Tuesday, January 8, 2013

தேவதைக்கதைகளின் கதை – 02



பொதுவாகவே ஐரோப்பிய தேவதைக்கதைகள் சிறுவர்களுக்கு ஏற்றவாறாக இரத்தல் உணர்வு பீரிட ஒரு தேவதைக்கொப்பான பெண்ணை மையமாகவைத்தே கதைக்கரு சுற்றிக்கொண்டிருக்கும். அடக்குமுறை, அவமதிப்பு, ஏழ்மை, வஞ்சகம், ஏமாற்றம், கொடுமை, அடிமை நிலை என்பவற்றினால் தவிக்கும் இந்த தேவதைக்கதாபாத்திரங்கள் கதையோட்டத்தால் அந்த சூழ்சிகளில் இருந்து தப்பி இறுதியில் உயர்ந்த நிலையை அடைவதாகவே கதையோட்டங்கள் யாவும் அமைந்துசெல்வதை கவனிக்கலாம்.

பாலர் பருவங்களில் அவர்களின் மனங்களில் விதைக்கப்படும் இந்தக்கதைகள், காலங்கள் கடந்தாலும் அவர்களின் மனங்களை விட்டகலாமல் இருப்பதற்கு அந்தக்கதைகளின் பாத்திர வார்ப்புக்களும் பிரதான காரணம்தான் எனலாம்.

பியூட்டி அன்ட் த பீஸ்ட்

இந்த தேவதைக்கதையின் நாயகியாகிய தேவதையின் பெயர் பெல்லி. மென்மையான எதையும் நேசிக்கும் மாசற்ற அன்புள்ளம் கொண்டவர்களுக்கு எவற்றின்மீதும், மயமோ, அச்சமோ, அதீத ஆசைகளோ கிடையாது அன்பு எந்தவொரு மாஜத்தையும் செய்துவிடும் என்று கருத்தை பறைசாற்றுகின்றது இந்தக்கதை.

இதுவும் ஒரு பிரஞ்சுதேசத்துக்கதைதான், 1740 ஆம் ஆண்டு பிரஞ்சுப் பெண் புனைகதை எழுத்தாளரான கேப்ரியல் ஸூசான் பார்போர்ட் விலனியூவ் என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது என அறியப்படுகின்றது.
அதேவேளை 1756ஆம் ஆண்டு இதே கதையினை ஜென்னி மரீன் என்பவர் மீள் பிரசுரம் செய்துவைத்தபோதே இந்த தேவதைக்கதை மிகப்பிரபலம் அடைந்ததாக குறிப்புக்கள் கூறுகின்றன.
அந்தவகையில் அடுத்த ஆண்டாகிய 1757ஆம் ஆண்டே இது ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து உலகமெல்லாம் பீஸ்ட்டுடன் அந்த தேவதை உலாவரத் தொடங்கினாள்.

இது மட்டுமன்றி மேற்படி பியூட்டி அன்ட் த பீஸ்ட் 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடக அரங்கங்களில் பெரிதும் இடம்பிடித்த மக்களின் மனதைக்கவர்ந்த நாடகமாவும் குறிப்பிடப்படுகின்றது.
குழந்தைகளுக்கு நவரசத்தையும் அவர்களுக்கு ஏற்ற வகையில் கொடுத்திருக்கும் இந்தக்கதை அவர்களை வெகுவாகக்கவர்ந்து கொண்டது எவ்வாறு என்ற சந்தேகத்தையே இல்லாது செய்துவிட்டது.

மனைவியை இழந்து தனது மூன்று பெண் குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்துவந்தார் ஒரு வர்த்தகர். அந்த மூன்று பெண்களிலும் இளையவளான மூன்றாவது பெண் பெல்லி ரொம்ப அழகானவள்.
அவளது அழகு மட்டும் அன்றி, அவளது இனிமையானபேச்சு, அன்பான அணுகுமுறை, மென்மை, நேர்த்தி என்பன பலருக்கு அவள் மேல் பேரபிமானத்தை ஏற்படுத்திவிட்டன.
இதனால் மூத்தவர்களான இரண்டு பெண்களுக்கும் இவள்மேல் பொறாமை இருந்துவந்தது. 

இந்தவேளை வர்தகரின் கப்பல் ஒன்று புயலிலே சிக்குண்டுவிட்டதாக செய்திவருகின்றது. அதனால் அவர்களின் தந்தையான வர்த்தகர் பெருந்துயரத்திற்கு உள்ளாகின்றார். அந்தவேளை பெல்லி அவருக்கு ஆறுதல் வார்ததைகள்கூறி அவரை ஆசுவதப்படுத்துகின்றாள். கப்பல் மீண்டும் கிடைத்துவிடும் நம்பிக்கையோடு இருங்கள் என்கின்கின்றாள்.

அவள் சொன்னதுபோலவே வணிகருடைய கப்பல் துறைமுகத்துக்கு வந்துசேர்ந்ததாக செய்தி வருகின்றது. சந்தோசமடைந்த வர்ததகர் கப்பலை பார்க்க பிராயாணத்திற்கு ஆயத்தமாகின்றார்.
அந்தவேளை தமது மூன்று பெண்களையும் அழைத்த தந்தை, உங்களுக்;கு என்ன வேண்டும் என்று வினவுகின்றார். அதற்கு பதிலளித்த முதலிரு பெண்களும், தமக்கு விதவிதமான உயர்தர ஆடைகள், ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருட்கள் என அடுக்குகின்றனர்.
ஆனால் பெல்லியோ தனக்கு எதுவும்வேண்டாம் என தந்தையின் நிலையை உணர்ந்து சொல்கின்றாள். ஆனால் அவளது தந்தை எதையாவது நீயும் கேள் மகளே என்றபோது.... சரி எனக்கு ஒரே ஒரு ரோஜாப்பூ மட்டும் வாங்கிவாருங்கள் என்றாள்.

துறைமுகத்தை அடைந்த தந்தை அங்கு தனது கப்பலை பார்த்துவிட்டு, நெடுந்தூரப்பயணமாக பெருநகரத்தில் தனது முதல் இரு மகள்மாரின் வேண்டுகோளுக்கான பொருட்களை வாங்கிக்கொண்டு குதிரையில் ஏறி நெடுந்தூரம் தனது வீட்டைநோக்கி பயணிக்கும்போது தாகம் பசி கழைப்பு நிலைக்கு உள்ளாகின்றார், தூரத்தில் அவர் கண்களுக்கு அழகான அரண்மனை ஒன்று தென்படுகின்றது. 

