ரஜினிக்கு நடந்தது என்ன?

தமிழர்கள் மத்தியில் ரஜினியின் தாக்கம், அவரது செல்வாக்கு என்பன உச்சத்தில் என்றும் இருப்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதே உண்மை.
ஆரம்பத்தில் ரஜினி பற்றிய செய்திகளை வதந்திகள் என்றே மக்கள் கருதினார்கள், பின்னர் வந்த செய்திகள்தான், அவரது இரசிகர்களை கவலை கொள்ளச்செய்தது.
எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்கும் ரஜினி இறுதியாக “எந்திரன்” மூலம் விஸ்வரூபம் எடுத்திருந்தார். அகில இந்தியா ரீதியில் என்றில்லாமல் உலக ரீதியில் ரஜினியின் மீது பல கண்ணகள் பட்டன.
இந்த வேளையில் அடுத்த “ராணா” திரைப்படத்திலும் உற்சாகமாக நடித்துக்கொண்டிருந்த ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு என்பது உண்மையில் பேரதிர்ச்சியான ஒன்றுதான்.
பிரபலங்களின் பிரார்த்தனைகள், அரசியல்வாதிகளின் நலம்பெறவாழ்த்துக்கள் என்பன ரஜினியின் உடல் நலக்குறைவை பெரிய அளவுக்கு சந்தேகம் கொள்ள வைக்கின்றது. எனினும் அவர் நலமாக இருக்கின்றார் என்று தொடர்ந்து வரும் செய்திகளும், இறுதியாக வெளியான புகைப்படங்களும் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கின்றன.
பலருக்கு ஒரு உதாரணபுருஸராக, உயர்ந்த இடத்தில் இருந்தும் தாழ்வுக்கு உதாரணமாக இருக்கும் உத்தமான அந்த மனிதர் இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டும் என்பதே அனைவரது அபிலாசைகளும்.
கண்டிப்பாக நம்ம சூப்பர் ஸ்ரார் விரைவில் மீண்டும் பட்டையை கிளப்புவார்.
யாழ்ப்பாண இந்து மக்களை திகிலடையச்செய்துள்ள சுவாமி சிலைத் திருட்டுக்கள்.

ஒரு நாளுக்கு குறைந்தது இரண்டு கோவில்களில் சுவாமி சிலைகள் களவாடப்பட்டிருக்கும்.
அண்மையில் திகிலூட்டும் இந்த புதுமுறைத்திருட்டுக்களால் இப்போது கோவில் தர்மகத்தாக்கள் உசாரடைந்து காவலாளிகளை நியமித்து வருவதாக அறியமுடிகின்றது.
இருந்தபோதிலும், சுவாமி சிலைகளை குறிவைத்து களவுகளை தொடரும் ஒரு கூட்டத்தின் நோக்கம் என்ன? இந்த சிலைகளால் அவர்களுக்கு உண்டாகும் இலாபம் என்ன என்பது பெரும் மர்மமாகவே உள்ளது.
கடந்த 3 மாதங்களாக இந்த தொடர் திருட்டு நடவடிக்கைகள் இடம்பெற்றுவந்தாலும்கூட, யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்து மா சபைகள், இந்து ஒன்றியங்கள், சன்னிதானங்கள், அதிகாரமுள்ளவர்கள் இந்த விடையத்தில் வாயடைத்தப்போய் உள்ளமையும் பெரும் அச்சரியமாகவே உள்ளது.
புத்தர் சிலைகள் வருகுது என்று கத்துபவர்கள், ஊர்களில் இருக்கும் பிள்ளையார் சிலைகள் களவாடப்படுவதை பற்றி கதைக்கின்றார்கள் இல்லை.
எது எப்படியோ இந்த திருட்டுக்கள் பற்றி மக்கள் மத்தியில் பலத்த ஊகங்கள் நிலவுகின்றன. அதேவேளை எவரும் எந்த நடவடிக்கையினையும் எடுக்கப்போவதில்லை என்பதையும் புரிந்துகொண்ட மக்களும், தர்மகத்தா சபைகளும், தங்கள் தங்கள் கோவில்களின் பாதுகாப்பினை தாங்களே கவனிக்க ஆரம்பித்துள்ளமை நல்ல விடையம்தான்.
கொஞ்சம் அலேட்டாக இல்லை என்றால், பிள்ளையாரை மட்டும் இல்லை நம்மையும் தூக்கிட்டு போயிடுவாங்க!!
இன்றைய காட்சி..
இந்த வார வாசிப்பு
அதிகாலையின் அமைதியில்.. சப்பா..ஒரு யுத்தகளத்தின் அருகில் இருந்து உன்னிப்பாக அந்த குறிப்பிட்ட குழுவுடனேயே இருந்து அவர்களின் வெற்றிகளில் மகிழ்ச்சி கொண்டும், ஒவ்வொருவரின் மரணங்களிலும், துடித்தும், இறுதிவரை நெஞ்சம் பதைபதைக்க அவர்களின் வெற்றிக்காக பிரார்த்தித்துக்கொண்டே படிக்கத்தூண்டும் ஒரு அற்புதமான படைப்பு இந்த அதிகாலையின் அமைதியில்.
அட..இந்த அற்புதமான படைப்பினை இத்தனை நாள் எட்டாமல் இருந்தேனே என்று மனது ஏங்குகின்றது.
கண்டிப்பாக முழுமையாக இதுபற்றி ஒரு நீண்ட பதிவு போட்டே ஆகவேண்டும்.
ப்ரீஸ்வஷிலீயின் எழுத்துக்கள் பிரமிக்கவைக்கின்றது.
ரஷ்ய – ஜெர்மன் எல்லைகளில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக்கொண்ட கதை இது. ரஷ்ய எல்லைகளுடாக ஊடுருவி கேடுவிளைவிக்க எத்தனிக்கும் ஜெர்மன் படைகளுடன் மோதும் ஒரு பிரிவு ரஷ்ய படையினரின் கதைதான் இது. பெண்கள் குழுவையும் படையில் கொண்ட ரஷ்ய படைத்தலைவன் வஸ்கோவ் இறுதிவரை நெஞ்சில் நிற்கின்றான்.
வாசிப்பில் பிரமிப்பை தேடுபவர்கள் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய ஒரு புத்தகம்.
(வாசிக்கும்போது கொஞ்சம் நம்ம பேராண்மை படமும் நினைவுக்கு வந்து போகுது)
மியூசிக் கபே
இன்றைய புகைப்படம்.

ஜோக் பொக்ஸ்..
இந்த பகுதிக்கு என் இனிய நண்பர் ஒருவரின் அனுபவத்தையே தருகின்றேன்.
கொழும்பில் ஒரு இடத்தில் 90களின் ஆரம்பங்களில் நண்பர்கள் ஒரு வீடொன்றை எடுத்து தங்கிருந்திருக்கின்றார்கள். அந்த வேளையில் இரவு வேளைகளில் யாரும் அறைகளில் படுத்துறங்குவதில்லையாம். எல்லோரும் ஹோலிலேயே பாயை போட்டுவிட்டு உறங்கிவிடுவது வழக்கமாமாம்.
ஒரு நாள் இரவு எல்லோரும் படுத்திருக்கவே நண்பர் அங்கிருந்த சோபா ஒன்றில் படுத்திருக்கையில், நள்ளிரவு தாண்டிய நேரம் தன் முகத்தின் முன்னால் ஒரு வெளிச்சம் வருவதுபோல உர்ந்து கண்ணை லேசாக வழித்து பார்த்திரக்கின்றார்,
எதிரே இருந்த அறையில் இருந்து அவரது கண்ணுக்கு நேரே ஒளி ஒன்று தென்பட்டிருக்கின்றது உண்மையிலேயே பயந்துபோய்விட்ட அவர், மெதுவாக எழ முயன்றிருக்கின்றார், ஆனால் அவர் எழும் நேரம் திடீர் என்று அந்த ஒளி மறைந்திருக்கின்றது. மிகவும் பயந்துபோன அவர், மற்றவர்களை எழுப்ப முயற்சித்து பின்னர், சரி படுப்போம் என்று படுத்திருக்கின்றார், அந்தநேரம் மீண்டும் அதே ஒளி தென்பட்டிருக்கின்றது. திடீர் என்று எழுந்திருக்கின்றார், ஒழி மறைந்துவிட்டிருக்கின்றது.
இப்படியே தொடர்ந்து பல தடவைகள் நடக்கவே.
நண்பர்களை அழைத்திருக்கின்றார், யாருமே எழுவதாக இல்லை, அருகில் ஒரு கட்டை ஒன்றையும் எடுத்துக்கொண்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த அறைக்குள் சென்று பார்த்திருக்கின்றார் நண்பர்.
உண்மையில் யாரோ ஒரு வல்லை படுக்கமுன்னர் அயன் பண்ணிவிட்டு, அயன் பொக்ஸை ஆவ் பண்ணாமல் போய் படுத்திருக்கின்றது. அந்த ஸ்திரி பெட்டியின் வெளிச்சமே அது என்று தெரிந்து அசடு வழிந்திருக்கின்றார் அவர்.