Showing posts with label பதிவர்கள். Show all posts
Showing posts with label பதிவர்கள். Show all posts

Thursday, October 6, 2011

தமிழ் மணமும் இந்த வார நட்சத்திர அறிமுகமும்.


தமிழ் வலைப்பதிவர்களின் பதிவுகளுக்கு ஒரு நறுமண பூங்காவாக தமிழ் மணம் உள்ளது என்பது நான் கூறி தெரியவேண்டிய ஒரு விடயம் அல்ல.
எம் மனதுக்குள் கருக்கொள்ளும் விடையங்கள் எமக்குள்ளேயே கருக்கலைப்பு செய்துவிடாது, வலைகளில் பிரசவமாகி பலர் கண்களில் சிரிக்கவேண்டும் என்றதனாலேயே பதிவர்கள் ஆகிய நாங்கள் தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த வகையில் பதிவர்களின் பதிவுகள் ஒவ்வொன்றையும் பல மட்டத்திற்கும் கொண்டுசெல்லும், உன்னதமான சேவைகளையே திரட்டிகள் என்ற வகையில் தமிழ் மணம் இந்த திரட்டிகளில் முன்னிலையில் நின்று செய்துகொண்டுள்ளது.

ஓவ்வொரு கட்டத்திலும் தமிழ் மணம் சமயோசிதமாக யோசித்து தமது ஒவ்வொரு தடங்களையும் இடுவதையும், தூரநோக்குடன் ஒவ்வொருபதிவரும் முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் சிலநடைமுறைகளை கொண்டுவருவதும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விடயமே.

நன்றிகள்...
இந்தவாரம் தமிழ்மண நட்சத்திரமாக என்னை அறிமுகப்படுத்தியிருக்கும் தமிழ் மணத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேநேரம் புதிய இடுகைகள் பற்றிய தமிழ் மணத்தின் கொள்கைகள் முழுமையாக எனக்கு பிடித்துப்போயுள்ளது. அதேவேளை தமிழ் மணம் செய்யவேண்டும் என்ற அபிலாசைகள் சிலவும் என் மனதில் உள்ளன, அதை நான் இங்கே கூறத்தேவையில்லை. நான் நினைக்கும் தேவையான சில நடைமுறைகளையும் தமிழ் மணம் விரைவில் நிறைவேற்றும் என்ற முழுமையான நம்பிக்கை என்னிடம் உண்டு.

என்பதிவுகள் பற்றி.
என்னதான் திரட்டிகள் முன்னிடம் தந்தாலும் அந்த திரட்டிகள் என்னை கவனிக்க வைப்பவர்கள் என் வலையின் வாசகர்கள், மற்றும் பதிவர்கள் அல்லவா?
எனவே முக்கியமான நன்றிகளை அவர்களுக்கு தெரிவிக்கவேண்டிய தேவை எனக்கு உள்ளது.
ஆரம்பம் முதலே எழுதும் ஒவ்வொரு பதிவும், யாரோ ஒருவனுக்கு தேவையானதாக இருந்தாலே போதும் என்ற நோக்கத்துடனேயே தொடர்ந்தும் பதிவுகளை இட்டுவருகின்றேன். பயனுறப்பதிவெழுதல் என்ற வாக்கியத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் அயராது எழுதவேண்டும் என்பதே என் அவா.. தொடர்ந்தும் அந்தப்பாதையிலேயே பயணிக்கவேண்டும் என்பதே இந்த பதிவுலக இலட்சியமாக உறுதியாக என்னுள்ளே உள்ளது.

பதிவர்களுக்கு நட்பாக ஒரு வேண்டுகோள்...
உண்மையை சொல்லவேண்டும் என்றால், எனது இணைய மேச்சல்களில் பல தளங்களை எழுதும் புதியவர்களின் பல ஆச்சரியமான அபாராமான, பயனுள்ள, ஒரு அராய்வு போன்ற பதிவுகள் எல்லாம் திரட்டிகளில் இணைக்கப்பட்டிருந்தாலும் எவர் கண்களிலும் படாமல் இருப்பதை கண்டு ஆச்சரியம் மட்டுமல்ல வேதனையும் பட்டு, அவற்றை எனது சமுக இணைய தளங்களிலே இணைத்தவருகின்றேன்.
மறுபக்கத்தில் பலர் பதிவுகளில் அனைவரையும் தம் பக்கம் இழுக்கும் ரெக்னிக்களை கையாண்டு, தமது பதிவுகளை என்ன எழுதினாலும் திரட்டிகளில் முன்னுக்கு நிற்கும் வண்ணம் செய்துவருகின்றனர்.
இதை ஒரு பிழையாக நான் குற்றம் சுமத்தவில்லை இப்படியே தொடரும் என்றால் புதிதாக எழுததொடங்கும் பலர் தாம் கவனிக்கப்படாமல் பதிவுகளை எழுதுவதை நிறுத்தும் அபாயமும் உள்ளது.
உபயோமாக பலநாள் ஆராய்ந்து கஸ்டப்பட்டு நல்லபதிவு எழுதவேண்டும் என்று எண்ணும் புதியவர்களை கொஞ்சம் யோசித்துப்பார்க்கவும் வேண்டும் அல்லவா?
எனவே இனிவரும்காலங்களிலாவது புதியவர்களின்மேல் பல பதிவர்களின் கண்கள் பரவட்டும், அவர்கள் எங்கள் வலைப்பதிவுக்கு வருகின்றார்களா? எமக்கு ஓடடு போடுகின்றார்களா? பின்னூட்டம் போடுகின்றார்களா? என்ற சிந்தனைகளை கழைந்துவிட்டு, புதியவர்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட, ஏற்றிவிடும் ஏணிகளாக இப்போதைய பிரபல பதிவர்கள் முன்வரவேண்டும்.

ஒருவகையில் சொல்லப்போனால் இந்த பதிவை வடிக்கும் நான் உட்பட என்கால பதிவர்கள் பலர் புதியவர்களை ஊக்கிக்கும் பதிவர்களாகவும், அவர்களை பதிவுலகில் முன்கொண்டுவருபவர்களாகவுமே இருந்தோம். ஆனால் அதன் பின் வந்த சில பதிவர்கள் தமக்கு பின்னதாக பதிவுலகத்திற்கு வரும் பதிவர்கள் பற்றியும் சிந்திக்கவேண்டிய பெருந்தேவை உள்ளது.

ஹிட் என்னும் மாஜை!
பதிவுலகத்தில் இருக்கம் திரட்டிகளில் ஹிட் ஆவது என்னும் ஒரு மாஜை இன்று அனைத்து பதிவர்களிடமும் ஒரு வெறியாக உள்ளதை காணக்கூடியாதாக உள்ளது. இந்த ஹிட் மாஜைகள் நிற்சயம் சில வேறுகோணங்களுக்கு பதிவர்களை அவர்களுக்கு தெரியாமலேயே இழுத்துக்கொண்டு செல்கின்றது என்பதே என் எண்ணம்.
என்னைப்பொறுத்த வரையில் சத்தியமாக இந்த ஹிட் என்னும் நோக்கம் என்னிடம் சத்தியமாக இல்லை. (என் பதிவுகள் பிரயோசமானவை என்றால் அவை பலருக்கு சேரவேண்டும் என்பதற்காகவே திரட்டிகளில் இணைக்கின்றேன், எந்தவொரு காலகட்டத்திலும் எனக்கு ஓட்டுபோடுங்க என்று என் வலையில் எழுதவில்லை) நன்றாக ஆழமாக, பலவிடையங்களையும், சமுகத்திற்கு தேவையான விடையங்களையும் எழுத ஆசைகொண்டுள்ள ஒருவனைக்கூட இந்த ஹிட் மோகம் வெறு திசைகளுக்கு இழுத்து செல்கின்றது என்பதே இன்று பதிவுலகத்தில் கண்ட உண்மைகளாக உள்ளது, உதாரணமாக திசைமாறி இன்று சினிமாவும், மொக்கையும் எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்கள் அனேகர், அவர்களின் ஆரம்பகால பதிவுகளை எடுத்து பார்த்தால் அதிர்ந்துவிடுவீர்கள், ஏன் என்றால் அன்று அவர்கள் எழுதியவை அத்தனையும் தரமானதாக இருப்பதை காணலாம்.
எதோ கைவந்தபோக்கில் எழுதி ஹிட் ஆகும் பதிவு ஒன்றைவிட, கஸ்டப்பட்டு தேடி, அறிந்து எழுதும் பதிவு ஒன்றை முழுமையாக ஒரு நான்குபேர் வாசித்தாலே அது மெகா ஹிட் என்பதே என் அசைக்கமுடியாத உண்மை.
இராமசாமி அவர்களும், முனைவர் பாலகிருஸ்ணனும் அப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.
இதை சொல்ல இவர் என்ன பெரிய ஆளா? எதையோ யாரையோ மனதில் வைத்துதான் இவர் இதை எழுதுகிறாரோ என்று எண்ணுவது உண்மையில் மடமையே. உண்மையில் என் அபிலாசையையும் பதிவர் என இல்லாமல் பதிவுலக வெறும் வாசகன் என்ற கோணத்தில் நின்று யோசித்ததாலேயே பதிவர்கள் அனைவரும் நண்பர்கள் என்ற உரிமையுடனேயே இதை சொன்னேன்,
தப்பாக இருந்தால் மன்னித்துவிடவும்.

மன்னிப்பு
உண்மையில் கடுமையான நேரமின்மைக்கு மத்தியில் நட்சத்திரப்பதிவர் ஆக்கிவிட்டார்கள், ஒவ்வொரு நாளும் பதிவு போடவேண்டும் என்ற வெண்டுகோள் ஒன்றும் உள்ளதனாலேயே இந்தவாரம் கிடைக்கும் அரை மணி நேரத்தில் அவசரமாக ஓடிவந்து ஒரு பதிவினை போட்டுவிட்டு, மீண்டும் இரவு பகலாக வேலைகளில் மூழ்கிவிடுகின்றேன். இதனால் சக பதிவர்களின் தளங்களை இன்னும் ஒருவாரத்திற்கு வாசிக்கவோ கருத்து பகிரவோ முடியாதிருக்கும், இதற்காக பதிவுலக நண்பர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்ககொள்கின்றேன்.

மீண்டும் இந்த வார நட்சத்திரப்பதிவர் என்ற அந்தஸ்தை தந்த தமிழ் மணத்திற்கு எனது நன்றிகளை தெரிவிக்கும் அதே சமயம் மூன்றாண்டுகள் கடந்தும் எனது பதிவுகளுடன் பயணிக்கும் சக பதிவர்கள், நண்பர்கள், வாசகர்கள், திரட்டிகள், அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

Saturday, January 22, 2011

தம்பிகளின் பிறந்தநாள்.


பதிவெழுத வந்து நாம் பெற்றுக்கொண்டவை என்ன என்று கேள்வி ஒன்று வரும்போது கிடைக்கும் முதல் பதில், நல்ல பல நெஞ்சங்கள், அருமையான நண்பர்கள், நிறைய சகோதரர்கள்.
அந்த விதத்தில் எனக்கு இந்த பதிவுகள் மூலம் அன்பு தம்பிகள் பலர் கிடைத்துள்ளனர். (என்னடா கலைஞர் வாடை அடிக்குதே என்று ஒன்றும் யோசிக்ககூடாது ஆமா..)
அப்படி பதிவுலகில் எனக்கு கிடைத்த அண்ணர்களைவிட தம்பிக்களே என்னை அதிசயிக்கவைத்தவர்கள். அவர்களின் ஆற்றல்கள், அறிவின் ஆழங்கள் கண்டு பல முறை ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்.
நாமதான் இந்த வயதில் எல்லாததுக்கும் பயந்துகொண்டு நல்லபிள்ளையா இருந்திட்டமோ என்றுகூட சிலநேரங்களில் சிந்திக்க வைத்தும் விடுவார்கள் பதிவுலகால் எனக்கு கிடைத்த தம்பிகள்.
அதேநேரம் அவர்களின் தேடல்கள், உலகநடப்புக்களில் கவனங்கள் என்பன என்னை பெரிதும் ஆச்சரியப்படவைத்துவிடும்.
அப்படியான எனக்கு கிடைத்த தம்பிக்களில் இன்று இரண்டு தம்பிகள் பிறந்தநாளை கொண்டாடுகின்றார்கள். இருவருமே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முத்துக்கள்.
ஒருவர் முகாமைத்துவம், மற்றவர் மருத்துவம். ஆனால் இரண்டுபேரும் இந்த இரண்டுதுறைகளுடனும் மட்டுப்பட்டவர்கள் மட்டும் அல்ல. இருவருக்கும் ஒரு பெரிய ஒற்றுமை உண்டு.(அதை பதிவில் சொல்லமுடியாதுங்கோ)

