Friday, August 21, 2009

“TOP 25” இந்தியாவின் அதிபிரபலங்கள்

ஐஸ்வர்யா ராய்

உலகின் ஈர்ப்பு மிக்க பெண்களின் பட்டியலில் 10 ஆண்டுகள் தாண்டியும் தனக்கான ஒரு இடத்தினை தொடர்ந்து தக்கவைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய் பச்சன். 1994ஆம் ஆண்டு உலக அழகியாக முடிசூடிக்கொண்ட இவர். அதன் பின்னர் இந்திய சினிமாவில் நுளைந்து, பொலிவூட்டின் ராணி என்ற நிலைக்கு உயர்ந்தவர்.

அணில் அம்பானி.

இந்திய தொழிலதிபர்களின் பிதாமகர் அம்பானியின் இளைய வாரிசான இவர், அணில் டிருபைன் குழுமத்தின் தலைவராக இருக்கின்றார். 2003 ஆம் ஆண்டு எம்.ரி.வியின் உயர் விருதான இளம் வயது தொழில் முன்னேற்றத்திற்கான விருதையும், 2004ஆம் ஆண்டுக்கான சீ.இ.ஓ விருதினையும் பெற்றவர். 2004ஆம் ஆண்டு ராஜ்சபா உறுப்பினராகவும் இவர் தெரிவாகியிருந்தார்.

டொக்ரர். அணில் ஹகோட்கர்.

இந்தியாவின் அதிமுக்கமான அணு விஞ்ஞானியான இவர். 1974 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் இந்தியா நடத்திய அணுப்பரிசோதனைகளில் பெரும் பங்காற்றியவர்.
இந்திய அணு சக்தி ஆணைக்குழு, அணுசக்தி திணைக்களம் என்பவற்றின் தலைவராக பதவி வகிக்கின்றார்.

அல்லாஹ் ரக்ஹா ரஹ்மான்.
2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ள தமிழரான இவர் அற்புதமான ஒரு இசையமைப்பாளர். ஆரம்பகாலங்களில் விளம்பரங்களுக்கு இசையமைப்பதன்மூலம் தனது இசைப்பயணத்தினை தொடங்கிய அவர் இன்று ஒஸ்கார் விருதுவரை சென்றுள்ளார்.

அஷிம் பிரேம்ஜி

1999ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டுவரை இந்தியாவின் பணக்காரன் என்று “போர்பெஸ்ஸினால்”; தெரிவு செய்யப்பட்டிருந்தார். வைப்ரோ நிறுவனமானது உலகின் முதற்தர நிறுவனங்களின் பட்டியலில் உள்ளமை இவரது நிர்வாகத்தின் சிறப்பினை காட்டிநிற்கின்றது.

இந்திரா நூயி

தமிழ்நாடு சென்னையில் 1955ஆம் ஆண்டு பிறந்த இந்திரா கிருஸ்ணமூர்த்தி நூயி, பெப்ஸி நிறுவனத்தின் தலைவராகவும் அதன் தலைமை இயக்கனராகவும் உள்ளார் (அமெரிக்காவில்). உலக பணக்காரப்பெண்களின் பட்டியலிலும், உலக சக்திமிக்க பெண்கள் வரிசையிலுல் 4 ஆவதாகவும் இவருக்கு “போர்பெஸ்” சஞ்சிகை இடம்கொடுத்துள்ளது.

குஷல் பல் சிங்

1931ஆம் ஆண்டு பிறந்த இவர். இந்தியாவில் மிகப்பெரிய ரியல் எஸ்ரேட் நிறுவனத்தினை தொடங்கினார். தமது அனுபவங்கள், திறமைகள் மூலம் இன்று உலகின் மிகப்பெரிய ரியல் எஸ்ரேட் நிறுவனமாக அவரது டி.எல்.எவ் யூனிவேர்சல் உயர்ந்து நிற்கின்றது.