மகிழ்ச்சியுடன் அந்த அரண்மனையை அடைகின்றார், அங்கு எவரையும் காணமுடியவில்லை, ஆனால் நிறைய பழரசங்கள் முதல் மேசையிலே இருந்தன, அவற்றை எடுத்து அருந்தி தாகத்தை தீர்த்துக்கொள்கின்றார். பின்னர் அறுசுவை உணவாக பலவேறான உணவுகள் நாவுக்கு ருசியாக அவருக்கு தெரிகின்றன அவற்றையும் உட்கொண்டு பசியாறுகின்றார்.
அடுத்து சோம்பலாக இருக்கவே காற்றோட்டமான இடத்தில் உயர்தர இலவம்பஞ்சு மெத்தையிலே படுத்து உறங்குகின்றார். 

உறக்கம், சோம்பல் இரண்டும் விடுபட்ட நிலையில் அப்போது மேசைமேலே இருந்த தேனீரை அருந்தியவாறே இந்த உபசரிப்பு செய்தவர் யார்? அவருக்கு நன்றி சொல்லவேண்டும் என அங்குமிங்கும் யாராவது உள்ளனரா எனத்தேடுகின்றார்.
அந்தநேரம் அந்த அரண்மனை தோட்டத்திற்கு வருகின்றார். அங்கே பூத்துக்குலுங்கும் ரோஜாக்களைக்கண்டு தனது இளைய மகளின் நினைவு வரவே ஒரு ரோஜா மலரை அவர் பிடுங்கிவிடுகின்றார்.

அந்தவேளையில் பேரிரைச்சலுடன் அவர் முன்னால் ஒரு பூதம் தோன்றுகின்றது...
ஏ...... மானிடனே உன் புத்தியை காட்டிவிட்டாயே........ அருந்த பழரசம், விதவிதமான உணவு, இளைப்பாற மெத்தை இத்தனையும் தந்தேன் ஆனால் இந்த நந்தவனத்தில் உள்ள பூக்களை கொய்ய உனக்கு உரிமை இல்லை. இந்தப்பூவை நீ யாருக்காக கொய்தாயோ அவரை நீ இங்கே சேவகம் செய்ய நீ அனுப்பி வைக்கவேண்டும் என ஆணையிடுகின்றது........

அதன் பின்னர் அந்த அரண்மனைக்கு வரும் பெல்லியின் அன்பால், கவரப்படும் பூதம் ஒரு கட்டத்தில் அவளைப்பிரிந்து இறக்கும் நிலைக்கு செல்லும்போது, பெல்லி ஓடிவந்து அந்த பூதத்திறகாக அழுவதும், அவளது தூய்மையான கண்ணீர் பட்டதும் பூதம் சாப விமோசனம் பெற்று அழகிய இளவரசனாகி பெல்லியையே மணந்துகொள்வதும் நீங்கள் அறிந்த கதைதானே!

இவ்வாறான தேவதைக்கதைகள் குழந்தைகளின் முனதில் எவ்வளவு தாக்கம் செலுத்துகின்றது என்பதற்கு இந்த தேவதைக்கதைகள் தொடரை எழுதும் நானே சிறந்த உதாரணம். இந்தக்கதைகளை படித்த பாலர் காலத்திலே எனது பெரிய தந்தையார் வெளியூர் பிரயாணம் ஒன்று செல்லும்போது அன்பாக எம்மிடம் பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது ஒவ்வொருவரும் ஒன்றைச்சொல்ல 'எனக்கு ஒரே ஒரு ரோஜாப்பூ போதும்' என்று சொன்னவன் சாட்ஜாத் நான் தான்.

அடுத்த பதிவில் மீண்டும் ஒரு தேவதையுடன் உங்களை சந்திக்கின்றேன்.

Monday, January 7, 2013

தேவதைக்கதைகளின் கதை – 01


பாலர் பருவங்களில் பலரின் இதயங்களில்  மென்மையாக வருடிச்சென்று அந்தப்பருவகாலங்களின் கனவுகளிலும் தாக்கம் செலுத்துபவையே இந்தத்தேவதைக்கதைகள்.
தலைமுறைகள் பல தாண்டியும் இந்தக்கதைகளில் வரும்தேவதைகளுக்கும், இந்தக்கதைகளுக்கும் ஏனோ வயதாகிவிடவில்லை. இந்தக்கதைகளை புனையும்போது இந்தக்கதைகளை புனைந்தவர்களுக்கு தெரியுமோ தெரியாது இந்த தேவதைகள் சாகாவரம் பெற்றவை என்று.

தேவதைகளுக்கும் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்? அந்தக் குழந்தைகளின் கற்பனைகளுடனான யதார்த்தப்பின்னல்களுடன் இந்த தேவதைகள் எப்படி இணைக்கப்பட்டார்கள்? குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகள், அவர்களின் குழந்தைகள் என ஒவ்வொரு மருபுக்கும் இந்தத்தேவதைகளின் பாச்சல் எப்படி சாத்தியமானது என்பன போன்ற கேள்விகள் அதிசயிக்க வைக்கின்றன.

வெறுமனே ஐரோப்பிய காலாச்சாரமும், காலனித்துவமும், நாடுகாண்பயணங்களும் மட்டுமே இந்த தேவதைக்கதைகளை உலகமெங்கும் கொண்டு சென்றன என்று ஒற்றைவரியில் சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிடமுடியாது.
மாறாக இந்தக்கதைகளில் வரும் தேவதைகளுக்கு ஐஸ்லாந்து என்றால் எக்ஸிமோக்களின் உடை உடுத்தவும், ஜப்பான் என்றால் ஹிமோனோவை போர்திக்கொள்ளவும், தென்ஆசியா என்றால் சேலை கட்டிக்கொள்ளவும் தெரிந்ததே அவை என்றும் அழியாத வரம பெற்று தலைமுறைகளுக்கு கடத்தப்படுவதற்கான காரணம் என்றுவேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

ஐரோப்பிய கதைகள் மட்டும் இல்லாமல் இந்தியாவிலிருந்து பஞ்சதந்திரகதைகள், தெனாலி ராமன் கதைகள், அராபியாவின் ஆயிரத்தோர் இரவுகதைகள், ஈசாப்கதைகள் என்று கதைகள் ஆயிரம் வந்தன. இருந்தாலும் ஐரோப்பிய தேவதைகளின் காஸ்லியோ இல்லை காலனித்துவம் செய்பவர்கள்மேல் உள்ள உயரிய எண்ணமோ இந்த தேவதைக்கதைகள் பாலர்வயதிலேயே அனைவர் மனதிலும் பசுமரத்தாணிபோல் நச் என்று இறங்கிவிட்டன மனதில்.

சரி..... அந்த தேவதைகளை ஒவ்வொருவராக நினைவு படுத்திக்கொண்டு அவர்களின் கதைகளின் கதைகளை பார்ப்போமா?

