Thursday, December 15, 2011

உன்னாலும் முடியும் தம்பி! - தொடர்ச்சி

ஓன்றை நிதானமாகக்கவனித்திருக்கின்றீர்களா? மழைகாலம் வரப்போகும் அறிகுறிகள் தெரிந்தவுடன் எறும்புக்கூட்டங்கள் விரைவாக தாம் வைத்திருந்த தமது உணவுக்கான பண்டங்களை தூக்கிக்கொண்டு தரையில் இருந்து மேல் இருக்கும் பகுதிகளுக்கு விரைவாக ஊர்ந்து சென்கொண்டிருக்கும்.
அதேபோல தேனீ இருக்கின்றது அல்லவா, நாளாந்தம் பல இலட்சம் பூக்கள் பூக்கின்றது தானே நாளை தேன் கிடைக்காமலா போய்விடப்போகின்றது என்று அது ஒரு போதும் அலுத்து படுத்திருந்ததில்லை. மாறாக எத்தனையோ கிலோ மீற்றர் தாரம் பறந்து சென்று தேன் உண்டுவிட்டு, நாளைகளுக்கான தேனை தனது இருப்பிடத்திற்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.
அதேபோலத்தான் வயல் வெளிகளில் வாழும் அகளான் என்ற எலி இனம், தன் வளைகளில் மூட்டைக்கணக்கான நெற்கதிர்களை சேர்த்துவைத்திருந்து விதைப்பு அற்ற காலங்கள், மழைக்காலங்களில் தான் சேமித்தவற்றை உண்டு உயிர்வாழ்கின்றது.

இந்த எறும்பு, தேனீ. அகளான் என்று மூன்றறிவு. நான்கறிவு உயிரினங்களுக்கே நாளைகளுக்கான சேமிப்பு பற்றிய அறிவு மிகச்சரியாகத்தெரிகின்றது என்றால்
எல்லாம் தெரிந்தவர்களான மனிதர்களான நாங்கள் எப்படி இருக்கவேண்டும்?

சில வங்கிகள் சேமிப்பு வாரம் என்று குறிப்பிட்ட ஒரு வாரத்தை அறிமுகப்படுத்தி சேமிப்பினை ஊக்கப்படுத்தி வருவதை கவனித்திருப்பீர்கள்.
முக்கிமாக ஒன்றை கவனித்திருப்பீர்கள் என்றால் முதலாம் உலக நாடுகளில் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வங்கியில் வைத்திருக்க நீங்கள் தான் குறிப்பிட்டளவு பணத்தை செலுத்தவேண்டிய தன்மை காணப்படுகின்றது. ஆனால் நம் போன்ற மூன்றாம் உலக நாடுகளிலேயே எமது சேமிப்புக்கு வட்டியும் தந்து, மேலதிகமாக பரிசுக்குலுக்கல்களையும் தருகின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

திட்டம் 02 – பொற்சேமிப்பு
1990 ஆம் ஆண்டு ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி என்ன என்பதையும் 21 ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்று அதே ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி எத்தனை மடங்காக உயர்ந்துள்ளது என்பதையும் நினைத்துப்பாருங்கள்.
இன்னும் ஐந்து வருடங்களில் இன்றைய விலையில் குறைந்தது ஐந்து மடங்காவது தங்கத்தின் விலை உயர்வடையும் என்பது திண்ணம்.
எனவே உங்கள் நாளை முன்னேற்றம் சேமிப்பு என்பதற்கான பொற்சேமிப்புத்திட்டத்தை சிறிதாக தொடங்குங்கள்.
மாதாந்தம் அரை கிறாம் தங்கம்வீதம் வாங்க ஒரு மஸ்தீப்பு எடுத்துக்கொள்ளுங்கள். ஒருபோதும் இது கஸ்டம் என்று எழுந்தமானமாக நினைத்துவிடாதீர்கள். முயற்சிசெய்தவர்கள் பலர் வெற்றிபெற்றுள்ளார்கள்.
மாதாந்தம் அரை கிராம் தங்கம் உங்கள் சேமிப்பு பெட்டகத்தினுள் சென்று கொண்டிருக்கட்டும். (வருமானம் குறைந்தவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு அரை கிராம் பவுண் வீதம் என வாங்கிக்கொள்ளலாம்) எப்படி வாங்குவது என்று நினைக்கவேண்டும் பிரபலமான நகைக்கடைகளில் ஒரு கிராம், அரைக்கிராம் டாலர்கள் விற்பனைக்கு வைத்திருக்கின்றார்கள்.

