Thursday, June 25, 2009

தென்னாசியாவில் பெரும் பிரச்சினையாக உள்ள போக்குவரத்து நெரிசல்கள்.


தென்னாசியாவில் இன்று பெரும் தலையிடியாகவும், பெரும் அலுப்பையும் எரிச்சலினையும் ஏற்படுத்தும் விடயமாக போக்குவரத்து நெரிசல்களும், பாதை ஒழுங்கீனங்களும், பிரயாணிகளுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.
அதாது உலகின் சனத்தொகையில் 5 இல் 1 பங்கினர் உள்ள தென்னாசியா போன்ற பிரதேசங்களில் உள்ள மக்கள் போக்குவரத்திற்காக இன்னும் ஓரிரு பதைகளே போக்குத்திற்கான பிரதான பாதைகளாக இருந்துவருகின்றன.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்த நாடுகள் ஆங்கில காலனித்துவ ஆட்சியில் போடப்பட்ட பாதைகளே இன்றும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றமையினை கூறலாம். குறிப்பாக பக்கத்தில் உள்ள ஊர்களுக்குக்கூட சுற்றிவரத்தக்க வகையிலேயே பெரும்பாலான பாதைகள் அமைந்துள்ளதை நோக்கலாம்.

மேற்படி நாடுகள் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்று இன்று 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டபோதிலும்கூட இன்றுவரை முறையான வீதி அபிவிருத்தி, போக்குவரத்து ஒழுங்குகளை அமுல்ப்படுத்துகின்றனவா? என்ற கேள்விக்கு விடை கண்டிப்பாக பூச்சியமாகவே இருக்கும்.
மேலை நாடுகளில் 60, 70 களில் இப்படியான போக்குவரத்து சிக்கல்கள் எழுந்தபோதிலும் அவை குறிப்பாக ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் 1985 ஆம் ஆண்டுகளின் பின்னர் ஒரு முழுமையான கட்டுப்பாடுகளின் கீழ் கொண்டுவரப்பட்டன. எனினும் இந்த நடைமுறைகளை தென்னாசியா போன்ற நாடுகளில் செயற்படுத்த இன்னும் முடியாமை இருப்பது பெரும் கேள்விக்குறியினையே ஏற்படுத்துகின்றது.



சனத்தொகை பெருக்கத்தையும், வாகனப்பானையாளர்களின் பெருக்கங்களையும் காரணமாகக்கூறி இதில் சம்பந்தப்பட்டர்கள் தப்பிக்க நினைக்கின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை உலகில் இரண்டாது பாரிய ரயில்வே போக்குத்தில் உள்ள நாடு என்று கூறப்படுகின்றது. சில அரசியலவ்hதிகளால் அது அபிவிருத்தி செய்யப்பட்டு, நஸ்டமடைந்த துறையாக இருந்து இலாபமீட்டும் துறையாக மாற்றப்பட்டதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அது ஓரளவுக்கு வரவேற்கத்தக்க விடயமும் ஆகும். ஆனால் இன்றும் கூட மேற்படி ரயில்களின் வேகம் குறிப்பிட்ட பிரதேசங்களை அடையும் காலம் என்பi பெரும் சந்தேகத்துடனே நோக்கவேண்டி உள்ளது. ஏனெனில் இன்றும் முன்னேற்றம் அடைந்த நாடுகளின் வேகங்களுக்கு இணையாக கடுகதியில் செல்லக்கூடிய மின்சார ரயில் திட்டங்கள், மின்சார ரயில்கள் என்பன சேவைகளி;ல் ஈடுபடுத்தப்படவில்லை. ஓரிரு இடங்களில் இடம்பெற்றாலும், அவை 90-95களில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களை அடிப்படையானதாக கொண்டதாகவே உள்ளன.

வாகன நெரிசலை எடுத்துக்கொண்டால் இந்தியாவில் அது ஒரு பெரும் பிரச்சினையாகவே உள்ளது. பல்வேறு காரணங்களுக்காக இரண்டு ஊர்களுக்கு இடையில் செல்வதென்றாலும்கூட பல மணித்தியாலங்களை வாகன நெரிசல்காரணமாக வீதிகளிலேயே செலவழிக்கவேண்டி ஏற்படுகின்றது. இந்த நெரிசல் காரணமாக பல்Nறு தேவைகள், அசரத்தேவைகள், என செல்பர்கள் பாடு பெரும் திண்டாட்டமாகN உள்ளன. பல மேம்பாலங்களும், டவுண்டானாக்களும் அமைக்கப்பட்டும்கூட இதை கட்டுப்படுத்தமுடியவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மும்பை, கொல்கத்தா, சென்னை, பங்களுர், டில்லி போன்ற இடங்களில் மக்கள் செறிவு அதிகம் என்பதனால் நாளாந்தம் வாகன நெரிசல்களிலேயே பெரும்பாலானர்களின் நேரங்கள் விரயமாகின்றது.