ஸின்ரெல்லா...

பிரஞ்சுதேசத்திற்கு முதற்சொந்தமான இந்ததேவதை 'த லிட்டில் கிளாஸ் சில்பர்' அலலது ஸின்ரெல்லா ஆகிய கதைகளின் நாயகி ஆவாள்.
அறிந்த மட்டில் 1634 ஆம் ஆண்டளவில் இந்தக்கதை வெளிவந்ததாக அறியமுடிகின்றது.
சார்லஸ் பெர்லட் அவர்கள் எழுதிய இந்தக்கதை உலகம் முழுவதும் பலதடவைகள் மீள் வெளியீடு செய்யப்பட்டு சில நாடுகளில் சிலசில மாற்றங்களுடன் இன்றும் சிறுவர்களின் மனதை தொடும் முதல் தேவதையாக உலவருகின்றாள் இந்த ஸின்ரெல்லா........

அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒருவள் திடீர் அதிஸ்டத்தினால் இளவரசி ஆவதுபோல உருவாக்கப்பட்டுள்ளதே இந்தக்கதை.
இருந்தபோதிலும் ஆரம்பத்தில் கிரேக்கத்தில் இதுபோன்ற சாயலினான கதை ஒன்று வழக்கத்தில் இருந்துவந்ததாகவும், அதேபோல எகிப்தில் முதலாம் நூற்றாண்டு காலத்தில் இருந்தே வழக்கில் இருந்த ஒரு கதைபோலவே இநத கதையின் கரு உள்ளதாகவும் சுட்டிக்;காட்டப்பட்டுள்ளது.

இது தவிர ஒவ்வொரு தேசப்பதிவுகளிலும் சிறு சிறு மாறுதல்கள், கதைச்சூழ்நிலை மாற்றங்கள் உள்ளன என்பதும் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்றாகவே உள்ளது. இருந்தாலும் பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்த நாடுகளில் ஆங்கிலப்பதிப்பே வந்து சேர்ந்தமையினாலும் அதேவேளை அந்தக்கதையே தற்போதும் தொடர்வதனால் நாம் முக்கியமாக ஆங்கிலப்பதிப்பு தேவதைகளுடனேயே வலம்வரவேண்டி ஏற்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்கள் பொதுவாக அற்புமான முடிவுகளையும், சிறுவர்களுக்கு மகிழ்வூட்டும் முடிவுகளையுமே விரும்புவதனால் ஆங்கிலப்பதிப்புகளின் தேவதைக்கதைகளின் முடிவுகள் மிகவும் கழிப்பூட்டுபவையாக உள்ளன.
அதேவேளை சில நாட்டுப்பதிவுகளில் பல சோகமுடிவுகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வாழ்கின்றாள் ஸின்ரெல்லா. ஆனால் அவளது விதி, அவளின் தந்தை அவளைவிட வயதான இரண்டு பெண்குழந்தைகளை உடைய ஒரு விதவையை மறுமணம்புரிகின்றார்.
அதன் பின்னர் மாற்றாந்தாயாலும், சகோதரிகளாலும் ஸின்ரெல்லா கொடுமைப்படுத்தப்படுகின்றாள்.
ஒரு அடிமைப்பெண்ணாக அவர்களுக்கும், அவர்களின் வீட்டிற்கும் சேவகம் செய்துவருகின்றாள். அந்தநேரம் அரண்மனையில் ஒரு விடே நிகழ்வுக்கு அனைவரும் மன்னரால் அழைக்கப்பட்டு சென்றுகொண்டிருகின்றனர்.
இவள் மட்டும் அடுக்களையில் முழு வேலைகளையும் செய்துவிட்டு அயர்ந்து தூங்குகின்றாள். திடீர் என்று அவள்முன் ஒரு தேவதை தோன்றி, அவளை பேரழகியாக்கி, பூசணியை தேராகவும், எலிகளை குதிரையாகவும் ஆக்கி, அந்த விழாவுக்கு அரண்மனைக்கு போ என அனுப்பி வைக்கின்றது.
ஆனால் போகுமுன் அவளுக்கு ஒன்றை நினைவூட்டுகின்றது,
அது என்னவென்றால் இன்று நள்ளிரவு தாண்டினால், அவளது தோற்றம், மற்றும் தேர், குதிரைகள் அனைத்தும் சுய உருவத்திற்கு வந்துவிடும் அதன் முன்னர் நீ வீடு திரும்பிவிடவேண்டும் என்பதே அது.

பேரழகியாக அரண்மனை வரும் அவளை இளவரசன் கண்டு காதல் வயப்படுகின்றான், அவளுடன் நடனம் புரிகின்றான்,  மெல்ல மெல்ல நேரம் நள்;ளிரவை தொட்டு அலாரம் அடிக்கும் தருணம் தேவதை சொன்னது நினைவுவர, ஸின்ரெல்லா தனது இருபபிடததை நோக்கி ஓடுகின்றாள், அவள் ஓடும்போது அவளது பாதணி ஒன்று கழன்றுவிழுகின்றது........

அவளை திடீர் என பிரிந்த இளவரசன் காதல்  உணர்வு பீரிட, அவளது பாதணியை எடுத்து அவனது மந்திரியின் சொற்படி அந்தப்பாதணிகளை நகரில் உள்ள அனைத்து இளம் பெண்களையும் அணியும் படியும் பாதணி யாருக்கு பொருந்துகின்றதோ அவளே என் தேவதை என்று ஆணை இடுகின்றனர்.
பாதணியுடன் வீடு வீடாக வரும் சேவகர்கள், ஸின்ரெல்லாவின் வீட்டை அடைகின்றனர், அடுக்களையில் அடைந்து கிடக்கும்; ஸின்ரெல்லாவையும் அவளது வீட்டார்களின் பல்வேறு மறுப்புக்கு பின்னரும் அந்த பாதணியை அணிய வைக்கின்றனர். அந்த நேரம் அதே தேவதை தோன்றி அவளை முன்னர்போல அழகி ஆக்கியது. அதன்பின்னர் அவள் அந்த நாட்டின் இளவரசியாக முடிசூட்டப்பட்டாள் என அந்தக்கதை முடிகின்றது.

இது நாம் சிறுவயதில் படித்து இப்போ நமது சிறுவர்களுக்கும் சொல்லிக்கொடுக்கும் ஒரு தேவதைக்கதைதானே?

அடுத்த தேவதை யார்? அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.

Saturday, January 5, 2013

பிரபஞ்ச இரகசியம் இது!


