Friday, June 12, 2009

தூசுகள் பல தட்டப்படவேண்டிய மணி..

சன் பிக்ஸஸ் காலநிதி மாறனின் தயாரிப்பில், ஆர்.என்.ஆர். மனோகர் இயகத்தில், இமானின் இசையமைப்புடன், காதலில் விழுந்தேன் வெற்றிப்பட ஜோடியான நகுல், சுனய்னா ஆகியோரின் நடிப்பில் இன்று (12.06.2009) வெளிவந்துள்ளது “மாசிலாமணி” திரைப்படம்.

சென்னையில் அசோக் பில்லர் (அசோக் நகர்) அருகில் உள்ள ராணி நகரில் தன் அக்காவுடனும், அக்காவின் சிறுவயது மகளுடனும் வசித்துவருகின்றார் மாசி (மாசிலாமணி) என்னும் நகுல். ஆரம்பத்திலேயே தப்பு தன் கண்முன்னே நடைபெற்றால் அதை தட்டிக்கேட்கும் துடிப்பான இளைஞராக அவர் அறிமுகமாகின்றார். இதேபோல தான் வாழும் ராணி நகரில் வாழும் மக்களிடம் அளவு கடந்த அன்பு வைத்து அவர்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து, அந்த ஊரினதே செல்லப்பிள்iயாக இருக்கின்றார்.
ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு பெண்களை கேலிசெய்து அடாவடித்தனம் செய்யும் ஒரு கும்பலிடம் திரும்பி அந்தப்பெண்களை கூட்டிவந்து அவர்களை தண்டிக்கும் துணிச்சல் பெண்ணாக வரும் சுனய்னாவை (திவ்யா) கண்டவுடன் அவர் காதலில் விழுகின்றார். அதன் பின்னர் அநியாங்களை தட்டிக்கேட்கும் அவரது செயல் சுனய்னாவுக்கு ரௌடிசியமாக தெரிகின்றது. அவர் நகுல் தன் காதலை சொல்லமதலே நகுலை வெறுக்கின்றார். இந்தச்சூழ்நிலையில் எவ்வாறு அவர் சுனய்னாவின் காதலை பெறுகின்றார் என்பதே இந்தப்படமாக இருக்கின்றது.

இலாபநோக்கத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, மசாலா படங்களை தயாரிக்கும் சன் பிக்கஸர்சிடம் இருந்து தரமான ஒரு தமிழ்ப்படத்தை எதிர்பார்க்கமுடியாது தான். இருந்தாலும் இன்று யதார்த்தவியலில் நல்ல ஒரு பாதையில் தமிழ் சினிமா சென்று பருத்திவீரன், பூ, சுப்பிரணமணியபுரம் என்று தரமான படங்கள் வந்துகொண்டிருக்கையில் மீண்டும், அரைத்தமாவை அரைத்து அதை திருப்பி அரைக்கும் ஒரு படமாகவே “மாசிலாமணி” தெரிகின்றது.

சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசையில், தம் பொருட்களையும், வாழ்வையும் பலர் இழக்கின்றார்கள் என சினிமாவில் இருந்துகொண்டு எத்தனை நாளுக்கு இந்த புழித்துப்போன நகைச்சுவைகளை ஓட்டப்போகின்றார்களோ தெரியவில்லை.இந்தப்படத்திலும், பாஸ்கர் இவ்வாறான ஒரு சினிமா பைத்தியமாக சித்தரிக்கப்பட்டு நடிக்கவைக்கப்பட்டுள்ளார்.

படம் பார்க்கும்போது, துள்ளாதமனமும் துள்ளும், பழனி, காதலில்விழுந்தேன், மேலும்சில ஆள்மாறாட்ட படங்கள் என பல திரைப்படங்களின் ஞாபங்கள் வந்துபோகின்றன.படத்தில் இயக்குனர் “ரச்” நன்றாக முத்திரை குத்துகின்றது. அது ஆர்.என்.ஆர். மனோகரின் ரச்சாக இன்றி, எழில், பேரரசு ஆகியோரின் ரச்சாகவே தெரிகின்றது.

நடிப்பில் நகுல், சுனய்னா ஆகியோர் சிறிது தேறிவருவதாகவே தெரிகின்றது. இந்தப்படத்தில் ஒரு பரதம் பயிலும் பண்பான பெண்ணாகவே சுனய்னா வருகின்றார். அவரிடம் “கோம்லி லுக்” நன்றாகவே உள்ளது. அனால் பாடல்களின்போது அவருக்கு அரைகுறை ஆடைகள் வழங்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இது ஏன் என்று புரியவில்லை? ஏன் பாடல்களில் அரைகுறை ஆடைகள் கட்டிவந்தால்த்தான் நாம் பார்ப்போம் என இரசிகர்கள் சொல்லிவைத்துள்ளனரா? ஏன் பூ போன்ற படங்கள் வெற்றிபெறவில்லையா? இவ்வாறான மாஜைகளில் இருந்தும், விரசங்களில் இருந்தும் தமிழ் சினிமா வெளிவரவேண்டும்.

இமானின் இசை பரவாயில்லை. படத்திற்கு ஒரு சிறு ஆறுதலாக இசை இருக்கின்றது. “ஓ திவ்யா திவ்யா நீ நடமாடும் நைல்நதியா”, “டோரா டோரா அன்பே டோரா” போன்ற பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றது.மொத்தத்தில் மீண்டும் ஒருமுறை சன் பிக்சர்ஸ் ஒரு மசாலா திரைப்படத்தை, வழங்கியுள்ளது.


அதுகும்போக திரைப்படத்திலேயே டெல்லி கணேஸ் மூலமாக தமது சன் நெட்வேர்க்ஸ் பத்திரிகையான தினகரனுக்கு ஒரு விளம்பரத்தையும் கொடுகின்றனர். இந்தப்பத்திரிகையின் அடுத்த நாள் பதிப்பு வருகின்றது என்பதால்த்தான் பத்திரிகையை மூடி வைக்கவேண்டி இருக்கின்றது. இதில் இல்லாத விசயங்கள் என்ன? என்ற அளவுக்கு இதில் விடயங்கள் நிறைந்து கிடக்கின்றது என்கின்றார் டெல்லி கணேஸ். அந்தளவுக்கு சுய விளம்பரங்கள் உள்ளது.
மொதத்தில் மாசிலா மணி ஒரு தனிராகமாக அல்லாமல், இராக மாலிகாவாக உள்ளது.

5 comments:

Unknown said...

நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா அப்போ இங்க வாங்க


http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html

Anonymous said...

/////////பாடல்களில் அரைகுறை ஆடைகள் கட்டிவந்தால்த்தான் நாம் பார்ப்போம் என இரசிகர்கள் சொல்லிவைத்துள்ளனரா? ஏன் பூ போன்ற படங்கள் வெற்றிபெறவில்லையா? ///////////
ennathu poo vetri padama>>>.

கலையரசன் said...

நல்ல கிளப்புராங்கைய்யா பீதிய...
பயபுள்ளைங்க.. எப்டி படம் எடுகுதுங்க பாரு!

சுட்டிப் பையன் said...

படத்த இங்கேயே பார்த்தாச்சுங்க !
அப்படியே இதையும் பாருங்கள்....
http://suttippayan.blogspot.com/2009/06/blog-post.html

ksn said...

http://southactress1.blogspot.com/

LinkWithin

Related Posts with Thumbnails