Thursday, June 11, 2009

ஓராயிரம் யானை கொன்றால் பரணி!!

மாபெரும் யுத்தம் ஒன்று இடம்பெற்றதன் பின்னர், அதாவது கிட்டத்தட்ட ஒரு ஊழிக்கூத்தே அடங்கிய பின்னர், அந்த போரிலே வெற்றிபெற்ற தலைவனை வாழ்த்திப்பாடும் ஒரு பாடல் வடிவமே பரணி என தமிழ் இலக்கியத்தால் சிறப்பிக்கப்படுகின்றது.அந்தக் மாபெரும் யுத்தத்தில் பல சேனைகளை அழித்து, எதிரிகளின் பிணக்குவியல்களின் மீது, அவர்களின் பெரும்படையான யானைப்படையில் ஓராயிரம் யானைகளை கொன்ற தலைவன்மீதே இந்த பரணி பாடப்படுவதாக பல இலக்கியங்கள் வகை செய்துள்ளன.
குறிப்பிட்ட ஒரு யுத்தம் முடிந்ததன் பின்னர், அடுத்துவரும் பரணி நட்சித்திரத்தில் யுத்தம் இடம்பெற்ற இடத்தில் கூடும் பேய்களும், இராட்சத ஜந்துக்களும், போரில் இறந்துபோன உடல்கள், இரத்தங்கள் என்பவற்றை அளவில் பெரிய ஒரு பானையில் இட்டு, இரத்தத்தை தண்ணீராய் விட்டு, போர்த் தெய்வமான காளிக்கு இவற்றையே கூழாக காய்ச்சிப்படைத்து, வெற்றிபெற்ற தலைவன், மன்னன், ஆகியோரின் வீரப்பிரதாபங்களை சொல்லி தாமும் உண்டு மகிழ்வதாகவே இந்த பரணி உள்ளது.
இந்தப்பரணி என்பது தமிழில் உள்ள தொன்னூற்று ஆறு பிரபந்த வகைகளில் ஒன்றாகும். பொதுவாக பரணிப்பாடல்கள்கடவுள்
வாழ்த்து
கடை திறப்பு
காடு பாடியது
கோயில் பாடியது
தேவியைப் பாடியது
பேய்ப்பாடியது
இந்திரசாலம்
இராச பாரம்பரியம்
பேய் முறைப்பாடு
அவதாரம்
காளிக்குக் கூளி கூறியது
போர் பாடியது
களம் பாடியது
கூழ் அடுதல்ஆகிய பகுதிகளைக்கொண்டிருக்கும். பெரும்பாலும் போரிற் தோற்ற அரசன் நாட்டில் போர்க்களம் அமைத்துப் போர் செய்து, வெற்றி பெறுவதால் தோற்ற நாட்டுப் பெயரால் நூலை வழங்குவது மரபு.
செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது கலிங்கத்துப்பரணி. அனந்தவர்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112 ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே இந்த பரணியின் பொருள். பரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரை வைத்து, இந்த நூல் கலிங்கத்துப் பரணி என அழைக்கப்படுவதாயிற்று.
தமிழில் முதன் முதலில் எழுந்த பரணி கலிங்கத்துப் பரணியே ஆகும். இது தாழிசையாற் பாடப்பெற்றது. 599 தாழிசைகளை உடையது. கடவுள் வாழ்த்தில் உமபதி துதி என்று ஆரம்பிக்கும் இந்த
1.புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன்தொழில்காட்டப் புவன வாழ்க்கைச்செயல்வண்ண நிலைநிறுத்த மலைமகளைப்புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம்.
ஏனத் தொடங்கும் பரணி கூழ் அவிழ்தல் எனும் பகுதியில் உள்ள பேய்கள் கழிப்பு மிகுதியால் கூத்தாடல், என்ற பகுதியில் வரும்,
வேத நன்னெறி பரக்க வேஅ பயன் வென்ற வெங்கலிக ரக்கவேபூத லம்புகழ்ப ரக்க வேபுவி நிலைக்க வேபுயல்சு ரக்கவே.
எனும் படாலுடன் முற்றுப்பெறுகின்றது.
அதேபோல தமிழில் உள்ள பரணிப்பாடல்களில் மற்றும் ஒரு பரணியாக அமைந்தது தக்கயாகப்பரணி ஆகும். தக்கயாகப் பரணி ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பட்டது. இந்நூல் தமிழ் நாட்டில் சோழர் ஆட்சி நிலவிய 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த நூலின் வழியாக அக்காலச் சைவம் பற்றிய பல தகவல்களை அறிய முடிகிறது. சிவபெருமானுக்காகப் பாடப்பட்ட இந்நூலில், பிள்ளையார் பெயரில் காப்புச் செய்யுள் பாடும் மரபுக்கு மாறாக வைரவர் பெயரில் காப்புச் செய்யுள் உள்ளது.
சரி…தமிழ் புலவர்கள், மறத்தமிழர்கள் பலர், மதங்கொண்ட யானையினை அடக்குவதும், அதை வதம் செய்வதும் பெரும் வீரத்தின் எடுத்துக்காட்டாகவே கொண்டுள்ளனர். தமிழ் இலக்கியங்களில் யானையினை அடக்கிய வீரர்கள், விராங்கனைகள் பற்றியும், அதன் உச்சமாக பேரில் ஆயிரம் யானைகளை கொண்றவன் என்ற சிறப்புடன் பரணியும் உருவாகியது எனலாம்.