எனக்குள் திடீர் என்று என்ன இது மாற்றம்! முதன்முதலாக திகைத்துப்போகின்றேன். என்னை அறியாமலேயே என் கைகால்களை அடித்து, ஏதோ முன்னர் அனுபவப்பட்ட இடத்திற்கு வரவேண்டும் என்று உள்ளுக்குள் எந்த மொழி என்று தெரியாத ஒரு உத்வேகம்.
வழிஎங்கும் சிகப்பு நிறம். மெல்லிய இளஞ்சிகப்பில் ஒரு வெளி வெளிச்சம்.
ஏதோ ஒன்றால் எங்கோ இழுக்கப்படுவதுபோன்ற ஒரு உணர்வு. பலநேர அவஸ்தை, உடல்நோவுவேறு.. ஒன்றும் புரியவில்லை சில மணித்தியாலங்களாய்…

மீண்டும் திடீர் என்று ஒரு உந்துதல். அடடா.. இதுவா என் குரல்? என்னை அறியாமல் என் வாயல் ஓவென்று குழறுகின்றேன். கண்ணை இலேசாகத்திறக்கின்றேன்..முன்னர் பார்த்திராத அதிக வெளிச்சம் கண்ணை கூசவைக்கின்றது.. யார்யாரே என்னை ஸ்பரிசிக்கின்றார்கள்.
மீண்டும் எனக்குள் ஒரு வேதனை. எனக்கும் நான் என் பிரபஞ்சம் என்று நினைத்திருந்த இடத்திற்குமிடையேயான, அப்போதுகளில் எனக்கு சகலதும் ஆகவிருந்த என் ஜீபனோபாயக் கயிறு அறுபடும் உணர்வு.

மெல்ல மெல்ல..கண்கள் கூச திறந்து பார்க்கின்றேன்.. மிகை ஒளியுடன், ஒரு பிரபஞ்சம் வியாபித்திருந்தது. குறிப்பிட்ட இத்தை மட்டும் என்னால் பார்க்கமுடிகின்றது. அதற்கு அங்கால் ஏதோ பரந்த ஒன்று வியாபித்து இருந்தது.

அடடே..முதன் முதலில் நான் அனுபவித்த உணர்வே இது..இத்தனைநாளாக இந்த உணர்வு எனக்குள்த்தானா? மறைந்திருந்தது? உணர்வுகளை நினைத்து பிரமித்துப்போகின்றேன்.
அந்த உணர்வின் பின்னரான… தாயவளின் கதகதப்பு, தந்தையின் இனிய அரவணைப்பு, சொந்தங்களின் பாசங்கள், உணவு உண்ணும்போது வேடிக்கை காட்டிய பறவை விலங்குகள், பள்ளிபோன முதலாம் நாள், விளையாடிய விளையாட்டுக்கள், பாடப்புத்தகங்களில் இருந்த பாடங்கள், முதன்முதல் பார்த்தமழை, பரீட்சை ஒன்றில் தோற்ற துயர்உணர்வு, முதல் முதல் இழந்த பாட்டனாரின் துயரம், மீசை அரும்பியபோது ஏற்பட்ட கிளர்ச்சி, மனது இலகித்த கன்னியர், முதற்காதல், கல்லூரிவாழ்வு, வேலைக்குப்போனது, திருமணம்கண்ட காட்சி, தாம்பத்தியசுகம், முதற்குழந்தை, இடமாற்றம், அடுத்த குழந்தை, குழந்தைகள் வளர்ப்பு, குழந்தைகள் கல்வி, அவர்களின் வாழ்வு, பாட்டனார் ஆனமை, மனைவியின் இழப்பு.. என அனைத்தும், கோர்வையாக வந்து வந்து போகின..

மூச்சுவிட மிகச்சிரமமாக இருக்கின்றது. என் பேர் சொல்லி மருத்துவர் அழைப்பதும் தூரத்தில் கேட்பதுபோல் தோன்றுகின்றது…

ஆ..மீண்டும் அதே உணர்வு…

எனக்குள் திடீர் என்று என்ன இது மாற்றம்! முதன்முதலாக திகைத்துப்போகின்றேன். என்னை அறியாமலேயே என் கைகால்களை அடித்து, ஏதோ முன்னர் அனுபவப்பட்ட இடத்திற்கு வரவேண்டும் என்று உள்ளுக்குள் எந்த மொழி என்று தெரியாத ஒரு உத்வேகம்.
வழிஎங்கும் சிகப்பு நிறம். மெல்லிய இளஞ்சிகப்பில் ஒரு வெளி வெளிச்சம்.
ஏதோ ஒன்றால் எங்கோ இழுக்கப்படுவதுபோன்ற ஒரு உணர்வு. பலநேர அவஸ்தை, உடல்நோவுவேறு.. ஒன்றும் புரியவில்லை சில மணித்தியாலங்களாய்…

மீண்டும் திடீர் என்று ஒரு உந்துதல். அடடா.. இதுவா என் குரல்? என்னை அறியாமல் என் வாயல் ஓவென்று குழறுகின்றேன். கண்ணை இலேசாகத்திறக்கின்றேன்..முன்னர் பார்த்திராத அதிக வெளிச்சம் கண்ணை கூசவைக்கின்றது.. யார்யாரே என்னை ஸ்பரிசிக்கின்றார்கள்.
மீண்டும் எனக்குள் ஒரு வேதனை. எனக்கும் நான் என் பிரபஞ்சம் என்று நினைத்திருந்த இடத்திற்குமிடையேயான, அப்போதுகளில் எனக்கு சகலதும் ஆகவிருந்த என் ஜீபனோபாயக் கயிறு அறுபடும் உணர்வு.

(மீள் பதிவு)

Friday, January 4, 2013

மியூஸிக் தெரப்பி.




'இசையால் வசமாகா இதயமெது? இறைவனே இசைவடிவம் எனும்போது' என்று மெய்சிலிர்க்க வைத்திடும்பாடல் வரிகள் ஒரு மிகைப்படுத்தப்பட்ட பாடல் வரிகள் என்று சொல்லிவிட முடியாத அளவுக்கு இசையின் மகத்துவம் பற்றி இன்று பல்வேறு ஆராட்சிகள் ஆச்சரியமான முடிவுகளை தந்துகொண்டிருகின்றன.
இசை என்பது மனிதனை மகிழ்வூட்டுவது, மனிதனை மட்டுமன்றி உயிரினங்களை சிலர்க்கவைக்கின்றது, மனித மனங்களின் சோர்வுகள், அலர்ச்சிகளை போக்கி புத்துணர்வை தருகின்றது என்பனவற்றை எல்லாம் கடந்து மருத்;துவரீதியில்க்கூட 
பல நோயாளர்களின் உள, உடல் ஆற்றல்களை மேம்படுத்தி இசையால் நோய்கள் நீங்கும் பண்புகள் பற்றி அண்மையில் ரீடேஸ் டஜஸ்ட்டில் வந்த கட்டுரை ஒன்று மனதை ஆச்சரியம் கொள்ள வைத்தது.