டிலான்.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அப்போது நான் சென்னையில் இருக்கும்போது யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை வந்திருந்தார் டிலான். ஈ.சி.ஆர். பாலவாக்கம் கடற்கரையில் அவரை முதல்முதலாக சந்திக்கின்றேன். ஏதோ கனகாலம் பழகியதுபோல அண்ணே..என்று கரங்களாலும், வார்த்தைகளாலும் இறுக்க கட்டிக்கொண்டார்.
இருவரின் வீடுகளும் சிறிய தூரத்தில்த்தான் இருந்ததனால், ஆரம்பத்தில் ஜிம்மில் சந்தித்துக்கொண்டோம், பின்னர் இலக்கிய கூட்டங்கள், குறும்பட திரையிடல் நிகழ்வுகள், குறும்பட தயாரிப்பு என்றும், சினிமாக்கள் பார்க்க, அப்படி இப்படி என்று நமது நட்பு இறுகி, ஒரு உதைபந்தாட்ட குழுவிலும் இருவரும் இணைந்துகொண்டு பல மச்கள் விளையாடினோம். எக்ஸ்ரீம் பொஸிஸனில் டிலான் புலி என்று அப்போது நான் கவனித்தேன்.
பின்னர் டிலானை சந்திக்கா நாட்கள் இல்லை என்ற அளவுக்கு பழகிக்கொண்டோம்.
அதன் பின்னர் பதிவு வட்ட நண்பர்கள், அருண், அடலேறு, நிலாரசிகன், கேபிள் சங்கர், ஒவனோ ஒருவன், சமுத்திரன் மற்றும் ஒரு இலங்கை பதிவர் சயந்தன் (நதிவழி) என அந்த நட்பு வட்டம் பெரிய வட்டமாக பரினாமித்தது.
அற்புதமான நாட்கள் அவை.. அதில் அற்புதமான நினைவுகள் டிலானுடன் என் தின அனுபவங்கள்.
டிலானுக்கு எப்படித்தான் ஒவ்வொரு சொல்லிலும் உண்மையிலேயே சிரிப்பை அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சரிக்க வைக்கும் மந்திரமும், அதேபோல அவற்றை எழுத்திலும் கொண்டுவரும் லாவகமும் அமைந்ததோ தெரியாது.
அந்த இடத்தையே கலகலப்பாக கட்டிப்போட்டு வைத்துவிடுவது டிலானின் தனித்துவம்.
இப்போது தொழில்த்துறையில் உறக்கநேரமே டிலானுக்கு 3 மணித்தியாலங்கள்தான் என அறிந்தேன். முன்னேற துடிக்கும் ஒருவனுக்கு இது பெரிய விடயம் அல்ல.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்புத்தம்பி டிலான்.

பாலவாசகன்

சென்றவருடம் சித்திரை மாதமளவில் நான் சென்னையில் இருந்து இலங்கைக்கு திரும்பியவுடன், இலங்கை பதிவர்களின் வலைத்திரட்டியான யாழ்தேவி நடத்திய யாத்ரா இணையத்தமிழ் மாநாடு ஒழுங்குகள் இடம்பெற்றன.
இலங்கை வந்தவுடன் பல பதிவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது இந்த யாத்ராதான். யாத்ரா மாநாட்டிற்கான ஒழுங்குகளை கவனித்துக்கொண்டிருந்தவேளையில் மருதமூரானிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு..
ஜனா.. நான் ராஜா கிறீம் ஹவுஸிலை நிற்கின்றேன். பதிவர் பாலவாசகன் வருவார் நீங்களும் வருகின்றீர்களா என்று. சரி.. என்றுவிட்டு, என் எவ்.எஸ்.இஸட்டை முறுக்கிக்கொண்டு அங்கு சென்றேன். மிக பவ்வியமாக அங்கே மருதமூரானுடன் ஒருவர் இருந்து சிரித்தார். களையான முகம், வஞ்சனை அறவே இல்லாத சிரிப்பு,
பரஸ்பரம்..மருதமூரானால் அறிமுகம் செய்யப்படுகின்றோம்.
அண்ணா.. நீங்கதான் ஸியேஸ் வித் ஜனாவா? பார்த்திருக்கின்றேன். நான் நீங்கள் இந்தியப்பதிவர் என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கின்றேன் என்றார்.
அன்றில் இருந்து ஆரம்பமாகியது அந்த நட்பு.
நாளை ஒரு முழு வைத்தியனாக பரினாமிக்கவுள்ள அவர் தன்னை மருத்துவத்துறையுடன் மட்டுப்படுத்திவிடாமல், பல துறைகளிலும் ஆர்வமும் தேடல்களுடனும் இருப்பது பல தடவை என்னை அதிசயிக்கவைத்துள்ளது.
என் வலைப்பதிவில்; நான் என்னைப்பற்றி சொல்லிக்கொண்ட சுயவிளக்கம் அப்படியே தம்பி பாலவாசகனுக்கும் பொருந்திய சந்தர்ப்பங்கள் பலவற்றை கண்டுகொண்டேன்.
எனக்கு தெரியாத விடயத்தை எனக்கு புரியவைக்கும்போது ஒரு ஆசானாகவும், அதேவேளை என்னிடமிருந்து தான் அறியாத விடயங்களை பெறும்போது, மாணவனாக அல்லாமல் ஒரு குழந்தையாகவே மாறிவிடுவது பாலவாசகனின் இயல்பு. வைத்தியன் என்ற ஒரு நிலையுடன் நின்றுவிடாமல், என்ன சொல்வாங்க ஆ.. அந்த எம்.டி, எவ்.ஆர்.ஸி.எஸ்.. இன்னபெற மேற்படிப்புக்களையும் தொடர்ந்துகற்று வைத்தியத்திலகமாக தம்பி வரவேண்டும் என்பதே இந்த அன்பான அண்ணனின் அவா..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி வாசகன்.

