸ்

Jana said...

@shanmugavel
உண்மைதான் நன்றி சார்

Jana said...

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw


வாங்க மணி.........பாரிஸ் கிளப்களா????? ஐயோ வேண்டாம்..சென்சார் போர்ட் அனுமதிக்காது :)

Jana said...

@மருதமூரான்

எதுக்கு ஜேம்ஸ் வசந்த் 'இந்த இரவுதான்' பாடலை எங்கே சுட்டிருக்கின்றார் என்ற ஒரிஜினல் பாடலை நான் போட்டிருப்பதை தானே சொன்னீங்க மருதம்ஸ்?

balavasakan said...

@@மருதமூரான்
##நான் இதுக்கு கருத்து சொல்ற அளவுக்கு வளரவில்லை என்பது உங்களுக்கே தெரியும்!##

பட்டறிவு போதாது என்கிறீர்களா...??

Jana said...

நான் சொல்வது இறந்தகாலம் அவர் நிகழகாலத்தில் இலகிக்கும் கோபால கிருஸ்ணர் அல்லவா வாசகன்!

maruthamooran said...

////Balavasakan said...

@@மருதமூரான்


பட்டறிவு போதாது என்கிறீர்களா...??///

படவே இல்லையே? அதுதான் வருத்தம்.

maruthamooran said...

ஃஃஃஃஃJana said...

நான் சொல்வது இறந்தகாலம் அவர் நிகழகாலத்தில் இலகிக்கும் கோபால கிருஸ்ணர் அல்லவா வாசகன்!ஃஃஃஃஃ

எனக்கு புரியாத மாதிரி பின்னுாட்டுகிறார் மை லோட்ர்!

Jana said...

@மருதமூரான்.
கோபால கிருஸ்ணர் என்பதன் அர்த்தம் தெரியாதா என்ன?

maruthamooran said...

///Jana said...

@மருதமூரான்.
கோபால கிருஸ்ணர் என்பதன் அர்த்தம் தெரியாதா என்ன?////

யாரு அது? எனக்கு தெரியாது. நம்புங்க.

maruthamooran said...

அதுசரி? என் தமிழ் பிள்ளையள பப்புக்கு கூட்டிக்கொண்டு போனால் தப்போ?

Jana said...

பெண்கள் புடைசூழ கொலுவீற்றிருப்பவர் தானையா கோபால கிருஸ்ணர்..ஸ்திரி சல்லாபர்:)

maruthamooran said...

புருசோத்தமர் உதுக்குள்ள வரமாட்டார் என்டு நினைக்கிறன். அவர் ரொம்ப நல்லவர்....! ஹிஹிஹி

Jana said...

தமிழ் பெண்களை பப்புக்கு கூட்டிப்போக முடியாது என்று கூறவில்லை நாம கூட்டிப்போனவங்க தமிழ் இல்லை அவ்வளவுதான்

balavasakan said...

@ஆமா ஆமா.. பெணகளுக்கு மிக மிக நல்லவர் என்று கேள்விப்பட்டன்..

Jana said...

அவர் ரொம்ப நல்லவர்!!!!

எங்கேயோ கேட்ட வசனம்போல இருக்கே இது!

maruthamooran said...

///Jana said...

தமிழ் பெண்களை பப்புக்கு கூட்டிப்போக முடியாது என்று கூறவில்லை நாம கூட்டிப்போனவங்க தமிழ் இல்லை அவ்வளவுதான்////

நான் நினைக்கிறன் தமிழ் பெட்டையள கூட்டிக்கொண்டு போனால் உங்கட வண்டவாளங்கள் விளங்கியிடுமெண்டு நீங்கள் வேற மொழிப் பெட்டையள கூட்டிக்கொண்டு போயிருக்கிறியள்.

maruthamooran said...

////Balavasakan said...

@ஆமா ஆமா.. பெணகளுக்கு மிக மிக நல்லவர் என்று கேள்விப்பட்டன்..////

ஆண்களுக்குத்தான் நல்லவர் இல்லை. பெண்களுக்காவது நல்லவரா இருக்கட்டுமே! ஹிஹிஹி

Jana said...

ஆஹா..... வண்டவாளங்கள் எல்லாம் நீங்க சொல்லுறவங்களுக்குதான் விளங்காதையா.....

maruthamooran said...

/////Jana said...

ஆஹா..... வண்டவாளங்கள் எல்லாம் நீங்க சொல்லுறவங்களுக்குதான் விளங்காதையா....////

இதுக்குத்தான் அனுபவம் வேணுமெண்டுறது. பார்த்தியளோ எனக்கு அனுபவம் இல்லையெண்டுறது தெரியுது.

balavasakan said...

@மருதமூரான்..
உண்மைகளை போட்டுடைக்க கூடாது... #தொழில்தர்மம்

maruthamooran said...

///Balavasakan said...

@மருதமூரான்..
உண்மைகளை போட்டுடைக்க கூடாது... #தொழில்தர்மம்////

ஆமால்ல. நான் இனி தெளிவாக இருக்கேன். (தெளிவு என்பதில் எந்தவித உள்கூத்தும் இல்லை)

Jana said...

உள் குத்து இல்லை ஏகப்பட்ட வெளிக்குத்தும் தனிக்குத்தும் தெளிவாக உள்ளதே

maruthamooran said...

////Jana said...

உள் குத்து இல்லை ஏகப்பட்ட வெளிக்குத்தும் தனிக்குத்தும் தெளிவாக உள்ளதே///

அதுசரி, இலங்கை பப்புக்கள் எப்பிடி? கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.

balavasakan said...

@jana
அது என்ன தெரியாத மாதிரி கேட்கிறீயள் ஏதோ அமெரிக்காவில இருக்கிற மாதிரி..

Jana said...

சரி அதைவிடுவோம் கொழும்பில் இப்ப வி.ஐ.பி லாஜ், ஜூலியானா, எலிபன்ட் ப்ளு, ஒக்ஸ், ட்ரான் ஏசியா, மவுண்லவேனியா, கலதாரி ப்ளு நைட்ஸ், எல்லாம் எப்படி மருதம்ஸ் கொஞசம் சொல்லிகொடுங்க வாசகனுக்கு பாவம் புது பெடியன் :)

balavasakan said...

@jana
ஏன் ஜனா அண்ணா உங்களுக்கு தான் எல்லாம் தெரியுமே நீங்களே வகுப்பெடுக்கலாமே.. குருதடச்ணை மட்டும் கேட்கப்படாது

maruthamooran said...

////Jana said...

சரி அதைவிடுவோம் கொழும்பில் இப்ப வி.ஐ.பி லாஜ், ஜூலியானா, எலிபன்ட் ப்ளு, ஒக்ஸ், ட்ரான் ஏசியா, மவுண்லவேனியா, கலதாரி ப்ளு நைட்ஸ், எல்லாம் எப்படி மருதம்ஸ் கொஞசம் சொல்லிகொடுங்க வாசகனுக்கு பாவம் புது பெடியன் :)////

நீங்கள் சொல்லுற பெயர்கள் எல்லாம் என்ன கொத்துரொட்டிக் கடைகளோ? நான் அறியேல்ல. அதுபோக, கொத்து வேற வாசன் சாப்பிடமாட்டார். அவர் சைவம்.

Jana said...

அந்த சைவக்கொக்கு கெணடைமீனுகளை கண்டால் விரதத்தை விட்டுடும்:)

maruthamooran said...

////Jana said...

அந்த சைவக்கொக்கு கெணடைமீனுகளை கண்டால் விரதத்தை விட்டுடும்:)////

பாவம். வாசன் இப்பவும் அப்பாவி மாதிரியே இருக்கிறார்.

balavasakan said...

@மருதமூரான்
கல்கிசை பீச்சில சூப்பு தடி கிடைக்குமா??? கிடைச்சால் ஒண்டை வாயிலயும் மிச்சத்த கையிலயும் கொண்டு திரியுங்கோ இல்லாட்டி யாரும் உங்கள நம்பமாட்டாங்கள்..

Jana said...

அப்ப நீங்க அப்படி இல்லைதானே மருதம்ஸ்????

balavasakan said...