சுமார் எழுபது ஆண்டுகளாகவே இசையில் இருந்து நாம் அடையக்கூடிய வித்தியாசமான நன்மைகள் பற்றி பல நிபுணர்கள் பாரிய ஆராயவுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இவர்களின் ஆராட்சிகளில் இசை மனித, உடல் மற்றும் மனதிற்குள் நடத்தும் ஆச்சரியங்களும், மாறுதல்களும் மிக ஆச்சரியமானதாகவும், எதிர்பார்த்ததைவிட பாரிய அளவு பிரமிப்புக்களை உண்டாக்கக்கூடியதாகவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இசை நோயாளர்களுக்கு மிக மிக நன்மையான ஒன்று அடித்துக்கூறுகின்றார்கள் அவர்கள்.

அமெரிக்க ஒஹியோ மாநிலத்தில் மரினா என்ற பெண் பயங்கர கார்விபத்து ஒன்றில் சிக்கிக்கொண்டாள். அவள் க்ளீவ்லான்டில் உள்ள செயின்லூக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள்.
சுற்றிலும் அறுவைச்சிகிற்சை நிபுணர்கள். மரினாவின் உடலின் பாகங்களை சிஸ்ரங்களுடன் இணைத்தார்கள். அவை அவளது மூளை அதிர்வுகளையும், இதயத்துடிப்பையும் பதிவு செய்தது. 
மறுபக்கம் இயர்போனை அவள் காதில் பொருத்தி, விவால்டி இசைத்த இசை இறுவெட்டொன்றை இசைக்கவிட்டனர்.

அறுவைச்சிகிற்சையின்போது அறுவை நிபுணர்கள் மற்றொருபுறம் மொஸார்ட், ப்ரொம்ஸ் போன்ற மேதைகளின் இசையினை கேட்க ஏற்பாடாகியிருந்தது.
தியேட்டரில் எந்த ரென்ஸனும் இல்லாமல் இயங்க இசை எமக்கு உதவியது. என்றும் 
நோயாளியின் முளையினை பதிய பொருத்தப்பட்ட சிஸ்ரத்தில் அவரது காதில் இயர்போன் மூலம் இசை சைக்கப்பட்ட பின்னர் ஆச்சரியமான வகையில் முளை அதிர்வுகள் அமைதியானதை அவதானிக்கமுடிந்ததாகவும், நோயாளி ரிலாக்ஸானதை தாம் உணரக்கூடியதாக இருந்ததாகவும் க்ளைட் நாக்ஷ் என்ற பெண் அறுவை சிகிற்சை நிபுணர் தெரிவித்துள்ளார்.

'மருந்தைவிட இசை மேலானது, அதனால் வலிநிவாரணி வழங்கப்படுவதை விட இசையினை பயன்படுத்துவது சிறந்தது என ஆயவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இசை நோயின்போது ஏற்படும் கடுமையான சிக்கல்களை தவிர்க்க உதவுகின்றது.
நோயாளியின் ஆரோக்கியத்தை மே;படுத்துகின்றது. நோயாளி மருத்துமனையில் தங்குவதற்கு அதிகநாள் எடுப்பதை தவிர்த்துவிடுகின்றது என்கிறார் நியூயோர்க் மருத்துவமனை நோயியல் நிபுணர் டாக்டர் மத்யூலி.

கடுமையான தலைவலியில் இருந்து நிவாரணம்பெற இசை உதவும். இரத்த அழுத்தத்தை குறைக்கவும், சுவாசத்தை சீராக்கி மன இறுக்கத்தை இல்லாதொழிக்கவும் வைக்கும்.

சூசன் கோல்ஸ்கி என்ற பெண்ணுக்கு முதற்பிரசவம். பிரசவிடுதியில் இரண்டு நாட்களுக்கும் மேலாக வலியினால் பெரும் அவதிப்பட்டாள். வலி பொறுக்கமுடியாமல் அவள் அவதிப்பட்டபோது, பீத்தோவான், பார்க் ஆகியோரின் இனிய இசையினை  மாறிமாறி ஒலிக்கவிட்டனர்.
சூசன் சாந்தமாகினாள் பிரசவிக்கின்ற கட்டத்தில் ப்ரொம்ஸின் ஸிம்பொனி வரவேற்புடன் குழந்தை உலகிற்கு வந்தது.

புற்றுநோயாளிகள் டாக்டர்களிடம்பேசுவதற்கு நிறைய யோசிப்பார்கள், இசைச்சிகிற்சை அவர்களுடனான தகவல் தொடர்புகளை இலகுபடுத்தி சிகிற்சையின்போது நோயாளிகளை ஒத்துளைக்கவைக்கின்றது.

அமெரிக்க மாநிலமான மேரிலான்டில் பள்ளிக்கூடமொன்றில் மூளை வளர்ச்சி குறைந்த, உணர்வுகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் மற்றும் உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் இசையிலும் நடனத்திலும் பயிற்சி அளிக்கின்றார்கள்.

நரம்புக்கோளாறு காரணமாக பேசவோ அசையவோ முடியாதவர்கள்கூட இசையின் அற்புதத்தால் ஆடவும் பாடவும் செய்கின்றார்கள்.
மூளைக்கோளாறுகளை சீரழிவில் இருந்து தடுத்து ஆரோக்கியத்துடன் இயங்கச்செய்யவும் இசை உதவுகின்றது.
தமக்கு பிடித்தமான இசையினை தொடர்ந்து கேட்கும்போது ஸ்ரோக் உள்ளவர்களும் குணமாக முடிவதாக தெரியவந்துள்ளது.

சோக நிமிடங்களை மகிழ்ச்சியாக்குவது இசை. அதை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுமபோது அதன் சக்தியும் கூடுதலாக இருக்கும்.
இசை நோய் பற்றிய கவலையினை மனதில் இருந்து அகற்றும். மன இறுக்கத்தை குறைக்கும். பிரச்சினைகளை இலேசாக்கும்.
எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, January 3, 2013

டாக்டரின் டாக்குமென்றி......



டாக்டர் பதிவர் பாலவாசகன் மலைசூழ் குளிர்மை குழுவிருக்கும் இடத்தில், ரொம்ப "வோர்மாக" தனது வைத்தியக் கடமையினை செய்துவருகின்றார்.
இப்போது பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும் பாலவாசகனின் பார்வை புகைப்படக்கலையின் பக்கம் திரும்பிள்ளது என்பதை பலர் அறிந்திருப்பீர்கள்.
குருநாதர் இல்லாபோது குயில்ப்பாட்டைப்போல புகைப்படக்கலையிலும் புகைப்பட நுட்பங்களை தனது பிளிக்கர் எக்கவுண்ட்மூலம் பல பிரமுகர்களிடம் இருந்தும், இணையத்தேடல்களில் இருந்தும் கற்று தனது அதிநுட்ப நிக்கோன் புகைப்படக்கருவிகளால் பல பேசாத காட்சிகளை பேசவைத்துக்கொண்டிருக்கின்றார்.

