Showing posts with label ஜெட் லீ. Show all posts
Showing posts with label ஜெட் லீ. Show all posts

Thursday, October 29, 2009

ஹோலிவூட்டை கலக்கப்போகும் “The Expendables”


ஹோலிவூட் திரைப்படங்களின் இரசிகரா நீங்கள்? அப்படி என்றால் அடுத்த ஆண்டு (2010) ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிவரை நீங்கள் பற்களைக்கடித்துக்கொண்டிருந்து காத்திருக்கவே வேண்டும்.
ஏன் என்றால் உலக திரைப்பட பிரியர்களின் கனவுகளில் மட்டுமே நடக்கும் அதிசயம் ஹோலிவூட்டை கலக்கப்போகும் “The Expendables” திரைப்படம்மூலம் நிறைவேறப்போகின்றது.


ஹாலிவூட் அக்ஸன் திரைப்படங்களை இரசித்து பார்ப்பவர்களின் கனவு நாயகர்களாக ஆனோல்ட் சிவாஷினேகர், ஷில்வஸ்ரர் ஸ்ராலோன், ஜெட் லீ, ஆகியோர் மறக்கமுடியாத அக்ஸன் சிகரங்களாக உள்ளனர் என்பது எவரும் மறுக்கமுடியாத உண்மை ஆகும். இந்த நிலையில் இவர்கள் மூவரும் இணைந்து நடித்தால் அது இரசிகர்களுக்கு பெரு விருந்துதானே.
இந்த விருந்து போதாதென்று மேலும் ஹோலிவூட் முன்னணி நட்சத்திரங்களான மிக்கி ரொக்கி, ஜோன்ஸன் ஷதாம், டொல்ப் டன்ஹிரன், எரிக் ரொபேட்ஸ், ரெர்றி கிறியூஸ், ஸ்ரீவ் ஒஸ்ரின் ஆகியோரும் இணைந்து கலக்கினால் இரசிகர்களின் களிப்புக்கும், கொண்டாட்டத்திற்கும் அர்த்தம் இல்லையா என்ன?


அறுபதுகள் கடந்தும் இன்றும் உடல்வாகுவை முப்பதுகள் போலவே கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஷில்வஸ்ரர் ஸ்ராலோனே இந்த திரைப்படத்தை இயக்குவதும், தயாரிப்பதும் மேலும் ஒரு சிறப்பான விடயமாகும் என்பதுடன் இந்த திரைப்படத்தின் பிராதான பாத்தித்தில் அவரே நடித்தும் வருகின்றார்.
ஷில்வஸ்ரர் ஸ்ராலோன் தலைமையிலான அசைக்கமுடியாத கில்லாடி குழுவொன்று தென்னமெரிக்காவில் நடத்தும் ஒப்பரேசன் நடவடிக்கையினை மையமாக வைத்தே இந்த திரைப்படம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த திரைப்படத்தின் அந்த நடிகர்கள்குழுவானது ஒரு கனவு அணி எனவும், இதுபோல இந்த நூற்றாண்டில் திரைப்படங்கள் வந்ததில்லை என பல பத்திரிகைகள் இப்போதே “The Expendables” இன் புகழ்பாட ஆரம்பித்துள்ளன.
இந்த திரைப்படத்திற்காக நடிகர்களின் சம்பளங்கள், மிகப்பிரமாண்டமான காட்சிகள் என்பவற்றிற்காக பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொட்டப்படுவதாகவும் அறியமுடிகின்றது. இதேவேளை பல திரையரங்குகள் இந்த திரைப்பட படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட உடனேயே தங்கள் திரையரங்கங்களில் இந்த படத்தை வெளியிடுவதற்கு போட்டி போட்டுக்கொண்டதாகவும் பத்திரிகை செய்திகள் குறிப்பிட்டு காட்டுகின்றன.