Wednesday, December 22, 2010

மாத்தி யோசி!! (பதிவர்களுக்கு ஒரு அழைப்பு)


கடந்த பதிவர் சந்திப்பு முடிந்து கொஞ்சம் நின்று அளவலாவியபோது நண்பர் லோஷன் ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். அதாவது குறிப்பாக ஒவ்வொரு பதிவர்களுக்கும் ஒரு “ரேட் மார்க்” இருக்கும், சில பதிவர்கள், சில மையக்கருத்தில் பதிவுகளை எழுதுவது அரிது. அந்த வகையில் பதிவர்களின் “ரேட் மார்க்கை” கொஞ்சம் மாற்றிப்போட்டு பதிவு எழுதலாமே நன்றாக இருக்குமே என்பதே அந்த கருத்து. கொஞ்சம் யோசித்து பார்த்தால் அது சிறந்ததொரு ஐடியாவாகவும் தெரிகின்றது.

எனவே லோஷன் பிரேரித்த அந்த கருத்தை நான் வழிமொழிகின்றேன். அதன் பிரகாரம் ஆழமாக யோசித்ததில் இன்ன பதிவர்கள் இதை, இதை எழுதினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணக்கரு மனதில் பட்டது.

இதோ எனது அன்பான அழைப்புக்கள்….

சிதறல்கள் ரமேஸ் - ஒரு கிரிக்கட் பதிவு
யோ வொயிஸ் யோகா – திகில் திடுக்கிடவைக்கும் ஒரு ஆவிக்கதை.
சுபாங்கன் - ஏதாவது சமகால உலக நடப்பு சம்பந்தமான ஒரு பார்வை.
கன்-கொன் - ஏதாவது வேற்றுமொழிக்கதை ஒன்றின் தமிழாக்கம்.
மருதமூரான் - இலங்கையில் பங்குகளின் முதலீடும், அதன் இலாப நட்டமும்
அனுதினன் - விஞ்ஞானம் சம்பந்தமான (தொழிநுட்படம் அல்ல) ஒரு பதிவு.
பவன் - இலங்கைப்பதிவர் சுற்றுலா (ஒரு கற்பனை, கலாய்ப்பு பதிவு)
வரோ - இலங்கையில் நாடகக்கலை (சிங்களம், தமிழ்)
மதி.சுதா - ஈழத்தில் ஆறுமுகநாவலரின் பின்னரான சைவ வளர்ச்சி!
கிப்போ – பெண்ணியம் போற்றும் ஆண்கள் ஐவர்.
அசோக்பரன் - ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை.
சின்மயன் - தொழிநுட்பம் சம்பந்தமான ஒரு நவீன பதிவு
நிரூஜா – மனித மனத்தின் விநோதங்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவு
வந்தீஸ் - காதல் ரசம் சொட்டும் ஒரு காதல் சிறுகதை.
ஜீ - சுஜாதாவின், கணேஸ்- வசந்த் ஒரு பார்வை.
வந்தியத்தேவன் - “அன்புள்ள ரஜினி” என்ற தலைப்பில் சினிமா தவிர்ந்த ரஜினி
சதீஸ் - “புலம்பெயர்வும் தமிழ் இலக்கியமும்” என்ற தலைப்பில் ஒரு பதிவு
நா. மது – ஹொலிவூட் திரைப்படங்கள் அண்மைக்காலப்பார்வை.
கூல் போய் - சுய முன்னேற்றத்திற்கான வழிகள் என்ற தலைப்பில்
அஸ்வின் - மனம்போல் வாழ்வு என்ற தலைப்பில் ஒரு பதிவு
வடலியூரான் - நத்தாரும் ஏதென்சும் என்ற தலைப்பில்
கார்த்தி – கனாக்காணும் காலங்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவு
ஜனகனின் எண்ண ஜனனங்கள் - திருக்குறளும் முகாமைத்துவமும்
லோஷன் - முன்மொழிந்தவரல்லவா?... லோஷன் ஒரு கவிஞரும்கூட என்பது எனக்கு ஓரளவு தெரியும் ஆனால் நீண்டநாட்களாக அது…மிஸ்ஸிங்…
சோ… பதிவுகளைப்போலவே நீளமான ஒரு கவிதை.

இந்த லிஸ்டில் வராத பதிவர்கள் அப்பாடா…கண்டுக்கலை என்று நினைக்கவேண்டாம். மேலே உள்ளவர்கள் இதை நடைமுறைப்படுத்த தொடங்கியவுடன் அடுத்த லிஸ்ட் தயாராகவே உள்ளது.

Tuesday, July 6, 2010

சில பதிவர்களின் வலையுலக முதல் எழுத்துக்கள்

வந்தியத்தேவன்

அறிமுகம்
என்னுடைய சில மனப் பதிவுகளை இங்கே பதிவு செய்ய உள்ளேன். வலைப்பூக்களில் நானே ராஜா நானே மந்திரி என்பதால் என் விருப்புக்கேற்ற வகையில் பதிவுசெய்யலாம். என் உளறல்கள் என பெயரிட்டிருப்பதன் காரணம் பலருக்கு எனது பதிவுகள் உளறலாகவே தோன்றும். ஆனாலும் சில உளறல்கள் உங்களைக் கவர்ந்தால் பின்னூட்டம் இடுங்கள்.அத்துடன் உங்கள் ஆலோசனைகள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பதிவுகள் யாருடைய மனதையோ அல்லது எந்த மதத்தையோ இனத்தையோ பாதிக்காது எனபதுக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

ஊக்கம் அளித்த இனிய நண்பர்கள் லெ.பொன்னுசாமிக்கும் கிருஸ்ணாவுக்கும் நன்றிகள்.
எனக்கு பிடித்த விடயங்கள் இனிமேல் ...

கேபிள் சங்கர்

குறும்படம்ன்னா என்ன?
இந்த கேள்விக்கு பல பேர் பல பதில் சொன்னாங்க. அதுலேயும் சில பேர் குறும்படம்ன்னு சொன்னதுமே "என்ன கான்செப்ட்?"ன்னு கேட்கிறாங்க..
எனக்கென்னமோ குறும்படம்னா ஏதாவது விஷயமோ அல்லது ஏதாவது கருத்து சொல்லணும்ணோ தோணல. குறும்பட்ம்றது ஓரு பிளாக் மாதிரி நம்ம மனசுல தோணிய விஷயங்களை எல்லாம் எழுதறமாதிரி... அது ஒரு விதமான வெளிப்பாடுன்னு என் கருத்து.
சங்கர் நாராயண்

Loshan -லோசன்
வணக்கம்

வணக்கம் அனைவருக்கும்.... வானலைகளில் ஒவ்வொரு நாளும் உங்களை சந்திக்கும் நான் இன்று முதல் உங்களை என் இந்த வலைப்பூவினூடாகவும் சந்திக்க எண்ணம் கொண்டுள்ளேன்..

எப்போதோ எனக்கு இந்த வலைப்பூ எண்ணம் உதித்தாலும் பிறவியிலேயே என்னோடு தொற்றி கொண்ட சோம்பலும் என்னுடைய வானொலி வேலைப்பளுவும் என்னை வலைப்பூ எழுத்தாளனாக வர முடியாமலேயே செய்திருந்தன. இன்று முதல் ஏதோ என்னால் முடிந்ததை எழுதிக் கிழித்து எழுத்துப் பணி செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.
தமிழுலகம் & வலைப் பதிவுலகம் வரவேற்குமா அல்லது வேண்டாமப்பா என்று சொல்லுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்

கானா பிரபா

வணக்கம்! வாருங்கோ...!

கானா பிரபாவின் "மடத்து வாசல் பிள்ளையாரடி" தளத்திற்கு வந்ததற்கு முதல்ல என்ர நன்றிகள்.
பதின்ம வயதுகளின் விளிம்பில்
இணுவில் மடத்து வாசல் பிள்ளையாரடியில் பின்னேரம் முதல் சாமம் தெரியாமல், கூட்டாளிமாருடன் அரட்டையும், சண்டையும், பிள்ளையாரடிப்பொங்கலும், காதல் கதைகளுமாகக் கழிந்த நாட்களின் நினைவுகளோட
இயந்திரமான, எங்கேயோ ஓடிக்கொண்டு,நட்புக்கும் விலைபோடும் இந்த வெளிநாட்டில மீண்டும் என்னைப் புதுப்பிக்க, என்ர மனசைப் பாதிச்ச, காயப்படுத்திய, ஒத்தடம் தந்த நினைவுகளை இதில பதியிறன், பாருங்கோ

தங்கமுகுந்தன்

அறிமுகம்: வலையுலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறேன் !

ஏகனாகவும் அனேகனாகவும் எங்கும் எதிலும் எல்லாமாகவும் வியாபித்திருக்கும் பரம்பொருளின் திருவருளுடனும் குருவருளின் துணையுடனும் "கிருத்தியம்" என்ற வலைத்தளத்தை ஆரம்பிக்கின்றேன்

பாலவாசகன்

சபிக்கப்பட்ட தமிழர்கள்

8/10/2009 நேரம் பத்து மணி நாற்பது நிமிடம் நான்கு விநாடிகள் இந்த கணமே வேண்டுமானாலும் உலகம் அழிந்து போகட்டும் .....................

ஆதிரை

வலைப்பதிவுக்குள் நான்
வணக்கம்!

நீண்டநாள் கனவொன்று நனவாகும் வேளையில் உங்களுடன் வலைப்பூவின் வழியே பேசுவதில் ரொம்ப மகிழ்ச்சி..!

என் உணர்வுகள், நான் கடந்து வந்த பாதைகள், அதில் விதைத்துவிடப்பட்ட முட்கள், என் சுற்றம், என் தாய்நாடு இவைகள் பற்றி என் உள்ளக்கிடக்கையில் குடிகொண்டிருக்கும் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள ரொம்பநாள் ஆசை. ஆனால், என் எண்ணங்கள் எல்லாம் உள்ளன உள்ளவாறு வெளியிட என்னைச்சூழ்ந்துள்ள சில இனந்தெரியாதவைகள் அனுமதிக்காது என்பதும் நான் உணர்வேன். அதை எல்லாம் மீறி நான்கு சுவருக்குள் என் மீதிக்காலத்தை கழிப்பதற்கும் நான் தயாரில்லை. அத்துடன் உயிராசை துறந்தவனுமல்ல... என்றாலும் பேசவேண்டிய சிலதுகள் பேசப்பட்டேயாக வேண்டுமல்லவா? அவை இங்கு பேசப்படும்.

**** அடுத்து சுபாங்கனின் முதலாவது அறிமுகப்பதிவுக்கு சென்றேன். அங்கே ஒரே வெள்ளமாக இருக்கின்றது. நம்ம மருதமூரான் பக்கம் போவோம் என்றால் அவரும் தான் ஒரு செய்தியாளன் என்பதை தனது முதலாவது பதிவிலேயே காட்டியிருக்கின்றார். அவரது முதலாவது பதிவே அப்போதைய current affairs தான்.

கனககோபி

தமிழின் மீள் எழுச்சிக்காக ஒரு தமிழனின் ஆதங்கமே இது.
தமிழுக்கு அமுதென்று பெயர்.(?)

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதொன்று அறியேன் என்றார் ‘பாரதி பித்தன்’ பாரதிதாசன்.
இதே கருத்தை இன்றைய (பெரும்பாலான) தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களிடமும், சினிமா தயாரிப்பாளர்களிடமும் சொல்லி பாருங்கள். அவர்கள் சொல்வார்கள், “.Bharathithasan doesn’t know the English language. That’s why he said like that. (பாரதிதாசனுக்கு ஆங்கில மொழி தெரியாது. அதனால் தான் அப்படி சொன்னார்)” என்று. நீங்கள் ‘மன்டாரின்’ மொழியில் ஏதாவது கேட்டால் கூட அவர்களுக்கு விளங்கினாலென்ன, விளங்காவிட்டாலென்ன அவர்கள் ஆங்கிலத்தில் அல்லது தமிழ் சிறிது கலந்த ஆங்கிலத்தில் தான் விடையளிப்பார்கள் போலும். (கவனிக்கவும்! ஆங்கிலம் கலந்த தமிழ் வேறு, தமிழ் கலந்த ஆங்கிலம் என்பது வேறு.)

