Thursday, July 16, 2009

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர் விமான விபத்துக்கள்.


ஒன்றரை மாத கால இடைவெளிக்குள் மூன்று பயணிகள் விமானங்கள் தமது பயணங்களின் இடைநடுவில் விபத்துக்குள்ளாகி விழுந்தமையினால் இன்று உலகம் பாரிய அச்சமும் அதிர்ச்சியும்; கொண்டுள்ளது.
ஏராளாமான காரணங்கணை ஒருபக்கம் அடுக்கிக்கொண்டிருக்கின்றார்கள் தொழிநுட்பவியலாளர்கள.; இருந்தபோதிலும் உண்மையான காரணங்கள் என்ன என்ற உண்மை உலகின் கவனத்திற்கு இதுவரை கொண்டுவரப்படவில்லை.
“அது என்ன சொல்லி வைத்ததுபோல இந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் இந்த தொடர் விபத்துக்கள்”? அதுவும் பயணிகள் விமான விபத்துக்கள்?
பல கேள்விகளை தம் மனதால் கேட்டுக்கொண்டிருக்கின்றனர் உலகமக்கள்!

வானிலையில் ஏதும் அசாதாரணமான மாற்றங்களா? காற்றோட்டத்தின் சுற்றில் ஏதாவது புதிய அழுத்தங்களா? அல்லது சதி முயற்சிகளா? பயங்கரவாத செயல்களா? அல்லது கடவுளின் சாபமா? என பல்வேறு கோணங்களில் மக்கள் யோசிக்க அரம்பித்துவிட்டார்கள்.
உலக ஊடகங்களும் தம்பாட்டிற்கு பல்வேறு கோணங்களில் தமது கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டிருக்கின்றன. இத்தகய கேள்விகள், விமான சேவை நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட நாடுகள், வானோடிப்பாதை கட்டுப்பாட்டாளர்கள், பயணிகள் விமான தயாரிப்பாளர்கள் என அனைத்து தரப்பினரையும் தற்போது குறிவைக்கத் தொடங்கிவிட்டது.


கடந்த ஜூன் 1 ஆம் திகதியன்று ஏர் ஃபிரான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ 330 ரக “எயார் பஸ்” ரக விமானம் ஒன்று, 216 பயணிகள் மற்றும் 12 விமான சிப்பந்திகளுடன், ரியோ டி ஜெனிரோவிலிருந்து பாரீஸ் நோக்கி புறப்பட்டு சென்றது.
இந்நிலையில், அந்த விமானம் அட்லாண்டிக் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
228 பேரை பலிகொண்ட ஏர் பிரான்ஸ் விமானம் , வானில் எவ்வித சேதமும் இல்லாமல் முழுமையாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்திய பிரான்ஸ் விசாரணைக் குழு , விபத்துக்குள்ளான விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது நொருங்கி விழவில்லை என்றும், விபத்துக்கு வேறு ஏதோ காரணம் இருக்கலாம் என்று தெரியவந்துள்ளதாக கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த கூற்றை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானம் , வானில் எவ்வித சேதமும் இல்லாமல் முழுமையாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், அதன் அடிப்பாகம்தான் முதலில் கடலை தாக்கியுள்ளதாகவும் , இதன் காரணமாகத்தான் அதில் பயணம் செய்தவர்கள் ” லைஃப் ஜாக்கெட் ” கூட அணிய அவகாசமில்லாமல் நீரில் மூழ்கி உயிரிழக்க நேரிட்டதாக விசாரணைக் குழுவில் இடம்பெற்ற பொல்லியர்ட் என்ற அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதே சமயம் விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவரவில்லை


விபத்தில் சிக்கிய விமானத்திலிருந்து கடைசியாக வந்த தானியங்கி செய்தியில், விமானம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாகப் போனதாகவும் தகவல் உள்ளது.
இந்த விமான விபத்து நடக்கும் பொழுது பயணி ஒருவரின் புகைப்பட கருவியில் பதிவான இரண்டு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


இவரின் புகைப்பட கருவி முற்றிலும் சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது இருப்பினும் , memory chip இல் இருந்து இந்த புகைப்படம் கண்டெடுக்கப்பட்டது

இது முடிந்து சரியாக ஒர மாதத்தில் அதாவது ஜூலை 01ஆம் திகதியன்று ஏமன் நாட்டில் இருந்து காமராஸ் நாட்டுக்கு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. இந்த விமானத்தில் 142 பயணிகள் மற்றும் 11 ஊழியர்கள் இருந்தனர். காமராஸ் தலைநகரம் மொரானி விமான நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் விமானம் கடலில் விழுந்தது கண்டு பிடிக்கப்பட்டது.


இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்த ஏமன் விமானத்தின் கருப்பு பெட்டி இருக்கும் இடமும் கண்டுபிடிக்கப்பட்டது.
142 பயணிகள் மற்றும் 11 விமான சிப்பந்திகளுடன் பாரீசில் இருந்து புறப்பட்ட ஏமனியா நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம், ஏமன் நாட்டில் தரையிறங்கியது.
பின்னர் மீண்டும் மொரோனிக்கு புறப்பட்ட விமானம் இந்தியப் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோது, அதிகாலைவேளை விபத்துக்குள்ளானது.

விமான விபத்துக்கு வானிலை மோசமாக இருந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விமானம் முதலில் தரை இறங்க முயற்சித்த போது வானிலை மோசமாக இருந்ததால் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே விமானம் தரை இறங்காமல் வானில் சுற்றி விட்டு மீண்டும் தரை இறங்க முயற்சித்தபோதே விமானம் கடலில் விழுந்ததாகக்கூறப்படுகின்றது. எனவே வானிலை கோளாறு தான் விபத்துக்கு காரணம் என்று காமராஸ் விமான நிலைய அதிகாரிகள் கூறினார்கள்.


இது இவ்வாறிருக்க இந்த விமானத்தில் பயணித்த சிறுமி ஒருத்தி உயிருடன்மீட்கப்பட்டுள்ளாள், இது குறித்து தெரியவருவதாவது,
விமானம் கடலில் விழுந்தவுடன், இந்தப்பிரதேசங்களில் மீட்பு பணியாளர்கள் உடனடியாக மீட்புப்பணிக்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அங்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் மிதந்து கொண்டிருந்தன. சில உடல்களும் மிதந்தன. யாரும் உயிருடன் இருக்கிறார்களா? என்று தேடி பார்த்தனர். அப்போது ஒரு சிறுமி மட்டும் தண்ணீருக்குள் நீந்தியபடி இருந்தார். மீட்பு குழுவினர் அருகில் சென்று மிதவையை அவரிடம் போட்டனர். ஆனால் அதில் ஏறி மிதந்து வர சிறுமிக்கு தெரியவில்லை. எனவே நீச்சல் வீரர் ஒருவர் கடலில் குதித்து அந்த சிறுமியை மீட்பு படகுக்கு கொண்டு வந்தார்.
அவளுக்கு 14 வயது இருக்கும். மிகவும் அதிர்ச்சியாக இருந்தாள். எனவே அவளது பெயரை மட்டும் கேட்ட மீட்பு குழுவினர் அவளிடம் வேறு எதுபற்றியும் விசாரிக்கவில்லை. உடனடியாக கரைக்கு கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவள் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று டாக்டர்கள் கூறினார்கள்.
அந்த சிறுமி விபத்து நடந்து 1 மணி நேரத்துக்கு மேலாக கடலில் நீந்தியபடி இருந்துள்ளாள். அப்போது அதிகாலை 4 மணி இருட்டாக இருந்தது. ஆனாலும் அவள் அவ்வளவு நேரம் நீந்தி உயிர் தப்பியது அதிசயமாக உள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் மிகவும் பழமையானது. எனவே பராமரிப்பு சரி இல்லாமல் விபத்து நடந்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஜூன் 01ஆம் திகதி, ஜூலை 01ஆம் திகதி, ஆகிய விபத்துக்களை அடுத்து நேற்று ஜூலை 15ஆம் திகதி 168 பேருடன் சென்ற ஈரான் பயணிகள் விமானம் ஒன்று நொருங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் , அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகியுள்ளனர்.
ஈரான் நாட்டின் கஸ்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று , தெஹ்ரானிலிருந்து ஆர்மேனியன் தலைநகர் ஏரேவேன் நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது.
153 பயணிகள் மற்றும் 15 விமான சிப்பந்திகளுடன் சென்ற அந்த விமானம் ஈரானின் வடமேற்கு பகுதியிலுள்ள கஸ்வின் என்ற நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது , திடீரென நொருங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

அந்த விமானம் முற்றிலும் நொருங்கி தீப்பிழம்புடன் கீழே விழுந்ததாகவும் , இதனால் அந்த விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கஸ்வின் அவசரகால சேவை துறை இயக்குனர் ஹோசீன் என்பவர் தெரிவித்தார்.
விமானம் விபத்துக்குள்ளான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில் , விமானம் நொறுங்கி விழுந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் தொர்டர்ந்தும் தமது பணிகளில் இடுபட்டுள்ளனர்.