இருந்தபோதிலும் ஷில்வஸ்ரர் மீண்டும் 80ஆம் ஆண்டுக்கால பாணியில் ஒரு திரைப்படத்தை எடுத்துவருவதாகவும், இதில் பல நடிகர்கள் உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், இங்கு சில்வஸ்டர் மற்றும் ஜோன்ஸன் ஷதாம் அகியோரின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் எனவும், 80ஆம் ஆண்டுகால இரசனைகள் தற்போது முற்றிலுமாக மாறிவிட்டதை ஷில்வஸ்டர் மறந்துவிட்டார் எனவும் இது முற்றுமுழுதான பக்கா வசூலைக்குவிப்பதற்கான ஒரு திட்டமே எனவும் விமர்சித்துள்ள பத்திரிகைகளும் உண்டு.

இதேவேளை “The Expendables” என்ற தலைப்புடன். 1989ஆம் ஆண்டு ஒரு திரைப்படமும், 2000 ஆம் ஆண்டு ஒருதிரைப்படமும் வெளியாகியுள்ளன. எது எப்படி இருந்தாலும் இந்த “The Expendables” (2010) உலக மட்டத்தில் பாரியதொரு எதிர்பார்;பினை உருவாக்கியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மைமே.

பிரமிக்கவைக்கும் “The Expendables” திரைப்படத்தின் ஸ்ரில்கள் சில….












Tuesday, August 25, 2009

மீண்டும் சீனத் திரைப்படத்திற்கு திரும்பும் ஜெட் லீ.


2007ஆம் ஆண்டு வெளிவந்த கொலிவூட் திரைப்படமான வோர் , த போர்பிடன் கிங்டொம் (The Forbidden Kingdom) , 2008ஆம் ஆண்டு வெளியாகியிருந்த, த மம்மி : ரொம்ப் ஒவ் த ராஹென் எம்பெரெர் (The Mummy: Tomb Of The Dragon Emperor) , மற்றும் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள, த எக்ஸ்பென்டபிள்ஸ் (The Expendables) ஆகிய திரைப்படங்களுக்கு அடுத்து “ஓஷன் பரடைஸ்” (Ocean Paradise)என்ற சீனத்திரைப்படத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதாக ஜெட் லீ அறிவித்துள்ளார்.
சீன எட்கோ பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்தத்திரைப்படம் எதிர்வரும் ஆண்டு வெளியிடப்படவுள்ளதாகவும், வெகு விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள எட்கோ பிலிம்ஸ் நிறுவனம் அதற்கு முன்னதாக இந்த திரைப்படம் தொடர்பாக பீஜிங்கில் ஒரு செய்தியாளர் மாநாடு இடம்பெறவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.


அடுத்து “ஓஷன் பரடைஸ்”திரைப்படம் பற்றி கருத்து தெரிவித்த எட்கோ பிலிம்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஷாங் ஹொங்ஜான், இந்த திரைப்படத்தை மிகப்பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளதாகவும், இதில் ஜெட் லீயின் திறமைகளுக்கு ஏற்ற பாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துடன் இந்த திரைப்படத்தினை புதிய இயக்குனர் ஒருவரே இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவல் ஒன்றில் இந்த திரைப்படத்தில் ஜெட் லீ பறக்கப்போவதும் இல்லை, சாகசம் நிறைந்த சண்டைகள் போடப்போவதும் இல்லை, இந்த திரைப்படம் அவரது நடிப்பின் முழு அத்தியாமாக அவரது திரையுலக வாழ்வின் முதல் வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என அறிவித்துள்ளது.