டாக்டர், இந்த புகைப்பட ஆசை உங்களுக்கு எப்போது வந்தது என்று நான் ஒரு சமயம் கேட்டபோது, தான் சின்னவயதாக இருக்கும்போது தனது மாமனாரின் பொழுதுபோக்காக இருந்த சீனரிகள் உள்ள கிரீட்டிங் கார்ட்ஸ் சேர்க்கைக்களை தாம் ஆவலோடு பார்த்துவந்ததாகவும், அந்த காட்சட்டைப்பருவங்களில் மேற்படி கார்ட்களில் இருக்கும் சீனரிகளை இரசித்து மெய்மறந்த நாட்களில் இருந்தே தாம் புகைப்படத்துறைமேல் பேரார்வத்தை கொள்ள ஆரம்பித்ததாக தெரிவித்திருந்தார்.

பாலவாசகனுடன் நெருங்கி பழகிய பதிவர்களான மருதமூரான், சுபாங்கன், மற்றும் நான் அவரின் புகைப்பட நுணுக்கங்கள் பற்றியும் அவரது பேரார்வம் பற்றியும் ஆரம்பத்திலேயே அறிந்திருந்தோம்.
ஒரு மருத்துவ மாணவனாக இருந்த காலங்களில் பதிவெழுதி வந்த பாலவாசகன், தான் முழுவைத்தியரானதும் தனது முதல் மாத ஊதியத்தில் ஆசையாக வாங்கிக்கொண்டது என்ன தெரியுமா?
ஒரு டி எஸ் எல் ஆர் கமரா!

அதன் பின்னர் பிளிக்கரில் டாக்டரின் புகைப்பட டாக்குமென்றிகள் வெளிவர தொடங்கின. மிக நுணுக்கமான புகைப்படங்கள் பலரை வாவ்............ என பல தடவை சொல்ல வைத்தன.
தனது விடுமுறை ஒன்றில் யாழ் வந்த டாக்டர் என்னை சந்தித்தபோது சில பறவைகளையும் இயற்கை காட்சிகளையும் குறிவைத்து ஒரு விடுமுறைநாளில், புகைப்படம் எடுப்பதற்கான பயணம் ஒன்றை மேற்கொணடோம், யாழ் கடநீரேரிப்பகுதிகள், தீவகம் என்பன எமது இலக்காக இருந்தன.

அப்போதுதான் ஒரு பறவையினை புகைப்படக்கருவிக்குள் சிக்கவைக்க பல நிமிடங்கள் காத்திருப்பும், அதற்கான ரைமிங்கும், புகைப்பட கருவியை அவர் இயக்கும் லாவகத்தையும் கண்டு அதிசயித்தேன்.
ஒரு ஆன்ஸெல் அடெம்ஸையும், ரொபேட் ஹபாவையும் கண்முன் பார்பதுபோன்ற ஒரு பிரமை என்னுள்ளே.......
சிறந்தவற்றை, வளரத்துடிப்பவாகளை பாராட்டியே தீரவேண்டும் என்பதற்காகவே இந்தப்பதிவு.........
இதோ டாக்டரின் கமராவில் அன்று சிக்கியவைகள் சில........   










என்ன பிடிச்சிருக்கா.........
மேலதிக படங்களை பார்க்க


Wednesday, January 2, 2013

அழக்கூடாதே என்பதற்காக சிரித்தவர்தானா லிங்கன்?



ஆபிரகாம் லிங்கன் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். தோல்விகளின் குவியல்களில் இருந்து எழுந்துவந்து பெரு வெற்றி பெற்றவர், இன்றும் அமெரிக்க அதிபர்களின் மிகச்சிறந்தவர்கள் பற்றிய பட்டியலில் முன்னிற்பவர்,
'மக்களால் மக்களை ஆளும் ஆட்சியே மக்கள் ஆட்சி' என்று குடியாட்சிக்கு வியாக்கியானம் தந்தவர், உலகம் போற்றும் ஹெட்டிச்பேர்க் பேருரையை எழுச்சியோடு வழங்கியவர், அடிமை முறையை ஒழிக்க அயராது பாடுபட்டவர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால் லிங்கன் பற்றி இன்னும் வெளிச்சத்திற்கு வராத பிரம்மரகசியங்கள், அந்த வெள்ளைமாளிகையிலேயே புதைக்கப்பட்டிருப்பதாக இன்று பலர் கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டே வருகின்றார்கள்.
ஏன்...... எல்லாவற்றிற்கும்மேலாக லிங்கனின் ஆவி தற்போதும் வெள்ளைமாளிகையை சுற்றி வருவதாக பலமாக நம்பும் அமெரிக்கர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
பாரிய சோதனைகளையும், கஸ்டங்களையும் அவர் தன்னகத்தே கொண்டு, வேதனையுடனேயே நாட்களை நகர்த்தினார் என அவரது உறவினர்களே கருத்து வெளியிட்டும் உள்ளனர்.

ஓகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் 1865 அன்று தனது துணைவி சகிதம் 'அமெரிக்கன் ஹசின்'  என்ற நாடகம் பார்க்கச்சென்றிருந்தார் லிங்கன். அந்த நாடகத்தின் ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்துக்கொண்டிருந்;த ஜோன் வில்ஸ் பூத் என்பவன், மேடையில் இருந்தே முன்வரிசையில் அமர்ந்து நாடகத்தைப்பார்த்துக்கொண்டிருந்த லிங்கனை குறிவைத்து தனது கைத்துப்பாக்கியால் சுட்டான். குண்டு துளைத்து துடித்து விழுந்த லிங்கன் மறுநாள் இந்த உலகத்தை விட்டுப்பிரிந்திருந்தார்..

ஆபிரகாம் லிங்கனுடைய வலதுகரமாக திகழ்ந்த ஸ்ரான்டன், லிங்கனது இறுதிநிகழ்வு உரையில் 'அவர் அழக்கூடாதே என்பதற்காகவே தன்னை வருத்தி சிரித்துக்கொண்டிருந்தார்'; என கண்ணீர் மல்கத் தெரிவித்திருந்தார்.
உண்மையில் லிங்கனுக்கு என்ன பிரச்சினை???