ஒவ்வொரு மழைத்துழிகளும்தான் பெருவெள்ளமாக மாறிவிடுவதுபோல மாதாந்த உங்கள் தங்கச்சேமிப்பு நாளடைவில் தங்கப்புதையலாகவே உங்களுக்கு காட்சிதரும்.
நாளை எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளின் திருமணவேளைகளில் இது பாரிய ஒரு உதவியாக உங்களுக்கு நிற்சயமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
சுமார் ஒரு வருடம் கஸ்டப்பட்டு சேர்த்தீர்களே அனால் அதன் பின்னர் அந்த பெட்டகம் தங்கத்தால் நிறைவேண்டும் என்று நீங்களே முண்டியடித்து ஒவ்வொருமாதமும் ஒரு கடமையாக ஒவ்வொரு அரை கிராமையும் போட தொடங்கிவிடுவீர்கள். குறிப்பிட்டளவு டாலர்கள் சேர்ந்தவுடன், சிறப்பான வங்கி ஒன்றின் சிறு லொக்கரை வாடகைக்கு பெற்று பாதுகாப்பு நிமித்தம் மாதாந்தம் அதற்குள் உங்கள் டாலர்களை போட்டுவரலாம்.
புதையல் தங்ககாசுகள் என்றெல்லாம் கற்பனை கதைகளில் வரலாம், அனால் இங்கே உங்களுக்கான புதையலை நீங்களே தேடிக்கொள்ளுங்கள்.

திட்டம் 03 – காப்புறுதி
எங்கள் சேமிப்பு, மேம்பாடு, முயற்சிகள் எல்லாமே நாளைய என்ற ஒன்றுக்காகவே, அனால் துரதிஸ்டவசமாக நாளை என்ற ஒன்று எமது கைகளில் இல்லை.
ஆனால் எம்மில் பெரும்பாலானோருக்கு காப்புறுதி என்றவுடன், இறந்தவுடன் காசு என்ற எண்ணமே எற்படும் அதில் தவறும் பெரிய அளவில் இல்லை. ஆனால் மறு பக்கத்தில் பார்க்கப்போனால் காப்புறுதியே ஒருவரின் நின்மதியான அதேநேரம், பாதுகாப்பான முதலீடாகவும் இருக்கின்றது.
ஏன் என்றால் குறிப்பிட்ட ஒரு தொகைக்காக குறிப்பிட்ட காலத்திற்கு நாம் எமக்கான ஆயுள் காப்புறுதி ஒன்றை பெற விளைகின்றோம், ஒப்பந்தகாலம் முடிந்தால் அதன் முதிர்வையும் கட்டிய பணத்திற்கான போஸையும் பெறுகின்றோம் அனால் திடீர் என்று எமக்கு ஒன்று நேர்ந்தால் எம் குடும்பத்தாரின் கதி! என்ற அச்சத்திற்கு ஆறுதலான முதலீடே காப்புறுதி.

ஆனால் இன்று காப்புறுதியில் பல புதிய புதிய திட்டங்கள் ஒவ்வொருவருக்கும் எற்றவாறாக வந்துள்ளமை சிறப்பான ஒரு அம்சமாகும்.
அத்துடன் முக்கியமான ஒருவிடயம் காப்புறுதிக்கு அரசாங்கத்தில் வரி விலக்கு இருப்பதை மறந்துவிடக்கூடாது.
இதேவேளை சாதாரணமாக நாம் வைத்தருக்கும் வாகனத்திற்கே காப்புறுதி என்பது மிக முக்கிமானதாக்கப்பட்டிருக்கின்றது, ஆனால் அதை ஓட்டும் நாங்கள் எங்களுக்கு ஒரு காப்புறுதியை பெற்றுள்ளோமா என்று நினைக்கவேண்டும்.