(முக்கிய குறிப்பு இவருக்கும் கன்கொன் என்பவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அப்படி கி.கு அண்ணாவுக்கும், கோ அண்ணாவுக்கும் நான் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.)

பதிவர்களின் அறிமுகப்பதிவுகளை எழுதியாச்சே எதோ ஒன்று குறையுதே!!!
ஓ.....என் அறிமுக பதிவு!!!!!

CHEERS WITH JANA
(இதற்கு லிங்க் கொடுக்கவில்லை. காரணம் நீங்கள் தற்போது இருப்பது அந்த தளத்தில்த்தான்)

வணக்கம் அன்பு நெஞ்சங்களே.


தேசத்தின் எல்லைகளைக் கடந்து உலகலாவிய ரீதியில் தமிழ் நெஞ்சங்கள் பரந்துபட்டு வாழ்ந்துவரும் இந்த நிலையில் தமிழ் நண்பர்கள் பலரும் வலைப்பதிவு உலகில் காற்தடம் பதித்து தமது எண்ணக்கருத்துக்களை பதிந்துவருகின்றனர்.இந்த நிலையில் இந்த தமிழ் இணைய உலகில் நானும் தடம்பதிக்கின்றேன்.


எப்போதாவது இருந்துவிட்டு வரும் நல்ல சிந்தனைகள், நாம் மட்டுமே மனதுக்குள் தர்க்கம் செய்து எமக்குள்ளேயே செத்துப்போகும் எண்ணங்கள், செய்யவேண்டும் என நினைத்தாலும் அடடே மறந்துவிட்டேனே என எண்ணங்கள் வீணாகிப்போதல், என பல விடயங்களை நாங்களே கர்ப்பந்தரித்து, அடுத்த கணமே, கருக்கலைப்பும் செய்துவிடுகின்றோம்.


இந்த நிலையில் இந்த இடுகைகள், நம் எண்ணங்கள் சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிரவும், எமக்கு தெரியாதவற்றை மற்றவர்களிடமிருந்து பெறவும். சுவையான செய்திகளை மற்றவர்களுடன் பகிரவும் வகை செய்யும் என்பதில் சிறு சந்தேகமும் இல்லை.


எமக்குள்ளேயே கருக்கலைப்பு செய்யப்படும் எமது சிந்தனைகளை சுகமாக பிரசவிக்க இந்த இணையப்பதிவுகள் உதவுகின்றன. எமது சிந்தனைகள், எமது கருத்துக்களால் மறுமலர்ச்சி ஏற்படப்போகின்றது, புரட்சி வெடிக்கப்போகின்றது என்று சொல்லவரவில்லை. ஒரு சின்னவிடயம் என்றால்க்கூட, அடடா…. நான் இதை இப்படி யோசிக்கவில்லையே என எம் நண்பர்கள் எமது கருத்தினை தட்டிக்கொடுத்தாலே போதுமே…


யார்கண்டது எந்த ஆலம் வித்தில் எந்த ஆலவிருட்சம் உள்ளது என்பதை! யாராலும் சொல்லிவிடமுடியுமா என்ன?சரி…என்பதிவுகள் இதை சம்பந்தப்படுத்தி, இதை அடிப்படையாகக்கொண்டு வரும் என என்னாலேயே சொல்லமுடியாது. நேரம் கிடைக்கும்போது அந்த நேரத்தில், என்ன எண்ண ஓட்டம் மூளைக்கு கடத்தப்படுகின்றதோ அதை என் தட்டச்சு பிரசவிக்கும்….அது சிலவேளைகளில் சாகீர் ஹ_சைனின் தபேலாவாகவும் கேட்கும், சிலவேளைகளில். முதலாம்வகுப்பு பையனின் மேசைத் தட்டலாகவும் இருக்கும்.

பெரியவர் நீவிர் பொறுப்பது உம் கடன்… தொடர்ந்து பயணிப்போம்

Wednesday, June 30, 2010

நான் சந்தித்த பதிவர்கள் -புகைப்படத்தொகுப்பு

பதிவுலகத்தில் நான் காலடி எடுத்துவைத்தபோதே பல அரிய நண்பர்களின் நட்பு எனக்கு கிடைத்ததும், தற்போதும் அந்த நட்பு வட்டம் நாளாக நாளாக பெருத்துக்கொண்டு செல்வதும், ஒரு ஆக்கபூர்மான சிந்தனையுடைய நண்பர்களின் உண்மையான நட்பு கிடைத்திருப்பதும் எனக்கு கிடைத்த ஒரு பேறாகவும், வலைப்பதிவு எனக்கு தந்த ஒரு போனஸாகவும் நான் கருதுகின்றேன்.
சென்னையில் எனது உயர்கல்வி நிமித்தம் தங்கியிருந்தபோதே அந்த நட்பு வட்டம் அச்சாரம் இடப்பட்டது. பதிவுலக நண்பர்களின் அன்பு வெள்ளத்தில் பல தடவைகள் திக்குமுக்காடியும் இருக்கின்றேன்.