தற்போது 46 வயதாகும் ஜெட் லீயின் கடந்த மூன்று திரைப்படங்களும் அமெரிக்கத் தயாரிப்பாகவே வந்திருந்தன. இதிலும் குறிப்பாக த போர்பிடன் கிங்டொம் திரைப்படத்தில் இவரும், மிகப்பெரும் நடிகர் ஜாக்கி ஸானும் இணைந்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இவரது எக்ஸ்பென்டபிள்ஸ் திரைப்படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்புக்கள் சில நாட்களின் முன்னர்தான் முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


தற்போது ஜெட் லீ சிங்கப்பூரில் வசித்துவருகின்றார். இவர் தற்போது சிங்கப்பூர் குடியுரிமையினையும் பெற்றுள்ளார். சிங்கப்பூர் விதிமுறைகளுக்கு அமைய அங்கு குடியுரிமையை பிறிதொரு நாட்டினர் பெறவேண்டும் என்றால் சிங்கப்பூரில் அவருக்கு சொத்துக்கள் இருக்கவேண்டும் என்ற சட்டத்திற்கு அமைய ஜெட் லீ சிங்கப்பூரில் 14 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை வாங்கியுள்ளதாக முன்னர் செய்திகள் வந்திருந்தமை நினைவிருக்கலாம்.


லீ லியன்ஜி என்ற சொந்தப்பெயர் கொண்ட ஜெட் லீ, ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி 1963ஆம் ஆண்டு சினத் தலைநகர் பீஜிங்கில் பிறந்தவர். 1982ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் “ஷயொலின் ரெம்பிள்” என்ற திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதன் பின்னர் 1989ஆம் ஆண்டு வெளிவந்த “வன்ஸஃபோனர் ரைம் இன் சைனா”, 1998ஆம் ஆண்டு முதல் முதலில் கொலிவூட்டில் இவர் நடித்துவெளிவந்த “லெத்தல் வெப்பன் -4”, 2000ஆம் ஆண்டு வெளிவந்த ஜெட் லீ முதல்தர கதாநாயகனாக நடித்த “ரோமியொ மஸ்ட் டை” ஆகிய திரைப்படங்கள் இவரை உலகத்திரைப்பட நட்சத்திர மட்டத்திற்கு உயர்த்தியது.


“த எக்ஸ்பென்டபிள் திரைப்படம் 2010” ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி வெளிவரவுள்ளபோதிலும் அதன் எதிர்பார்ப்பு உலக அளவில் பலமானதாக உள்ளது. காரணம் அந்த திரைப்படத்தில் ஒன்று கூடியுள்ள உலக முன்னணி நடிகர் பட்டாளமே. சில்வஸ்ரன் ஸ்ராலோன், ஆனோர்ல்ட் சிவாஸினேகர், மிக்கி ரொக்கி, ஜசான் ஷதாம், டொல்ப் லக்றென், எரிக் ரொபோர்ட்ஸ், ரெர்றி, ஸ்ரீவ் ஒஸ்ரின் இவர்களுடன் ஜெட் லீ என ஒரு பட்டாளமே நடித்தால் எதிர்பார்புகள் கூடாதா என்ன?


மிகவும் இழகியமனமும், இரக்க சுபாவமும் கொண்டவர் ஜெட் லீ என அவரது உதவியாளர்கள் மற்றும் பலர் அவர் பற்றி கூறியுள்ளனர். அதேபோல மிகவும் ஒழுக்கமுள்ள அவர், திபத்தியன் பௌத்த தர்மத்தை பின்பற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் தனது மகளுடன் கடற்கரையிலிருந்து மிக அண்மையில் இருந்த நீச்சல் தடாகத்தில் நீந்திக்கொண்டிருந்தார் லீ. அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலைத்தாக்கம் காரணமாக வந்த அலைகளால் அடிக்கப்பட்டாலும் சுதாகரித்துக்கொண்டு தனது மகளையும் காப்பாற்றி மயிரிழையில் உயிர்தப்பியிருந்தார் லீ. இந்தச்சம்பவத்தால் அவர் காலில் காயமடைந்திருந்தார். தமது வாழ்நாளில் இந்தச்சம்பவத்தை மறக்கமுடியாது என அண்மையில்க்கூட ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் அவர்.

LinkWithin

Related Posts with Thumbnails