தோழில் செய்யும் ஒருவரும் குறைந்தது ஒரு மில்லியன் கவர் தரும் காப்புறுதியை பெற்றிருக்கவேண்டியுள்ளது இன்றைய காலத்தில்.
காப்புறுதியை பெறும்போது முக்கிமாக செய்யவேண்டிய ஒன்று காப்புறுதிப்பணம் கட்டப்படாமல் அது செயலிழக்க செய்வதை தவிர்க்க, எம் சம்பளத்தில் இருந்து தானாக அந்த கட்டுப்பணம் செத்தும் முறையினையோ, அல்லது வங்கி நிலையியல் கூற்றின் படியோ காப்புறுதிப்பணம் செலுத்துவதே ஆகும்.
இதன் மூலம் தேவையில்லாத அசௌகரியங்களை முழுமையாகத் தவிர்த்துக்கொள்ளமுடியும்.


திட்டம் 04 – கடன்களை தவிர்த்தல்.
'கடன் கொடுப்பதும் தப்பு, கடன் வாங்குவதும் தப்பு' என்று கேள்விப்பட்டிருக்கின்றோம் அல்லவா. ஆனால் ஒருவகையில் இதுவே சிறப்பான ஒரு தத்துவமாகவும் இருக்கின்றது. இராமாணயத்திலே கூட போரிலே தோற்ற இராவணனின் நிலையினை பாட எத்தனித்த கம்பர், 'கடன் பட்டார் நெஞ்சம்போல கலங்கி நின்றான் இலங்கை வேந்தன்' என்று குறிப்பிட்டுள்ளதை நினைத்துப்பாருங்கள். கடன் என்பது ஒரு திடீர் நிவாரணியாகத்தெரியலாம் ஆனால் அதுவே பாரிய சுமையாகவும், முன்னேற்றத்தடையாகவும் இருந்துவிடுகின்றது.
அதனால் கூடுமானவரையில் கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்த்துக்கொள்ளவேண்டும். கட்டாய சேமிப்பு பழக்கம் உங்களுக்கு இருந்தால் யாரிடமும் கடன் பெறவேண்டிய தேவை உங்களுக்க இல்லை என்பதுடன் யாருக்கும் கடன் கொடுக்கவும் முடியாது என்பதவே உண்மை.

சரி....... இந்த நான்கு திட்டத்தையும் கடைப்பிடித்துப்பாருங்கள், சகல வெற்றிகளும் அடுத்தடுத்து உங்கள் கைகளை வந்தடைவது சத்தியம் என்று சொல்கின்றேன். இந்த திட்டங்களை இதை படித்த யாரோ ஒருவராவது கடைப்பிடித்து வாழ்வில் வெற்றிபெற்றால் முதலில் சந்தோசப்படுவது நானாகத்தான் இருப்பேன்.
முற்கூட்டிய வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

3 comments:

சுதா SJ said...

அருமையான பயன் உள்ள பதிவு பாஸ்.... உண்மைதான் எலி தேனீ எல்லாம் சேமிப்பின் மதிப்பை உணரும் போது நாம் உணராவிடால் எப்படி...!!! புத்திமதி சொல்லும் பதிவாக இருந்தபோதும் ரசிக்கும் படி ரசனையாக கொண்டு போறீங்க பாஸ். தேங்க்ஸ்

Vani said...

Nice Post

அம்பலத்தார் said...

இன்றைய உலகில் தங்களது வாழ்வின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படை விசயங்களை சுவாரசியம் குன்றாமல் கூறியிருக்கிறீர்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails