
தமிழ் சினிமா மட்டுமின்றி உலகரீதியில் தலைசிறந்த நடிகன் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளக்கூடிய முழுமையான தகுதி சிவாஜி கணேசனுக்கு மட்டுமே உண்டு. இதை எவரும் மறந்துவிடவோ, அல்லது மறுக்கவோ முடியாது என்பதே உண்மையிலும் உண்மை.
சிவாஜி கணேசனைப்பற்றி எழுதுவது என்றாலே சூரியனுக்கே வெளிச்சம் காட்டுவதா என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது.
முக்கியமாக சிவாஜி கணேசனுடைய “ரேஞ்ச் ஆவ் கரக்டர்ஸ்” அபாராமானவை.
சிங்கத்திற்கு வயது வந்தாலும் அதன் சீற்றம் ஒரு துளிகூட குறைவது இல்லை என்பதை சிவாஜிகணேசனின் 70கள், 80களில் வந்த திரைப்படங்கள் நன்றாகக்காட்டின.
அவற்றில் இருந்து காதுக்கும் மனதிற்கும், ஏன் சிவாஜி என்ற அந்த இமயத்தை தரிசிக்க கண்ணுக்கும் காட்சியாக சில இனிமையான சிவாஜிகணேசனின் பின்னைக்கால சில டுயட்களையே இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
பட்டாக்கத்தி பைரவனிலிருந்து எங்கெங்கோ செல்லும்…
வசந்தத்தில் ஒரு நாளில் இருந்து வேண்டும் வேண்டும்…
வாழ்க்கை திரைப்படத்தில் இருந்து காலம் மாறலாம்…
திருத்தேரில் வரும் சிலையோ…
அந்த மாலைப்பாருங்கள்….
இது ராஜ ராக சொர்க்கம்..
இனி பேச என்ன வெக்கம்?
கொஞ்சம் பேசிவிட்டு போங்களேன்..
(அவசரமாக கொழும்பு செல்லவதால், அதைவிட அவசரமாக போட்ட ஒரு பதிவு)