ஆபிரகாம் லிங்கன் பலமுறை மன உபாதைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றார். சிறு வயது முதலே கடுமையான சோகத்துடனேயே அவர் காணப்பட்டிருகின்றார்.. விடலைப்பருவத்தில் பார்ப்பவர்களுக்கு பைத்தியக்காரன் போலவே அவர் தோற்றியிருக்;கின்றார்.
அவரது திருமணத்தில்க்கூட உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் சேர்ச்சில் உரிய நேரத்தில் லிங்கனையே காணாமல் திகைத்துப்போய் எல்லா இடத்திலும்தேடி இறுதியாக அவரை அவரது அறைமுலையில் குறுகிய நிலையில் அவர் துயரத்துடன் நடுங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே அவரை மீட்டுள்ளனர்.

லிங்கனுடைய சுயசரிதையை எழுதிய டேல்கார்னகி அவருடன் நன்றாக நெருங்கிப்பழகிய ஒருவர். அவர் லிங்கன் பற்றி தனது குறிப்பில்,
லிங்கன் உடல் மற்றும் மனோரீதயில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். விசனம் தோய்ந்த முகத்துடன்தான் அவர்; எப்போதும் காட்சியிளிப்பார். கொஞ்சமும் சம்பந்தமில்லாத வசனங்களை தனக்குத்தானே அவர் பேசிக்கொண்டிருப்பார். தற்கொலை மனப்பாண்மை அவரிடம் இருந்தமை உண்மை, லிங்கனை தற்கொலை முயற்சிகளில் இருந்து பாதுகாப்பதற்கே நண்பர்கள் யாராவது அவர் கூடவே எப்போதும் இருந்ததாகவும், கத்தி துப்பாக்கி என்பவற்றை அவருக்குத்தெரியாமல் மறைத்;தே வைத்திருந்ததாகவும் அவர் லிங்கன் பற்றிய தனது நூலில் தெரிவித்துள்ளார்.
லிங்கன் இறந்ததன் பின்னர் அப்போது சிறுவனாக இருந்த அவரது மகன், என் தந்தை இப்போதாவது உறங்கட்டும் அவர் எப்போதும் நின்மதியாக உறங்கியதை நான் பார்த்ததில்லை' எனத்;தெரிவித்திருகின்றார்.

ஆனால் மறுபுறத்தே இத்தனை உள்ளக குறைகள் இருந்தும் லிங்கன், தீமைகளை கண்ட இடத்தில் எதிர்த்தவர், அதற்கு சிறந்த உதாரணமாக தென்அமெரிக்காவில் உள்ள நிற வெறியர்களுடன் அவர் நடத்திய போரைச்சொல்லலாம். ஆவர் ஒரு சட்டததரணி என்றபடியால் வழக்குக்கு வந்த பல பிரச்சினைகளை நீதிமன்றத்திற்கு வெளியிலேயே தீர்த்துவைத்திருந்தார். நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் தன அதிகாரத்தைப் பயன்படுத்தி பல தூக்கு தண்டனைகளை இரத்து செய்து வைத்துள்ளார்.

தன்னுடைய சாதனைகள் பற்றி அவர் விளம்பரப்படுத்திக்கொள்வதில்லை. மாறாக
'முட்புதர்களை அகற்றி முட்கள் இருந்த இடங்களில் பூக்கள் மலரச்செய்தான் லிங்கன்' என்று வரலாறு என்னைக்குறிப்பிட்டாலே போதும் என்றவர் ஆபிரகாம் லிங்கன்.
ஆனால் அவரது கண்களில் இருககும் சோகத்தையும், ஏக்கத்துடனான பார்வையினையும் அவரது புகைப்படங்களிலேயே மிக இலகுவாக யாரும் கண்டுபிடித்துவிடமுடியும்.

லிங்கன் ஏன் இப்படி ஆனார் என்பதற்கு சில மனோவியல் நிபுணர்கள் தெரிவிக்கும் காரணங்கள்:
லிங்கன் சிறுவயதில் இருந்தே வறுமையின் கோரத்தில் சிக்கியமை.
வாழ்க்கையில் இந்த நிலையினை அவர் எல்லோரையும் விட மிகவும் உச்சமாக போராடியே பெறவேண்டி இருந்ததால்; அவர் அதில் சோர்வுற்றிருக்கலாம்.
ஏல்லாவற்றிற்கும்மேலாக அவருக்கு வாய்த்த இல்லறம் நல்லறமாக இல்லை. அவரை விஞ்சிய மனைவி என தொடர் சோகங்களையே அவர் பெற்றுக்கொண்டமையினை சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்போது இல்லினாய்ஸ் நகரில் லிங்கனின் பழைய வீட்டை லிங்கன் நினைவாலயமாக அமெரிக்க அரசு மாற்றியுள்ளது.
அந்தபகுதியால் தனது மகளை பாலர் பாடசாலைக்கு ஒரு பெண் வழமையாக அழைத்துச்சென்று வந்துகொண்டிருகின்றாள்.
ஓவ்வொருமுறை இநத நினைவாலயத்தை கடக்கும்போதும் அவள் தனது சின்னஞ்சிறு மகளுக்கு ஆபிரகாம் லிங்கனின் பெருமைகளை எடுத்துரைத்துக்கொண்டு செல்வது வழக்கம்.

ஒருநாள் இரவுநேரம் அந்தப்பெண் தனது மகளுடன் ந்த நினைவாலயத்தை கடக்கும்போது நிறைய மின் விளக்குகள் நினைவாலயத்தில் ஒளிர்வதைக்கண்டாள்.
'அம்மா பாருங்கள் லிங்கன் தாத்தா எல்லா மின் விளக்குகளையும் ஒளிரவிட்டிருக்கின்றார் என்றாள் மகள்' 

ஆமாம் மகளே லிங்கன் தான் மின்விளக்குகளை ஒளிரவிட்டிருகின்றார்......உலகத்தில் உள்ள எல்லோருக்காகவும் என உணர்ச்சிப்பெருக்கத்துடன் இதோ கூறிச்செல்கிறாள்.

Tuesday, January 1, 2013

உடலினை உறுதி செய்வோம்..........



எமது வாழ்வின் வெற்றிகரமான முன்னேற்றத்திற்கும் மகிழ்ச்சி மிகுந்த வாழ்வாதாரத்திற்கும், மனம் செழுமையாக எப்படி இருக்கவேண்டும் என்று கூறப்படுகின்றதோ அதேபோல உடல் வலு, உடலின் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்றே.
முன்னைய காலங்களில் உடல் வலு உழைப்பு, நடை, பிராயணங்கள் என்பன பெரு வசதி கண்டு இருக்காத காலங்களில் வாழ்ந்தவர்கள், இரசாயனப்பதார்தங்கள் கலக்காத இயற்கையான ஆகாரங்களை உண்டு உடல் உறுதியை பேணி வந்தனர்.