@jana
இதி சரியான கேள்வி ???

maruthamooran said...

///Balavasakan said...

@மருதமூரான்
கல்கிசை பீச்சில சூப்பு தடி கிடைக்குமா??? கிடைச்சால் ஒண்டை வாயிலயும் மிச்சத்த கையிலயும் கொண்டு திரியுங்கோ இல்லாட்டி யாரும் உங்கள நம்பமாட்டாங்கள்..////

பாருங்க உங்களுக்குத்தான் என்ர வயசு பிடிபட்டிருக்கு. இப்பதான் மொண்டசரி முடிச்சிட்டு முதலாம் ஆண்டுக்கு வெயிட்டிங்க்.

maruthamooran said...

ஃஃஃஃJana said...

அப்ப நீங்க அப்படி இல்லைதானே மருதம்ஸ்????ஃஃஃஃஃ

இல்லை. இந்த கேள்வியே புரியாத அளவுக்கு அப்பாவி. ஹிஹிஹி.

maruthamooran said...

ஃஃஃஃBalavasakan said...

@jana
இதி சரியான கேள்வி ???ஃஃஃஃ

அப்படியா? ஹேஹிஹிஹி

balavasakan said...

இல்ல எந்த மீன் எண்டால் என்ன சொந்த மீனா இருக்கணும் !!

#எப்டி பஞ்ச்..!

Anonymous said...

இல்லாதவர்களுக்கு பணம் சம்பாதிப்பது குறித்து சிந்தனை... இருப்பவர்களுக்கு வாழ்க்கையை அனுபவித்தாக வேண்டுமே என்கிற சிந்தனை...Amen.

Jana said...

நடிப்பிலும் நடிப்பு உலகமகா நடிப்புடா சாமி!!!!

maruthamooran said...

////Balavasakan said...

இல்ல எந்த மீன் எண்டால் என்ன சொந்த மீனா இருக்கணும் !!

#எப்டி பஞ்ச்..!////

பேரரசிட்ட உதவி இயக்குனராகும் வாய்ப்பு இருக்கு வாசன் உங்களுக்கு.

maruthamooran said...

////Jana said...

நடிப்பிலும் நடிப்பு உலகமகா நடிப்புடா சாமி!!!!////

கவுண்டமணி சொல்லுவரே அந்த நடிப்பா?!

Jana said...

@ரெவெரி

நன்றி டெலிவரி..
ஏற்கவேணடிய கருத்துத்தான் அது

balavasakan said...

யார் இந்த நடுவரு கும்மலுக்கு நடுவில கோவிந்தா சொல்லிட்டு போறாரு...
ஆங்,,நன்றி மருதம் உங்கள் பாராட்டுக்கு..!

Jana said...

@மருதமூரா

கவுண்டமணி நம்ம சத்தியின் லொள்ளு தாங்கமுடியாமல் சொன்ன வசனம்தான்....இங்க மருதமூரான் என்பவரின் லொள்ளு தாங்கமுடியாமல்:)

maruthamooran said...

/////Balavasakan said...

யார் இந்த நடுவரு கும்மலுக்கு நடுவில கோவிந்தா சொல்லிட்டு போறாரு...
ஆங்,,நன்றி மருதம் உங்கள் பாராட்டுக்கு..!////

இங்க பாருங்களன் நன்றியெல்லாம் சொல்லுறாங்கள்.

balavasakan said...

ஆவ்வ்,,, காணும் உந்த லொள்ளுகளை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு போய் படுங்கோ..குட்நைட்!

Jana said...

நாங்க யார் இப்படி செய்யலாம் என்று ஐடியா சொன்னாலும் அதை செய்துவிட்டு முதலில் அவருக்கு நன்றி சொல்லும் ஆக்கள்தானப்பா.......அதை மறைக்கவோ மறுக்கவோ மாட்டோம்

Jana said...

மருத்துவருக்கு தூக்கம் கண்களை தழுவிவிட்டதை உணர்கின்றேன் இன்று போன் பண்ணி எப்ப அண்ணா சென்னைக்கு போவோம் என்றார் பெரும்பாலும் நாளை கொழும்புக்கு புறப்படலாம் :)

Jana said...