1992 களில் தயாரிக்கப்பட்ட (அறிமுகப்படுத்தப்பட்ட) எயார் பஸ் ஏ 330ரக விமானங்கள், விபத்துக்கள் அதிகம் சம்பவிக்கும் சாத்தியங்கள் பல இருப்பதனால் இவை பயணிகள் சேவைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படவேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்த நிலையிலேயே கடந்த ஜூன் மாதம் முதல் நாள் ஏர் பிரான்ஸ்ஸின் இதேரக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.
இதேபோல ஜூலை 01ஆம் திகதி இந்துசமுத்திரத்தில் விழுந்த ஏமன் நாட்டு விமானம், ஏயார்பஸ் 310 ரக ஐ.வை.626 ரகத்தைச்சேர்ந்ததாகும். இந்த விமானங்களும் எயார் பஸ் நிறுவனத்தால் 1982ஆம் அண்டுமுதல் தயாரிக்கப்பட்டுவருகின்றது. எயார் இந்தியா, பெட்டக்ஸ் எயார், பாகிஸ்தான் இன்டர் நஷனல் போன்ற விமான சேவைகள் இத்தகய விமானங்களையே பெரிதும் பயன்படுத்துகின்றன.
இதேபோல நேற்று ஈரானில் விபத்துக்குள்ளான கஸ்பியன் எயார் லைன்ஸ்ஸின் விமானம் 1987 ஆம் அண்டு ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட விமானமாகும்.
இத்தகய விமானங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டுவருவதாகவும் கூறப்படுகின்றது.

இவற்றை நாம் ஆராய்ந்து பார்ப்போமானால் விபத்துக்கு உள்ளான மூன்று விமானங்களும் பெரும்பாலும் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட விமானங்களாகவே இருக்கின்றன. இதன் மூலமும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்புக்கள் உள்ளன. தொழிநுட்பம் எவ்வளவோ முன்னேறியிருக்கும் இன்றைய நாட்களில் 20 வருங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட விமானங்களை வைத்திருக்க இனியும் அனுமதிகக்கூடாது. குறிப்பாக பயணிகள் விமான சேவையில் ஈடுபட்டிருக்கும் விமானசேவை நிறுவனங்கள் ஆகக்குறைந்தது 10 வருடங்களுக்குள் தயாரிக்கப்பட்ட விமானங்களையே பயன்படுத்தவேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்படவேண்டும். விமான சேவைகள் மூலம் கொழுத்த லாபம் அடையப்பார்க்கும் விமானநிறுவனங்களின் தான் தோன்றித்தனமான செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படவேண்டும்.
இதேபோல வெளிநாட்டு சேவைகளில் மட்டும் இன்றி உள்நாட்டு சேவைகளில் ஈடுபடும் விமான சேவைகள் தொடர்பிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். விபத்துக்கள் தற்செயலானதுதான் என்றாலும் கூட அதி சிரத்தை எடுக்கவேண்டிய கடப்பாடுகளுக்கு விமானசேவையினை நடத்தும் நிறுவனங்கள் உட்படவேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலமே இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான விமான விபத்துக்களை தடுக்கமுடியும் என்றதுடன், நின்மதியான பயணங்களையும் மேற்கொள்ளவும்முடியும்.

6 comments:

Anonymous said...

நானும் பிரான்ஸ்ஸில் இருந்து சிங்கப்பூர்போகவேண்டும்!!!!!!

Unknown said...

ம்ம்ம்ம்....சரிதான்...கொள்ளை இலாபம் உழைக்கப்பார்க்கும் விமான கம்பனிகள், தங்கள் விமானங்களின் தரங்களை மேம்படுத்தவேண்டியதும் அவசியம்தான்...

thokuppu said...

சமகால நிகழ்வுகளை உடனுக்குடன் கண்முன்னே கொண்டுவந்துவிடுகின்றீர்களே...சபாஷ்....

Pradeep said...

I have big doubt about JAFFNA –COLOMBO Air Service planes Conditions……

Anonymous said...

Ennappaa Aazh aazhukku Purliya Kilappureenka???

Unknown said...

விமான விபத்து எவ்வளவு கொடியது என்று எனக்கு தெரியும் நான் அதை அனுபவித்தும் இருக்கின்றேன். 1997அம் ஆண்டு யாழ்ப்பாணம் - கொழும்பு சேவையில் ஈடுபட்டிருந்த லயன்எயார் விமானம் விபத்துக்குள்ளானதில் நான் எனது தமக்கையாரை இழந்தவன்.

LinkWithin

Related Posts with Thumbnails