லக்ஸ்மி நாராயண் மிட்டல்

1950ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்த இவர். லண்டனில் வசித்துவருபவர். உலகின் பாரிய இரும்புருக்கு தொழிற்சாலையான சீ.இ.ஓ மற்றும் அர்ஷலோ மிட்டல் தலைவராக உள்ள இவர் தற்போது உலகின் எட்டாவது பணக்காரனாகவும், இங்கிலாந்தின் முதலாவது பணக்காரனாகவும் உள்ளார்.

லலித் மோடி

கிரிக்கட்டின் புதிய 20, 20 ஆட்டத்தின் மூலம் உலகத்தின் கண்ணில் பட்டவர் லலித்மோடி. ஐ.பி.எல். அமைப்பின் தலைவராக உள்ளார். இந்தியாவில் தற்போது இரண்டு துறைகளில் மிக முக்கியமானவராக கருதப்படுகின்றார் இவர். கிரிக்கட் மற்றும் பொலிவூட்டே அவை.

எல்.கே.அத்வானி

81 வயதாகும் இவர், இந்தியாவின் மிக முக்கியமானதும், இந்துத்துவவாத கட்சியுமான பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உள்ள இவருக்கு இன்றும் இளைஞர்களின் பேராதரவு உண்டு. அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதே தமது இலட்சியம் என்று தொடர்ந்தும் கூறிவருகின்றார். இந்தியாவின் தற்போதைய பலமிக்க தலைவர்களில் மிக முக்கியமானவர் இவர்.

டொக்ரா. மன்மோகன் சிங்

1932 ஆம் ஆண்டு பிறந்த இவர் இந்தியாவின் 14ஆவது பிரதமராக உள்ளார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான இவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர். பொருளாதாரத்தில் கலாநிதி பட்டம் பெற்ற இவர் இந்தியாவின் சிறந்த தலைவர்களில் ஒருவராக கணிக்கப்பட்டுள்ளார்.

முகேஸ் அம்பாணி

அம்பானியின் தலைமகனான மகேஸ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் தொழிற்துறை நிறுவனமான ரிலைன்ஸின் தலைவராக உள்ளார். உலகின் மிகவும் கொளரவத்திற்குரிய தொழிலதிபர்கள் நூறுபேரின் பட்டியலில் முகேஸ் அம்பானி 42ஆவது இடத்தினை பெற்றுள்ளார்.

நந்தன் எம். நிலக்கனி

இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உடன்தலைவராகப் பணிபுரிந்த மென்பொருள் தொழில்முனைவர். இந்திய அரசால் இந்திய வேறிலித்தனி அடையாளவெண் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதை யடுத்து ஜூலை 9, 2009 ஆம் ஆண்டு இன்போசிஸ் பதவியை துறந்தார்.

நாராயண மூத்தி

இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். திரு நாராயண மூர்த்தி கடந்த 2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். பணியிலிருந்து ஒய்வு பெற்றபின், தமது நேரத்தை சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.

நரேந்திர தாமோதரதாஸ் மோடி

பாரதிய ஜனதா கட்சியின் ஒரு முக்கிய அரசியல்வாதியாவார். இவர் அக்டோபர் 7, 2001 இல் இருந்து குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.குஜராத் கலவரம் இவர் ஆட்சிக்காலத்தில் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இந்தியாவின் முக்கிய தலைவர்கள் இவரும் ஒருவர்.

பிரகாஸ் கரத்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அந்த கட்சியின் பொதுச்செயலாளராகவே பிரகாஸ் கரத் உள்ளார்.

பிரணாப் முகர்ஜி.

1935ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பிறந்த இவர் இந்திய தேசிய கொங்கிரஸ் கட்சியின் முத்த உறுப்பினர்கள் ஒருவராவார். கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து சட்டப் பட்டத்தை பெற்றுள்ளார். தற்போதைய கொங்கிரஸ் அமைச்சரவையின் நிதி அமைச்சராக உள்ளார்.