ஒகே நண்பாஸ் மருதம்ஸ் அன்ட் பாலவாசகன் இருவரும் இன்று ஒரு நைட்கிளப்பில் கிடைக்கும் கிலுகிலுப்புக்கு ஒப்பான கிலுகிலுப்பை பின்னூட்டமூடாக வளங்கினீர்கள் நன்றிகள் எனக்கும் தூக்கம் வருது :)

தனிமரம் said...

மேட்டுக்குடி அனுபவத்தை அழகாகச் சொல்லி இருக்கிறீங்க!

Jana said...

@Thanimaram
அட இதிலும் அதென்ன மேட்டுக்குடி அனுபவம் என்று ஒரு தரப்பை மட்டும் சுட்டிக்காட்டுவது எனக்கு புரியலை! ஏன் மற்றய சமுகத்தினரிடம் பணம் இருக்காதா? அவர்கள் கிளப் பப்புகளுக்கு போவது கிடையாதா?

சி.பி.செந்தில்குமார் said...

நைட் கிளப். பப்பா? அது எங்கப்பா இருக்கு? நம்மளையும் கூட்டிக்கிட்டு போங்கப்பா.

Jana said...

@சி.பி.செந்தில்குமார்

நான் அங்கே இருக்கும்போது உங்கள் அறிமுகம் இல்லை சி.பி, என்றாலும், கேபிள் ஜி, எவனோ ஒருவன், நிலாரசிகன் பட்டர்பிளை, அடலேறு மணிஜி ஆகியோருடன் இன்ஜோய் பண்ணி இருக்கோம், இம்முறை வந்தால் கண்டிப்பாக கூட்டிப்போகிறேன்

KANA VARO said...

அண்ணே இது அண்ணிக்கு தெரியுமா?

KANA VARO said...

இலங்கையில் பல கில்மா நைட் கிளப் பற்றி கேள்விப்பட்டிருக்கன்.

நிரூபன் said...

வணக்கம் பாஸ்
கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
வர முடியலை...

எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.

மன்னிக்க வேண்டும்!

நிரூபன் said...

பாஸ்...சிங்கப்பூர்...மலேசியாப் பக்கம் தமிழ் கிளப்ஸ் இருக்கு..அங்கேயும் நம்ம தமிழ்ப் பொண்ணுங்க வருவாங்க..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

எங்கும் காசுதான் குறிக்கோள் என்றாலும் அந்த காசைப்பெறுபவர்களுக்கு உயர் கௌரவத்தை வளங்கும் தன்மை ரொம்ப பிடித்துப்போன ஒரு விடயம் தானே//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்னும் போது..
நைட் கிளப்பில் சொல்லவா வேண்டும்?

நிரூபன் said...

சென்னை நைட் கிளப் பற்றி எழுதி...என்னையும் அங்கே போக வேண்டும் எனும் ஆவலைத் தூண்டியிருக்கிறீங்க.

Jana said...

@KANA VARO

ஏன் வரோ வண்டி நல்லாதானே ஓடிட்டு இருக்கு............

Jana said...

@நிரூபன்
ம்ம்ம்............தெரியும் நிரூ......... எங்கயகோ பிளைட் லாண்டிங் ஆகப்போவது போல தெரியுது

Jana said...

கவலையை விடுங்க நிரூ......... எப்பவாவது சென்னையில கூடி கும்மாளம் அடிக்காமலா போகப்போறோம்???
கோவா அந்த மாதிரியாம் டடிப் பிளான் ஒன்று போடுவமா?

Anonymous said...

இதுவரை அந்த அனுபவம் கிட்டவில்லை...

உங்களின் அனுபவம் + அலசல் நன்று!

Jana said...

@ஷீ-நிசி
நன்றி ஷீ-நிசி

Unknown said...

அப்புறம்?
ஏக பில்டப் கொடுத்து பதிவு தொடங்கின உடனேயே முடிச்சிட்டீங்க? முக்கியமான மேட்ர்களுக்கே வரலயே? :-)

aotspr said...

உங்கள் பதிவுக்கு நன்றி.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

LinkWithin

Related Posts with Thumbnails