அதில் ஒரு கட்டமாகவே பதிவுலகில் ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்ற நோக்கத்தில், நான்கு பதிவர்கள் சேர்ந்து ஒரு கருவில் நான்கு கதைகளை வேறு வேறு கோணங்களில் எழுதி பல தரப்பட்டவர்களின் பாராட்டுக்களையும், கவனிப்புக்களையும் பெற்றிருந்தோம்.
இந்த நட்பு வட்டங்களின் மூலமே பல இலக்கிய கூட்டங்களுக்கு செல்லவும், எழுத்துப்பிரம்மாக்களை நேரடியாகச்சந்திக்கவும் வாய்ப்புக்களும் கிடைத்ததை மறந்துவிடமுடியாது.
அதேவேளை நான் சென்னையில் தயாரித்து எடுத்த மூன்று குறும்படங்களுக்கும் பதிவுலக நண்பர்களின் பேராதரவையும் இன்றும் நான் மறந்துவிடவில்லை.
நான் தாயகம் திரும்பி இப்போது இலங்கையில் இருந்து எனது வலைப்பதிவுகளை தொடர்ந்தாலும் என் சென்னை பதிவுலக நண்பர்களின் பசுமையான நினைவுகளை இப்போம் அதே சீதோஸ்ணத்தில் என் இதய குளிர்சாதனத்தில் வைத்திருக்கின்றேன்.

அடுத்து இலங்கைப்பதிவர்கள். இலங்கைப்பதிவர்களில் அனைவரையும் சந்திக்கவேண்டும் என்ற ஆவல் எனக்கு இப்போதும் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாக பலரை சந்தித்துவருகின்றேன். குறிப்பாக யாழ்தேவி நண்பர்கள் வட்டத்தினூடாக என் மண்ணின் பதிவுலக நண்பர்களை சந்தித்து வருகின்றேன்.
நான் சென்னையில் இருந்தவேளையில் இலங்கை பதிவர் சந்திப்புக்கள் இரண்டும் நடந்துமுடிந்தமையினால் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு நழுவிட்டது துரதிஸ்டமே. வெகுவிரைவில் நான் அனைவரையும் சந்திப்பேன் என்பது என் நம்பிக்கை.

சரி வாருங்கள் நான் சந்தித்த பதிவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன்..(இதில் சில பதிவர்களை சந்தித்தும் புகைப்படங்கள் கிடைக்கவில்லை)

சென்னை பதிவர்கள்

நான், சீலன், அடலேறு, நிலாரசிகன்


தண்டோரா மணிஜி, காவேரிகணேஸ்


ரவிஷங்கர், முரளிகண்ணன், லக்கிலுக், மற்றும் நர்சிம்


கேபிள் சங்கர், எவனோ ஒருவன் அதிபிரதாபன், நான், சங்கர் மற்றும் திருக்குமரன் (இலங்கை)


அகநாழிகை பொன் வாசுதேவன், கேபிள், வனைமனை சுகுமார், முரளிகண்ணன், பட்டர்பிளை சூரியா.


ஊர்சுற்றி மற்றும் ஆதிஷா


சமுத்திரனுடன் நான்


சயந்தன் (நதிவழி), தவறணை புகழ் டிலான் மற்றும் நான்

இலங்கை பதிவர்கள்

சேரன்கிரிஸ், பாலவாசன், நான், மருதமூரான்


கூல்போய், பாலவாசன், இலங்கன், மருதமூரான், சேரன்கிரிஸ், புள்ளட்


பாலவாசன்,கூல்போய்,மருதமூரான்-2,சேரன் கிரிஸ், இலங்கன், கான்கொன், நான்


இலங்கன், கான்கொன், நான்


பாலவாசன், சுபாங்கன்

Monday, September 28, 2009

சொட்டசொட்ட நனைந்து இதயங்களை பரிமாறிக்கொண்ட பதிவர்கள்…


நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதனாலோ என்னமோ சென்னையில் குறிப்பிட்ட இடத்தை குறித்த நேரத்தில் அடையமுடிந்தது.
சென்னையில் மரினா பீச்சில் உள்ள காந்தி சிலையின் பினபுறம் பதிவர் சந்திப்பு ஒன்று நடப்பதாக அறிந்து, இந்த சந்திப்பு பற்றி கேள்விப்பட்டதும் நண்பர் கேபிள் சங்கரிடம் தொடர்புகொண்டு விடயங்களை ஏற்கனவே கேட்டிருந்தேன். சென்னைப்பதிவர்கள் ஒன்றுகூடல்தானே, ஈழப்பதிவாளனான நான் அங்கு செல்வது சரியா? என பல தயக்கங்கள் எனக்கு இருந்தது. அந்த தயக்கங்கள், இடப்பிரிவினைகள் இனியும் வேண்டாம், தமிழர், அதிலும் பதிவர் என்ற நிலையில் ஒன்றிணையலாம் என்பதை தன் குறுந்தகவலில் ஒரு வரியிலேயே தெளிவு படுத்தியிருந்தார் கேபிள் சங்கர்.


சரி, சென்னையில் பல்கலைக்கழக தேர்வுகள் இடம்பெற்றபொழுது, நான் சென்னை வந்தவேளையில்தான் இலங்கையில் கொழும்பு பதிவர் சந்திப்பு இடம்பெற்றது, எனவே அதில் கலந்துகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டது. எனவே இந்த சந்திப்பிலாவது கலந்துகொள்ளவேண்டும், எழுத்துக்கள் மூலம் அறியப்பட்ட பல சக பதிவுத்தோழர்களை நேரில் காணவேண்டும் என்ற ஆர்வத்துடன் மெரினாவைநோக்கி சென்றுகொண்டிருந்தேன். (உந்து உருளியில்)
மெரினாவை நான் அடையும் முன்னதாகவே மழை வந்துவிட்டபோதிலும், மிகவேகமாக சென்றேன் நேரம் அப்போ 5.25 மழை சோ.. என்று கொட்டத்தொடங்கியவுடன் காந்தி சிலையடியில் நிறுத்தாமல் விவேகாந்தர் மியூசியத்தடியில் போய் மழைக்கு ஒதுங்கிவிட்டு. பின்னர் 5.35 மணியளவில் மழை சற்று ஓய..திரும்பவும் காந்தி சிலைக்கு அருகில் வந்தேன்.