ராகுல் காந்தி

நேரு வம்சத்தின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருப்பவர் ராகுல் காந்தி. நாளைய இந்தியாவின் தலைவர் என கொங்கிரஸ் தொண்டர்களின் ஆரவாரங்களுக்கிடையில் அமைதியாக வலம் வரும் ஒருவர்.

ரத்தன் ராட்ரா

ராட்ரா குழுமத்தின் தலைவர்;. இவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் தனது குடிசார் பொறியியல் படிப்பை முடித்து பின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் மேலாண்மைப் படிப்பை 1974- 1975-ல் முடித்தார். 1991ஆம் ஆண்டு டாட்டா குழுமத்தின் தலைவராகப் பதவியேற்றார். இந்தியாவின் தொழிலதிபர்களில் மிக முக்கிமான ஒருவர்.

சச்சின் ரமேஸ் தென்துல்கர்.

கிரிக்கட் என்பது ஒரு மதமாக இருக்குமானால் கண்டிப்பாக அதன் தெய்வம் சச்சினாகத்தான் இருப்பார் என இரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நபர். ஒருநாள் சர்வதேச ஆட்டங்கள், மற்றும் சர்வதேச ரெஸ்ட் ஆட்டங்களில் எவரும் நெருங்கமுடியாத இமாலய சாதனைகளை படைத்த ஒரு வீரர் சச்சின்.
விளம்பரங்பகள் மூலம் கோடிக்கணக்கான பணங்களை அள்ளுபவர் இவர்.

சாருக்ஹான்

பிரபல இந்தித் திரைப்பட நடிகர். திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார். 1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார்

சோனியா காந்தி.

இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக தற்போது இவரே உள்ளார். ராஜீவ் காந்தியின் மனைவி என்ற தகுதியுடன் அரசியலில் இறங்கிய இவர் ஒரு இத்தாலி நாட்டவர். இவரது உண்மையான பெயர் எட்விங் அன்ரொனினா அல்பினா மைனோ என்பதாகும். தற்போதைய இந்திய அரசியலின் அதி உச்ச சக்தியாக இவரே உள்ளார்.

சுனில் பார்த்தி மிட்டேல்

ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர். அதிசிறந்த நிர்வாகி. இந்தியாவின் தனியார் தொலைத்தொர்புகளின் முன்னோடியாக இவரை கூறலாம்..
மேலும் http://janavin.blogspot.com/2009/07/blog-post.html
என்ற இணைப்பை சொடுக்கி இவர் பற்றிய எனது முன்னைய பதிவை பாhர்க்கவும்.

விஜய் மல்லையா

United Breweries Group, Kingfisher Airlines, Force India, Royal Challengers Bangalore, United Racing and Bloodstock Breeders என்பவற்றின் தலைவர். ஐ.பி.எல் ரோயல் சலெஞ்சர்ஸ் என்ற அணியின் சொந்தக்காராகவும் உள்ளார். இந்தியாவின் தனியார் விமான சேவைகளில் இவரது கிங் பிஷர் விமானசேவை முதல் இடத்தை பிடித்துள்ளது.

மாதவன் நாயர்.

இந்திய விண்வெளித் திணைக்களத்தின் செயலாளர் நாயகம். சந்திராயன் விண்திட்டத்தின் முதன்மையான நபர். 1943 இல் பிறந்த இவர் கேரளத்தினை சொந்த இடமாகக்கொண்டவர்.

3 comments:

Unknown said...

நம்ம கலைஞரை விட்டுப்புட்டாங்கப்பா....

மனோன்மணி said...

சார்னியா மிர்ஷா, ரஜினிகாந்த், விஸ்வநாதன் ஆனந்த், கத்ரீனா கபூர், டாக்ரர்.அப்துல்கலாம் அகியோரை பட்டியலில் எதிர்பார்த்திருந்தேன்.

Unknown said...

நம்ம சுப்பிரமணியசாமி???? பிரபலமானவர் இல்லையா? கண்டிப்பாக இந்த தெரிவுக்குழுவுக்கு எதிராக ஒரு கேஸ் காத்திருக்கு.

LinkWithin

Related Posts with Thumbnails