இன்று பரிதாபகரமான நிலை என்னவென்றால், முப்பது வயதை தாண்டு முன்னதாகவே பெரும்பாலானவர்களுக்கு நீரிழிவு, கொலஸ்ரோல், பிரஸர் என அத்தனை நோய்களும் எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டன.
இதற்கெல்லாம் காரணம் என்ன என்றால், உடல் வலு பயிற்சிகள் இன்மையும், பாஸ்பூட் என்ற கண்றாவி பஸன் ஆகி ஆட்கொள்வதையும், இருந்த இடத்தில் இருந்து மணித்தியாலக்கணக்காக வேலை செய்தலையும் முக்கியமாகக்குறிப்பிட்டுக்கொள்ளலாம்.

இன்று சுகாதார அமைச்சும், சில தொண்டு நிறுவனங்களும், நீரிழிவை ஒழிப்போம், கொலஸ்ரோலைக்குறைப்போம் என்று பிரச்சாரங்கள் செய்து துண்டுப்பிரசுரங்களை வீடுவீடாக கொடுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு இன்று நாட்டில் இளவயதிலேயே 
பாரிய நோய்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதை கவனிக்காமல் இருந்துவிடமுடியாது.
இந்த நோய்கள் கட்டுப்படுத்தப்படாமல் உயர்ந்துகொண்டு சென்றால் நாடு தனது சராசரி உயிர்வாழும் வயதினை 45 இற்கு இறக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையே ஏற்படும் என்று சொன்னாலும் தப்பில்லை.

சிலரை கவனித்திருப்பீர்கள், கோடிகோடியாக பணம் இருக்கும், பணம் என்பதை நாடியே ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருப்பார்கள், ஆனால் வாய்க்கு ருசியாக ஒரு சாக்லட்டையோ, அல்லது விசேட விருந்துகளில் ஒரு மட்டனையோ வாயில் வைத்தால்கூட அவை விசமாகிவிடும் என்ற நிலை. சாப்பாடாக மாத்திரைகளையும், மாத்திரிரையளவு சாப்பாட்டையும் பத்தியமாக சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். 
பணம் இருந்தும், மேலும் மேலும் உழைப்பு இருந்தும் என்ன பிரியோசனம்!

'21 வயது வரை உடல் எம்மை கட்டுப்படுத்தும், 21 வயதில் இருந்து உடலை நாம் கட்டுப்படுத்த தொடங்கிவிடவேண்டும்' என்ற குறிப்பு எவ்வளவு யதார்த்தமானது. ஆனால் எங்களைப்பொறுத்தவரையில் 21 வயது வரை ஏதோ ஒரு வகையில் உடல் வலுப்பயிற்சிகளை மேற்கொண்டிருப்போம் அதன் பின்தான் உயர்கல்வி, தொழில்  என்று உடலை கவனியாது விட்டிருப்போம்.
முறையான உடல்பயிற்சி செய்து 50 களை எட்டியவர்களை பார்த்து உலகமே பொறாமைப்படும் ஏனெனில் அவர்கள் தம் மகன் அல்லது மகளிற்கு தந்தையின் தோற்றத்தில் அல்லாமல் அண்ணனின் தோற்றத்திலேயே இருப்பார்கள்.

பொதுவாகவே பவருக்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, விளையாட்டுக்கள் என்பவற்றில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்கூட வேலைப்பழு, சோர்வு, பஞ்சி என்பன வர்களின் மனதை கெடுத்துவிடும் என்பதுதான் உண்மை.
அதேநேரம் பிரபல வியாபார நிறுவன தலைவர்கள் நாள் தவறாத உடற்பயிற்சிகளுடன் யோகாவையும் அப்பியாசம் செய்துவருவதை நாம் சிறந்ததொரு முன்னுதாரணமாகக்கொள்ளலாம்.

உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டமைப்பு பேணல், நோய்களை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்ற நடவடிக்கைகளை எவ்வாறு எடுத்தல் என்பது குறித்து அண்மையில்கூட யாழ்பாணத்தின் முதற்தர விளையாட்டு பயிற்றுனர் வி.கே.சண்முகலிங்கம் அவர்களிடம் வினவியபோது. 
'உண்மையிலேயே உடற்கட்டமைப்பை நடுத்தர வயது கடந்தும் அப்படியே கச்சிதமாக வைப்பதெனில் 'பார் பயிற்சிகளையும், யோகாவையும் முறைப்படி செய்யலாம், அதேவேளை காலைநேர குறிப்பிட்ட அளவு நடைப்பயிற்சி, சுவாசத்திற்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சியை தரவல்லது என்றார்.
அதேவேளை நீச்சல் பயிற்சிகள் உடலின் பல பாகங்களுக்கும் சக்தியோட்டத்தையும், சகல பாகங்களுக்கும் உரிய பயிற்சிகளையும் வழங்கும்.
அதேவேளை இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் தொப்பையும் கரைக்கவல்லது, சைக்களிங்கும் அதற்கு உதவும் எனத்தெரிவித்திருந்தார்.
உடற்பயிற்சி, விளையாட்டுத்துறை என்பவற்றை அவர் ஒரு ஹபிட்டாக கைக்கொண்டு 60 களை தொட்டு நிற்கும் வயதிலேயும் இரும்பாக இருக்கிறார் என்பது அவரை அறிந்த அனைவருக்கும் நன்கு தெரியும். உடற்பயிற்சி என்ற அடிப்படையில் நேற்றைய இளைஞர்கள், இன்றைய இளைஞர்கள் ஏன் நாளைய இளைஞர்களுக்கும் அவர் ஒரு சிறந்த முன்னுதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவர் இருந்தால்ததானே சித்திரம் வரையலாம்! எமது வாழ்வு என்பது ஒரு சிறந்த சித்திரமாக இருக்க அதற்கு மூலதனமான உடல் முழுத்தகுதியுடையதாக இருக்கவேண்டும் அல்லவா?
அதேவேளை பெரும்பாலும் இனறைய இளைஞர்களை தாக்கும் நோய்களை வராமல்; பாதுகாப்பதற்கு ஏதுவான வழிகள் என்பவற்றில் நூற்றுக்கு நூறுவீத மருத்துவ நிபுணர்களும் குறைந்தது 30 நமிட (நாளொன்றுக்கு) உடற்பயிற்சியையே குறிப்பிட்டுள்ளதையும் காணலாம்.

எனவே இன்றைய புதுவருட உங்கள் சிமார்ட் கோல் வரைபுகளில் கண்டிப்பாக ஏதோ ஒரு உடற்பயிற்சி அல்லது விளையாட்டுக்களை தெரிவு செய்து எமது உடலினை உறுதி செய்வோம்.

LinkWithin

Related Posts with Thumbnails