அதற்கு முதல் இந்த மழையில் சந்திப்பு இடம்பெறுமா? அங்கேதான் நிற்கின்றீர்களா? என்பதை நண்பர் கேபிள் சங்கருடன் தொடர்புகொண்டு அறிந்துகொண்டேன். “ஜனா கெதியாக வாருங்கள், நாங்கள் 20 பேருக்குமேல அங்கேயேதான் நிற்கின்றோம் என்றார் அவர்.
ம்ம்ம்…காந்தி சிலையின் பின்புறம் நிறையப்பேர் நின்றிருந்தார்கள். நான் எதுவுமே பேசாமல் இது இவங்கதானோ??? என்ற சந்தேகத்துடன் கேபிள் சங்கரை தேடினேன், நண்பர் நடுவில நின்று படு சீரியசாக பல சக பதிவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தார்.
ஆஹா…இதுதான் நம் நண்பர்கள் என அறிந்துகொண்டு சலனமே இல்லாமல் அந்தக்கூட்டத்தாருடன் கூட்டமாக நின்றிருந்தேன்.
நானும் போய் நிற்க பதிவர் முரளிக்கண்ணன் பேசத்தொடங்கினார், பதிவர்கள் நிலாரசிகன், மற்றும் அடலேறு ஆகியோர் என்னருகில் நின்றுகொண்டிருந்தனர்.

பின்னர் பதிவர்கள் அறிமுகம் ஒருவர் பின் ஒருவராக செய்துகொண்டனர், அதன்பின்னர் பல விடங்கள் பற்றி பேச்சைதொடங்க திரும்ப மழை சோ…என்று கொட்டத்தொடங்கியது. ஆரம்பபத்தில் நனைந்தாலும் பரவாய் இல்லை, அப்படியே பேசலாம் என்றபோதும், மழை விடுவதாக இல்லை, எனவே அருகில் இருந்த மரத்தின் கீழ், ஒருவரோடு ஒருவர் ஒட்டிநின்று பேசினோம். அந்த நெருக்கம் பதிவர்களை இன்னும் நெருக்கமாக்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.


நிலா ரசிகன், எவனோ ஒருவன், அடலேறு, ஊர்சுற்றி ஆகியோர் என்னுடன் நெருங்கிப்பேசினார்கள். இதில் ஊர்சுற்றி இலங்கைப்பதிவர்களை நன்கு அறிந்திருந்தமை என்னை ஆச்சரியம் கொள்ளச்செய்தது.
எமது பேச்சுக்கள், கலை, இலக்கியம், எழுத்துக்கள், என்று அரசியல் பக்கமும் வந்தது. பதிவர் அடலேறுவின் ஈழத்தமிழர்களின் பால் உள்ள உணர்வு என்னை தழுவிக்கொள்ளச்செய்தது. கொஞ்சப்பேச்சுக்களிலேயே முன்னைய நாட்களில் நான் நடத்திய இணையம் பற்றியும், அதில் என் ஆக்கங்கள்; பற்றியும் அடலேறு பேசினார், எனக்கு மிக மிக ஆச்சரியமாக இருந்தது. அந்த இணையத்தின் கட்டுரைகளை தாம் பிரிண்ட் ஒவுட் எடுத்து முக்கிமானவர்களுக்கு கொடுத்ததாக சொன்னது, எனக்கிருந்த ஒரு விரக்தி மனப்பான்மையினை அந்த நிமிடத்தில் கலைந்தது.
ஏன் என்றால் குறிப்பிட்ட அந்த இணையத்தளத்தினை நாம் நண்பர்கள் நால்வர் இணைந்து நான்கு வருடங்களுக்கு முன்னர் பல்வேறு இடர்பாடுகள், கஸ்டங்கள், எமக்கான வேலைப்பழுக்களுக்கு இடையில், இரண்டரை அண்டுகளாக நடத்தினோம்.
பின்னர் அது கைவிடப்பட்டது. அந்த கஸ்டங்களுக்கு எந்தப்பயனும் இல்லையே என அந்த நான்குபேரும் இப்பொதும் தொலைபேசியில் உரையாடும்போது ஆதங்கப்பட்டுகொள்வோம்.
அது வீண்போகவில்லை என்பது எனக்கு அடலேறுமூலம் தெரிந்தது.

மேலும் என்னுடன் பேசிய சென்னைப்பதிவர்கள் சிலர், லோஷன், வாத்தியத்தேவன், யோவொயிஸ், அசோக்பரன், தங்கமுகந்தன், டயானா, மருதமூரான் அகியோர் பற்றியும் கேட்டனர்.
முக்கியமாக இலங்கைப்பதிவர் சந்திப்பு பற்றி தாம் ஆர்வமாக வாசித்ததாகவும், ஒளி-ஒலியினைக்கூட பார்த்து, கேட்டதாகவும் தெரிவித்திருந்தனர். இவற்றுக்கு உங்கள் சார்பில் என் நன்றிகளை தெரிவித்துக்கொண்டேன் நண்பர்களே.


கேபிள் சங்கரைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும், எனக்கும் கேபிள் சங்கரின் அறிமுகம் பதிவர்கள் என்ற முறையில் வந்ததல்ல, குறும்பட இயக்குனர்கள்; என்றவிதத்தில் உருவானது. எக்மோரில் நடந்த நிகழ்வு ஒன்றில் சங்கருடைய விபத்து (அக்ஸிடன்ட்) என்ற குறும்படம் அரங்கேற்றப்பட்டபோது அவரை முதன்முதலில் சந்தித்தேன்.
உண்மையில் அவர் சிறந்த குறும்பட இயக்கனரும்கூட.
அடுத்து நம்ம நண்பர் அதிஷா, எழுத்துக்களைப்போலவே மிக மிக கலகலப்பான ஒருவர். ஓல்லியான அவரது தேகத்தினாலோ என்னவோ, எனது உடல்வாகுவை பாராட்டினார். ஜிம் அதிகம் தூக்கிறிங்களோ??? என்று கேட்டுச்சிரித்தார்.
அடுத்து பதிவர் முரளி கண்ணன் எம்மை அழைத்து தேனீர் விருந்துபசாரம் செய்தார். அங்கிருந்தும் பதிவுகள் பற்றியும், எழுத்துக்கள் பற்றியும், பல எழுத்தாளர்கள் பற்றியும் பேசிவிட்டு, பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றோம்.
உண்மையில் கொட்டும் மழையில் பல பதிர்வர்களுடன் இதயங்களை பரிமாறிக்கொண்ட ஒரு நாளாகவே நான் அதை கருதகின்றேன்.

LinkWithin

Related Posts with Thumbnails