குறிப்பாக பிளாட்போர்ம் (நடைபாதை) கடைகள், சட்டவிரோத கட்டங்கள், முச்சக்கரவண்டி ஓட்டுனர்களின் அசண்டையீனமான போக்குவரத்து விதி மீறல்கள், வாகன ஒழுங்குகளை பின்பற்றாமை போன்ற காரணங்களை நாம் வெளிப்படை உண்மையாக தெரிவித்துவிட்டுப்போகலாம்.
அது தவிர, வீதிகள் அகலப்படுத்தப்படாமை, குறிப்பிட்ட சில வீதிகளை மட்டுமே தொடு பாதைகளாக கொண்டிருப்பது, சிறிய வீதிகள் கூட இருவழிப்பாதைகளுக்கு அனுமதிக்கப்பட்டது, வீதிகள் பாராமரிப்பின்றி குண்டும் குழியுமாக இருப்பது என்பனவும் ஒரு காரணமாக இருப்பதுடன், சென்னையினை போன்ற இடங்களில் சகல வேலைகளையும் ஒரே தடவையில் செய்து முடிக்காமல், கோப்பிரேசன் காரர்களால் ஒருதடவை, கேபிள் காரர்களால் ஒருதடவை, மின்சார வாரியத்தால் ஒரு தடவை, கழிவு நீர் பாதைக்காக ஒரு தடவை என பல தடகைள் வீதிகள் கிண்டப்படுவதும் இந்தப்போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகின்றது. இந்த நிலையில் இந்த வாகன நெரிசல்களின் மத்தியில் அமைச்சர்கள், முக்கிய பிரதிநிதிகள் போவதென்றால் வீதிகள் மூடப்படுவதும் மறுபுறம்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இன்றும் கூட மின்சார சமிக்கை விளக்குகள் முக்கிய இடங்களில் பெருத்தப்பட்டாலும்கூட, அங்கு போக்குவரத்து பொலிஸாரின் விசில்களும், கை சமிக்கைகளும் நின்றதாக இன்றும் காணமுடியிவில்லை.
காரணம் மின்சமிக்கை ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பதற்கு வாகன சாரதிகள் தயாரில்லை என்பதே காரணம்.


மேலை நாடுகளில் உடனுக்குடன் ஒழங்கு படுத்தப்படும் போக்குவரத்து நடைமுறைகளை இங்கும் ஒழுங்குபடுத்தப்படவேண்டும். மாறாக இங்கு படிப்பiடியான திட்டங்களே மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் மூலம் போக்குவரத்து பிரச்சினைகள் நிரந்தரமாக தீர்ந்துவிடும் என்று கூறிவிடமுடியாது. குறிப்பிட்ட காலத்தினுள் பாரிய தொகை நிதியினை ஒதுக்கி புதிய பாதைகள் அமைக்கப்படவேண்டும், நகரத்தின் மத்திகளில் உள்ள வாகன நெரிசலை கட்டுப்படுத்த, நகர்புறங்களிலேயே தனியார் வாகங்களை தரிக்வைத்து, சகலரும் மைய நகருக்குள் குறிப்பட்ட பேருந்துக்களிலேயே பயணிக்கவேண்டும் என்ற ஒழுங்குகளை அறிமுகப்படுத்தலாம்.
விரைவான ஒருவழிப்பாதைகளை வாகன சாரதிகளுக்கு இலகுவான முறையில் ஒழுங்குபடுத்தலாம், பாதசாரிகளுக்கு என பாதசாரிகள் கடவைகள் மிகப்பாதுகாப்பாக நிறுப்பட்டு, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கடவைகள் அமைக்கலாம். இவைபோன்றற்டன் வருடத்திற்கு ஒருமுறையாவது வீதிகளின் தரமெ;படுத்தலை செயற்படுத்துதுடன், வீதி ஒழுங்குகளை மீறுபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்தன் மூலமுமே இந்தப்போக்குவரத்து நெரிசலை இல்லாது செய்யமுடியும்.
குறிப்பாக இன்று நம்மில் பலருக்கு தான் மட்டும் என்ற சிந்தனைகள் மாறி மற்றவர்களும் மற்ற வாகனங்களும் வீதியில் பயணிக்கின்றன. முற்றவர்களும் எங்களைப்போல பல்வேறு தேவைகளுக்காக வீதியில் பயணிப்பவர்கள் என்ற எண்ணம் வந்துவிட்டாலே வீதி ஒழுங்குகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படும்.

1 comment:

கலையரசன் said...

அருமையா இருக்கு, அட மெய்யாலுமே!
தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!

ஓட்டும் போட்டாச்சு..

LinkWithin

Related Posts with Thumbnails