தமிழ் இலங்கியம் யானையை அடக்கிய அரியாத்தையினை கண்டுள்ளது, அயிரம் யானைகளைக்கொன்றவன்மேல் பாடப்படும் பரணியினை கண்டுள்ளது, தமிழனின் குணமே காதலும், விரமும் கலந்த வாழ்வுக்குணமே என சங்கத்துப்புலவர்கள் அடிததுக்கூறியுள்ளனர்.
இந்த வகையில் கீழ்வரும் பாடல்களை கவனித்துப்பாருங்கள்.
ஈன்று புறந்தருதல் தாயின்;கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!
இந்தப் பாடலில் தாய் பெற்றெடுக்கிறாள். தந்தை அவனை சான்றோன் ஆக்குகிறான். சான்றோன் ஆன அம்மகனுக்கு... என்ன கடன் என்று பொன்முடியார் உரைத்திருக்கிறார்? அறிஞர்கள் அவையில் அறிஞன் என்று பெயர் வாங்க வேண்டும் என்றா? இல்லையே... அந்தத் தாய் பெற்ற பிள்ளையைத்தான் காளை என்று குறிப்பிடுகிறார். அந்தக் காளையின் கடமை ஒளிர்கின்ற வாளைப் பயன்படுத்தி, அரிய போரை நடத்தி அதில் யானையை வீழ்த்தி மீண்டு வருதல் என்பதுதானே சொல்லப்பட்டுள்ளது.
அடுத்த புறனாநூற்றுப் பாடல்: சோழனுக்கும் நிகழ்ந்த போர் பற்றி அவைக்களத்தில் பரணர் பாடுகிறார்:
..... யானையு மம்பொடு துலங்கி விலைக்கும் வினையின்றி படையொழிந்தனவே. விறல்புகல் மாண்ட புரவியெல்லாம் மறத்தகை மைந்தரோடு மாண்டு பட்டனவே. தேர்தர வந்த சான்றோரெல்லாம் தோள் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே.
பொருள்: யனைகள் அம்புகளினால் வீழ்த்தப்பட்டு மாண்டு ஒழிந்தன. குதிரைப் படை குதிரைகளெல்லாம் அதில் இருந்த வீரருடன் மாண்டன. தேரில் வந்து போரிட்ட சான்றோர்கள் மொத்தமாக மாய்ந்தனர் என்பதாகும்.
ஆண்டாள் அருளிய “நாச்சியார் திருமொழியில்” இச்சொல்லை பயன்படுத்தியிருக்கிறார். திருமால் தன்னை திருமணம் செய்வது போல் தான் கண்ட கனவை கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்துநாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்”திருமால் ஆயிரம் யானைகள் புடைசூழ வருகிறார், அக்காட்சியைக் கண்ட மக்கள் யாவரும் பொன்குடங்களை வைத்து, தம் சுற்றுப்புறங்களில் தோரணங்கள் கட்டி வரவேற்பதை தன் கனவில் கண்டதாக தோழியிடம் கூறுவதாகக் கூறப்படுகிறது.
ஆக…பரணியில் மட்டும் இன்றி தமிழ் இலங்கியங்கள் பலவற்றிலும் யானையினை அடக்கவது, யானையினை நேரில் நின்று கொல்வது, இவையே தமிழில் ஆண்மை, வீரம் என போற்றப்படுகின்றது. தமிழ் மறவன்கள் மட்டுமின்றி தமிழ் வீரம் நிறைந்த பெண்ணான அரியாத்தை எனும் வீர மறப்பெண் ஒருவருள் யானையினை அடக்கியுள்ளதாக பதிவுகள் உண்டு.
ஆக…தமிழனின் வீரமும், ஆண்மையும் நேற்று வந்ததல்ல, அது தமிழ் எனும் மொழி தோன்றியபோதே அவனுடன் கலந்து வந்துவிட்டது. தன் பலம் அறியா அனுமன்பொல அவன் இன்று சில தேச எல்லைகளாலும், சில சதிகளாலும், தந்திரங்களாலும் கட்டுப்பட்டிருக்கின்றான். என்றோ ஒருநாள் கங்கை, யவனம், கடாரம் வென்ற சோழன் மீண்டும் வருவது உறுதி.

4 comments:

கலையரசன் said...

கன்டிப்பாக, நிச்சயமாக, உறுதியாக!!

கலையரசன் said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

Unknown said...

விரைவிலேயே சிங்களத்துப் பரணி ஒன்று பாடுவோம்.

suresh said...

Super

LinkWithin

Related Posts with Thumbnails